• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குறையொன்றுமில்லை

குறையொன்றுமில்லை

குறையொன்றுமில்லை.....!!!
(முதல் பாகம்)


(ஸ்ரீஉ.வே முக்கூர் லஷ்மிநரசிமமாச்சார்யார்)


ஸஹஸ்ரநாமம் என்றால் ஆயிரம் நாமங்கள் - திருப் பெயர்கள். பகவானுக்கு வெறும் ஆயிரம் பெயர்கள் தானா..? ஆயிரம் நாமங்கள் என்று வெறும் எண்ணிக்கையிலே மட்டும் சொல்ல வந்ததன்று. ஸஹஸ்ரம் என்பதற்கு "பலபல" என்றும் பொருள் உண்டு. "பலபலவே ஆபரணம்; பேரும் பலபலவே" என்று ஆழ்வார் சொல்கிறார்.


எல்லோரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு ஸஹஸ்ரநாமம். "ஸஹஸ்ரநாமம்" என்று சொன்னாலே அது விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது.


ஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை பண்ணிக் கொண்டிருந்த பொது, தம் சிஷ்யரை அழைத்து புஸ்தக பாண்டாரத்திலிருந்து லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி சொன்னார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்கு திருவுள்ளம். அங்கேயிருந்து போனார் சிஷ்யர்.


அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால், அது விஷ்ணு ஸஹஸ்ரநாமம். "நான் இதைக் கேட்கலியே. நான் கேட்டது லலிதா ஸஹஸ்ரநாமம் அல்லவா. நீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே" என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு ஸஹஸ்ரநாமமாகவே இருந்தது. அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிறார். "நான் சொல்வது என்ன? நீ செய்வது என்ன? "ஸ்வாமி, நான் என்ன செய்வேன். அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு அதை வைச்சிடு, இதை எடுத்துண்டு போன்னு சொல்கிறாள்.


நான் என்ன செய்வேன்" என்றார் சிஷ்யர். அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைக்கிறார். "அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்..." அதன் பிறகு விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர்.


இப்படி லலிதையே போற்றும்படியான லலிதமான ஸஹஸ்ரநாமம், எல்லோரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது. எல்லா ஸஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான ஸஹஸ்ரநாமம் இதுதான்.


ஆகையினாலே, ஸஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத்தான் குறிக்கும். ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்? அந்த ஸஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே? ஞானிகளுள் அக்ரகண்யரான பீஷ்மரால். பீஷ்மர் என்றாலே பயப்படத் தக்கவர் என்று அர்த்தம். அம்புப் படுக்கையில் இருக்கிறார் பீஷ்மர். அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சொல்கிறார் பகவான் கிருஷ்ணர் "அணையும் நெருப்பைப் போல இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்...? போ, அவர் சொல்வதைப் போய்க் கேள்" என்று தர்மபுத்திரரை அனுப்புகிறார்.


"ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே தர்மத்தைச் சொல்ல" என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.


பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக்கூடிய மகான்கள் இருக்கணும். இந்த உண்மைக்கு சாட்சியாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டார். பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான்.


அவன் சொன்னது கீதை - கேட்பது ஸஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய் கேட்டதே அதன் பெருமை, உயர்வு.
 

Latest ads

Back
Top