• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கஸல் கவிதைகள்

  • Thread starter ramachandran girija
  • Start date
Status
Not open for further replies.
ஆவியினைப் பிழிந்து செல்கிறாய்
ஆவேச சொல் வீசியெறிந்து
அழ மட்டுமே முடிகிறது என்னால் !!!

**** ஆக்கம் ரா.கிரிஜா
 
போர்க்களமே என் மனம்
போர்வையாய் உன் நினைவுகள்
பருந்தை விட என் கண்கள் குறுகின

**** ஆக்கம் ரா.கிரிஜா
 
போர்விழியாய் என் விழிகள்
போர் க்கணைகள் கக்கினாலும்
பாராது போகிறாய் பார்வேந்தனே !!

**** ஆக்கம் ரா.கிரிஜா
 
தின்று விடுவது போல் பார்த்து பார்த்து
கொன்று விட்டாய் அல்லவா?
என்று தான் வருவா(ய்?) (யா?)

**** ஆக்கம் ரா.கிரிஜா
 
பார்வையின் உட்பொருள் நான் என்று
பாவை நான் இறுமாந்திருந்தேன் -உன்
பாவை மற்றொருவளை சிந்திக்காமல் !!!

**** ஆக்கம் ரா.கிரிஜா
 
பார்த்துவிட்டு விடைகொடுத்துப்
போவதென்ன நீதி?
பாவையின் மனமோ உலைக்களம் !!!

*** ஆக்கம் ரா. கிரிஜா
 
கார்முகிலாய் கண்ணிரண்டும்
கரைந்ததுதான் மீதி!
கருத்து உண்டா உனக்கு?

*** ஆக்கம் ரா. கிரிஜா
 
மனதினை துளை செய்யும்
மாதினை துயர் செய்யும்
மாறன் அம்புகள் ஏனடா?


*** ஆக்கம் ரா. கிரிஜா
 
வார்த்தைகளை நீ மறுத்தால்
வரும் மரணத் தேதி!
வருவாயா நீ அப்போதாவது?


*** ஆக்கம் ரா. கிரிஜா
 
தென்றலென நீ எப்போதும்
தவழ்ந்த சோலைவன நெஞ்சம்
தாங்கிடுமோ உன் பாராமுகம்?


*** ஆக்கம் ரா. கிரிஜா
 
இன்றுபெரும் சோகங்கள்
இளைப்பாறும் மஞ்சம்!
இதற்கா கண்டேன் நான் உன்னை?


*** ஆக்கம் ரா. கிரிஜா
 
கண்ணழகை பாடி பாடி புகழ்ந்தாயே !
காரணத்தைக் கூறிவிடு கொஞ்சம்!
கண்களும் இன்று பிடிக்கவில்லையோ?


*** ஆக்கம் ரா. கிரிஜா
 
உன்னிதழில் ஏனடா இப்போதெல்லாம்
என்னோடு பேச மட்டும் அப்படி
ஒருகோடி வார்த்தைகளும் பஞ்சம்?

*** ஆக்கம் ரா. கிரிஜா
 
மோகத்தில் கழிந்ததடா
மனதின் வசந்தக் காலம்!
மறந்ததால் மாய்கிறது இன்று !!

*** ஆக்கம் ரா. கிரிஜா
 
ஈனத்தில் எழுகிறது என்னுடைய
இதயத்தில் ஓலம்! என்னை
ஈன்றவளே!! நானும் உன்னை தேடி !!!

*** ஆக்கம் ரா. கிரிஜா
 
தேனமுதே என்னிதயம் பற்பல
துகள்களாக வெடிக்கிறது நாளும்!
வேனலில் நீரை தேடி நானும் !!

*** ஆக்கம் ரா. கிரிஜா
 
மோனத்தில் சிறுநொடியும்
மாதத்தின் அத்தனை நீளம்!
மாதவளின் மையலில் நீயும் .....

*** ஆக்கம் ரா. கிரிஜா
 
அன்னநடை தனில் இடையும்
ஆடியது உன் நினைவால் ஆட்டம்!
ஆதவனே ! நீ எங்கே?

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
இன்று உன்னைக் காண்பதற்கு
இயலாத என்மனத்தில் வாட்டம்!
இனியவனே !! நீ எங்கே?

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
என்னுடைய மனத்துக் குளம்
எழுந்த இன்பமலர் நீட்டம்
ஏந்திழையினை எப்போது காண்பாய்?

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
உன்னுடைய பிரிவு என்னும்
பொதிச்சுமையால் என் நிமிர்வில்
புகை மூட்டமாய் தேக்கம் !

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
சோகமுகில் தாவிவந்து
சூழ்ந்ததென்றன் வானை
சோகம் தவிர்க்க நீ வா வா !!

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
நாகமனக் காலனவன்
நவின்றுவிட்டான் ஆணை
நானும் தேடவா வானை?

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
மோக மனக் கானகத்தில்
மகிழ்வு மான் விளையாட
மாதவனே !! வருவாயா ??
மயக்கமது தீர்க்க?

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
வேகமுடன் பிடித்தாயோ
வேல்விழியால் என்னை ?
வேந்தனவன் ஆளுகையில்
வெந்து அவன் பின்னால்....

***** ஆக்கம் ரா.கிரிஜா
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top