• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

அகத்தியர் அருளிய - மஹா விஷ்ணுவை தரிசிக்க 

Status
Not open for further replies.
அகத்தியர் அருளிய - மஹா விஷ்ணுவை தரிசிக்க 

அகத்தியர் அருளிய "அகத்தியர்12000" என்னும் நூலில் மஹா விஷ்ணுவை தரிசிக்கவும்,
மஹாலட்சுமி கடாட்சம் கிட்டிடவும் ஒரு வழிமுறையினை அகத்தியர் அருளியிருக்கிறார்.
அந்த பாடல் பின்வருமாறு.....

பதிவான மாலுடைய தியானங்கேளு
பண்பாக இடதுகையில் விபூதிவைத்து
நேரடா வளர்பிறைபோல் வகுத்துமைந்தா
நிசமான அதின்நடுவே ஸ்ரீம்போட்டு
காரடா ஓங்காரக் கவசஞ்சாத்தி
கருணைபெற மங்மங்சிறிங் சிம்மென்றேதான்
மாரடா நடுவெழுத்தைப் பிடித்துக்கொண்டு
மனதாக நூற்றெட்டு உருவேசெய்யே.
உருவேற்றி நீரணிந்து கொண்டாயானால்
உத்தமனே மாயவனார் உருவேதோணும்
திருப்பூத்த லட்சுமியும் வாசமாவாள்
செகமெல்லாமுனது பதம்பணி யுமைந்தா

- அகத்தியர்


இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு, அதில் வளர்பிறைபோல் வரைந்து அதன் நடுவில் " ஸ்ரீம்" என்று எழுதி
அதனைச் சுற்றி ஓங்காரம் இட்டுபின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து "மங் மங் சிறிங் சிம்" என்று நூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.
இவ்வாறு செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் மாயவனாம் திருமாலின் தரிசனம் கிடைக்குமாம் அத்துடன் லட்சுமி கடாட்சமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.



ஆச்சர்யமான தகவல்கள்தானே!
 
Status
Not open for further replies.
Back
Top