• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கீதா ஜெயந்தி-மார்கழி, சுக்ல பக்ஷ ஏகாதசி

கீதா ஜெயந்தி-மார்கழி, சுக்ல பக்ஷ ஏகாதசி(25/12/20இன்று)
🙏🙏📢📣🔈🔉🔊📢📣🙏🙏
பகவத்கீதை ,குருஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரால், அர்ச்சுனனுக்கு உபதேசிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.ஆனால் அன்று பகவான் அர்ச்சுனனை வ்யாஜ்யமாகக் கொண்டு மீண்டும் உரைத்தார்! கீதையை அவர் முதல் முறை உரைத்தது பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மார்கழி சுக்ல பக்ஷ ஏகாதசி நந்நாளில்!!

பகவத்கீதையின் வரலாற்றை மஹாபாரதத்தில் (ஷாந்தி-பர்வ 348.51-52) பின்வருமாறு நாம் காணமுடியும்:

"த்ரேதா-யுகாதௌ ச ததோ
விவஸ்வான் மனவே ததௌ
மனுஷ் ச லோக-ப்ருத்-யர்தம்
ஸுதாயேக்ஷ்வாகவே ததௌ
இக்ஷ்வாகுணா ச கதிதோ
வ்யாப்ய லோகான் அவஸ்தித:"

"திரேதா யுகத்தின் ஆரம்பத்தில், பகவானுடனான உறவு பற்றிய இந்த விஞ்ஞானம் விவஸ்வானால் மனுவிற்கு வழங்கப்பட்டது. மனித குலத்தின் தந்தையான மனு, தனது மகனும் பூலோகத்தின் மன்னனும் ஸ்ரீராமர் அவதரித்த ரகு வம்சத்தின் முன்னோடியுமான மன்னன் இக்ஷ்வாகுவிற்கு இதனை அளித்தார்." எனவே, மனித சமுதாயத்தில் இக்ஷ்வாகுவின் காலத்திலிருந்தே பகவத் கீதை இருந்து வந்துள்ளது.

4,32,000 வருடங்கள் நீடிக்கும் கலி யுகத்தில் நாம் தற்போது ஐயாயிரம் வருடங்களை மட்டுமே கடந்துள்ளோம். கலி யுகத்திற்கு முந்தைய யுகம் துவாபர யுகம் (8,00,000 வருடங்கள்), அதற்கு முந்தைய யுகம் திரேதா யுகம் (12,00,000 வருடங்கள்). இவ்விதமாக சுமார் 20,05,000 வருடங்களுக்கு முன்பே, தனது சீடனும் மகனுமான பூலோக மன்னன் இக்ஷ்வாகுவிற்கு மனு இதனைக் கூறியுள்ளார். தற்போதைய மனுவின் ஆயுட்காலம் 30,53,00,000 வருடங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது, அதில் 12,04,00,000 வருடங்கள் கழிந்துள்ளன. மனுவின் பிறப்பிற்கு முன்பே, பகவானால் அவரது சீடனும் சூரிய தேவனுமான விவஸ்வானுக்கு கீதை கூறப்பட்டதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் ஏறத்தாழ 12,04,00,000 வருடங்களுக்கு முன் கீதை உபதேசிக்கப்பட்டதாக கணக்கிடலாம். மனித சமுதாயத்திலோ இஃது இருபது இலட்சம் வருடங்களுக்கு மேல் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஏறத்தாழ 5000 வருடங்களுக்கு முன் அர்ஜுனனிடம் பகவான் இதனை மீண்டும் உபதேசித்தார். கீதையின் கூற்றின்படியும் கீதையை உரைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றின்படியும், இதுவே கீதையின் சரித்திரம் பற்றிய தோராயமான கணக்கீடு. விவஸ்வான் சூரிய வம்ச சத்திரியர்களின் தந்தை என்பதால் பகவத் கீதை அவருக்கு வழங்கப்பட்டது. முழுமுதற் கடவுளால் கூறப்பட்டதால், இந்த பகவத் கீதை வேதங்களுக்குச்; சமமான ஞானம், அபௌருஷேய, மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக ஞானம் எனப்படும். வேதக் கட்டளைகள் மனித வியாக்கியானமின்றி உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளப்படுவதைப்போல, கீதையும் பௌதிக வியாக்கியானங்கள் இன்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். வீண் வாதம் செய்யும் ஏட்டறிஞர்கள் தங்களது சுய வழியில் கீதையைப் பற்றி கற்பனை செய்யலாம், ஆனால் அஃ;து உண்மையான பகவத் கீதையாகாது. எனவே, கீதையை சீடப் பரம்பரையின் மூலம் உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பகவான் இதனை சூரிய தேவனுக்கும், சூரியதேவன் தனது மகனான வைவஸ்வத மனுவிற்கும், மனு தன் மகன் இக்ஷ்வாகுவிற்கும் இதனை உபதேசித்ததாக பகவான் கிருஷ்ணரே கீதை 4-1ல் உரைத்துள்ளார்:

"இமம் விவஸ்வதே யோகம்
ப்ரோக்தவாநஹமவ்யயம்/
விவஸ்வாந்மநவே ப்ராஹ
மநுரிக்ஷ்வாகவேப்ரவீத்//"

(-அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
 

Latest ads

Back
Top