சாளக் கிராமம் பூஜை செய்யும் முறை
மிகவும் எளிமையாக சாளக் கிராமத்திற்கு பூஜை செய்யும் முறையை இன்றைய பதிவில் பார்க்கலாம்.
சாளக்கிராமத்தை
1. பன்னீராலும் ,
2. பச்சைக்கற்பூரம் கலந்த நீராலும்,
3. பாலாலும்,
4. சந்தனத்தால்,
5. அபிஷேக மஞ்சள் ,
6. கரும்புச்சாறு (இருந்தால்) ,
7. அபிஷேக திரவியபொடி கலந்த நீர்
8. நெய் , தேன் மற்றும் தயிராலும்,
9. விபூதி கலந்த நீராலும்,
10. கங்கை நீராலும் ..................
அபிஷேகம் செய்யலாம். அவ்வாறு செய்யும் பொழுது, ஸ்ரீ ருத்ரம் மற்றும் பஞ்ச சூக்தம் ( புருஷ சூக்தம் , ஸ்ரீ சூக்தம் , விஷ்ணு சூக்தம், நாராயண சூக்தம் , துர்கா சூக்தம் ) பாராயணம் செய்யலாம்.
இவற்றுடன் அந்ததந்த உபாசனை மூர்த்திகளின் ஸஹஸ்ரநாமங்களோ, அல்லது அஷ்டோத்ரங்களோ பாராயணம் செய்யலாம். மேலும் விருப்பமான ஸ்துதிகள், ஸ்தோத்ரங்கள் பாராயணம் செய்வது சாலச்சிறந்தது.
அபிஷேகம் முடிந்தவுடன் மடி வஸ்திரத்தால் (தூய்மையான துணியால் ) துடைத்து சந்தனம், குங்குமம் ....விபூதி இட்டு ,.......ஆசனம், பாத்யம், அர்க்யம் , ஆசமனம் செய்து ......... துளசி , வில்வம் , மலர்களால் அர்ச்சித்து , தூப , தீப ,நைவேத்யம் செய்து.........
ஸ்நானம், கந்தம் , புஷ்பம் ............கற்பூர நீராஞ்சனம் என பூஜா புத்தங்களில் விவரித்துள்ளதை போல அர்ச்சனைகள் செய்து ஆனந்திக்கலாம்.
சாளக்கிராமம் உள்ள வீடு பாடல் பெற்ற தலத்தின் சிறப்பினைக் கொண்ட புண்ய க்ஷேத்ரம். 12 சாளக்கிராமம் கொண்ட வீடு ஒரு திவ்ய தேசம்
ஆகும். அங்கு லக்ஷ்மி நித்ய வாசம் செய்கிறாள். மேலும் பாவங்கள் குறைந்து அழிந்து விடும்.
மஹாபெரியவா ஒருமுறை, " எங்கு சாளக்கிராம பூஜை நடைபெறுகிறதோ, அங்கு ஒரு குறையும் வருவதில்லை. அதைச்சுற்றி சுமார் 2km தூரத்திற்குள் உயிர் விடும் எந்த உயிரினமும், அதன் கடைசி நேரத்தில் அந்த புண்ணிய பூஜையின் அதிர்வுகளை பெற்று.........வாசனைகளும் , வினைகளும் குறைந்து சாந்தியாக, அமைதியடைந்து அதனால் அதன் மறுபிறவி மிக சிறந்ததாக அமையப் பெறுகின்றன " என்று கூறி இருக்கிறார் . மேலும் அந்த வீட்டிலுள்ளோர்கள் கொடிய மரணம் , மோசமான விபத்துகள் , துர்மரணம் போன்றவை சாளக்கிராம பூஜை நடைபெறும் வீட்டில் நிகழ்வதில்லை.
தமிழ் திருமுறைகள் , திவ்யப் பிரபந்தங்கள் முதலியன பாடி , அபராத சமரோபணம் செய்து, நமஸ்கரித்து, அபிஷேக தீர்த்தம் , நைவேத்ய பிரசாதம் வீட்டில் எல்லோருக்கும் கொடுத்து, நாமும் தீர்த்தம் பருகி , பிரசாதம் உண்டு , ஆராதனக்ரமம் செய்து பூஜையை முடித்துக் கொள்ளலாம்
♥சாளக்கிராம கற்களின் நிறங்களும் வடிவங்களும் அதன் பலன்களும்♥
முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியவை, நரசிம்ம அம்சம் உள்ளவையாக கருதப்படுகிறது. மோட்ச பிராப்தியை தரக்கூடியதாக இருப்பதால், இவற்றை பெரும்பாலும் வீடுகளில் வைத்து வழிபடுவது இல்லை.
சக்கர வடிவத்தில், கருப்பு வண்ணத்தில் இருக்கும் சாளக்கிராம கற்கள், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடியதாகும்.
முன் பக்கத்தில் பாம்பு போன்ற தோற்றத்துடன், தங்க நிற ரேகைகள் அமைந்த கற்கள், வாமதேவ அம்சமாகும். இவற்றை வழிபட்டால் பல நன்மைகள் வந்து சேரும்.
இடப்புறமாக பச்சை நிறம் பொருந்திய கற்கள், சகல பாவங்களையும் போக்கக் கூடியதாக கருதப்படுகிறது.
வட்ட வடிவத்தில் இருக்கும் சாளக்கிராம கற்களை, வீடுகளில் வைத்து வழிபடுபவர்களுக்கு செல்வ வளம் குறையாமல் இருக்கும்.
குடை போன்ற வடிவம் உடைய கல்லை வைத்து வணங்கி வருபவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
சக்கர அமைப்பு அல்லது பாம்பு தலை போன்ற அடையாளங்களுடன் உள்ள சாளக்கிராம கற்களானது, பல்வேறு நிறங்களில் இருந்தால் அது ‘லட்சுமி காந்தம்’ எனப்படும். அத்தகைய கற்களை வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.
நீல நிறமாக உள்ளவை ஸ்ரீகிருஷ்ண அம்சம் பொருந்தியவையாக இருப்பதால், அதை வணங்குபவர்கள் செல்வமும், சுகமும் அடைவார்கள்.
பச்சை நிறத்தில் இருக்கும் சாளக் கிராமமானது ஸ்ரீநாராயண அம்சத்துடன் இருப்பதோடு, வழிபடுவோருக்கு பலத்தையும், தைரியத்தையும் வழங்கக்கூடியது.
வாசு தேவ அம்சம் கொண்டதாக இருக்கும் கற்கள் வெண்மையாக இருப்பதோடு, ஞானம், பக்தி மற்றும் மோட்சம் ஆகிய பேறுகளை தருவதாக ஐதீகம்.
கருப்பு நிறத்தில் உள்ளவை விஷ்ணுவின் அம்சமாக இருந்து பெயர், புகழ், பெருமை ஆகியவற்றை அளிக்கும்.
?சாளக்கிராமத்தின் தெய்வீக சக்தி ?
உண்மையான சாளக்கிராம கல்லுடன் பால் அல்லது அரிசியை குறிப்பிட்ட நேரம் வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியிருக்கும். எதிர்மறை எண்ண அலைகளை, அதிர்வுகளை உட்கிரகிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை உணரலாம்.
வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி.சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத் தகுதியில் வைத்து பாவிக்க வேண்டும் என்பர் . 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை காலை , மாலை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட அவதாரம் எடுத்த திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.
மிகவும் எளிமையாக சாளக் கிராமத்திற்கு பூஜை செய்யும் முறையை இன்றைய பதிவில் பார்க்கலாம்.
சாளக்கிராமத்தை
1. பன்னீராலும் ,
2. பச்சைக்கற்பூரம் கலந்த நீராலும்,
3. பாலாலும்,
4. சந்தனத்தால்,
5. அபிஷேக மஞ்சள் ,
6. கரும்புச்சாறு (இருந்தால்) ,
7. அபிஷேக திரவியபொடி கலந்த நீர்
8. நெய் , தேன் மற்றும் தயிராலும்,
9. விபூதி கலந்த நீராலும்,
10. கங்கை நீராலும் ..................
அபிஷேகம் செய்யலாம். அவ்வாறு செய்யும் பொழுது, ஸ்ரீ ருத்ரம் மற்றும் பஞ்ச சூக்தம் ( புருஷ சூக்தம் , ஸ்ரீ சூக்தம் , விஷ்ணு சூக்தம், நாராயண சூக்தம் , துர்கா சூக்தம் ) பாராயணம் செய்யலாம்.
இவற்றுடன் அந்ததந்த உபாசனை மூர்த்திகளின் ஸஹஸ்ரநாமங்களோ, அல்லது அஷ்டோத்ரங்களோ பாராயணம் செய்யலாம். மேலும் விருப்பமான ஸ்துதிகள், ஸ்தோத்ரங்கள் பாராயணம் செய்வது சாலச்சிறந்தது.
அபிஷேகம் முடிந்தவுடன் மடி வஸ்திரத்தால் (தூய்மையான துணியால் ) துடைத்து சந்தனம், குங்குமம் ....விபூதி இட்டு ,.......ஆசனம், பாத்யம், அர்க்யம் , ஆசமனம் செய்து ......... துளசி , வில்வம் , மலர்களால் அர்ச்சித்து , தூப , தீப ,நைவேத்யம் செய்து.........
ஸ்நானம், கந்தம் , புஷ்பம் ............கற்பூர நீராஞ்சனம் என பூஜா புத்தங்களில் விவரித்துள்ளதை போல அர்ச்சனைகள் செய்து ஆனந்திக்கலாம்.
சாளக்கிராமம் உள்ள வீடு பாடல் பெற்ற தலத்தின் சிறப்பினைக் கொண்ட புண்ய க்ஷேத்ரம். 12 சாளக்கிராமம் கொண்ட வீடு ஒரு திவ்ய தேசம்
ஆகும். அங்கு லக்ஷ்மி நித்ய வாசம் செய்கிறாள். மேலும் பாவங்கள் குறைந்து அழிந்து விடும்.
மஹாபெரியவா ஒருமுறை, " எங்கு சாளக்கிராம பூஜை நடைபெறுகிறதோ, அங்கு ஒரு குறையும் வருவதில்லை. அதைச்சுற்றி சுமார் 2km தூரத்திற்குள் உயிர் விடும் எந்த உயிரினமும், அதன் கடைசி நேரத்தில் அந்த புண்ணிய பூஜையின் அதிர்வுகளை பெற்று.........வாசனைகளும் , வினைகளும் குறைந்து சாந்தியாக, அமைதியடைந்து அதனால் அதன் மறுபிறவி மிக சிறந்ததாக அமையப் பெறுகின்றன " என்று கூறி இருக்கிறார் . மேலும் அந்த வீட்டிலுள்ளோர்கள் கொடிய மரணம் , மோசமான விபத்துகள் , துர்மரணம் போன்றவை சாளக்கிராம பூஜை நடைபெறும் வீட்டில் நிகழ்வதில்லை.
தமிழ் திருமுறைகள் , திவ்யப் பிரபந்தங்கள் முதலியன பாடி , அபராத சமரோபணம் செய்து, நமஸ்கரித்து, அபிஷேக தீர்த்தம் , நைவேத்ய பிரசாதம் வீட்டில் எல்லோருக்கும் கொடுத்து, நாமும் தீர்த்தம் பருகி , பிரசாதம் உண்டு , ஆராதனக்ரமம் செய்து பூஜையை முடித்துக் கொள்ளலாம்
♥சாளக்கிராம கற்களின் நிறங்களும் வடிவங்களும் அதன் பலன்களும்♥
முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியவை, நரசிம்ம அம்சம் உள்ளவையாக கருதப்படுகிறது. மோட்ச பிராப்தியை தரக்கூடியதாக இருப்பதால், இவற்றை பெரும்பாலும் வீடுகளில் வைத்து வழிபடுவது இல்லை.
சக்கர வடிவத்தில், கருப்பு வண்ணத்தில் இருக்கும் சாளக்கிராம கற்கள், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடியதாகும்.
முன் பக்கத்தில் பாம்பு போன்ற தோற்றத்துடன், தங்க நிற ரேகைகள் அமைந்த கற்கள், வாமதேவ அம்சமாகும். இவற்றை வழிபட்டால் பல நன்மைகள் வந்து சேரும்.
இடப்புறமாக பச்சை நிறம் பொருந்திய கற்கள், சகல பாவங்களையும் போக்கக் கூடியதாக கருதப்படுகிறது.
வட்ட வடிவத்தில் இருக்கும் சாளக்கிராம கற்களை, வீடுகளில் வைத்து வழிபடுபவர்களுக்கு செல்வ வளம் குறையாமல் இருக்கும்.
குடை போன்ற வடிவம் உடைய கல்லை வைத்து வணங்கி வருபவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
சக்கர அமைப்பு அல்லது பாம்பு தலை போன்ற அடையாளங்களுடன் உள்ள சாளக்கிராம கற்களானது, பல்வேறு நிறங்களில் இருந்தால் அது ‘லட்சுமி காந்தம்’ எனப்படும். அத்தகைய கற்களை வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.
நீல நிறமாக உள்ளவை ஸ்ரீகிருஷ்ண அம்சம் பொருந்தியவையாக இருப்பதால், அதை வணங்குபவர்கள் செல்வமும், சுகமும் அடைவார்கள்.
பச்சை நிறத்தில் இருக்கும் சாளக் கிராமமானது ஸ்ரீநாராயண அம்சத்துடன் இருப்பதோடு, வழிபடுவோருக்கு பலத்தையும், தைரியத்தையும் வழங்கக்கூடியது.
வாசு தேவ அம்சம் கொண்டதாக இருக்கும் கற்கள் வெண்மையாக இருப்பதோடு, ஞானம், பக்தி மற்றும் மோட்சம் ஆகிய பேறுகளை தருவதாக ஐதீகம்.
கருப்பு நிறத்தில் உள்ளவை விஷ்ணுவின் அம்சமாக இருந்து பெயர், புகழ், பெருமை ஆகியவற்றை அளிக்கும்.
?சாளக்கிராமத்தின் தெய்வீக சக்தி ?
உண்மையான சாளக்கிராம கல்லுடன் பால் அல்லது அரிசியை குறிப்பிட்ட நேரம் வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியிருக்கும். எதிர்மறை எண்ண அலைகளை, அதிர்வுகளை உட்கிரகிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை உணரலாம்.
வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி.சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத் தகுதியில் வைத்து பாவிக்க வேண்டும் என்பர் . 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை காலை , மாலை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட அவதாரம் எடுத்த திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.