ஆதி அத்தி பவளவண்ணப் பெருமாள்!!!
காஞ்சியில் அருளியுள்ள இன்னொமொரு அத்திமர பெருமாள்!!!
திவ்ய தேச வரிசையில் 55 ஸ்தலம், இந்த திருப்பவள வண்ணப் பெருமாள். காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் அத்தி வரதரைப் போன்றே, அத்தி மரத்தினால் ஆன பவள வண்ணப் பெருமாள் ஸேவை சாதிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்த சரஸ்சிலிருந்து, அத்திவரதர் எழுந்தருள பண்ணுகிறார்களோ, அதே வேளையில் இந்த திவ்யதேச தீர்த்தக் குளத்தில் உள்ள, அத்தி மரத்தினால் ஆன ஆதி அத்தி பவள வண்ணப் பெருமாளின் திவ்ய மூர்த்தியை எழுந்தருளச் செய்யப்படும் வழக்கம் உண்டு, எனவே இந்த முறையும் எழுந்தருளச் செய்துள்ளார்கள். மிகவும் சிறிய விக்கிரஹம், ஆதிசேஷனை குடையாய் கொண்டு வீற்றிருக்கும் திருக்கோலம். கண்கொள்ளா காட்சி.
அத்தி வரதர் வைபவம் நடைபெறும் இதே சமயத்தில், இந்த திவ்ய தேசப் பெருமாளைக் குறித்தும் தெரிந்து கொள்வது சிறப்பாகும்.
காஞ்சியில். வேகவதி நதியானது மிகவும் ப்ரஸித்தம், கூடவே சரஸ்வதியையும் தொடர்பு படுத்தியே எல்லா நிகழ்வுகளும் அமைந்துள்ளன. இதையே எல்லா புராணங்கள் சொல்லி வருகின்றன. குறிப்பாக, காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்கள் அனைத்தும், இந்த வேகவதி நதியை சுற்றியே நடக்கின்றன. காஞ்சியின் திவ்ய தேசத்தின் பெருமைகளுள் ஒன்றாக இருக்கும், பவளவண்ண பெருமாள் கோயிலின் ஸ்தல வரலாறும் வேகவதி நதியிலிருந்தே தொடங்குகிறது.
பொதுவான கருத்து, உலகில் உள்ள 7 புண்ணிய க்ஷேத்திரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் எந்தப் புண்ணியச் செயலைச் செய்தாலும், அதன் பலன் மிக அதிகமாய் இருக்கும் என்பார்கள். இதுவே ஐதிகம் என்று நினைப்பதும் உண்டு. அதனாலேயே, பிரம்மா மிகப்பெரிய யாகம் செய்ய காஞ்சிபுரத்தைத் தெரிவு செய்கிறார்.
அனைவருக்கும் தெரிந்த புராணமே, சிவனின் உச்சி , அடி இவைகளை யாராலும் அடைய முடியாது என்பது தெரிந்த விஷயமே. இருந்ததாலும் ஒரு போட்டி ஆரம்பம் ஆனது. மஹா விஷ்ணு, பூமியின் உள்ளேயே நுழைந்து சிவனின் பாதத்தை நோக்கி பயணமானார். முடியவில்லை, தோல்வியை ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து விலகி விட்டார். ஆனால் ப்ரம்மா, தான் சிவனின் உச்சியை பார்த்ததாய் பொய் சொல்லி சாபம் வாங்கிக் கொண்டார். சாப விமோசனம் பெற, காஞ்சிக்கு வந்து யாகம் வளர்த்த தொடங்கினார்.
மேலும் ப்ரம்மா, யாகத்துக்குச் சரஸ்வதியை அழைக்காமல், மற்ற துணைகளான சாவித்திரி மற்றும் காயத்திரி ஆகிய இருவரையும் அழைத்து யாகத்தைத் தொடங்கவே, இப்போதுதான் வினையே ஆரம்பித்தது. சரஸ்வதி கடுஞ்சினம் கொண்டு ப்ரம்மாவின் யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள். உடனே பல அசுரர்களை ஏவினாள். சரஸ்வதியின் கோபத்தை அறிந்த ப்ரம்மா, பகவானிடம் தனது யாகத்தைக் காக்கும்படி வேண்டினார். திருமாலும் அசுரர்களுடன் உக்கிரமாய் சண்டையிட்டார். அப்போது, அவர் உடலில் நிறைய காயங்கள் ஏற்பட்டு, சிவந்த மேனியாக (பவள வண்ணமாய் ) காட்சியளித்தார். இதுவே இந்த ஸ்தலமே, பவளவண்ணர் எழுந்தருளியுள்ள திவ்ய தேசம் ஆகும்.
ஆதிசேஷனோடு பவளவண்ணர் நின்ற திருக்கோலமாய் உள்ளார். தாயார் பவளவல்லி, தனிச் சன்னதியாய் அருகேயுள்ளது. திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம், தனியொரு பாசுரம்,
"வங்கத்தால் மாமணிவந்து உந்து முந்நீர்- மல்லையாய்!* மதிள்கச்சி ஊராய்! பேராய்,*
கொங்குத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்* குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்,*
பங்கத்தாய் பாற்கடலாய்! பாரின் மேலாய்!* பனிவரையின் உச்சியாய்! பவள வண்ணா,*
எங்குஉற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி* ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே! "
பி.கு: அத்தி வரதரை ஸேவிப்பது போலவே, இங்கேயும் மக்கள் கூட்டம் ஆரம்பம். புதிய ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மிகவும் பக்கம். சென்னை - பெங்களூர் NH 4 காஞ்சீபுரம் சந்திப்பிலிருந்து, 3 km தூரத்தில், இந்த திவ்ய தேசம் அமைந்துள்ளது. பச்சைவண்ணர் சன்னிதியும் எதிரேயே அமைந்துள்ளது. இவ்விரண்டையும் சேர்ந்தே ஸேவிப்பது நலம்.
காஞ்சியில் அருளியுள்ள இன்னொமொரு அத்திமர பெருமாள்!!!
திவ்ய தேச வரிசையில் 55 ஸ்தலம், இந்த திருப்பவள வண்ணப் பெருமாள். காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் அத்தி வரதரைப் போன்றே, அத்தி மரத்தினால் ஆன பவள வண்ணப் பெருமாள் ஸேவை சாதிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்த சரஸ்சிலிருந்து, அத்திவரதர் எழுந்தருள பண்ணுகிறார்களோ, அதே வேளையில் இந்த திவ்யதேச தீர்த்தக் குளத்தில் உள்ள, அத்தி மரத்தினால் ஆன ஆதி அத்தி பவள வண்ணப் பெருமாளின் திவ்ய மூர்த்தியை எழுந்தருளச் செய்யப்படும் வழக்கம் உண்டு, எனவே இந்த முறையும் எழுந்தருளச் செய்துள்ளார்கள். மிகவும் சிறிய விக்கிரஹம், ஆதிசேஷனை குடையாய் கொண்டு வீற்றிருக்கும் திருக்கோலம். கண்கொள்ளா காட்சி.
அத்தி வரதர் வைபவம் நடைபெறும் இதே சமயத்தில், இந்த திவ்ய தேசப் பெருமாளைக் குறித்தும் தெரிந்து கொள்வது சிறப்பாகும்.
காஞ்சியில். வேகவதி நதியானது மிகவும் ப்ரஸித்தம், கூடவே சரஸ்வதியையும் தொடர்பு படுத்தியே எல்லா நிகழ்வுகளும் அமைந்துள்ளன. இதையே எல்லா புராணங்கள் சொல்லி வருகின்றன. குறிப்பாக, காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்கள் அனைத்தும், இந்த வேகவதி நதியை சுற்றியே நடக்கின்றன. காஞ்சியின் திவ்ய தேசத்தின் பெருமைகளுள் ஒன்றாக இருக்கும், பவளவண்ண பெருமாள் கோயிலின் ஸ்தல வரலாறும் வேகவதி நதியிலிருந்தே தொடங்குகிறது.
பொதுவான கருத்து, உலகில் உள்ள 7 புண்ணிய க்ஷேத்திரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் எந்தப் புண்ணியச் செயலைச் செய்தாலும், அதன் பலன் மிக அதிகமாய் இருக்கும் என்பார்கள். இதுவே ஐதிகம் என்று நினைப்பதும் உண்டு. அதனாலேயே, பிரம்மா மிகப்பெரிய யாகம் செய்ய காஞ்சிபுரத்தைத் தெரிவு செய்கிறார்.
அனைவருக்கும் தெரிந்த புராணமே, சிவனின் உச்சி , அடி இவைகளை யாராலும் அடைய முடியாது என்பது தெரிந்த விஷயமே. இருந்ததாலும் ஒரு போட்டி ஆரம்பம் ஆனது. மஹா விஷ்ணு, பூமியின் உள்ளேயே நுழைந்து சிவனின் பாதத்தை நோக்கி பயணமானார். முடியவில்லை, தோல்வியை ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து விலகி விட்டார். ஆனால் ப்ரம்மா, தான் சிவனின் உச்சியை பார்த்ததாய் பொய் சொல்லி சாபம் வாங்கிக் கொண்டார். சாப விமோசனம் பெற, காஞ்சிக்கு வந்து யாகம் வளர்த்த தொடங்கினார்.
மேலும் ப்ரம்மா, யாகத்துக்குச் சரஸ்வதியை அழைக்காமல், மற்ற துணைகளான சாவித்திரி மற்றும் காயத்திரி ஆகிய இருவரையும் அழைத்து யாகத்தைத் தொடங்கவே, இப்போதுதான் வினையே ஆரம்பித்தது. சரஸ்வதி கடுஞ்சினம் கொண்டு ப்ரம்மாவின் யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள். உடனே பல அசுரர்களை ஏவினாள். சரஸ்வதியின் கோபத்தை அறிந்த ப்ரம்மா, பகவானிடம் தனது யாகத்தைக் காக்கும்படி வேண்டினார். திருமாலும் அசுரர்களுடன் உக்கிரமாய் சண்டையிட்டார். அப்போது, அவர் உடலில் நிறைய காயங்கள் ஏற்பட்டு, சிவந்த மேனியாக (பவள வண்ணமாய் ) காட்சியளித்தார். இதுவே இந்த ஸ்தலமே, பவளவண்ணர் எழுந்தருளியுள்ள திவ்ய தேசம் ஆகும்.
ஆதிசேஷனோடு பவளவண்ணர் நின்ற திருக்கோலமாய் உள்ளார். தாயார் பவளவல்லி, தனிச் சன்னதியாய் அருகேயுள்ளது. திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம், தனியொரு பாசுரம்,
"வங்கத்தால் மாமணிவந்து உந்து முந்நீர்- மல்லையாய்!* மதிள்கச்சி ஊராய்! பேராய்,*
கொங்குத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்* குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்,*
பங்கத்தாய் பாற்கடலாய்! பாரின் மேலாய்!* பனிவரையின் உச்சியாய்! பவள வண்ணா,*
எங்குஉற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி* ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே! "
பி.கு: அத்தி வரதரை ஸேவிப்பது போலவே, இங்கேயும் மக்கள் கூட்டம் ஆரம்பம். புதிய ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மிகவும் பக்கம். சென்னை - பெங்களூர் NH 4 காஞ்சீபுரம் சந்திப்பிலிருந்து, 3 km தூரத்தில், இந்த திவ்ய தேசம் அமைந்துள்ளது. பச்சைவண்ணர் சன்னிதியும் எதிரேயே அமைந்துள்ளது. இவ்விரண்டையும் சேர்ந்தே ஸேவிப்பது நலம்.