What is the Secret of Shiva Deeksha?

சிவ தீட்சை ரகசியம் என்றால் என்ன?
==================================

சிவ தீட்சை ரகசியம்

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம். இறைவனை காணும் வழி காண நமக்கான குருவிடம் தீட்சை பெற வேண்டும். நமக்கான குருவை தேர்த்தெடுக்க இயலாத பட்சத்தில் சிவ பக்தியும், முறையான சிவ வழிபாடும் நாம் கொண்டிருந்தால் அகத்தியரே நமக்கு குருவாயிருந்து நமக்கான குருவை அடையாளம் காட்டி சிவ தரிசனம் பெற வழிகாட்டுகிறார்.

சிவதீட்சை ரகசியம் கற்ற அகத்தியர்

சிததர்களின் தலையாய சித்தர், அந்த பரம்பொருளின் பிரியத்துக்குரிய – அகத்திய மாமுனி, பாமரனும் தகுதி இருந்தால் இறைவனை அடையலாம் என்பதற்காக , பகிர்ந்துகொண்ட தேவ ரகசியம்.. சித்த ரகசியம் இவை.
இவற்றை உணர்ந்து சித்தியடைந்தவர்களுக்கு ஞானம் பெருகும், பாவம் விலகும் என்கிறார்.மேலும் ஆதி சித்தனான சிவனின் பாத தரிசனம் கிடைக்குமாம்.இந்த தீட்சைகளை நற்குமரனான முருக பெருமான் தனக்கு அருளியதாகவும் கூறுகிறார்.

அகத்தியர் அருளியவை முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகள். குருவிடம் இருந்து பெறப்படும் உபதேசங்களில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான்.இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

அகத்தியர் அருளிய மந்திரங்களை செபிக்கும் போது குறிப்பிட்ட மந்திரங்களுக்கு முன்னர் “ஓம்” என்கிற பிரணவத்தினையும் சேர்த்தே செபிக்க வேண்டுமென தெளிவாக கூறியிருக்கிறார். சில மந்திரங்கள் ஓம் என்று துவங்கினால் கூட அதற்கு முன்னர் இன்னொரு ஓம் சேர்த்து இரு முறை ஓமென செபித்தே மந்திரம் சொல்ல வேண்டும்.எனவே மந்திரம் எப்படி இருந்தாலும் துவக்கத்தில் பிரணவமந்திரத்துடனே அகத்தியர் அருளிய அனைத்து மந்திரங்களையும் செபிக்க வேண்டும்.

சிவ தீட்சை பற்றி அகத்தியர் இயற்றிய பாடல்

“தயவான தீட்சைவிதிக் காதிகாப்பு
தான்பாட வாராய்ந்து தெளிந்துபார்த்து
செயலான முப்பதி ரெண்டுதீட்சை
சித்தி செய்த பேர்க்கெல்லாம் ஞானம்சித்தி
சுகமான பாவவினை அற்றுப்போகும்
சோதிசிவ பாதமதைக் காணலாகும்
நயமாக எந்தனுக்கு உபதேசித்த
நற்குமரன் திருவருளே தீட்ட்சைக்காப்பு”

“தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்
ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக்
காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும்
கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு
ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு
ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும்
மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத
முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே.”

“சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு
செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம்
பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும்
பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும்
துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு
துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று
முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி
மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே.”

“பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு
பண்பாக யங் வங் றீங் றுந்தான்
துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி
தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும்
அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு
அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம்
குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும்
குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே.”

தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்
சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம்
மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார்
வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள்
நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு
நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம்
ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து
அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே.”

“உனைச் சேர்வார் சித்தர்களுஞ் சிவனார் தீட்சை
உன்பதுதான் வங் கிலியும் சிங் அம் ஐம் என்றுலட்சம்
வினையொழிந்து என்தேகம் கல்போலாகும்
மெய்யான சட்டையொன்று தள்ளிப்போடும்
தினந்துதிக்கும் சிவதீட்சை பத்தைத்தானுஞ்
செப்பார்கள் செப்புகிறென் வம் வும் அம் இம் என்று
எனைப்போலே சொல்வார்கள் தேகம் பொன்னாம்
இனிதான சிவதீட்சை ஓதினேனே.”

“ஓதியதோர் சிவதீட்சை பதினொன்றுந்தான்
உரைக்கின்றேன் மங் றீங் றீங் கென்று லட்சம்
பாதிமதி சடைக்கணிந்த சிவனார்பாதம்
பணிந்து தொண்ட னாய் இருப்பாய் செய்துபாரு
நீதிபெறும் பன்னிரெண்டாஞ சத்திதீட்சை
நிலைத்தவர்க்குத் தற்புருசம் வம் ஆம் நம் என் றுலட்சம்
சந்தித்துச் செபித்திடவே சித்தியாகும்
சட்டையொன்று தள்ளுமடா கெவுனமாமே.”

“ஆமப்பா சத்திபதி மூன்றாந் தீட்சை
அறிவுடனே ஊம் ஆம் என்றே லட்சம்
நாமப்பா செபித்திடவே வச்சிரதேகம்
நமனும்இவன் கிட்டவந்து அணுகான் பாரு
ஊமப்பா பதினாலாஞ் சத்தி தீட்சை
உண்மையாம் றம் றூம் ஸ்ரீம் அவ்வு மென்று
தாமப்பா லட்சமுரு செபித்தாற்சித்தி
சாயுட்சய பதம்பெறுவார் சார்ந்துகேளே!”

“சார்ந்துகேள் பதினைந்தாஞ் சத்திதீட்சை
தயவாக ஸ்ரீம் றீம் றீம் ஓம் என்று லட்சம்
தேர்நது பார் தேகமுந்தான் கல்போலாகும்
சிவசிவா நாதவிந்து கட்டிப்போகும்
ஆய்ந்தவர்க்குப் பதினாறாந் தீட்சை கேளு
அப்பனே சங் இங் றங் கென்றே லட்சம்
மாந்தளிர்போல் தேகமுள்ள மனோன்மணியாள்
வருவாளே மகனென்று பணிந்து கொள்ளே.”

“வாய்ப்பான பதினேழாஞ் சிவதீட்சை
வழுத்துவேன் றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம் என்றே லட்சம்
காய்ப்பான நரைதிரையும் இல்லையில்லை
கற்பமதை உண்டிடவே சுருக்குமெத்த
ஏய்ப்பார்கள் ஏய்ப்புக்குள் அகப்படாதே
ஈஸ்வரியாள் தீட்ரைச பதினெட்டுங்கேளு
தீய்ப்பான சங் சிங் ரா ரா வென்று
செபித்திடுநீ லட்சமுரு சட்டைபோமே.”

“சட்டைதள்ளும் பத்தொன்பதாந் தீட்சை தன்னை
தான்கேளு திரிநேத்திராயா வா வா வென்று
இட்டமுடன் லட்சமுரு செபித்தாற்சித்தி
இருபதாஞ் தீட்சையது ஸ்ரீங்கார தேவாயநமா வென்று
தொட்டதுவே லட்சத்திற்கு சித்தியாகும்
சொல்லுவேன் மூவேழு தீட்சை கேளு
அட்டதிசை வெல்லுமடா இங் அங் றங் கென்றுந்தான்
ஐநான்கு தீட்சைரெண்டும் அறையக் கேளே.”

“அரையக்கேள் அரிஅரி ஓம் என்றுவோத
அப்பனே லட்சத்திற் சித்தியாகும்
முறையாக இருபத்து மூன்றாந் தீட்ரைச
மொழிந்திடுவாய் ரா ரா றீம் றீம் என்று
குறையாமற் செய்துவிடு சித்தியாகும்
குணமாக மூவெட்டுத் தீட்சை கேளு
மறைவாக லீ லீ லீ அரஹர றீ றி என்று
வாழ்த்துவாய் லட்சமுரு கெவுனிப்பாயே.”

“கெவுனமது ஒடவென்றால் ஐயைந்து தீட்சை
கேளு நீ ஏ ஏ ஏ ஊ ஊ ஊ வென்று லட்சம்
மவனமது சித்தியப்பா இருப்பதாறில்
மாதாவின் தீட்சையது இஷாய இஷாய ஓம்என்று லட்சம்
சிவனாகும் இருபத்தேழ் தீட்சை தன்னில்
செப்புவேன் ஓம்சிவாய சிவா றீங் கென்று லட்சம்
புவனமதில் இருபத்தி யெட்டாந் தீட்சை
பூரிப்பாய் சிவஓம் சிவாயநமவெனப் புகழுண்டாமே.”

“புகழுண்டாம் இருபத்தி ஒன்பதாந் தீட்சை
போற்றுவாய் சவ்வும் மவ்வும் என்று லட்சம்
நெகிளாது அய்யாறு தீட்சையப்பா
நிலைத்தவர்க்கு மங் சங் கங் கென்று லட்சம்
அகமகிழ உன்தேகம் ஒருநாளுங் தான்
அழியாது நரைதிரையும் இல்லையில்லை
உகம்வறைக்கும் இருத்துமடா முப்பதொன்று
ஓதுவாய் ஸ்ரீம் றீம் கென்று தானே.”

“என்றுதான் லட்சமுரு செபித்தாற் சித்தி
இறவாமல் இருத்துமடா கோடிகாலம்
நன்றுகாண் முப்பத்தி ரெண்டாந் திட்சை
நங் கிலி சிங் கிலி என்றே லட்சம்
மன்றுள்ள காலம்வரை இரு;ததுந்தேகம்
வாழ்;த்திநீ தோத்திரங்கள் செய்துகொள்வாய்
கொன்றாலும் வாள்கொண்டு வெட்டினாலும்
குறையாமல் வாள்வெட்டுப் பொருந்துந்தானே.”
 
Back
Top