"ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி"
(அகவல்:21)
"ஒன்றென"
'அறிவுக்கு' அறியும் திறன் ஏற்ப்பட்ட பின்புதான் 'அறிவு' என்னும் பெயர் கொண்டாதாகி ஒன்றாய்
பிரகாசிக்கிறது.
"இரண்டென"
இவ்-அறிவு ஒரு பொருளின் தன்மை கொண்டதாய் சேர்த்து அறியப்படும் போது இரண்டாய் பிரகாசிக்கிறது.
"ஒன்றிரண்டென"
இவ்-அறிவு, அறியப்படும் பொருளுடன் கூடி அறிபவனாக ஒளிரும் போது, ஒன்றிரண்டென(1+2=3) மூன்றாய்
பிரகாசிக்கிறது.
இவ்வாறு 'அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன்' என்று தனித்தனி வடிவாய், பொதுவினுள் நடிக்கும்
இப்-பூரணப் பொருள்...
"தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல்
அனைத்துற வகுத்த அருட்பெருஞ்ஜோதி"
(அகவல்:715)
இவை மூன்றும் அற்ற நிலையில், அருவாய், தனிப்பெரும் கருணையாய், 'அது''வாய், அது' வாகவே, அதுவினுள் அதுவாய், அதுவே அதுவாய்ப் பூரணமாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
"அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே"
(அகவல்:901)
“ஓம். பூரணம் அஃது (பரம்பொருள்); பூரணம் இஃது (புலப்படும் உலகம்); அந்த பூரணத்தினின்றும், இந்த பூரணம் உதிக்கின்றது. அந்த பூரணத்தினின்று, இந்த பூரணத்தினை எடுக்க, பூரணமே மிஞ்சும்.”
- ஈஸா வாஸ்ய உபநிஷதம்.
சாய்ராம்.