• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.
aniGanesha2.gif
21. கடவுள் வாழ்த்து: கணபதி

(சம்ஸ்க்ருத ஶ்லோகங்களின் தமிழ் முயற்சி)
ரமணி, 09/10/2012


வெண்துகில் உடுத்தவர் எங்கும் நிறைந்தவர்
வெண்ணிலா நிறத்தினர் நான்கு கரத்தினர்
ஆனந்த முகத்தினர் இவரை தியானித்தால்
விக்னங்கள் எல்லாம் வினையற்றுப் போகும்.

ஆனைமுகம் பூத கணங்கள் வழிபடும்
பழுத்த விளாங்கனி நாவல்பழம் உண்டிடும்
உமாமைந்தன் துன்பம் தொலையக் காரணன்
பணிகிறேன் விக்னேஷ்வரர் பாதத் தாமரையில்.

வளைதுதிக்கை மாமேனி கோடிசூரியச் சுடரொளியே
விக்னங்கள் அறச்செய்வாய் எப்போதும் எச்செயலிலும்.

*****
 
Last edited:
ஸம்ஸ்க்ருத ஷ்லோகங்கள் பெரும்பாலும் இசை வடிவில் பாடத்தக்கன. இதுபோல் அவற்றின் தமிழாக்கத்துக்கும் இசை வடிவில் இன்னொரு செய்யுள் எழுதலாம்.
மேலுள்ள விரிவான தமிழாக்கத்தைக் கீழ்வரும் ராகத்தில் பாட ஏதுவாகச் சுருக்கி இப்படி எழுதலாம்:
Shuklam Bharadharam Vishnum - powerful stotram - YouTube

வெண்துகி லணிந்த வியாபி
நிலாவண்ணம் நாற்கரம்
மலர்ந்த வதனம் தியானித்தால்
விக்னமெல்லாமும் நீங்கிடும்.
[நான்கு அடிகளில் அங்கங்கே அடிகளில் சீர் குறைந்து வருவதால் இது ஆசிரியத் துறை.]

காயத்ரியின் குரலில் வரும் ’கஜானனம்’ ஷ்லோகத்தை இப்படித் தமிழில் எழுதலாம்.
Free File Hosting & Video Downloads, Free File Sharing, Online Friends Network - Ziddu

ஆனைமுகம் பூத கணங்கள் வழிபடும்
பழுத்த விளம்நாவல்பழ சாறு பருகிடும்
உமாமகன் துன்பம் தொலையக் காரணன்
பணிந்தேன் விக்னேஷ்வரர் பாதத் தாமரை.
[நான்கு அடிகளில் வருவதால் இது கலிவிருத்தம்.]

*****
 
22. கடவுள் வாழ்த்து: முப்பெரும் தேவியர், அனுமன், சிவா
(சம்ஸ்க்ருத ஶ்லோகங்களின் தமிழ் முயற்சி)
ரமணி, 11/10/2012


சம்ஸ்க்ருத ஶ்லோகங்களின் இசைக் கோப்புகள் இங்கே தரவிறக்கலாம்:
Free File Hosting & Video Downloads, Free File Sharing, Online Friends Network - Ziddu
அதே ராகத்தில் பாடும்படி இவற்றின் தமிழ் வடிவங்கள் கீழே:

aniLakSarKam.gif

கரநுனியில் உறைவாள் லக்ஷ்மி, கரநடுவில் சரஸ்வதி
கரக்கணுவில் இருப்பாள் கௌரி, வைகறையில் கரதரிசனம்.
[அளவொத்த இரண்டு அடிகளால் இது குறள் வெண்செந்துறை.]

aniHanuman.GIF

புத்தியும் பலமும் | புகழும் துணிவும் | அச்சமின்மை ஆரோக்யம்
அறிவின்விழிப்பு சொல்வன்மை | அனைத்தும் வருமே | அனுமனை நினைத்தால்.
[அளவொத்த இரண்டு அடிகளால் இது குறள் வெண்செந்துறை.]

aniShiva.GIF

கைகால்க ளால்சொல் | மேனிவழி | செயல்வழியே...
காது கண்வழியே | உள்ள்ளத்தின் பாவங்கள்
இட்டது இடாததுமே | எல்லாஆம் | இவை பொறுப்பாய்
புகழ்மிகு அருட்கடலே | ஶ்ரீமஹாதேவ ஶம்போ!
[நான்கு அடிகளில் அங்கங்கே அடிகளில் சீர் குறைந்து வருவதால் இது ஆசிரியத் துறை.]

*****
 
23. அருகிடும் வானுயிர் வாழ்வு
ரமணி, 17/10/2012
திருத்திய பதிப்பு

[குறிப்பு: நண்பர் ராஜுவின் பரிந்துரைப்படி இக்கவிதையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். மாறிய சொற்களை, கூடிய வரிகள் நீல நிறத்தில் காண்க. ஒப்புக்காக முந்தைய பதிப்பும் பின்னால் உள்ளது.]

வயல்களில் வீடுகள் விளையும் போது
வந்து முதலில் குடிபுகும் மக்கள்
இயற்கைச் சூழலின் வாழ்வும் அழகும்
செயற்கையில் நாள்பட மறைவது காண்பர்.

இன்னமும் மனைகள் சுற்றிலும் காலியிருக்க
தினமும் காணும் வானுயிர் வாழ்வின்
விந்தையும் ஒலியும் வண்ணமும் செயலும்
சிந்தையில் என்றும் சீர்த்து நிற்கும்.

இந்திய ராபின் என்று பெயர்பெற்ற
குண்டுக் குருவிகள் கூட்டமாய்ப் பறந்து
ஆரவாரத் திரள்களாய் ஆங்காங்கே அமர்ந்து
தரையில் தத்தியும் கொத்தியும் தேடும்.

ஒன்றுடன் ஒன்று பேசிக் கொள்ளும்;
ஒன்றை யொன்று துரத்திக் கொள்ளும்;
பூந்தொட்டி நீரில் குளித்துக் கொள்ளும்;
கொன்றை மரத்தில் அமர்ந்து கொள்ளும்.

காலையில் காக்கைக்கு வைத்த உணவைக்
காக்கையைத் துரத்திவிட்டுப் பகிர்ந்து கொள்ளும்
விடுமுறையில் குழந்தைகள் போல தினமும்
அட்டகாசம் செய்வதோர் இனிய அனுபவம்.

மனிதன் நல்வாழ்வில் இல்வாழ்வின்றி நம்குருவி
இனமே அழிந்து வருவது சோகம்
புழுக்கள் குறைந்து பூச்சிகள் மறைந்து
நுண்கதிர் கோபுரக் கதிர்கள் தாக்கிட.

வீட்டில் நுண்கதிர் தாக்கும் அடுப்பு.
வெளியில் நுண்கதிரால் அழியும் குருவிகள்.
துளியும் கவலையின்றி கைப்பேசிக் கருவிகள்
செவிட்டில் அறையச் சிரித்து மகிழ்கிறோம்.


கடுகளவு உடலுடன் காதுறுத்தும் குரலுடன்
செடியிடைத் தத்திக் கழுத்தை வெட்டிப்
பூக்களில் தேடும் தேன்சிட்டு உண்ணும்
பட்டுப் பூச்சிகள் விட்ட மீதம்.

மாலை வேளையில் மின்கம்பி மேலமர்ந்து
சாலையின் அமைதியை அனுபவிக்கும் வால்குருவி.
எப்போதும் மழைவிரும்பிக் கூவும் குயில்கள்
தப்பாது எதிரொலிக்கும் நாமதுபோல் கூவினால்!

காக்கைகள் கூடத் துணிவு பெற்று
காலையில் இட்டதைச் சடுதியில் விழுங்கி
மாலையில் சிலநாட்கள் மிஞ்சிய கடைச்சரக்குக்
காரவகை இட்டால் காலிபண்ணும் சட்டென.

காக்கையின் குஞ்சுகள் குரல்காட்டிப் பழகும்.
குருவிகள் அசந்தால் கூடுகட்டும் புறம்போக்கியில்!
திருட்டில் வளர்ந்த குயில்குஞ்சின் குரல்கேட்டு
வெருட்டும் காக்கையதை விரட்டி ஓயும்.

மழைபெய்தால் போதும் இன்னும் பலவகை
வண்ணங்கள் கூட்டும் எங்கிருந்தோ வந்து!
மழைக்காலம் முடிந்ததும் மறைந்தே போகும்நம்
எண்ணங்களில் இருந்து இவ்வகைப் பறவைகள்.

மழைநீர் தேங்கிய மனைகளின் சேற்றில்
வெண்ணிறக் கழுத்துடன் காணான் கோழிகள்
மழைநீரில் ஓடிச் செடிகளில் மறைந்து
சின்னக் குழந்தைக் குரல்களில் குழுமும்.

நீலச் சிறகும் செங்காலும் கண்பட
சாலை ஓரச் சுவரில் அமர்ந்து
சட்டெனப் பறக்கும் மீன்கொத்திப் பறவையின்
குரல்கேட் டால்நம் காதுகள் விறைக்கும்.

சேற்றினை அளைந்து சிறுமீன் உண்ணும்
வெண்ணிறக் கொக்குகள் கூடவே நடந்து
மேயும் மாடுகள் கால்களில் கொத்திப்

பூச்சிகள் உண்டு மாடுகளுக்கு உதவும்.

இயற்கை ஒன்றிய இந்நாள் வாழ்க்கை
செயற்கைக் கானலில் எந்நாள் மறையுமோ?
இருக்கும் வரையில் கண்களில் விருந்து
மறைந்த பின்னர் மனதில் மட்டும்.

[குறிப்பு: இக்கவிதையின் பத்திகள் அனைத்தும் கலிவிருத்தம் என்னும் பாவகையில் அமையும். பொதுவாக நான்கு அளவடிகளில் வருவது கலிவிருத்தம். எதுகை மோனையில் செய்யுள் சிறக்கும் எனினும் அவை நம் விருப்பம். சீர்கள், தளைகள் பலவகை வரலாம். அடியிடைத் தளைக்க வேண்டுவது இல்லை.]

*****

முந்தைய பதிப்பு

வயல்களில் வீடுகள் விளையும் போது
வந்து முதலில் குடிபுகும் மக்கள்
இயற்கைச் சூழலின் வாழ்வும் அழகும்
செயற்கையில் நாள்பட மறைவது காண்பர்.

இன்னமும் மனைகள் சுற்றிலும் காலியிருக்க
தினமும் காணும் வானுயிர் வாழ்வின்
விந்தையும் ஒலியும் வண்ணமும் செயலும்
சிந்தையில் என்றும் சீர்த்து நிற்கும்.

இந்திய ராபின் என்று பெயர்பெற்ற
குண்டுக் குருவிகள் கூட்டமாய்ப் பறந்து
ஆரவாரத் திரள்களாய் ஆங்காங்கே அமர்ந்து
தரையில் தத்தியும் கொத்தியும் தேடும்.

ஒன்றுடன் ஒன்று பேசிக் கொண்டும்
ஒன்றை யொன்று துரத்திக் கொண்டும்
பூந்தொட்டி நீரில் குளித்துக் கொண்டும்
கொன்றை மரத்தில் அமர்ந்து நோட்டமிடும்.

காலையில் காக்கைக்கு வைத்த உணவைக்
காக்கையைத் துரத்திவிட்டுப் பகிர்ந்து கொண்டும்
விடுமுறையில் குழந்தைகள் போல தினமும்
அட்டகாசம் செய்வதோர் இனிய அனுபவம்.

கடுகளவு உடலுடன் காதுறுத்தும் குரலுடன்
செடியிடைத் தத்திக் கழுத்தை வெட்டிப்
பூக்களில் தேடும் தேன்சிட்டு உண்ணும்
பட்டுப் பூச்சிகள் விட்ட மீதம்.

மாலை வேளையில் மின்கம்பி மேலமர்ந்து
சாலையின் அமைதியை அனுபவிக்கும் வால்குருவி.
எப்போதும் மழைவிரும்பிக் கூவும் குயில்கள்
தப்பாது எதிரொலிக்கும் நாமதுபோல் கூவினால்!

காக்கைகள் கூடத் துணிவு பெற்று
காலையில் இட்டதைச் சடுதியில் விழுங்கி
மாலையில் சிலநாட்கள் மிஞ்சிய கடைச்சரக்குக்
காரவகை இட்டால் காலிபண்ணும் சட்டென.

காக்கையின் குஞ்சுகள் குரல்காட்டிப் பழகும்.
குருவிகள் புறம்போக்கியில் கூடுகட்டும் நாம்*அசந்தால்!
திருட்டில் வளர்ந்த குயில்குஞ்சின் குரல்கேட்டு
வெருட்டும் காக்கையதை விரட்டி ஓயும்.

மழைபெய்தால் போதும் இன்னும் பலவகை
வண்ணங்கள் கூட்டும் எங்கிருந்தோ வந்து!
மழைக்காலம் முடிந்ததும் மறைந்தே போகும்நம்
எண்ணங்களில் இருந்து இவ்வகைப் பறவைகள்.

மழைநீர் தேங்கிய மனைகளின் சேற்றில்
வெண்ணிறக் கழுத்துடன் காணான் கோழிகள்
மழைநீரில் ஓடிச் செடிகளில் மறைந்து
சின்னக் குழந்தைக் குரல்களில் குழுமும்.

நீலச் சிறகும் செங்காலும் கண்பட
சாலை ஓரச் சுவரில் அமர்ந்து
சட்டெனப் பறக்கும் மீன்கொத்திப் பறவையின்
குரல்கேட் டால்நம் காதுகள் விறைக்கும்.

சேற்றினை அளைந்து சிறுமீன் உண்ணும்
வெண்சிறகுக் கொக்குகள் மேயும் மாடுகள்
கூடவே நடந்து கால்களில் கொத்திப்
பூச்சிகளை உண்டு மாடுகளுக்கு உதவும்.

இயற்கை ஒன்றிய இந்நாள் வாழ்க்கை
செயற்கை மழையில் எந்நாள் மறையுமோ?
இருக்கும் வரையில் கண்களில் விருந்து
மறைந்த பின்னர் மனதில் மட்டும்.

*****
 
Last edited:
நண்பர் சாய்தேவுக்கு,

கவிதை நன்றாக இருக்கிறது. சோகத்தில் பிறக்கும் கவிதைகள் எப்போதுமே நன்றாகத்தான் இருக்கின்றன. இராமாயணம் கூட சோகத்தில் பிறந்தது தான் என்று பெரியோர் கூறக்கேட்டிருக்கிறேன். எனக்கு உங்கள் இந்தக்கவிதையில் பிடித்த வரிகள்:

மழைபெய்தால் போதும் இன்னும் பலவகை
வண்ணங்கள் கூட்டும் எங்கிருந்தோ வந்து!
மழைக்காலம் முடிந்ததும் மறைந்தே போகும்நம்
எண்ணங்களில் இருந்து இவ்வகைப் பறவைகள்.

நம் எண்ணங்களில் இருந்து மறைந்துபோவதில் வருத்தம் இருக்கிறது.

நீலச் சிறகும் செங்காலும் கண்பட
சாலை ஓரச் சுவரில் அமர்ந்து
சட்டெனப் பறக்கும் மீன்கொத்திப் பறவையின்
குரல்கேட் டால்நம் காதுகள் விறைக்கும்.

நீலச்சிறகும் செங்காலும் கண்பட.... ஆம் கண்படும் அளவுக்கு இயற்கையில் எல்லாமே அழகு தான்.

இனி என் சிறுமதியில் தோன்றிய சில கருத்துக்கள் பின்னூட்டமாக:

1.
இந்திய ராபின் என்று பெயர்பெற்ற
குண்டுக் குருவிகள் கூட்டமாய்ப் பறந்து
ஆரவாரத் திரள்களாய் ஆங்காங்கே அமர்ந்து
தரையில் தத்தியும் கொத்தியும் தேடும்.

இதில் நீங்கள் இந்தக்குருவிகள் இன்று microwave towerகளின் அலை வீச்சின் தாக்கத்தால் கருவிலேயே அருகி வருவதைக் கூறியிருக்கலாம். அதிலுள்ள சோகம் மனதைப்பிழியும் ஒன்றல்லவா?

2.
ஒன்றுடன் ஒன்று பேசிக் கொண்டும்
ஒன்றை யொன்று துரத்திக் கொண்டும்
பூந்தொட்டி நீரில் குளித்துக் கொண்டும்
கொன்றை மரத்தில் அமர்ந்து நோட்டமிடும்.

இதில் உம் விகுதியின் பயன்பாடு முழுமையடையவில்லை. அதனால் செய்யுளின்பத்தில் பிசிறு தட்டுகிறது. ....பேசிக்கொண்டும் ...துரத்திக்கொண்டும்....குளித்துக்கொண்டும் எப்படி அமர்ந்து நோட்டமிடமுடியும்? நெருடுகிறதே.

நட்புடன் வாழ்த்துக்கள்.


 
Last edited:
வணக்கம் நண்பர் ராஜு.

உங்கள் பரிந்துரைகளை ஏற்று கவிதையைத் திருத்தி மறுபதிப்பு அதே அஞ்சலில் கொடுத்துள்ளேன். என்னிடம் ஏதேனும் கவிதா விலாசம் இருப்பின் அது உங்களுடைய ஆக்கபூர்வ விமரிசங்களில் மெருகேருவது எனக்கு மகிழ்ச்சி. உங்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி.

அஞ்சல் 55-இல் நீங்கள் சொன்னது சரியே. ஆதிகவி வால்மீகி மஹர்ஷியின் ராமாயணக் காவியத்தின் ஶ்லோகம் என்னும் செய்யுள் வடிவம் அவர் சோகத்தில் இருந்தே பிறந்தது.
The Rig Vedic Ramayana
The Origin of the Valmiki Ramayana
 
Dear Saidevo,

Thanks.

I thought you would write a little more about the plight of the ஊர்க்குருவிகள். The radiation from the towers are such that they destroy the fine wall of the sack which holds the fetus of the kuruvi in its egg/womb. So what is happening today is an abominable act of destruction of a hapless fauna. It is some thing that reminds you of Aswaththama's astra. I thought you would write a little more about it at least as record for posterity-that a sensitive poet's mind is deeply disturbed by what is happening. Disappointed.
 
Last edited:
namaste Raju.

Since I have not researched the subject well enough I did not write more than what I did. Since you have put it with a very good metaphor, why don't you finger-write a few lines, come on.


Dear Saidevo,

Thanks.

I thought you would write a little more about the plight of the ஊர்க்குருவிகள். The radiation from the towers are such that they destroy the fine wall of the sack which holds the fetus of the kuruvi in its egg/womb. So what is happening today is an abominable act of destruction of a hapless fauna. It is some thing that reminds you of Aswaththama's astra. I thought you would write a little more about it at least as record for posterity-that a sensitive poet's mind is deeply disturbed by what is happening. Disappointed.
 
Since I have not researched the subject well enough I did not write more than what I did. Since you have put it with a very good metaphor, why don't you finger-write a few lines, come on.
Nicely put across Shri Saidevo Sir. Hope and wish Shri .Raju sir takes the bait and in his own inimitable style will present the forum with a write up. Eagerly waiting forthe same.

Cheers!!
 
Dear Manoharkumar,

இதோ உங்களுக்காக நான் எழுதியது:

புத்தகத்தைப்படித்துக்கொண்டிருந்த மகன் கேட்டான்
“அப்பா, ஊர்க்குருவின்னா என்ன?”
TV பார்த்துக்கொண்டிருந்த அப்பா வால்யூமை குறைத்து விட்டு சொன்னார்
“அது ஒருவகையான குருவி. அதுக்குப்பேரு சிட்டுக்குருவின்னு கூட சொல்லுவாங்க”.
“அப்பொ அதை ஏன் ஊர்க்குருவின்னு சொல்றாங்க?”-இது மகன்.
அது எல்லா ஊருலேயும் இருக்கும். அதுனால அதை ஊர்க்குருவின்னு சொல்வாங்க.-இது அப்பா.
நம்ம ஊருல இல்லையே-இது மகன்.
சுரீர் என்று உறைத்தது தந்தைக்கு. செல் போன் டவர்களின் அலை வீச்சில் காணாமலே போய்விட்ட அந்தப்பாவப்பட்ட உயிரினங்களின் சோகக்கதையை எப்படி மகனுக்கு கூறுவது என்று யோசனையில் ஆழ்ந்தார்.
TV பாடிக்கொண்டிருந்தது “சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு தென்றலே உனக்கெது சொந்தவீடு” என்று.


இதைக் கவிதையில் இன்னும் அழகாக எழுதமுடியும். ஆனால் என்ன செய்வது. நான் சிட்டுக்குருவி போல. கட்டுப்பாடுகள் பிடிப்பதில்லை.

Cheers.
 
.
கட்டுப்பாடில்லாத காட்டாற்று வெள்ளமும் கடலில் தான் சங்கமிக்கிறது.
கட்டுப்பாடில்லாத ஊர்க்குருவியும் இரவானால் கூண்டுக்குள் அடங்குகிறது...
கட்டுப்பாடில்லாத ராஜு சாரின் எண்ணங்களும் எழுத்துக்களும் வரையறுக்கப்படாத கவிதை தான்

Cheers.
 
நண்பர் ராஜுவுக்கு.

1. நாங்கள் கேட்டோம் என்பதற்காக இவ்வளவுதானா எழுதுவது? முக்கியமான விஷயம் அஸ்வத்தாமனின் அஸ்திரத்தை மறந்துவிட்டீரே!

2. ’கவிதையில் இன்னும் அழகாக எழுதமுடியும். ஆனால் எனக்கு அதன் கட்டுப்பாடுகள் பிடிக்காது.’ இதில் உள்ள முரணை யோசித்தீரா? கட்டுப்பாட்டினால் அழகு என்று கவிதையில் இருக்க, கட்டுப்பாடு பிடிக்காது என்றால் (கவிதை) அழகு பிடிக்காது என்று ஆகிவிடாதோ?

3. சிட்டுக்குருவிக்குக் கட்டுப்பாடுகள் இல்லையா என்ன? கட்டுப்பாடின்றி அது உயர உயரப் பறந்து, பருந்தாக நினைத்து, செல்ஃபோன் டவர்களில் போய் அமர்ந்து, கருகிச் செத்ததா என்ன? அல்லது அந்த நுண்கதிர்கள் ஊர்க்குருவி இனத்தை மட்டும் பாதிப்பானேன்? மற்ற பறவைகளுக்கு ஒன்றும் ஆகவில்லையா? [இதுபற்றி மேலும் விவரங்கள் அறிந்தவர்கள் இங்கு அவற்றைப் பதிவார்களாக.]

4. மனிதன் நல்வாழ்வில் இல்வாழ்வின்றி நம்குருவி
இனமே அழிந்து வருவது சோகம்...

என்ற வரிகளில் நான் நம்குருவி என்றது இந்தச் சிட்டுக்குருவி என்கிற ஊர்க்குருவியைத்தான். ’இல்வாழ்வின்றி’ என்ற குறிப்பில் நான் அவை கருத்தரிக்க முடியாமலும் கருவிலேயும் அழிவதைச் சுட்டியிருக்கிறேனே? இதை கவனிக்கவில்லை போலிருக்கிறது.

ஊர்க்குருவியினம் காணாமல் போவது என்னை பாதிக்கும் சோக விஷயங்களில் ஒன்று. என்றேனும் ஒருநாள் நான் அந்த சோகக் கதையின் பின்னணியை இன்னும் நன்றாக அறிந்துகொண்டு ஒரு கவிதை எழுதுவேன் என்று நம்புகிறேன்.

கவிதை நுணுக்கங்கள் இவ்வளவு தெரிந்து வைத்துக்கொண்டு, புதுக்கவிதை வடிவத்தைக் கசாப்புக் கவிதை என்று சாடும்போது, ’எனக்கு (மரபுக்) கவிதையின் கட்டுப்பாடுகள் பிடிக்காது’ போன்ற சால்ஜாப்புகள் வேண்டாம். கழுதை பற்றிக் கவிதை வரும்போது குருவி பற்றி வராதா என்ன? வாரும், ஒரு நல்ல கவிதை தாரும்!

[பின்குறிப்பு: நட்புரிமையில் ப்ரயோகித்துள்ள சொற்களை அந்த நோக்கில் எடுத்துக்கொள்ளவும்.]
 
பலே!

.
கட்டுப்பாடில்லாத காட்டாற்று வெள்ளமும் கடலில் தான் சங்கமிக்கிறது.
கட்டுப்பாடில்லாத ஊர்க்குருவியும் இரவானால் கூண்டுக்குள் அடங்குகிறது...
கட்டுப்பாடில்லாத ராஜு சாரின் எண்ணங்களும் எழுத்துக்களும் வரையறுக்கப்படாத கவிதை தான்

Cheers.
 
வணக்கம் மனோஜ்.

அழகான கவிதை வரிகள், நீர் எழுதியது. ’அவலோகிதம்’ ஓர் அற்புதமான கவிதை விமர்சன மென்பொருள்.
Avalokitam - Virtual Vinodh

நீர் எழுதிய முதலிரண்டு வரிகளை அப்படியே கொடுத்தால் அதை ’அவலோகிதம்’ அலசி,

கட்டுப்பாடில்லாத காட்டாற்று வெள்ளமும் கடலில்தான் சங்கமிக்கிறது.
கட்டுப்பாடில்லாத ஊர்க்குருவியும் இரவானால் கூண்டுக்குள் அடங்குகிறது...
--இது ’குறட்டாழிசை’ என்கிறது.

கட்டுப்பாடில்லாத காட்டாற்று வெள்ளமும்
கடலில்தான் சங்கமிக்கிறது.
கட்டுப்பாடில்லாத ஊர்க்குருவியும் இரவானால்
கூண்டுக்குள் அடங்குகிறது...
--இப்படி எழுதினால் இது வெண்டுறை என்கிறது.

கட்டற்ற காட்டாறு வெள்ளமும்
கடலில்தான் சங்க மிக்கும்.
கட்டற்ற குருவியுமே இரவானால்
கூ(ண்)டுக்குள் அடங்கி விடும்காண்.
--இப்படி எழுதினால் இது வஞ்சி விருத்தம் என்கிறது.

[’சலங்கை ஒலி’ படத்தில் கமலஹாசன் ஆடிக் காட்டுவதுபோல் இருக்கிறதா? ஆடுவது நானல்ல, அவலோகிதம்!]

நான் மேலிரண்டு பாவரிகளை தட்டெழுதக்கூட இல்லை. அப்படியே நகல்-ஒட்டு-வெட்டு செய்துதான் அலசினேன். கடைசி நான்கு வரிகள் மட்டும் நான் தட்டெழுதினேன்.

மற்ற லௌகிகச் செயல்களின் நுண்கதிர்கள் உங்கள் கவிதைக் கருவை பாதிக்கவேண்டாம். உமது கவிதைக் குருவிகள் பறக்கட்டும், முதலில் பட்டம்போல் ’அவலோகம்’ இடும் நூலிலும், பின் தானேயும்! வாழ்த்துக்கள்.
 
Last edited:
Dear Saidevo Sir.

Thanks a lot for your encouraging words. You can see beautiful poem in others writing as well. Hope i can pick up something more from your writings and encouragements.,

Cheers.
 
எதுவும் வேண்டாமென்று இருந்த என்னை நண்பர்கள் தூக்கி நிறுத்தி என் தாச்சீலையையும் கட்டிவிட்டு சென்று வா வென்று வா என்று கட்டளையும் இட்டு அனுப்பிவிட்டார்கள். பெரிதாக ஒன்றும் சாதிக்காவிட்டாலும் சிறிதாக எதாவது செய்ய முடிகிறதா என்று பார்க்கிறேன். சரி எங்கே தொடங்குவது? சிட்டுக்குருவியிலேயே தொடங்குவோமே.

இது குறு நாடகம் போன்ற ஒன்று. இதில் கவிதையும் உரைநடையும் கலந்து வரும்.


நாடகத்தின் பெயர்: சிட்டுக்குருவியெல்லாம் எங்கே போச்சு

நிகழும் காலம்:சிட்டுக்குருவிகள் இருந்து, வாழ்ந்து, இறந்த காலம்
பாத்திரங்கள்: ஒரு பெண், அவள் கணவன், அவளுடைய குழந்தை, சிட்டுக்குருவி.

காட்சி 1.
யுகங்களாய்த்தொடர்ந்து வரும் ஆக்க உந்துதலில் அந்தப்பெண் பாடினாள்:

*சிட்டுக்குருவீ சிட்டுக்குருவீ சேதிதெரியுமா என்ன
விட்டுப்பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல
பஞ்சு மெத்தையை விரிச்சுவச்சேன் சும்மாக்கிடக்குது
பசும்பாலக்காய்ச்சி மூடி வச்சேன் ஆறிக்கிடக்குது*.

பின்னணியில் குரல்: கணவன் திரும்பி வந்து கூடிட ஒரு சுந்தரக்குட்டன் பிறந்தான்.குழந்தை வளர்ந்து சிறுவனானான்.


காட்சி 2.

பொன்மணிக்குட்டன் அன்னையைக் கேட்டான்
அப்பாவொட பேசணுமென்னு
அலைபேசியை அவன் கைக்கொடுத்தாள்
ஆசை தீரப்பேசித்தீர்த்தான்
பேசியஅந்தப் பத்து நிமிடத்தில்
அலைமாற்றிகளும் ஆண்டென்னாக்களும்
சிம்கார்டுகளும் சீராக்கிகளும்
செய்தகோலம் சொல்லிமாளாது

அசுவத்தாமனின் அத்திரம்போல
குற்றலைவீச்சு யாங்கணும் பரவிக்
குருவிக்கூட்டத்தின் கருவறுத்திட
குருவிகள் எல்லாம் காலப்போக்கில்
கொத்துக் கொத்தாய் அருகிப்போயின.


காட்சி 3.

அன்னை மீண்டும் பாடினாள் குட்டனுக்குச் சோறூட்ட

குருவீ குருவீ வா வா சிட்டுக்குருவீ வா வா
குருவீ குருவீ வா வா சிட்டுக்குருவீ வா வா........

குருவிகள் எதுவும் வரவில்லை
குட்டன் சோறு உண்ணவில்லை
அசுவத்தாமன் இழந்தது குடுமியை
மனிதஇனம் இழந்தது குருவியை.

பின்னணியில் குரல்:

குருவிகள் புண்ணியாத்துமாக்கள். அவற்றுக்கான
மகாப்பிரளயம் வந்திடவும் அவை
பரமாத்துமாவில் லயமாகிவிட்டன.
அடுத்த சமஷ்டி ஸ்ருஷ்டி வரை அவை
இறைவனுடன் ஒன்றி இருக்கும்.


(அலைமாற்றி-transducer, சீராக்கி-modulator, குற்றலை-microwave*......* நன்றி-சினிமாப்பாடல்)
 
Last edited:
வணக்கம் ராஜு.

கவிதை நாடகம் அருமை. அலைபேசியைப் பயன்படுத்தும் நாம் ஒவ்வொருவருமே அசுவத்தாமன்தான். குட்டன் இன்று சோறு உண்ணாவிட்டாலும் நாளை குருவியை மறந்து கருவியைக் கைக்கொள்வான். இருக்கவே இருக்கின்றன ஆயிரம் திரைத் துணுக்குகள், குருவிகளைப் பார்த்து மகிழ! இனிவரும் குழந்தைகள் குருவி கத்துவதை இப்படி அறிந்துகொள்ளும்.

அன்னை: குட்டா, குருவி எப்படிக் கத்தும்?
குட்டன் விழிக்கிறான்.
அன்னை: நேத்திக்கு நான் காமிச்சேனே கண்ணா?
குட்டன் உடனே புன்னகையுடன் தன் அலைபேசியில் ஒரு பொத்தானை அமுக்கிக்
குருவியின் சலனப் படம் பார்த்துக் குரல் கேட்டு மகிழ்கிறது.

அடுத்த தலைமுறையில் உயிரில்லாக் குருவிகள் ரோபோ பொம்மைகளாகவும் நடமாடலாம், இயற்கையை விஞ்சும் நம்ஞானத்தில்!
 
Hi Folk,

Though I have used the word கவிதை in my post somewhere I have not written the above piece with grammer of prosody in mind. It is a free flowing expression of thoughts. So it may or may not fall within the four walls of யாப்பிலக்கணம். In all probability it may not.

Thanks.
 
vaNakkam RAju, my friend.

Why don't you check if your kavithai adheres to yAppu, with a software like AvalOkitam and thereby refresh your yAppu?
Avalokitam - Virtual Vinodh

With so much interest and skill in kavithai, if you don't do it, you are not doing justice IMHO. Interestingly, you can easily fit the poems we write at stanza levels within a pAvinam if not a pA, using Avalokitam and making small corrections if we thought about what we wrote. To me it appears more like writing small chunks of computer programs, say in PHP, and then compiling chose chunks until they have zero error.
 
Last edited:
Dear Saidevo,

Thank you for the suggestion. I am aware of this software. But it takes away a lot of my time as the effort is quite regressive/iterative. Any way I will try to write something strictly within the four walls of Yaappu next time. To tell you the truth, I choose a word after a good amount of thought and once I have chosen it is like my love and I hate to ditch it.

Thanks and cheers.
 
Last edited:
24. தமிழ் ஹைக்கூவின் புதுவடிவம்: ஐக்குறள்
ரமணி, 19/10/2012

அசைகள் பதினேழில் ஜப்பானின் ஹைக்கூவாம்.
மூன்று வரியில் மனது.

இரண்டு வரிகளில் ஈரசை மூவசைச்
சீர்களேழு வந்து இறுதிச்சீர் ஓரசையாய்
முற்றும் குறள்வெண்பா ஏற்ற வடிவம்
தமிழ்மொழியில் ஹைக்கூ எழ.

கீழெல்லை ஈரசை மொத்தம் பதிமூன்று
மேலெல்லை மூவசை பத்துடன் ஒன்பது
காய்ச்சீர் இயற்சீர் இணைப்பில் இடையெல்லை
போதாதா ஹைக்கூ எழ?

தமிழ்மொழியில் ஹைக்கூ குறளில் எழும்போது
ஐக்குறள் என்போம் அதை.

அணுக்குறள் என்றும் துளிக்குறள் என்றும்
அழக்கலாம் என்போம் இதை.

*****

இயற்கை முரண்காட்டி வெட்டும் பதமொன்றில்
சேருமே ஹைக்கூவில் காண்.

பனித்துளி ஆவியாகும்; வையம் பனித்துளி.
ஓர்நொடியில் போகும் புதிது.

புகழ்பெற்ற ஜப்பான்ய ஹைக்கூ கவிஞராம்
இஸ்ஸாவின் ஹைக்கூ இது.

வேறுசில ஜப்பான்ய ஹைக்கூ வரும்கீழே
ஐக்குறள் ரூபத்தில் நம்.

சேற்றிலே நாற்றுநடும் பெண்கள் அழகில்லை.
பாடிடும் தொல்பாட் டழகு. ... [ரைஃஜான்]

வளிக்காலம். கூட்டில் பசிமிக வீணாக
வாய்திறக்கும் இஸ்ஸாவோ தத்து. ... [இஸ்ஸா]

அழகான கிண்ணத்தில் பூக்கள் அமைப்போமா?
உண்பதற்கு இல்லை உணவு. ... [பாஷோ]

கீழ்விழுந்த பூவா கிளைக்குத் திரும்புவது?
வெண்பட்டுப் பூச்சியே ஓ! ... [மோரிடாகே]

*****

முதல்வரியில் காட்சி. இரண்டினில் காரணம்.
ஐக்குறள் தட்டெழுதும் போது.

இப்படியோ அல்லது வேறு அமைப்பிலோ
ஐக்குறள் ஆக்குவோம் நாம்.

குறள்வடிவு மட்டும். எதுகைமோனை கட்டில்லை.
தானே அமைந்தால் அழகு.

*****

அம்மா எனும்பசு அய்யோஓ என்கிறது.
வாயில் நெகிழிப்பை யோடு! ... [நெகிழி=plastic]

புல்லிருந்த பூமியை நக்கித் துடைத்திடும்.
நாயாய் அலையும் பசு.

எறும்புக்கு இட்ட அரிசிமாவுக் கோலம்.
கரந்துண்ணும் காக்கை அணில்.

சுட்டெரிக்கும் வெய்யில். சுவரோரம் வண்டி.
எருதுகள் வாயில் நுரை.

முன்னே ஒளிவெள்ளம். சாலை விருட்சம்.
சுவரில் எறிந்துசெல்லும் கார்.

*****

Suggestion:
As an exercise those who want to write kaikU in kuRAL form, might try to translate in this form the famous haikus in this collection:
http://www.sacred-texts.com/shi/jh/index.htm
 
Last edited:
25. கலைமகளை வேண்டுவோம்!
ரமணி, 23/10/2012

கலிசூழ்ந்த இந்நாளில் கல்வி எதுவென்று
கலைமகளே நானறியக் கருணைசெய் தாயே!

கல்வி எதுவென்று நானறிந்து உன்னருளால்
இல்லறத்தில் சிறக்க உதவுவாய் தேவீ!

இல்லறத்தில் சிறக்க வேண்டியது அனைத்தும்
பல்வகையில் எனக்கருள வேண்டும் அம்மா!

கல்வியும் செல்வமும் வேறல்லவே தாயே!
கலைமகளும் அலைமகளும் மலைமகளும் ஒன்றேயன்றோ!

எல்லோரும் இதையுணர்ந்து நல்லறத்தில் வாழ்ந்து
கல்வியும் செல்வமும் அறன்வழிப்பட அருள்வாயே!

கல்வியும் செல்வமும் வீரமும் பெற்ற
நல்லவர்கள் பெருகி அறம்வளர்க்க அருள்வாயே!

நல்லவர்கள் பெருகி உலகில் அறம்தழைத்து
இல்லறத்தில் ஆன்மஒளி கூடிட அருள்வாயே!

*****
 
Last edited:
மிகவும் நன்றாக இருக்கிறது சாயிதேவோ அவர்களே. உங்களுக்கும் தபி நண்பர்களுக்கும் சரஸ்வதி பூஜா நல்வழ்த்துக்க்கள்.
 
26. கவிதையும் கணினியும்
ரமணி, 31/10/2012

கவிதை எளிதாகக் கைவரும் போது
கவிதை வகைநோக்க மேலும் சிறந்து
கவிதை மனதில் மரபில் மிளிர்ந்து
கவினுறும் என்றென் கருத்து.

கவிதையில் ஓவியம் தீட்டுதல் போலக்
கவிதை இலக்கணத்தில் சிற்பம் வடித்தால்
கவிதை மரபின் ஒழுங்கில் செழித்துக்
கவிஞர்கள் நிற்பர் நிலைத்து.

கணினியில் ஓடும் நிகழ்ச்சி தொகுக்கும்
பணியினில் காட்டும் உழைப்பைச் சிறிதே
கவிதை மரபின் ஒழுங்கினில் காட்டச்
செவியில் இனிக்கும் கவி.

கணினி நிகழ்ச்சித் தொகுப்பின் முதன்மைப்
பணியான சொற்கள் மரபின் ஒழுங்கில்
அணிசேரக் கோர்த்தல் இயல்வதுபோல் யாப்பின்
அணியில் இயலாத தேன்?

மரபில்தான் மென்பொருள் சீர்ப்பது போல
மரபில் சிறக்கும் கவி.

*****
 
27. தீபாவளித் திருநாள்
ரமணி, 12/11/2012
(பலவிகற்ப பஃறொடை முடுகியல் வெண்பா)


நரகசுரன் மாண்டநாளை அன்னைவரம் பெற்றபடி
இன்னுமிருள் மன்னியுள்ள போதினிலே கண்விழித்து
எண்ணெய்தேய்த் துக்குளித்துப் புத்தாடை கட்டி
வெடிவெடித்துக் கொண்டாடித் தித்திக்கும் தின்பண்டம்
நாவில் இனித்திடவே சுற்றமும் நட்பும்
தொலைபேசி நேர்வந்து வாழ்த்தி மகிழ்ந்திடவே
எல்லோரும் இன்புறுமித் தீபவொளிப் பொன்னாளில்
கண்ணனை உன்ன உயர்வு.

[’பெற்றபடி, இன்னுமிருள், மன்னியுள்ள, கண்விழித்து, வெடிவெடித்து, இனித்திடவே, தொலைபேசி, மகிழ்ந்திடவே’
போன்ற மூவசைச் சீர்களில் வரும் நடு அசையில் இருகுறில் இணந்து வந்து ஓசையை முடுக்கி விடுவது
(விரைவு பெறச் செய்வது) முடுகியல் வெண்பா.]

*****
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top