'' ரொம்ப சந்தோஷம். பொண்ணுக்கும் ,பையனுக்கும் புடிச்சு போயாச்சு. அப்புறம் என்ன? நிச்சயதார்த்தம் எப்ப வெச்சுக்கலாம் '' என்று கேட்டார்பெண்ணின் தந்தை நமசிவாயம்.
'' இந்த மாச கடைசில வெச்சுக்கலாம் '' என்று சொன்னார் ராம். ''என்ன அருண் , உமா , ஓகே தானே ?'' என்று மனைவியிடமும் , மகனிடமும் கேட்டார் ராம். இருவரும் சம்மதம் என்று தலையசைத்தனர்.
''பையனுக்கு பொண்ணு கூட பேசணுமாம் '' என்றாள் உமா. ''அதுக்கு என்ன தாராளமா பேசட்டும் '' என்று புன்னகைத்தார் நமசிவாயம். அருணும் ,மணப்பெண் ராஜி யும் பக்கத்துக்கு அறைக்கு சென்று தங்கள் மனதோடு செல் போன் நம்பரையும் மாற்றிக்கொண்டார்கள்.
''சரி சம்பந்தி , நாங்க கெளம்பறோம் '' என்று எழுந்தார் ராம் .உமாவும் , அருணும் எழுந்து பின்தொடர்ந்தனர்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் , ''என்னங்க ஒங்க கிட்ட கொஞ்சம் பேசணும் '' என்று ராமின் அருகில் வந்தாள் உமா.'' என்ன உமா என்ன விஷயம் , ஒக்காரு'' என்ற படியே அமர்ந்தார் ராம்.
உமாவின் மேல் மிகுந்த அன்பும் ,பாசமும் கொண்டவர் ராம்.தன்னுடைய வயதான பெற்றோரை மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் , கவனித்துக்க்கொண்டவள் என்கிற முறையிலும் , தன்னுடைய சகோதர , சகோதரிகளுக்கும் , தேவையான சமயத்தில் அவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்தவள் என்ற முறையிலும், உமாவிடம் நன்றியும் உள்ளவர்.
'' ஒண்ணுமில்ல , அருண் கல்யாணத்தைப்பத்தி ஜானு கிட்ட சொல்ல வேண்டாமா '' என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
ஜானு என்கிற ஜானகி ,ராம், உமா தம்பதியரின் செல்லப்பெண். புத்திசாலி , அழகானவளும் கூட.இன்ஜினியரிங் முடித்துவிட்டு பிரபல IT கம்பெனியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தாள். அதே கம்பெனியில் வேலை பார்த்த ,பிரபு என்கிற பையனை காதலித்தாள்.ராமும் , அருணும் , அவளின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்பாவிடம் மிகவும் அழுது ,கெஞ்சி , பிரபுவை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி பேசிப்பார்த்தாள் ஜானு. ராம் மிகவும் பிடிவாதமாய் மறுத்துவிட்டார்.இரண்டு பக்கமும் பேச முடியாமல் தவித்தாள் உமா. அவள் மனம் ஊமையாய் அழுதது.ஒரு நாள் , தான் காதலித்த பையனோடு வீட்டை விட்டு வெளியேறி ,அவனை மணம் செய்து கொண்டாள் ஜானு.பிறகு எங்கேயோ வெளி நாட்டிற்கு போய்விட்டார்கள் என்று செய்தி வந்தது.
''ஜானு கிட்ட சொல்லனுமா '' என்று உமாவை ஏறிட்டுப்பார்த்தார் ராம்.'' கோவிச்சுக்காம நா கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க''என்றவளிடம்,''கேளு'' என்றார் ராம்.
'' அருணுக்கு கல்யாணமாயிருச்சா'' என்று கேட்டாள்.
'' என்ன கேக்கற நீ? பேசிமுடிச்சுருக்கோம் ,இன்னும் நிச்சயம் கூட பண்ணல '' என்றார் ராம்.
'' ஆனா அவங்க ரெண்டு பேரும் , போன்ல ரொம்ப நேரம் பேசிக்கிறாங்க ,ஹோட்டல்,ஷாப்பிங் , சினிமா ன்னு ,வெளில போறாங்க ''.
''அதுக்கென்ன இப்ப"" இது ராம்.
'' அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப விரும்புறாங்க ''.
''என்ன சொல்ல வரே நீ '' என்றார் ராம்.
'' இல்ல.. கல்யாணத்துக்கு முன்னாடியே ,காதலிக்கறது , வெளில போறது எல்லாம் தப்பில்லையா '' என்றாள்.
'' இதுல என்ன தப்பு ?'' கேட்டார் ராம்.
''இதே போல தானே நம்ம ஜானுவும் பண்ணினா...அவ செஞ்சா தப்பு ...அதையே அருண் செஞ்சா தப்பில்லையா? '' என்று கேட்டாள்.
இவள் சொல்வதிலும் ஏதோ நியாயம் இருப்பது போல தோன்றியது அவருக்கு.ஜானுவின் விஷயத்தில் ரொம்ப முரட்டுத்தனமாக நடந்து கொண்டு விட்டோமோ என்று தோன்றியது.உமாவின் பேச்சில் இருந்த , ஒரு தாயின் ஆதங்கமும் , வேதனையும் அவருக்கு புரிந்தது. இவள் என் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல , இந்த வயதில் எனக்கும் தாய் தான் என்று தோணிற்று. இந்த தாயை மேலும் வேதனை படுத்த கூடாது என்று முடிவுசெய்தார்.
'' சரி உமா...நான் ..ஜானுவை contact பண்ணி , இந்த விஷயத்தை சொல்லிடுறேன்.. சந்தோசம் தானே '' என்று கேட்ட படி அவளை அணைத்துக்கொண்டார்.
''ரொம்ப சந்தோசம்'' என்றபடி அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
ராமின் தோளை உமாவின் , கண்ணீர் நனைத்தது. இம்முறை ஆனந்தத்தினால்.
'' இந்த மாச கடைசில வெச்சுக்கலாம் '' என்று சொன்னார் ராம். ''என்ன அருண் , உமா , ஓகே தானே ?'' என்று மனைவியிடமும் , மகனிடமும் கேட்டார் ராம். இருவரும் சம்மதம் என்று தலையசைத்தனர்.
''பையனுக்கு பொண்ணு கூட பேசணுமாம் '' என்றாள் உமா. ''அதுக்கு என்ன தாராளமா பேசட்டும் '' என்று புன்னகைத்தார் நமசிவாயம். அருணும் ,மணப்பெண் ராஜி யும் பக்கத்துக்கு அறைக்கு சென்று தங்கள் மனதோடு செல் போன் நம்பரையும் மாற்றிக்கொண்டார்கள்.
''சரி சம்பந்தி , நாங்க கெளம்பறோம் '' என்று எழுந்தார் ராம் .உமாவும் , அருணும் எழுந்து பின்தொடர்ந்தனர்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் , ''என்னங்க ஒங்க கிட்ட கொஞ்சம் பேசணும் '' என்று ராமின் அருகில் வந்தாள் உமா.'' என்ன உமா என்ன விஷயம் , ஒக்காரு'' என்ற படியே அமர்ந்தார் ராம்.
உமாவின் மேல் மிகுந்த அன்பும் ,பாசமும் கொண்டவர் ராம்.தன்னுடைய வயதான பெற்றோரை மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் , கவனித்துக்க்கொண்டவள் என்கிற முறையிலும் , தன்னுடைய சகோதர , சகோதரிகளுக்கும் , தேவையான சமயத்தில் அவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்தவள் என்ற முறையிலும், உமாவிடம் நன்றியும் உள்ளவர்.
'' ஒண்ணுமில்ல , அருண் கல்யாணத்தைப்பத்தி ஜானு கிட்ட சொல்ல வேண்டாமா '' என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
ஜானு என்கிற ஜானகி ,ராம், உமா தம்பதியரின் செல்லப்பெண். புத்திசாலி , அழகானவளும் கூட.இன்ஜினியரிங் முடித்துவிட்டு பிரபல IT கம்பெனியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தாள். அதே கம்பெனியில் வேலை பார்த்த ,பிரபு என்கிற பையனை காதலித்தாள்.ராமும் , அருணும் , அவளின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்பாவிடம் மிகவும் அழுது ,கெஞ்சி , பிரபுவை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி பேசிப்பார்த்தாள் ஜானு. ராம் மிகவும் பிடிவாதமாய் மறுத்துவிட்டார்.இரண்டு பக்கமும் பேச முடியாமல் தவித்தாள் உமா. அவள் மனம் ஊமையாய் அழுதது.ஒரு நாள் , தான் காதலித்த பையனோடு வீட்டை விட்டு வெளியேறி ,அவனை மணம் செய்து கொண்டாள் ஜானு.பிறகு எங்கேயோ வெளி நாட்டிற்கு போய்விட்டார்கள் என்று செய்தி வந்தது.
''ஜானு கிட்ட சொல்லனுமா '' என்று உமாவை ஏறிட்டுப்பார்த்தார் ராம்.'' கோவிச்சுக்காம நா கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க''என்றவளிடம்,''கேளு'' என்றார் ராம்.
'' அருணுக்கு கல்யாணமாயிருச்சா'' என்று கேட்டாள்.
'' என்ன கேக்கற நீ? பேசிமுடிச்சுருக்கோம் ,இன்னும் நிச்சயம் கூட பண்ணல '' என்றார் ராம்.
'' ஆனா அவங்க ரெண்டு பேரும் , போன்ல ரொம்ப நேரம் பேசிக்கிறாங்க ,ஹோட்டல்,ஷாப்பிங் , சினிமா ன்னு ,வெளில போறாங்க ''.
''அதுக்கென்ன இப்ப"" இது ராம்.
'' அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப விரும்புறாங்க ''.
''என்ன சொல்ல வரே நீ '' என்றார் ராம்.
'' இல்ல.. கல்யாணத்துக்கு முன்னாடியே ,காதலிக்கறது , வெளில போறது எல்லாம் தப்பில்லையா '' என்றாள்.
'' இதுல என்ன தப்பு ?'' கேட்டார் ராம்.
''இதே போல தானே நம்ம ஜானுவும் பண்ணினா...அவ செஞ்சா தப்பு ...அதையே அருண் செஞ்சா தப்பில்லையா? '' என்று கேட்டாள்.
இவள் சொல்வதிலும் ஏதோ நியாயம் இருப்பது போல தோன்றியது அவருக்கு.ஜானுவின் விஷயத்தில் ரொம்ப முரட்டுத்தனமாக நடந்து கொண்டு விட்டோமோ என்று தோன்றியது.உமாவின் பேச்சில் இருந்த , ஒரு தாயின் ஆதங்கமும் , வேதனையும் அவருக்கு புரிந்தது. இவள் என் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல , இந்த வயதில் எனக்கும் தாய் தான் என்று தோணிற்று. இந்த தாயை மேலும் வேதனை படுத்த கூடாது என்று முடிவுசெய்தார்.
'' சரி உமா...நான் ..ஜானுவை contact பண்ணி , இந்த விஷயத்தை சொல்லிடுறேன்.. சந்தோசம் தானே '' என்று கேட்ட படி அவளை அணைத்துக்கொண்டார்.
''ரொம்ப சந்தோசம்'' என்றபடி அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
ராமின் தோளை உமாவின் , கண்ணீர் நனைத்தது. இம்முறை ஆனந்தத்தினால்.