ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
மேஷம் ராசி
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
மேஷ ராசி..!
புதுமையான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் விரும்பப் படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மேஷ ராசிக்கு போக ஸ்தானம் என்னும் பன்னிரண்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சத்ரு ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஆறாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.
ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். தெளிவு பிறக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். தடைபட்ட சில வரவுகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான, அனுகூலமான சூழல் அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடி வரும். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மற்றவர்களை எதிர்பார்த்திருக்காமல் நீங்களே செயல்படுவது நல்லது. வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.
ராசிக்கு ஆறாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பிரச்சனைகள் எதனால் உருவாகின்றது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். சந்தேக உணர்வினால் பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். குழந்தைகளின் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தாய்மாமன் உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பூமி, மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வரவுக்கேற்ப கடன்களை அமைத்துக் கொள்வது நல்லது. இணைய வர்த்தகத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். வெளி உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். தலைவலி, முதுகுவலி சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
பொருளாதாரம்
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். சிறு வருமானத்தையும் சரியான முறையில் முதலீடுகளாக மாற்றுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறைவதால் எதையும் ஆவணப்படுத்திக் கொள்வது நல்லது. இழுபறியான வரவுகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
உயர் அதிகாரிகளிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சாதகமாகும். ஊதிய உயர்வு சிலருக்கு கைகூடி வரும். அலுவல் பணிகளில் இருந்துவந்த போட்டி மற்றும் தடைகளை வெற்றி கொள்வீர்கள். பணி சார்ந்த சில பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகளும், அனுபவமும் மேம்படும். பணி மாற்ற முடிவுகளில் சூழ்நிலை அறிந்து, அனுபவ அறிவை கொண்டு செயல்படுத்தவும். சக பணியாளர்களின் தனிப்பட்ட செயல்களில் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு பிற நாட்டு நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகள்
புதிய துறை சார்ந்த தேடலும், முதலீடுகளும் அதிகரிக்கும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. நிலுவையில் இருந்துவந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகளால் போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். தொழில் நுட்ப உதவிகளின் மூலம் வியாபார பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் பொறுமையைக் கையாள்வது நல்லது. வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள்
நினைத்த சில பணிகளில் தந்திரமாகச் செயல்பட்டு எண்ணியதை அடைவீர்கள். கட்சி பணி சார்ந்த பயணங்கள் அடிக்கடி உண்டாகும். தற்பெருமையான செலவுகளால் கையிருப்புகள் குறையும். ஒப்பந்தப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.
உடனிருப்பவர்களைப் பற்றிய புதிய தெளிவு உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளால் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் வித்தியாசமான வாய்ப்புகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். திடீர் பயணங்களால் சுக வாழ்வில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். இசைத்துறையில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆசை வார்த்தைகளை நம்பி செயல்படாமல் இருக்கவும். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் தேவையற்ற வாதங்களைத் தவிர்க்கவும்.
பெண்கள்
பெண்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். தடைபட்ட சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். உறவுகளிடத்தில் பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த விரக்தி மனப்பான்மை விலகும். மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். ஆடம்பரமான செலவுகளால் கையிருப்புகள் குறையலாம்.
மாணவர்கள்
திறமைக்கு உண்டான வாய்ப்புகளும், மதிப்பெண்களும் கிடைக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் மிக நன்று. உயர்நிலைக் கல்வியில் முயற்சிகளை அதிகப்படுத்தவும். நண்பர்களின் தன்மைகளை அறிந்து நட்பு கொள்ளவும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் முயற்சிகளை அதிகப்படுத்தவும். சஞ்சலமான சிந்தனைகளைத் தவிர்க்கவும். சில நேரத்தில் தனிமை உற்ற தோழனாக அமையும். உடற்பயிற்சி மற்றும் உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும்.
நன்மைகள்
நடைபெற இருக்கின்ற ராகு, கேது பெயர்ச்சியால் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளும், நெருக்கடி கொடுத்த சில இன்னல்களும் குறையும்.
தீமைகள்
நடைபெற இருக்கின்ற ராகு, கேது பெயர்ச்சியால் ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வமும், உடனிருப்பவர்களிடம் போட்டி மனப்பான்மையின்றி இருப்பதும் நல்லது.
வழிபாடு
திருக்களாச்சேரியில் வீற்றிருக்கும் நாகநாதரை வழிபட நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறையும்.
வராகி அம்மனுக்கு அகல் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.
ரிஷபம் ராசி
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
ரிஷப ராசி..!
எந்த வேளையிலும் மகிழ்ச்சியுடனும், புன்சிரிப்புடனும் காணப்படும் ரிஷப ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் ரிஷப ராசிக்கு லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் புத்திர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஐந்தாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.
ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். மனதளவில் உற்சாகம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்களும், சுபகாரியங்களும் கைகூடி வரும். உடலளவில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆடம்பரமான சிந்தனைகள் மற்றும் ஆர்வம் ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் மூலம் நன்மை உண்டாகும். தொலை தூர தகவல்கள் சாதகமாக அமையும். வீடு, மனை சம்பந்தப்பட்ட செயல்களில் இருந்துவந்த மந்த நிலை மாறும்.
ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எந்த ஒரு செயலையும் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு சிந்தித்துச் செயல்படுத்தவும். சாஸ்திரம் மற்றும் சம்பிரதாயங்களில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் இனம்புரியாத சில கற்பனைகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். தனம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும்.
வாகன பயணங்களின் மூலம் அலைச்சல்கள் மேம்படும். விவசாயப் பணிகளில் மத்திமமான வரவுகள் உண்டாகும். எதிலும் பற்றின்றி செயல்படுவீர்கள். விரத்தி மனப்பான்மையைக் குறைத்துக் கொள்வது நல்லது.
வாழ்க்கைத் துணைவரிடத்தில் மனம் விட்டுப் பேசுவதால் தெளிவும், புரிதலும் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பயனற்ற மருத்துவச் செலவுகள் விலகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
பொருளாதாரம்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடி வரும். பூர்வீக சொத்துக்களில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நன்மை தரும். வேலை வாய்ப்புகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வங்கி சார்ந்த துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். நீதித்துறை பிரிவுகளில் மேன்மை ஏற்படும்.
வியாபாரிகள்
வியாபாரத்தில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய முடிவுகளைச் செயல்படுத்துவதில் ஆலோசனைகள் பெறுவது நல்லது. பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். அபிவிருத்திக்கான கடன் உதவிகள் சாதகமாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அயல்நாட்டுப் பொருட்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபார சரிவுகளை ஈடுகட்டுவதற்கான சூழல் அமையும்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளுக்கு புதிய முடிவு எடுப்பதில் கவனம் வேண்டும். கட்சி பணிகளில் தீர ஆலோசித்துச் செயல்படவும். சிறு சிறு பணிகளுக்கும் அலைச்சல்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். தனவரவு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பத்திரிகைத் துறையில் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். எதிர்பாலின மக்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும்.
கலைஞர்கள்
கலைத்துறையினருக்குச் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுகபோக சிந்தனைகள் மேம்படும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரசிகர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடி வரும்.
பொருளாதாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். சேமிப்புகள் அதிகரிக்கும்.
மற்றபெண்கள்
பெண்கள் எதிலும் சிக்கனமாகச் செயல்படுவீர்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் சூழ்நிலையறிந்து செயல்படவும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் சாதகமாக முடியும். எதிர்காலம் தொடர்பான சில புரிதல்கள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளவும். மூத்த குழந்தைகளின் வழியில் இருந்துவந்த சங்கடங்கள் மறையும்.
மாணவர்கள்
உயர்கல்வி குறித்த தெளிவான ஆலோசனைகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வதற்கான சூழல் அமையும். மனதளவில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். போட்டிகளைச் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும்.
நன்மைகள்
நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும்.
தீமைகள்
நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு செயல்படவும்.
வழிபாடு
துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி பூஜித்து வர சகல தோஷங்களும் தீரும்.
அரளி மலரை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபட சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். மனோதைரியம் அதிகரிக்கும்.
மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.
மிதுனம் ராசி
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
மிதுன ராசி..!
கலகலப்பும், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய விகடகவியான மிதுன ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மிதுன ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சுக ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய நான்காம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.
ராசிக்கு பத்தாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் திடீர் பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் நினைத்த சில காரியங்கள் கைகூடுவதில் தாமதம் உண்டாகும். உறவுகளிடத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். எதிர்காலம் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிலும் சுயமாக சிந்தித்துச் செயல்படுவீர்கள். மனதளவில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். மூத்த உடன்பிறப்புகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.
ராசிக்கு நான்காம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பயனற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைகளின் குணநலங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வும், மந்தநிலையும் ஏற்படும். சில பணிகளை மற்றவர்களை எதிர்பாராமல் நீங்களே மேற்கொள்வது நல்லது. நினைத்த சில பணிகளில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். மின்சாதன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். முக்கியமான ஆவணங்களில் கவனத்துடன் இருக்கவும். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அதை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். பயணங்களின் தன்மைகளை அறிந்து முடிவு செய்யவும். தாயின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உணவு பழக்கங்களில் கவனம் வேண்டும். நேரம் கழித்து உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது உறவுகளிடத்தில் நன்மதிப்பை உருவாக்கும்.
பொருளாதாரம்
பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தாமதம் உண்டாகும். திடீர் செலவுகளால் எதிர்பாராத நெருக்கடிகள் உண்டாகும். வருமானத்திற்கான புதிய முயற்சிகளில் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படவும்.
உத்தியோகஸ்தர்கள்
எதிர்பாராத சில இடமாற்றத்திற்கான சூழல் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பொறுப்புகள் அதிகரித்தாலும் அதற்கான மதிப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்வதால் உயர்வும், ஆதரவும் ஏற்படும்.
வியாபாரிகள்
தொழில் சார்ந்த விஷயங்களில் ஆர்வமும், வேகமும் அதிகரிக்கும். இருப்பினும் விவேகத்துடன் இருப்பது நல்லது. வியாபார அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேலோங்கும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். போட்டியாளர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். பங்குதாரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. மறைமுகமான வருவாய்கள் உண்டாகும். தொகுதி மக்களிடம் வாக்குறுதிகள் அளிப்பதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நினைத்த சில பணிகள் ஈடேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒன்றுக்கு இரண்டு முறை மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தனம் சார்ந்த செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய ஒப்பந்தப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். இலக்கிய பணிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்திருந்த நீண்ட நாள் வாய்ப்புகள் தேடி வரும்.
பெண்கள்
பெண்களின் குணநலன்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். வீடு மற்றும் அலுவலக மாற்றத்திற்கான சூழல் ஏற்படும். வயதில் மூத்தவர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் தாமதமாகக் கிடைக்கும். புத்திரர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான சூழல் அமையும்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு உயர்கல்வியில் இருந்துவந்த போட்டிகள் மற்றும் ஆர்வமின்மை குறையும். எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்ப சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணினித் துறைகளில் திறமைகள் வெளிப்படும். இயந்திரவியல் பிரிவுகளில் கவனம் வேண்டும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
நன்மைகள்
நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மனதளவில் புதுவிதமான சிந்தனைகளும், எதிர்காலம் தொடர்பான முடிவுகளும் பிறக்கும்.
தீமைகள்
நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், பயணங்களால் அனுபவமும் ஏற்படும்.
வழிபாடு
திருச்செங்கோட்டில் அமர்ந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியம் மற்றும் சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும்.
பௌர்ணமி தோறும் குலதெய்வத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட தொழிலில் முன்னேற்றமும், கல்வி சார்ந்த பிரச்சனைகளும் அகலும்.
மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.
மேஷம் ராசி
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
மேஷ ராசி..!
புதுமையான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் விரும்பப் படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மேஷ ராசிக்கு போக ஸ்தானம் என்னும் பன்னிரண்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சத்ரு ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஆறாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.
ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். தெளிவு பிறக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். தடைபட்ட சில வரவுகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான, அனுகூலமான சூழல் அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடி வரும். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மற்றவர்களை எதிர்பார்த்திருக்காமல் நீங்களே செயல்படுவது நல்லது. வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.
ராசிக்கு ஆறாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பிரச்சனைகள் எதனால் உருவாகின்றது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். சந்தேக உணர்வினால் பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். குழந்தைகளின் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தாய்மாமன் உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பூமி, மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வரவுக்கேற்ப கடன்களை அமைத்துக் கொள்வது நல்லது. இணைய வர்த்தகத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். வெளி உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். தலைவலி, முதுகுவலி சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
பொருளாதாரம்
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். சிறு வருமானத்தையும் சரியான முறையில் முதலீடுகளாக மாற்றுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறைவதால் எதையும் ஆவணப்படுத்திக் கொள்வது நல்லது. இழுபறியான வரவுகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
உயர் அதிகாரிகளிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சாதகமாகும். ஊதிய உயர்வு சிலருக்கு கைகூடி வரும். அலுவல் பணிகளில் இருந்துவந்த போட்டி மற்றும் தடைகளை வெற்றி கொள்வீர்கள். பணி சார்ந்த சில பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகளும், அனுபவமும் மேம்படும். பணி மாற்ற முடிவுகளில் சூழ்நிலை அறிந்து, அனுபவ அறிவை கொண்டு செயல்படுத்தவும். சக பணியாளர்களின் தனிப்பட்ட செயல்களில் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு பிற நாட்டு நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகள்
புதிய துறை சார்ந்த தேடலும், முதலீடுகளும் அதிகரிக்கும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. நிலுவையில் இருந்துவந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகளால் போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். தொழில் நுட்ப உதவிகளின் மூலம் வியாபார பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் பொறுமையைக் கையாள்வது நல்லது. வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள்
நினைத்த சில பணிகளில் தந்திரமாகச் செயல்பட்டு எண்ணியதை அடைவீர்கள். கட்சி பணி சார்ந்த பயணங்கள் அடிக்கடி உண்டாகும். தற்பெருமையான செலவுகளால் கையிருப்புகள் குறையும். ஒப்பந்தப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.
உடனிருப்பவர்களைப் பற்றிய புதிய தெளிவு உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளால் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் வித்தியாசமான வாய்ப்புகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். திடீர் பயணங்களால் சுக வாழ்வில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். இசைத்துறையில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆசை வார்த்தைகளை நம்பி செயல்படாமல் இருக்கவும். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் தேவையற்ற வாதங்களைத் தவிர்க்கவும்.
பெண்கள்
பெண்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். தடைபட்ட சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். உறவுகளிடத்தில் பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த விரக்தி மனப்பான்மை விலகும். மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். ஆடம்பரமான செலவுகளால் கையிருப்புகள் குறையலாம்.
மாணவர்கள்
திறமைக்கு உண்டான வாய்ப்புகளும், மதிப்பெண்களும் கிடைக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் மிக நன்று. உயர்நிலைக் கல்வியில் முயற்சிகளை அதிகப்படுத்தவும். நண்பர்களின் தன்மைகளை அறிந்து நட்பு கொள்ளவும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் முயற்சிகளை அதிகப்படுத்தவும். சஞ்சலமான சிந்தனைகளைத் தவிர்க்கவும். சில நேரத்தில் தனிமை உற்ற தோழனாக அமையும். உடற்பயிற்சி மற்றும் உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும்.
நன்மைகள்
நடைபெற இருக்கின்ற ராகு, கேது பெயர்ச்சியால் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளும், நெருக்கடி கொடுத்த சில இன்னல்களும் குறையும்.
தீமைகள்
நடைபெற இருக்கின்ற ராகு, கேது பெயர்ச்சியால் ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வமும், உடனிருப்பவர்களிடம் போட்டி மனப்பான்மையின்றி இருப்பதும் நல்லது.
வழிபாடு
திருக்களாச்சேரியில் வீற்றிருக்கும் நாகநாதரை வழிபட நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறையும்.
வராகி அம்மனுக்கு அகல் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.
ரிஷபம் ராசி
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
ரிஷப ராசி..!
எந்த வேளையிலும் மகிழ்ச்சியுடனும், புன்சிரிப்புடனும் காணப்படும் ரிஷப ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் ரிஷப ராசிக்கு லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் புத்திர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஐந்தாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.
ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். மனதளவில் உற்சாகம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்களும், சுபகாரியங்களும் கைகூடி வரும். உடலளவில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆடம்பரமான சிந்தனைகள் மற்றும் ஆர்வம் ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் மூலம் நன்மை உண்டாகும். தொலை தூர தகவல்கள் சாதகமாக அமையும். வீடு, மனை சம்பந்தப்பட்ட செயல்களில் இருந்துவந்த மந்த நிலை மாறும்.
ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எந்த ஒரு செயலையும் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு சிந்தித்துச் செயல்படுத்தவும். சாஸ்திரம் மற்றும் சம்பிரதாயங்களில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் இனம்புரியாத சில கற்பனைகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். தனம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும்.
வாகன பயணங்களின் மூலம் அலைச்சல்கள் மேம்படும். விவசாயப் பணிகளில் மத்திமமான வரவுகள் உண்டாகும். எதிலும் பற்றின்றி செயல்படுவீர்கள். விரத்தி மனப்பான்மையைக் குறைத்துக் கொள்வது நல்லது.
வாழ்க்கைத் துணைவரிடத்தில் மனம் விட்டுப் பேசுவதால் தெளிவும், புரிதலும் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பயனற்ற மருத்துவச் செலவுகள் விலகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
பொருளாதாரம்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடி வரும். பூர்வீக சொத்துக்களில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நன்மை தரும். வேலை வாய்ப்புகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வங்கி சார்ந்த துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். நீதித்துறை பிரிவுகளில் மேன்மை ஏற்படும்.
வியாபாரிகள்
வியாபாரத்தில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய முடிவுகளைச் செயல்படுத்துவதில் ஆலோசனைகள் பெறுவது நல்லது. பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். அபிவிருத்திக்கான கடன் உதவிகள் சாதகமாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அயல்நாட்டுப் பொருட்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபார சரிவுகளை ஈடுகட்டுவதற்கான சூழல் அமையும்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளுக்கு புதிய முடிவு எடுப்பதில் கவனம் வேண்டும். கட்சி பணிகளில் தீர ஆலோசித்துச் செயல்படவும். சிறு சிறு பணிகளுக்கும் அலைச்சல்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். தனவரவு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பத்திரிகைத் துறையில் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். எதிர்பாலின மக்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும்.
கலைஞர்கள்
கலைத்துறையினருக்குச் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுகபோக சிந்தனைகள் மேம்படும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரசிகர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடி வரும்.
பொருளாதாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். சேமிப்புகள் அதிகரிக்கும்.
மற்றபெண்கள்
பெண்கள் எதிலும் சிக்கனமாகச் செயல்படுவீர்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் சூழ்நிலையறிந்து செயல்படவும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் சாதகமாக முடியும். எதிர்காலம் தொடர்பான சில புரிதல்கள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளவும். மூத்த குழந்தைகளின் வழியில் இருந்துவந்த சங்கடங்கள் மறையும்.
மாணவர்கள்
உயர்கல்வி குறித்த தெளிவான ஆலோசனைகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வதற்கான சூழல் அமையும். மனதளவில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். போட்டிகளைச் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும்.
நன்மைகள்
நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும்.
தீமைகள்
நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு செயல்படவும்.
வழிபாடு
துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி பூஜித்து வர சகல தோஷங்களும் தீரும்.
அரளி மலரை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபட சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். மனோதைரியம் அதிகரிக்கும்.
மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.
மிதுனம் ராசி
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
மிதுன ராசி..!
கலகலப்பும், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய விகடகவியான மிதுன ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மிதுன ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சுக ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய நான்காம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.
ராசிக்கு பத்தாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் திடீர் பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் நினைத்த சில காரியங்கள் கைகூடுவதில் தாமதம் உண்டாகும். உறவுகளிடத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். எதிர்காலம் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிலும் சுயமாக சிந்தித்துச் செயல்படுவீர்கள். மனதளவில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். மூத்த உடன்பிறப்புகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.
ராசிக்கு நான்காம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பயனற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைகளின் குணநலங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வும், மந்தநிலையும் ஏற்படும். சில பணிகளை மற்றவர்களை எதிர்பாராமல் நீங்களே மேற்கொள்வது நல்லது. நினைத்த சில பணிகளில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். மின்சாதன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். முக்கியமான ஆவணங்களில் கவனத்துடன் இருக்கவும். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அதை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். பயணங்களின் தன்மைகளை அறிந்து முடிவு செய்யவும். தாயின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உணவு பழக்கங்களில் கவனம் வேண்டும். நேரம் கழித்து உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது உறவுகளிடத்தில் நன்மதிப்பை உருவாக்கும்.
பொருளாதாரம்
பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தாமதம் உண்டாகும். திடீர் செலவுகளால் எதிர்பாராத நெருக்கடிகள் உண்டாகும். வருமானத்திற்கான புதிய முயற்சிகளில் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படவும்.
உத்தியோகஸ்தர்கள்
எதிர்பாராத சில இடமாற்றத்திற்கான சூழல் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பொறுப்புகள் அதிகரித்தாலும் அதற்கான மதிப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்வதால் உயர்வும், ஆதரவும் ஏற்படும்.
வியாபாரிகள்
தொழில் சார்ந்த விஷயங்களில் ஆர்வமும், வேகமும் அதிகரிக்கும். இருப்பினும் விவேகத்துடன் இருப்பது நல்லது. வியாபார அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேலோங்கும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். போட்டியாளர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். பங்குதாரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. மறைமுகமான வருவாய்கள் உண்டாகும். தொகுதி மக்களிடம் வாக்குறுதிகள் அளிப்பதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நினைத்த சில பணிகள் ஈடேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒன்றுக்கு இரண்டு முறை மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தனம் சார்ந்த செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய ஒப்பந்தப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். இலக்கிய பணிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்திருந்த நீண்ட நாள் வாய்ப்புகள் தேடி வரும்.
பெண்கள்
பெண்களின் குணநலன்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். வீடு மற்றும் அலுவலக மாற்றத்திற்கான சூழல் ஏற்படும். வயதில் மூத்தவர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் தாமதமாகக் கிடைக்கும். புத்திரர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான சூழல் அமையும்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு உயர்கல்வியில் இருந்துவந்த போட்டிகள் மற்றும் ஆர்வமின்மை குறையும். எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்ப சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணினித் துறைகளில் திறமைகள் வெளிப்படும். இயந்திரவியல் பிரிவுகளில் கவனம் வேண்டும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
நன்மைகள்
நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மனதளவில் புதுவிதமான சிந்தனைகளும், எதிர்காலம் தொடர்பான முடிவுகளும் பிறக்கும்.
தீமைகள்
நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், பயணங்களால் அனுபவமும் ஏற்படும்.
வழிபாடு
திருச்செங்கோட்டில் அமர்ந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியம் மற்றும் சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும்.
பௌர்ணமி தோறும் குலதெய்வத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட தொழிலில் முன்னேற்றமும், கல்வி சார்ந்த பிரச்சனைகளும் அகலும்.
மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.