kumba rasi or meena rasi kindly reply.
சுக்ல பக்ஷத்தில் கடகம், மிதுனம், கன்னி இவைகளை தவிற மற்ற லக்னங்களில் அஷ்டம சுத்தி யுள்ள ராசியில் ரிக்தையில்லாத திதி , திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் பும்சவனம் செய்ய வேன்டும்.
6 அல்லது 8 வது மாதத்தில் செய்ய வேண்டியது ஸீமந்தோந்நயனம் எனும் கர்மா.. 4 அல்லது, 6 அல்லது 8 ஆவது மாதத்தில் அஷ்டம சுத்தியான லக்னத்தில் (சுப கிரஹங்களும் இருக்க கூடாது). சிம்மம், வ்ருச்சிகம்
ராசிகளை தவிற மற்ற ராசிகளில் ரிக்தைகள், அமாவாசை. பெளர்ணமி, தவிற
மற்ற திதிகளில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில், சந்திராஷ்டமும் இல்லாமல் பெண் நக்ஷதிரத்திலிருந்து பார்க்க வேண்டும்.
குரு, சுக்ர பலம் நல்லது. . கசரம் இல்லாமல் நாள் பார்க்க வேண்டும்.
ரோஹிணி, ம்ருகசீர்ஷம்,, புனர்பூசம், பூசம், உத்ரம், ஹஸ்தம், உத்ராடம், திருவோணம், உத்ரட்டாதி, ரேவதி நக்ஷத்திரங்களில் நாள் பார்க்க வேண்டும்.
துதியை த்ருதியை, பஞ்சமி ,ஸப்தமி தசமி ஏகாதசி, த்ரயோதசி திதிகள் நல்லது.
ஸீமந்தம் எனும் கர்மாவை செய்து கொள்ளும் கர்பிணியின் தலை மயிரை
முள்ளம்பன்றி முள்,, தர்ப்பை,, பேத்தி இலை கொத்து ஆகியவைகளால் வகிடாக பிறிப்பதால் ஸீம்சதோன்நயனம் என இதற்கு பெயர்..
இதற்கு பூர்வாங்கம் உதக சாந்தி, ரக்ஷாபந்தனம், நாந்தி. . பிறகு ஒளபாசன
அக்னியில் முகாந்தம் செய்ய வேண்டும். பாத்ர ஸாதனத்துடன் வகிடு
பிறிக்க தர்ப்ப ஸ்தம்பம், பன்றி முள், பேய் அத்திக்கொத்து, முளையுடன் கூடிய நெல் பயிர், இவைகளையும் ஸாதனம் செய்ய வேண்டும்.