கீரை வடை

Status
Not open for further replies.
DSCN3587.JPG


தேவையானப்பொருட்கள்:

கடலைப்பருப்பு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
மிளகு - 1 டீஸ்பூன்
முளைக்கீரை (பொடியாக நறுக்கியது) - 2 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

பருப்புகள் இரண்டையும் ஒன்றாக 4 மணி நேரம் ஊற விடவும். பின்னர் நன்றாகக் களைந்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடிக்கவும். அத்துடன் மிளகாய், மிளகு, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயத்தையும், கீரையையும் சேர்க்கவும். சோம்பை ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு, நன்றாக பிசைந்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து, வடையாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: எந்த வகை கீரையை உபயோகித்தும் இந்த வடையைச் செய்யலாம். தனி உளுத்தம் பருப்பிலும் மெது வடை போல் செய்யலாம். மொரமொரப்பாக வேண்டுமெனில், கடலைப் பருப்பில் செய்ய வேண்டும். இரண்டு பருப்பையும் சம அளவில் சேர்த்தும் செய்யலாம்.

adupankarai.JPG


  • [*=center]Cooking and Recipes
 
Status
Not open for further replies.
Back
Top