• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நாளை சிவன் கோயிலிற்கு சென்றால் பன்மடங்க&

நாளை சிவன் கோயிலிற்கு சென்றால் பன்மடங்க&

நாளை சிவன் கோயிலிற்கு சென்றால் பன்மடங்கு அருளைபெறலாம்.

மார்கழி மாதம் தான் தேவர்களுக்கு விடியற்காலை பொழுது என்பதால் அவர்கள் மகாதேவரை தரிசிக்க அந்த மாதத்தில் வருவது வழக்கம். மக்களை பொறுத்தவரை மார்கழி மாதம் என்பது இறைவழிபாட்டிற்கு மிக சிறந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரமானது சிவபெருமானை வழிப்பட மிக சிறந்த_நாளாகும்.


பொதுவாக திருவாதிரை நட்சத்திரம் பெருமாளுக்கு உகந்த நட்சத்திரம். ஆனால் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரமானது
சிவனுக்குஉகந்தது என்பதால் சிவன்பெருமாள் ஆகிய இருவரின்_சக்தி
பெற்ற_நாளாகவிளங்குகிறது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள். வருடம் தோறும் இந்த நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடப்பது வழக்கம். இந்நாளில் நாம் சிவன் கோயிலிற்கு சென்றால் பன் மடங்கு அருளை பெறலாம் என்பது நியதி.


“கர்மாவே_பெரிது,
கடவுள்_இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்க சிவபெருமான் நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள் தான் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளாகும். நடராஜரின் அற்புத அழகை இன்று
காணும் அனைவரும்


ஆ… ருத்ரா


என்று_அசந்து போய் நிற்கும் அளவிற்கு அவர் அற்புதமாக காட்சி தருவார்.


அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா என்பது சிறப்பாக கொண்டாடப்படும் என்றாலும் உத்திரகோசமங்கை, சிதம்பரம் நடராஜர் கோவில், தஞ்சை பெரிய கோவில் போன்ற சிவாலயங்களில் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நாளில் உளுந்து மாவினால் செய்த களியை இறைவனுக்கு நெய்வேத்தியமாகப் படைத்தது பின் அனைவருக்கும் வழங்குவது வழக்கம். ‘திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ‘ என்று பெரியோர்கள் கூறுவதும் இதனால் தான்.


நாளை சிவன் கோயிலிற்கு சென்று சிவனை வெறுமனே தரிசித்தாலே போதும் நாம் பல அறிய_பலன்களை பெற்றுவிடலாம். ஆகையால் நீங்களும் இந்த நன்னாளில் சிவ தரிசனம் பெற்று அருள்மழையில் நனைய வேண்டுகிறோம்.
 

Latest ads

Back
Top