நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே.
- திருமங்கை ஆழ்வார் அருளிய திரு நெடுந்தாண்டகம்.
பொருள்: நீரகமென்னுந் திருப்பதியி லுள்ளவனே! திருவேங்கட மலையினுச் சியிலே நின்றருளினவனே! நிலாத்திங்கள் துண்ட மென்கிற திருப்பதியிலுள்ளவனே! செழிப்புநிறைந்த காஞ்சீபுரத்தில் திருவூரகமென்னுந் திருவ்வதியிலுள்ளவனே! அழகிய நீர்த்துறையின் கரையிலே திருவெஃகா வில் திருக்கண் வளர்ந்தருளுமவனே! சிந்திப்பாருடைய நெஞ்சி லுறையபவனே! உலகமெல்லாம் துதிக்கும்படி யான திருக்காரகயத்திலுள்ளவனே; திருக்கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே! கள்வனே! விரும்பத்தக்கதாய் அழகியதான திருக்காவேரியினது தென் புறத்திலே பொருந்தியிருக்கிற திருப்பேர்நகரில் உறை பவனே! எனது ஹ்ருதயத்திலே பேராமலிருக்பவனே! ஸர்வஸ்வாமியானவனே!
உனது திருவடிகளையே ஆசைப்படா நின்றேன்.
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே.
- திருமங்கை ஆழ்வார் அருளிய திரு நெடுந்தாண்டகம்.
பொருள்: நீரகமென்னுந் திருப்பதியி லுள்ளவனே! திருவேங்கட மலையினுச் சியிலே நின்றருளினவனே! நிலாத்திங்கள் துண்ட மென்கிற திருப்பதியிலுள்ளவனே! செழிப்புநிறைந்த காஞ்சீபுரத்தில் திருவூரகமென்னுந் திருவ்வதியிலுள்ளவனே! அழகிய நீர்த்துறையின் கரையிலே திருவெஃகா வில் திருக்கண் வளர்ந்தருளுமவனே! சிந்திப்பாருடைய நெஞ்சி லுறையபவனே! உலகமெல்லாம் துதிக்கும்படி யான திருக்காரகயத்திலுள்ளவனே; திருக்கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே! கள்வனே! விரும்பத்தக்கதாய் அழகியதான திருக்காவேரியினது தென் புறத்திலே பொருந்தியிருக்கிற திருப்பேர்நகரில் உறை பவனே! எனது ஹ்ருதயத்திலே பேராமலிருக்பவனே! ஸர்வஸ்வாமியானவனே!
உனது திருவடிகளையே ஆசைப்படா நின்றேன்.