• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

You Are That! -187 "Absolute"

shridisai

You Are That!
images (1).jpeg

"ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி"
(அகவல்:21)

"ஒன்றென"
'அறிவுக்கு' அறியும் திறன் ஏற்ப்பட்ட பின்புதான் 'அறிவு' என்னும் பெயர் கொண்டாதாகி ஒன்றாய்
பிரகாசிக்கிறது.

"இரண்டென"
இவ்-அறிவு ஒரு பொருளின் தன்மை கொண்டதாய் சேர்த்து அறியப்படும் போது இரண்டாய் பிரகாசிக்கிறது.

"ஒன்றிரண்டென"
இவ்-அறிவு, அறியப்படும் பொருளுடன் கூடி அறிபவனாக ஒளிரும் போது, ஒன்றிரண்டென(1+2=3) மூன்றாய்
பிரகாசிக்கிறது.

இவ்வாறு 'அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன்' என்று தனித்தனி வடிவாய், பொதுவினுள் நடிக்கும்
இப்-பூரணப் பொருள்...

"தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல்
அனைத்துற வகுத்த அருட்பெருஞ்ஜோதி"
(அகவல்:715)

இவை மூன்றும் அற்ற நிலையில், அருவாய், தனிப்பெரும் கருணையாய், 'அது''வாய், அது' வாகவே, அதுவினுள் அதுவாய், அதுவே அதுவாய்ப் பூரணமாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

"அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே"
(அகவல்:901)

“ஓம். பூரணம் அஃது (பரம்பொருள்); பூரணம் இஃது (புலப்படும் உலகம்); அந்த பூரணத்தினின்றும், இந்த பூரணம் உதிக்கின்றது. அந்த பூரணத்தினின்று, இந்த பூரணத்தினை எடுக்க, பூரணமே மிஞ்சும்.”
- ஈஸா வாஸ்ய உபநிஷதம்.

சாய்ராம்.
 

Attachments

  • images (1).jpeg
    images (1).jpeg
    12.2 KB · Views: 91
View attachment 11535
"ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி"
(அகவல்:21)

"ஒன்றென"
'அறிவுக்கு' அறியும் திறன் ஏற்ப்பட்ட பின்புதான் 'அறிவு' என்னும் பெயர் கொண்டாதாகி ஒன்றாய்
பிரகாசிக்கிறது.

"இரண்டென"
இவ்-அறிவு ஒரு பொருளின் தன்மை கொண்டதாய் சேர்த்து அறியப்படும் போது இரண்டாய் பிரகாசிக்கிறது.

"ஒன்றிரண்டென"
இவ்-அறிவு, அறியப்படும் பொருளுடன் கூடி அறிபவனாக ஒளிரும் போது, ஒன்றிரண்டென(1+2=3) மூன்றாய்
பிரகாசிக்கிறது.

இவ்வாறு 'அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன்' என்று தனித்தனி வடிவாய், பொதுவினுள் நடிக்கும்
இப்-பூரணப் பொருள்...

"தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல்
அனைத்துற வகுத்த அருட்பெருஞ்ஜோதி"
(அகவல்:715)

இவை மூன்றும் அற்ற நிலையில், அருவாய், தனிப்பெரும் கருணையாய், 'அது''வாய், அது' வாகவே, அதுவினுள் அதுவாய், அதுவே அதுவாய்ப் பூரணமாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

"அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே"
(அகவல்:901)

“ஓம். பூரணம் அஃது (பரம்பொருள்); பூரணம் இஃது (புலப்படும் உலகம்); அந்த பூரணத்தினின்றும், இந்த பூரணம் உதிக்கின்றது. அந்த பூரணத்தினின்று, இந்த பூரணத்தினை எடுக்க, பூரணமே மிஞ்சும்.”
- ஈஸா வாஸ்ய உபநிஷதம்.

சாய்ராம்.
Here is a video of Kaladi - Dhanracharya

1630044351888.png
 

Latest ads

Back
Top