• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அன்னையின் ஆயிரம் நாமங்கள்.

Status
Not open for further replies.
851. ஜன்மம்ருத்யு ஜராதப்த ஜன விச்'ராந்தி தா3யின்யை = பிறப்பு, இறப்பு, மூப்பு என்பவைகளால் துன்புறும் ஜனங்களுக்கு மன அமைதியை நல்குபவள்.

852. ஸர்வோபநிஷத் உத்3கு4ஷ்டாயை = உபநிஷத்துக்கள் அனைவற்றாலும் போற்றப்படுபவள்.

853. சாந்த்யதீத கலாத்மிகாயை = சாந்த்யதீதம் என்னும் கலை வடிவானவள்.

854. க3ம்பீ4ராயை =அளப்பதற்கு அரியவள் .

855. க3க3னாந்தச்'தா2யை = வெட்டவெளியின் நடுவில் இருப்பவள்.

856. க3ர்விதாயை = தற்பெருமை மிகுந்தவள்.

857. கா3ன லோலுபாயை = இசையில் மனதைச் செலுத்துபவள்.

858. கல்பனா ரஹிதாயை = கற்பனைகள் அற்றவள்.

859. காஷ்டா2யை = வேதங்களின் உட்பொருள் ஆனவள்.

860. அகாந்தாயை = பாபத்தைப் போக்குபவள்.
 
861. காந்தாரத்த4விக்3ரஹாயை = கணவனின் உடலில் சரிபாதி ஆனவள்.

862. கார்ய காரண நிர்முக்தாயை = காரிய காரணங்களுக்கு
அப்பாற்பட்டவள் .

863. காமகேலி தரங்கி3தாயை = தனக்கும் சிவனுக்கும் இடையே நடக்கும் விளையாட்டின் விளைவாக அண்டங்கள் என்னும் அலைகளை எப்போதும் தோற்றுவிப்பவள்.

864. காந்த கனக தாடங்காயை = ஒளிவீசும் காதணிகளை அணிந்தவள்.

865. லீலாவிக்ரஹ தா4ரிண்யை = விளையாட்டாக உடல்களை எடுப்பவள்.

866. அஜாயை = பிறப்பில்லாதவள் .

867. க்ஷய விநிர்முக்தாயை = மரணம் இல்லாதவள்.

868. முக்3தா4யை = கட்டழகு உடையவள்.

869. க்ஷிப்ர ப்ரஸாதி3ன்யை = விரைந்து அனுகிரகம் செய்பவள்.

870. அந்தர்முக2ஸமாரத்4யாயை = மனத்தை உள்முகமாகத் திருப்பி ஆராதிக்கப்படுகின்றவள் .
 
871. ப3ஹிர்முக2ஸுது3ர்லபா4யை = புறக்கரணங்களின் வாயிலாக அறிவதற்கு அரியவள்.

872. த்ரய்யை = மூன்று வேதங்களின் வடிவானவள்.

873. த்ரிவர்க3 நிலயாயை = முப்பால் மயமானவள்.

874. த்ரிஸ்தா2யை = மூன்றினுள் நிலை பெற்றவள்.

875. த்ரிபுரமாலின்யை = திரிபுரமாலின்யை ஆகிய பராசக்தி.

876. நிராமயாயை = நோயற்றவள்.

877. நிராலம்பா3யை = பற்றுக்கோடு இல்லாதவள்.

878. ஸ்வாத்மா ராமாயை = தன்னில் தானே திருப்தி உடையவள்.

879. ஸுதா4ஸ்ருத்யை = அமிர்த தாரையின் வடிவானவள்.

880. ஸம்ஸாரபங்க நிர்மக்3ன ஸமுத்3த4ரண பண்டி3தாயை = சம்சாரம் என்னும் சேற்றில் மூழ்கியுள்ள மனிதர்களை உய்விக்கும் திறமை கொண்டவள்.
 
881. யக்ஞ ப்ரியாயை = யக்ஞம் செய்பவர்களிடம் அன்பு செலுத்துபவள்.

882. யக்ஞ கர்த்ர்யை = யக்ஞங்களுக்குக் கர்த்தாவான சிவன் உடலில் உறைபவள்.

883. யஜமான ஸ்வரூபிண்யை = வேள்வி செய்பவனின் வடிவில் இருப்பவள்.

884. த4ர்மாதா4ராயை = தர்மத்துக்கு ஆதாரம் ஆனவள்.

885. த4னாத்4யக்ஷ்யாயை = செல்வங்களுக்கு எல்லாம் தலைவி ஆனவள்.

886. த4ன தா4ன்ய விவர்தி4ன்யை = தனத்தையும், தானியத்தையும் பெருக்குபவள்.

887. விப்ர ப்ரியாயை = விப்ரர்களிடம் கனிவு கொண்டவள்.

888. விப்ர ரூபாயை = விப்ரர்களின் வடிவத்தில் உள்ளவள்.

889. விச்'வ ப்4ரமணகாரிண்யை = உலகங்களை முறையாகச் செலுத்துபவள்.

890. விச்'வ க்3ராஸாயை = அண்டங்களை எடுத்து விழுங்குபவள்.
 
891. வித்3ருமாபாயை = பவழத்தை நிகர்த்த அழகுடையவள்.

892. வைஷ்ணவ்யை = விஷ்ணுவின் சக்தி வடிவானவள்.

893. விஷ்ணு ரூபிண்யை = விஷ்ணு வடிவத்தில் உள்ளவள்.

894. அயோனயே = எதிலிருந்தும் உதிக்காத மேன்மை பொருந்தியவள்.

895. யோனி நிலயாயை = தோற்றத்தின் இருப்பிடம் ஆனவள்.

896. கூடஸ்தாயை =
அஞ்ஞான மயமான பிரபஞ்சத்தின் இருப்பிடம் ஆனவள்.

897. குலரூபிண்யை = குலத்தின் வடிவானவள்.

898. வீரகோ3ஷ்டி ப்ரியாயை = வீரர்களும் கூட்டத்தை விரும்புபவள்.

899. வீராயை = வீரியமே வடிவானவள்.

900. நைஷ்கர்ம்யாயை = நிராசையில் நிலைத்து வினைகளைப் புரிபவள்.
 
Last edited:
901. நாத3ரூபிண்யை = ஓசை வடிவானவள்.

902. வி
ஞ்ஞான கலநாயை = பரஞானம் தருபவள்.

903. கல்யாயை = கலைகளில் வல்லவள்.

904. வித3க்4தா4யை = திறமை வாய்ந்தவள்.

905. பை3ந்தவாஸநாயை = பைந்தவம் என்னும் ஸ்தானத்தை ஆசனம் ஆகக் கொண்டவள்.

906. தத்வாதி4காயை = தத்துவங்களுக்கு அப்பாற்பட்டவள்.

907. தத்வமய்யை = தத்துவங்களின் வடிவானவள்.

908. தத்வமர்த்த ஸ்வரூபிண்யை = ஈசனையும், ஜீவனையும் இணைப்பவள்.

909. ஸாமகா3ன ப்ரியாயை = சாமகானத்தை ரசிப்பவள்.

910. ஸோம்யாயை = ஸோம யாகத்துக்கு தகுதி வாய்ந்தவள்.
 
911. ஸதாசி'வ குடும்பி3ன்யை = சதாசிவனாரின் இல்லக்கிழத்தி ஆனவள்.

912. ஸவ்ய அபஸவ்ய மார்க3ஸ்தா2யை = இடம், வலம் என்னும் இரண்டு மார்கங்களுக்கும் தலைவி ஆனவள்.

913. ஸர்வாபத் விநிவாரிண்யை = எல்லாவிதமான ஆபத்துக்களில் இருந்தும் உயிர்களைக் காப்பவள்.

914. ஸ்வஸ்தாயை = தன்னில் தானாய் இருப்பவள்.

915. ஸ்வபா4வ மது4ராயை = இயல்பாகவே இனிய சுபாவம் கொண்டவள்.

916. தீ4ராயை = பாண்டித்தியம் கொண்டவள்.

917. தீ4ர ஸமர்சிதாயை = உறுதிபூண்ட பண்டிதர்களால் ஆராதிக்கப்படுபவள்.

918. சைதன்யார்க்4ய ஸமாராத்4யாயை = ஆத்மஸ்வரூபத்தின் வடிவாக ஆராதிக்கப்படுபவள்.

919. சைதன்ய குஸுமப்ரியாயை = பேரறிவு என்னும் மலரை விரும்புபவள்.

920. ஸதோ3தி3தாயை = இடையறாது தோன்றிக்கொண்டு இருப்பபவள்.
 
921. ஸதா3துஷ்டா2யை = எப்போதும் மகிழ்வோடு இருப்பவள்.

922. தருணாதித்யபாடலாயை = நண்பகல் சூரியனைப் போல
ச் சிறிது சிவப்போடு கூடிய வெள்ளை நிறம் கொண்டவள்.

923. த3க்ஷிணா த3க்ஷிண ஆராத்4யாயை = தக்ஷிண மார்க்கம், வாமாசாரம் என்னும் இரண்டின் வாயிலாகவும் அறியப்படுபவள்.

924. த3ரஸ்மேர முகா2ம்பு3ஜாயை = ஆபத்துக் காலங்களிலும் புன்னகை தவழும் தாமரை முகம் கொண்டவள்.

925. கௌலினீ கேவலாயை = கெளல தர்மத்தையும் பரஞானத்தையும் உடையவள்.

926. அனர்க்4ய கைவல்ய பத3தா3யின்யை = மதிப்பிட முடியாத பரஞானத்தை வழங்குபவள்.

927. ஸ்தோத்ர ப்ரியாயை = புகழ்ச்சியில் விருப்பம் கொண்டவள்.

928. ஸ்துதிமத்யை = போற்றுதலுக்கு உரியவள்.

929. ச்'ருதி ஸம்ஸ்துத வைப4வாயை = வித்யா ஸ்வரூபமான வேத மயம் ஆனவள்.

930. மனசஸ்வின்யை = மனதைத் தனக்கே உரியதாக வைத்துள்ளவள்.
 
931. மானவத்யை = பரந்த மனம் உடையவள்.

932. மஹேச்'யை = மகேஸ்வ
ரின் ஸ்வரூபம் ஆனவள்.

933. மங்களா க்ருத்யை = மங்களகரமான வடிவானவள்.

934. விச்'வமாத்ரே = அனைத்து உலகுக்கும் தாய் ஆனவள்.

935. ஜக3த்3 தா4த்ர்யை = உலகம் அனைத்தயும் தாங்குபவள்.

936. விசாலாக்ஷ்யை = அகன்ற அழகிய கண்களை உடையவள்.

937. விராகி3ண்யை = வைராக்யமே வடிவானவள்.

938. ப்ரக3ல்பா4யை = துணிச்சல் மிகுந்தவள்.

939. பரமோதா3ராயை = மேலான மகிழ்ச்சியைத் தருபவள்.

940. பராமோதாயை = நறுமணத்துக்கும், கீர்த்திக்கும் இருப்பிடம் ஆனவள்.
 
Dear Madam,

Good effort. I would like to say two things :

1. Lalitha thrisathi is considered to be more powerful.

2. Lalitha Navarathna malai is equivalent to Lalitha Sahasranamam. Sage Agasthiar has
given it to us. Lord Muruga is said to have composed it first in praise of Divine Mother.
 
Dear Mr. N.R.R,

I will be completing the 'Annaiyin aayiram naamangal' in another week's time.

Can you please continue with Lalitha Thrisathi for the benefit of the

Forum members?

Please consider this favorably.

with warm regards,

Mrs. V. R. :pray2:
 
941. மனோமய்யை = மனதின் வடிவானவள்.

942. வ்யோமகேச்'யை = வ்யோமகேசனாகிய சிவனின் ஸ்வரூபம் ஆனவள்.

943. விமானஸ்தா2யை = விமானத்தில் வீற்று உள்ளவள்.

944. வஜ்ரிண்யை = வஜ்ஜிர ஆயுதத்தைக் கொண்டவள்.

945. வாமகேச்'வர்யை = வாமகேச்வரம் என்னும் தந்திர சாதனத்தின் அதிஷ்டான தேவதை ஆனவள்.

946. பஞ்ச யக்ஞ ப்ரியாயை = ஐம்பெரும் வேள்விகளில் விருப்பம் கொண்டவள்.

947. பஞ்சப்ரேத மஞ்சாதி4சா'யின்யை = ஐந்து பிரேதங்களால் ஆன பீடத்தில் வீற்று இருப்பபவள்.

948. பஞ்சம்யை = சிவனின் சக்தி ஸ்வரூபம் ஆனவள்.

949. பஞ்ச பூ4தேச்'யை = ஐம்பூதங்களின் தலைவி ஆனவள்.

950. பஞ்சஸங்க்யா உபசாரிண்யை = ஐந்து விதமான திரவியங்களால் பூஜிக்கப்படுபவள்.
 
951. சா'ச்'வத்யை = என்றும் நிலைத்து இருப்பபவள்.

952. சா'ச்'வதைச்'வர்யாயை = என்றும் எதன் மேலும் ஆட்சி செய்ய வல்லவள்.

953. ச'ர்ம தா3யை = இன்பத்தைத் தருபவள்.

954. ச'ம்பு மோஹின்யை = சிவனை மோஹம் கொள்ளச் செய்பவள்.

955. த4ராயை = மண்ணுலகம் ஆனவள்.

956. த4ர ஸுதாயை = ஹிமவானின் செல்வி ஆனவள்.

957. த4ன்யாயை = எண்ணியதை எண்ணியவாறு பெற வல்லவள்.

958. த4ர்மிண்யை = தர்மத்தின் வடிவானவள்.

959. த4ர்ம வர்தி4ன்யை = தர்மத்தை வளர்ப்பவள்.

960. லோக அதீதாயை = உலகங்களுக்கு அப்பாற்பட்டவள்.
 
961. குண அதீதாயை = குணங்களுக்கு அப்பாற்பட்டவள்.

962. ஸர்வ அதீதாயை = யாவற்றையும் கடந்தவள்.

963. ச'மாத்மிகாயை = என்றும் தன்மயமாக இருப்பவள்.

964. ப3ந்தூ4க குஸும ப்ரக்2யாயை = பந்தூகப் புஷ்பத்தின் சிவந்த நிறம் கொண்டவள்.

965. பா3லாயை = விளையாடும் சிறுமி வடிவானவள்.

966. லீலா வினோதி3ன்யை = லீலைகளில் மகிழ்வடைபவள் .

967. ஸுமங்க3ல்யை = மங்கலத்தை அளிப்பவள்.

968. ஸுக2கர்யை = சுகத்தை உண்டு பண்ணுபவள்.

969. ஸுவேஷாட்4யாயை = அழகிய அலங்காரங்களை உடையவள்.

970. ஸுவாஸின்யை = கணவனை விட்டுப் பிரியாதவள்.
 
971. ஸுவாஸின்யர்ச்சன ப்ரீதாயை = சுவாசினிகள் செய்யும் ஆராதனையில் மகிழ்பவள்.

972. ஆசோ'பநாயை = அழகும், தெய்வீகமும் பொருந்தியவள்.

973. சுத்3த4 மானஸாயை = தூய உள்ளம் கொண்டவள்.

974. பிந்து3தர்பண ஸந்துஷ்டா2யை = நல்ல பொருட்கள் பிறர் நலனுக்காகப் படைக்கப்படுவதில் மகிழ்பவள்.

975. பூர்வஜாயை = எல்லாவற்றுக்கும் முதலில் தோன்றியவள்.

976. த்ரிபுராம்பி3காயை = திரிபுர அம்பிகை வடிவினள்.

977. தச'முத்3ரா ஸமாராத்4யாயை = பத்து முத்திரைகளால் நன்கு ஆராதிக்கப்படுகின்றவள்.

978. த்ரிபுரா ஸ்ரீ வச'ங்கர்யை = த்ரிபுரஸ்ரீயைத் தன் வசப்படுத்தி வைத்துள்ளவள்.

979. ஞான முத்3ராயை = ஞானத்தின் முத்திரை ஆனவள்.

980. ஞான க3ம்யாயை =
ஞானத்தால் அடையப் படுகின்றவள்
 
981. ஞானஞேய ஸ்வரூபிண்யை = அறிவாகவும், அறியப்படும் பொருளாகவும் இருப்பவள்.

982. யோனி முத்3ராயை = யோனியின் வடிவில் இலங்குபவள்.

983. த்ரிகண்டே3ச்'யை = மூன்று கண்டங்களுக்கும் ஈஸ்வரி.

984. த்ரி குணாயை = மூன்று குணங்களின் வடிவானவள்.

985. அம்பா3யை = அகிலத்தின் தாய் ஆனவள்.

986. த்ரிகோணகாயை = முக்கோண வடிவானவள்.

987. அனகா4யை = பாபமும், துக்கமும் அற்றவள்.

988. அத்3பு4த சாரித்ராயை = அதிசயமான வரலாறு உடையவள்.

989. வாஞ்சி2தார்த்த2 ப்ரதா3யின்யை = நாம் விரும்புவதை வழங்க வல்லவள்.

990. அப்4யாஸாதிச'ய ஞாதாயை = அப்பியாசத்தின் மூலம் அறியப் படுபவள்.
 
991. ஷட3த்4வாதீத ரூபிண்யை = ஆறு மார்கங்களுக்கும் அப்பாற்பட்டவள்.

992. அவ்யாஜ கருணாமூர்த்தயே = இயல்பாகவே கருணை வடிவினள்.

993. அஞ்ஞான த்4வாந்த தீ3பிகாயை =
அஞ்ஞான இருளை நீக்கும் தீபம் ஆனவள்.

994. ஆபா3ல கோ3ப விதி3தாயை = பாலர்களும், கோபாலர்களும் கூட எளிதில் அறியாக் கூடியவள்.

995. ஸர்வானுல்லங்க்4ய சா'ஸனாயை = யாரும் மீறமுடியாத கட்டளைகளை உடையவள்.

996. ஸ்ரீ சக்ர ராஜ நிலயாயை = ஸ்ரீ சக்கரத்தில் உறைபவள்.

997. ஸ்ரீமத் த்ரிபுர ஸுந்த3ர்யை = முப்புரங்களை அலங்கரிப்பவள்.

998. ஸ்ரீ சி'வாயை = சிவனின் சக்தியானவள்.

999. சிவ ச'க்த்யைக்ய ரூபிண்யை = சிவனும், சக்தியும் ஐக்கியமான வடிவினள்.

1000. லலிதாம்பி3காயை = லலிதாம்பிகை ஆனவள்.

ஸ்ரீ மாதா என்று தொடங்கிய அன்னையின் ஆயிரம் நாமங்கள்
இத்துடன் முடிவடைகின்றன.
 
1001. ப4வஸ்ய தே3வஸ்ய பத்ந்யை

1002. ஸர்வஸ்ய தே3வஸ்ய பத்ந்யை

1003. ஈசா'னஸ்ய தே3வஸ்ய பத்ந்யை

1004. பசு'பதேர் தே3வஸ்ய பத்ந்யை

1005. ருத்3ரஸ்ய தே3வஸ்ய பத்ந்யை

1006. உக்3ரஸ்ய தே3வஸ்ய பத்ந்யை

1007. பீ4மஸ்ய தே3வஸ்ய பத்ந்யை

1008. மஹதோ தே3வஸ்ய பத்ந்யை

ஓம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர்யை நம:

1001 முதல் 1008 வரையிலான நாமங்களுடன் இந்நெடும் தொடர்
அன்னையின் அருளால் நிறைவு பெறுகின்றது.

வாழ்க அன்னையின் நாமம்! வளர்க அவள் புகழ்!
 
தினம் தவறாமல் வந்து படிக்கும் அன்பர்களுக்கு,

மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டோமோ?
ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ?
என்ற பல ஐயங்கள் கொண்டிருந்தேன்.

அன்னையின் அருளாலும், ஆனைமுகன் கருணையாலும்
இத்தொடர் தடங்கல்கள் ஏதும் இன்றி இனிதே முடிவுறுகின்றது.

எண்ணிப் பார்க்கும் போது எனக்கே அதிசயமாக இருக்கின்றது!. சரியாக 108 நாட்களில் இத்தொடர் முடிவடைகின்றது .

மீண்டும் மீண்டும் படித்து மனத்தில் பதிய வைத்து கொள்ளுங்கள்.
புதிய தொடரில் சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.

உங்கள் உண்மையுள்ள
விசாலாக்ஷி ரமணி. :pray2:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top