• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Rahu Ketu Peyarchi Palangal (2023 to 2025)

praveen

Life is a dream
Staff member
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம் ராசி


வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
மேஷ ராசி..!

புதுமையான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் விரும்பப் படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மேஷ ராசிக்கு போக ஸ்தானம் என்னும் பன்னிரண்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சத்ரு ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஆறாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். தெளிவு பிறக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். தடைபட்ட சில வரவுகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான, அனுகூலமான சூழல் அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடி வரும். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மற்றவர்களை எதிர்பார்த்திருக்காமல் நீங்களே செயல்படுவது நல்லது. வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.

ராசிக்கு ஆறாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பிரச்சனைகள் எதனால் உருவாகின்றது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். சந்தேக உணர்வினால் பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். குழந்தைகளின் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தாய்மாமன் உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பூமி, மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வரவுக்கேற்ப கடன்களை அமைத்துக் கொள்வது நல்லது. இணைய வர்த்தகத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். வெளி உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். தலைவலி, முதுகுவலி சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

பொருளாதாரம்

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். சிறு வருமானத்தையும் சரியான முறையில் முதலீடுகளாக மாற்றுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறைவதால் எதையும் ஆவணப்படுத்திக் கொள்வது நல்லது. இழுபறியான வரவுகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள்

உயர் அதிகாரிகளிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சாதகமாகும். ஊதிய உயர்வு சிலருக்கு கைகூடி வரும். அலுவல் பணிகளில் இருந்துவந்த போட்டி மற்றும் தடைகளை வெற்றி கொள்வீர்கள். பணி சார்ந்த சில பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகளும், அனுபவமும் மேம்படும். பணி மாற்ற முடிவுகளில் சூழ்நிலை அறிந்து, அனுபவ அறிவை கொண்டு செயல்படுத்தவும். சக பணியாளர்களின் தனிப்பட்ட செயல்களில் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு பிற நாட்டு நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகள்

புதிய துறை சார்ந்த தேடலும், முதலீடுகளும் அதிகரிக்கும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. நிலுவையில் இருந்துவந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகளால் போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். தொழில் நுட்ப உதவிகளின் மூலம் வியாபார பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் பொறுமையைக் கையாள்வது நல்லது. வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள்

நினைத்த சில பணிகளில் தந்திரமாகச் செயல்பட்டு எண்ணியதை அடைவீர்கள். கட்சி பணி சார்ந்த பயணங்கள் அடிக்கடி உண்டாகும். தற்பெருமையான செலவுகளால் கையிருப்புகள் குறையும். ஒப்பந்தப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.

உடனிருப்பவர்களைப் பற்றிய புதிய தெளிவு உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளால் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.

கலைஞர்கள்

கலைத்துறையில் வித்தியாசமான வாய்ப்புகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். திடீர் பயணங்களால் சுக வாழ்வில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். இசைத்துறையில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆசை வார்த்தைகளை நம்பி செயல்படாமல் இருக்கவும். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் தேவையற்ற வாதங்களைத் தவிர்க்கவும்.

பெண்கள்

பெண்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். தடைபட்ட சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். உறவுகளிடத்தில் பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த விரக்தி மனப்பான்மை விலகும். மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். ஆடம்பரமான செலவுகளால் கையிருப்புகள் குறையலாம்.

மாணவர்கள்

திறமைக்கு உண்டான வாய்ப்புகளும், மதிப்பெண்களும் கிடைக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் மிக நன்று. உயர்நிலைக் கல்வியில் முயற்சிகளை அதிகப்படுத்தவும். நண்பர்களின் தன்மைகளை அறிந்து நட்பு கொள்ளவும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் முயற்சிகளை அதிகப்படுத்தவும். சஞ்சலமான சிந்தனைகளைத் தவிர்க்கவும். சில நேரத்தில் தனிமை உற்ற தோழனாக அமையும். உடற்பயிற்சி மற்றும் உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு, கேது பெயர்ச்சியால் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளும், நெருக்கடி கொடுத்த சில இன்னல்களும் குறையும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு, கேது பெயர்ச்சியால் ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வமும், உடனிருப்பவர்களிடம் போட்டி மனப்பான்மையின்றி இருப்பதும் நல்லது.

வழிபாடு

திருக்களாச்சேரியில் வீற்றிருக்கும் நாகநாதரை வழிபட நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறையும்.

வராகி அம்மனுக்கு அகல் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

ரிஷபம் ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
ரிஷப ராசி..!

எந்த வேளையிலும் மகிழ்ச்சியுடனும், புன்சிரிப்புடனும் காணப்படும் ரிஷப ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் ரிஷப ராசிக்கு லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் புத்திர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஐந்தாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். மனதளவில் உற்சாகம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்களும், சுபகாரியங்களும் கைகூடி வரும். உடலளவில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆடம்பரமான சிந்தனைகள் மற்றும் ஆர்வம் ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் மூலம் நன்மை உண்டாகும். தொலை தூர தகவல்கள் சாதகமாக அமையும். வீடு, மனை சம்பந்தப்பட்ட செயல்களில் இருந்துவந்த மந்த நிலை மாறும்.

ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எந்த ஒரு செயலையும் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு சிந்தித்துச் செயல்படுத்தவும். சாஸ்திரம் மற்றும் சம்பிரதாயங்களில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் இனம்புரியாத சில கற்பனைகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். தனம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும்.

வாகன பயணங்களின் மூலம் அலைச்சல்கள் மேம்படும். விவசாயப் பணிகளில் மத்திமமான வரவுகள் உண்டாகும். எதிலும் பற்றின்றி செயல்படுவீர்கள். விரத்தி மனப்பான்மையைக் குறைத்துக் கொள்வது நல்லது.

வாழ்க்கைத் துணைவரிடத்தில் மனம் விட்டுப் பேசுவதால் தெளிவும், புரிதலும் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பயனற்ற மருத்துவச் செலவுகள் விலகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடி வரும். பூர்வீக சொத்துக்களில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நன்மை தரும். வேலை வாய்ப்புகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வங்கி சார்ந்த துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். நீதித்துறை பிரிவுகளில் மேன்மை ஏற்படும்.

வியாபாரிகள்

வியாபாரத்தில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய முடிவுகளைச் செயல்படுத்துவதில் ஆலோசனைகள் பெறுவது நல்லது. பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். அபிவிருத்திக்கான கடன் உதவிகள் சாதகமாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அயல்நாட்டுப் பொருட்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபார சரிவுகளை ஈடுகட்டுவதற்கான சூழல் அமையும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகளுக்கு புதிய முடிவு எடுப்பதில் கவனம் வேண்டும். கட்சி பணிகளில் தீர ஆலோசித்துச் செயல்படவும். சிறு சிறு பணிகளுக்கும் அலைச்சல்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். தனவரவு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பத்திரிகைத் துறையில் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். எதிர்பாலின மக்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும்.

கலைஞர்கள்

கலைத்துறையினருக்குச் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுகபோக சிந்தனைகள் மேம்படும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரசிகர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடி வரும்.

பொருளாதாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். சேமிப்புகள் அதிகரிக்கும்.

மற்றபெண்கள்

பெண்கள் எதிலும் சிக்கனமாகச் செயல்படுவீர்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் சூழ்நிலையறிந்து செயல்படவும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் சாதகமாக முடியும். எதிர்காலம் தொடர்பான சில புரிதல்கள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளவும். மூத்த குழந்தைகளின் வழியில் இருந்துவந்த சங்கடங்கள் மறையும்.

மாணவர்கள்

உயர்கல்வி குறித்த தெளிவான ஆலோசனைகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வதற்கான சூழல் அமையும். மனதளவில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். போட்டிகளைச் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு செயல்படவும்.

வழிபாடு

துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி பூஜித்து வர சகல தோஷங்களும் தீரும்.

அரளி மலரை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபட சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். மனோதைரியம் அதிகரிக்கும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

மிதுனம் ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
மிதுன ராசி..!

கலகலப்பும், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய விகடகவியான மிதுன ராசி அன்பர்களே..!

இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மிதுன ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சுக ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய நான்காம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு பத்தாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் திடீர் பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் நினைத்த சில காரியங்கள் கைகூடுவதில் தாமதம் உண்டாகும். உறவுகளிடத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். எதிர்காலம் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிலும் சுயமாக சிந்தித்துச் செயல்படுவீர்கள். மனதளவில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். மூத்த உடன்பிறப்புகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.

ராசிக்கு நான்காம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பயனற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைகளின் குணநலங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வும், மந்தநிலையும் ஏற்படும். சில பணிகளை மற்றவர்களை எதிர்பாராமல் நீங்களே மேற்கொள்வது நல்லது. நினைத்த சில பணிகளில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். மின்சாதன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். முக்கியமான ஆவணங்களில் கவனத்துடன் இருக்கவும். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அதை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். பயணங்களின் தன்மைகளை அறிந்து முடிவு செய்யவும். தாயின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உணவு பழக்கங்களில் கவனம் வேண்டும். நேரம் கழித்து உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது உறவுகளிடத்தில் நன்மதிப்பை உருவாக்கும்.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தாமதம் உண்டாகும். திடீர் செலவுகளால் எதிர்பாராத நெருக்கடிகள் உண்டாகும். வருமானத்திற்கான புதிய முயற்சிகளில் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படவும்.

உத்தியோகஸ்தர்கள்

எதிர்பாராத சில இடமாற்றத்திற்கான சூழல் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பொறுப்புகள் அதிகரித்தாலும் அதற்கான மதிப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்வதால் உயர்வும், ஆதரவும் ஏற்படும்.

வியாபாரிகள்

தொழில் சார்ந்த விஷயங்களில் ஆர்வமும், வேகமும் அதிகரிக்கும். இருப்பினும் விவேகத்துடன் இருப்பது நல்லது. வியாபார அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேலோங்கும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். போட்டியாளர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். பங்குதாரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. மறைமுகமான வருவாய்கள் உண்டாகும். தொகுதி மக்களிடம் வாக்குறுதிகள் அளிப்பதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நினைத்த சில பணிகள் ஈடேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும்.

கலைஞர்கள்

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒன்றுக்கு இரண்டு முறை மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தனம் சார்ந்த செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய ஒப்பந்தப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். இலக்கிய பணிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்திருந்த நீண்ட நாள் வாய்ப்புகள் தேடி வரும்.

பெண்கள்

பெண்களின் குணநலன்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். வீடு மற்றும் அலுவலக மாற்றத்திற்கான சூழல் ஏற்படும். வயதில் மூத்தவர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் தாமதமாகக் கிடைக்கும். புத்திரர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான சூழல் அமையும்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு உயர்கல்வியில் இருந்துவந்த போட்டிகள் மற்றும் ஆர்வமின்மை குறையும். எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்ப சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணினித் துறைகளில் திறமைகள் வெளிப்படும். இயந்திரவியல் பிரிவுகளில் கவனம் வேண்டும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மனதளவில் புதுவிதமான சிந்தனைகளும், எதிர்காலம் தொடர்பான முடிவுகளும் பிறக்கும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், பயணங்களால் அனுபவமும் ஏற்படும்.

வழிபாடு

திருச்செங்கோட்டில் அமர்ந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியம் மற்றும் சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும்.

பௌர்ணமி தோறும் குலதெய்வத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட தொழிலில் முன்னேற்றமும், கல்வி சார்ந்த பிரச்சனைகளும் அகலும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.



1696558766480.png
 
கடகம் ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
கடக ராசி..!

வளமான கற்பனையும், எழுச்சியும் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கடக ராசிக்கு பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சகோதர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய மூன்றாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் செய்யும் முயற்சிகளில் மாற்றமான அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். திருத்தலம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான குழப்பங்களிலிருந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அடகு வைத்த சில பொருட்களை மீட்டு எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழல் உண்டாகும்.

ராசிக்கு மூன்றாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதில் இனம்புரியாத புதுவிதமான ஆசைகளும், அறிமுகங்களும் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சூழ்நிலைகள் அமையும். உறவுகளின் வழியில் புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தந்தைவழி தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுக திறமைகளின் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சில செயல்பாடுகளின் மூலம் எதிர்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். காலம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். இரவு பயணத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

பொருளாதாரம்

சிறு சேமிப்பு மற்றும் சிறிய சீட்டுத் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கிடைக்கும் சிறு வருமானத்தையும் மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். எதிர்பார்த்திருந்த உயர் பதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். தகவல் தொடர்புத் துறைகளில் சூழ்நிலைக்கேற்ப செயல்படவும். பணி நிமிர்த்தமான சில நுணுக்கங்களை அறிவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அடிக்கடி சிறு தூரப் பயணங்களின் மூலம் லாபம் ஏற்படும். பத்திரிகை தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உருவாகும்.

வியாபாரிகள்

வியாபார பணிகளில் வேலையாட்களுடனான ஒத்துழைப்புகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். கைபேசி மற்றும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒப்பந்தம் தொடர்பான வியாபாரங்கள் கைகூடும். கால்நடைகள் சார்ந்த வியாபாரத்தில் லாபம் உண்டாகும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான பணிகளையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் புரிதலும், ஒத்துழைப்பும் உண்டாகும். நறுமணப் பொருட்கள் சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும்.

அரசியல்வாதிகள்

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும், ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சிறு சிறு பணிகளிலும் கவனத்துடன் செயல்படவும். கட்சி மேலிடம் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.

கலைஞர்கள்

கலைத்துறையில் இருப்பவர்களுக்குத் திறமைகளை வெளிப்படுத்தி, மகிழ்ச்சியான வாழ்வையும், செல்வாக்கையும் மேம்படுத்துவதற்கான அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் மீது இருந்த சிறு சிறு வதந்திகள் மறையும். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நுணுக்கமான பல விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். ஓவியம் மற்றும் இலக்கியம் சார்ந்த பணிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

பெண்கள்

மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். கணிப்பொறி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கௌரவப் பதவிகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் மனம் திறந்து பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும்.

மாணவர்கள்

புதிய மாற்றங்களின் மூலம் நல்ல மதிப்பெண்களும், புரிதலும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் இருந்துவந்த ஒருவிதமான சோர்வு மனப்பான்மைகள் குறையும். மேல்நிலை கல்வியில் இருந்துவந்த தடைகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். விளையாட்டு செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மனதில் தன்னம்பிக்கையும் செயல்பாடுகளில் புதிய கண்ணோட்டமும் உண்டாகும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். ஒப்பந்தப் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும்.

வழிபாடு

திருநாகேஸ்வரத்தில் வீற்றிருக்கும் நாகநாதரை வழிபட செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி ஒத்துழைப்பு மேம்படும்.

ராகவேந்திரரை வியாழக்கிழமை தோறும் வழிபாடு செய்துவர சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

சிம்மம் ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
சிம்ம ராசி..!


வேகமும், நிர்வாகத் திறமையும் கொண்டிருக்கக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் சிம்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் குடும்ப ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய இரண்டாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு எட்டாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் உடனிருக்கின்றவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தம்பதிகளுக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பொன், பொருள் சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களிடம் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். வாகனப் பயணத்தில் மித வேகம் நன்று. பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வெளிநாடு பயணம் சார்ந்த ஆசைகள் நிறைவேறும்.

ராசிக்கு இரண்டாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். சாதுரியமான பேச்சால் காரியசித்தி உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. போட்டி, பொறாமைகள் குறையும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். வெளிப்படையான பேச்சுக்களில் கவனம் வேண்டும். உணவு விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

உடல் ஆரோக்கியம்

தந்தையின் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். பற்கள் தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய சிந்தனைகளின் மூலம் தூக்கமின்மை, மன உளைச்சல் வந்துபோகும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். அலைச்சல் மற்றும் பதற்றம் அதிகரிக்கும்.

பொருளாதாரம்

தடைபட்டு வந்த வரவுகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் மேன்மை உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பங்கு வர்த்தக பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வாகனம் வாங்கும் வாய்ப்புகள் சாதகமாகும்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களுக்கு கருத்துக்கள் கூறுவதைத் தவிர்க்கவும். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மாற்ற முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். பொறுப்புகளும், உழைப்பும் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். அரசு சார்ந்த பணிகளில் விவேகத்துடன் இருக்கவும்.

வியாபாரிகள்

கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்புகளால் லாபம் உண்டாகும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வழக்கு சார்ந்த செயல்களில் கவனத்துடன் செயல்படவும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கமிஷன் வகையில் முன்னேற்றம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகவும். வேலையாட்களின் ஆதரவு மேம்படும். சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படுவது முக்கியம்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகளுக்கு பொறுப்பும், விழிப்புணர்வும் வேண்டிய காலம். வெளிவட்டார தொடர்புகளால் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மறைமுக வருவாய் மேம்படும், கட்சி தொடர்பான உயர் அதிகாரிகளிடத்தில் நிதானத்தைக் கையாளவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொண்டர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். கலைத் துறைகளில் முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். இசை மற்றும் நடனத் துறைகளில் எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

பெண்கள்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். பயணத்தடைகள் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகளில் சிந்தித்துச் செயல்படவும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வு உண்டாகும். மகளுக்கு எதிர்பார்த்த வேலைவாய்ப்புகள் சாதகமாகும்.

மாணவர்கள்

மாணவர்கள் புதிய நபர்களிடம் கவனத்துடன் இருக்கவும். அடிப்படையான விஷயங்களில் தெளிவுடன் இருப்பது நன்மதிப்பைப் பெற உதவும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒன்றிணைந்து இருக்கவும். வாகனங்களில் செல்லும் போது நிதானம் வேண்டும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் எதிர்பாராத சில உதவிகளால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் எதிலும் நிதானத்துடனும், பேராசையின்றியும் செயல்படவும்.

வழிபாடு

வராகி அம்மனை வழிபாடு செய்து வர குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

ராகு காலங்களில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது மனதளவில் தெளிவினை உருவாக்கும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

கன்னி ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
கன்னி ராசி..!

இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கன்னி ராசிக்கு களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசி ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய முதல் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு ஏழாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் மனதை உறுத்திய சில பிரச்சனைகள் விலகும். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வாக்குவாதங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவருடன் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். சில புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட சிறு சிறு விவாதங்கள் படிப்படியாக குறையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ராசிக்கு முதல் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பேச்சுக்களில் இருந்துவந்த தடுமாற்றம் விலகும். புதிய முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். குடும்பத்தில் இருந்துவந்த இடைவெளிகள் படிப்படியாக குறையும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். (பக்தி9442705560)ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு குறையும். நண்பர்களிடத்தில் வீண் வாதங்களை தவிர்க்கவும். சிறு சிறு விஷயங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. கடன் நிமிர்த்தமான சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

உடல் ஆரோக்கியம்

ராசியில் கேது நிற்பதால் ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும். எதிலும் பற்றற்ற மனநிலை ஏற்படும். எதிர்பாராத திடீர் பயணங்களால் உடலில் அசதிகள் உண்டாகும். காய்கறி, கீரை போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். மனை வாங்கும் யோகம் அமையும். முன்ஜாமீன் மற்றும் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்கள்

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் ஒத்துழைப்பை உருவாக்கிக் கொள்வீர்கள். புதிய வேலை சார்ந்த நிகழ்ச்சிகளில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மூத்த அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும்.

வியாபாரிகள்

கூட்டாளியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் கவனத்துடன் இருக்கவும். போட்டிகளில் இருந்த பிரச்சனைகள் குறையும். புதிய அணுகுமுறைகளை உருவாக்குவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். முதலீடு சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். கடைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் பயனற்ற கருத்துகள் கூறுவதை தவிர்த்துக் கொள்ளவும். கட்சி நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனை மற்றும் வாகன விஷயங்களில் கவனம் வேண்டும். பேராசையின்றி செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்

கலைத்துறையில் முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள்.

பெண்கள்

பெண்களுக்கு ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பொன், பொருட்களில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். எந்த ஒரு செயலிலும் திருப்தியின்மை உண்டாகும்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். விளையாட்டு மற்றும் போட்டிகள் சாதகமாக இருக்கும். சக மாணவர்களின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் மறையும். எதிர்பாராத சில உதவிகளால் அனுகூலம் ஏற்படும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். திறமைக்கு உண்டான மதிப்பு காலதாமதமாக கிடைக்கும்.

வழிபாடு

புதன்கிழமை தோறும் விநாயகருக்கு அகல் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்.

கருடாழ்வாரை வழிபட மனதளவில் இருந்த குழப்பம் குறையும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.
 
துலாம் ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
துலாம் ராசி..!


எதிலும் துல்லிய தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றை ஆண்டுகாலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் துலாம் ராசிக்கு சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் போக ஸ்தானம் என்னும் பனிரெண்டாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு ஆறாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சூடு சார்ந்த பிரச்சினைகள் நீங்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத சில லாபகரமான வாய்ப்புகள் அமையும்.

ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் உபரி வருமானத்தில் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை வெளிப்படும். உறவினர்களின் வழியில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மதிப்பை ஏற்படுத்தும். மனதளவில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். இணைய துறைகளில் திறமைகள் வெளிப்படும். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கடை உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். மருத்துவ செலவுகளை குறைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

பொருளாதாரம்

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்கள் மற்றும் புதிய முயற்சிகள் சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்

சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். செயல் திறமை வெளிப்படும். மறைமுக திறமைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் உண்டாகும்.

வியாபாரிகள்

வியாபாரத்தில் சில புதிய வியூகங்களையும், நுட்பங்களையும் அறிந்து கொள்வீர்கள். கூட்டு வியாபாரப் பணிகளில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை மேம்படும். பணிகளில் மெத்தன போக்கின்றி செயல்படவும். புதிய முயற்சிகளில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எண்ணிய இலக்கை அடைய இயலும். வியாபார இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திரவவழி தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்

அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மறைமுக திறமைகளையும், நுட்பங்களையும் வெளிப்படுத்துவீர்கள். எதிர்பார்த்திருந்த ஆதரவுகள் சற்று காலதாமதமாக கிடைக்கும்.

கலைஞர்கள்

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தோற்றப்பொலிவுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வாக்கு சாதுரியத்தின் மூலம் மேன்மை அடைவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குரல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பெண்கள்

பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவரிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட சில செயல்களில் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் சாதகமான சூழல் அமையும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உண்டாக்கும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் வெளியூர் பயணங்கள் மற்றும் உலக அனுபவங்களின் மூலம் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் பேச்சுக்களில் நிதானத்தையும், பயணம் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படுதலும் அவசியமாகும்.

வழிபாடு

வியாழக்கிழமை தோறும் பிரத்யங்கிரா தேவியை வழிபாடு செய்ய செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும்.

புதன்கிழமை தோறும் நரசிம்மரை வழிபாடு செய்து வர ஆரோக்கியம் நிமிர்த்தமான இன்னல்கள் குறையும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

விருச்சிகம் ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

விருச்சிக ராசி..!

சூழ்நிலைக்கு ஏற்ப தனது வியூகங்களை மாற்றி அமைத்து கொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் விருச்சிக ராசிக்கு புத்திர ஸ்தானம் என்னும் ஐந்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடியவரான கேது பகவான் ராசிக்கு லாப ஸ்தானம் என்னும் பதினொன்றாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் எதிலும் வேகத்தை விட விவேகத்தை கடைபிடிக்கவும். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதுமையான செயல்களில் ஆர்வம் மேம்படும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும்.

ாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். மறைமுக தகவல்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் தொடர்பு உண்டாகும். போட்டி, பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும்.

ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழிற்சங்க பணிகளில் பொறுப்புகள் மேம்படும். முதலீடு தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். ஆன்மிக பணிகளில் தெளிவு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வமின்மை ஏற்படும். அயல் நாட்டு பயணங்கள் கைகூடும். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். மூத்த சகோதரர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உறவுகளின் வழியில் எதிர்பார்த்த சில காரியங்கள் தாமதமாக முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் அமையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் மற்றும் புத்துணர்ச்சி உண்டாகும். இடது காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணுக்கால் வலிகள் குறையும்.

பொருளாதாரம்

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த வரவுகள் கிடைப்பதற்கான சூழல் மற்றும் அதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். விளையாட்டு செயல்களில் கவனத்துடன் இருக்கவும். இணைய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். சிறு சிறு முதலீடுகளின் மூலம் சேமிப்பை மேம்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். பணி மாற்றம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுதல் நன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். சக ஊழியர்களை பற்றிய புரிதல் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.

வியாபாரிகள்

வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வீடு, மனை தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். புதிய யுக்திகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவதால் செல்வாக்கும், நம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கட்சி சார்ந்த பணிகளில் வாரிசுகளை ஈடுபடுத்துவீர்கள்.

கலைஞர்கள்

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து முடிவெடுக்கவும். புதுமையான சிந்தனைகளின்

மூலம் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செய்கின்ற முயற்சிக்கான அங்கீகாரங்கள் சிலருக்கு சாதகமாக அமையும்.

பெண்கள்

பெண்களுக்கு மனதில் புதுமையான சிந்தனை மற்றும் ஆசைகள் மேம்படும். ஆடம்பரமான பேச்சுக்களை நம்பி முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். மறைமுகமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் சிந்தித்து முடிவு எடுக்கவும். நெருக்கமானவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்துச் செயல்படுதல் அவசியம் ஆகும்.

மாணவர்கள்

மாணவர்கள் உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் மெத்தன போக்கின்றி செயல்படவும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகளும், வாய்ப்புகளும் உண்டாகும். ஆராய்ச்சி கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் உண்டாகும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் புதுமையான செயல்களில் ஆர்வமும், மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் சிந்தனைகள் மற்றும் உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும்.

வழிபாடு

குலதெய்வ வழிபாடு செய்துவர எண்ணங்களில் தெளிவும், சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.

திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


தனுசு ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
தனுசு ராசி..!


பொறுமையும், நிதானமும் கொண்டு சிந்தித்துச் செயல்படக்கூடிய தனுசு ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் தனுசு ராசிக்கு சுக ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு நான்காம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் பிறக்கும். தந்தை பற்றிய கவலைகள் தோன்றி மறையும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். சுயநலமான சிந்தனைகள் மேம்படும். தனக்கான ஆதாயத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் மேம்படும். செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

ராசிக்கு பத்தாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். காப்பீடு துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். தூரத்து உறவினர்களை பற்றிய தகவல்கள் கிடைக்கும். செல்ல பிராணிகளிடத்தில் கவனம் வேண்டும். நிலையான சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பழக்கவழக்கங்களில் கவனம் வேண்டும். கொழுப்பு சார்ந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

பொருளாதாரம்

சிந்தனையின் போக்கில் ஆடம்பரம் வெளிப்படும். புதிய வீடுகள் வாங்குவது மற்றும் வீட்டினை சீர் செய்வது சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கையிருப்புகளுக்கு தகுந்த விதத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தனவரவுகள் மத்திமமாக இருக்கும். தொழில் சார்ந்த வரவுகளில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். கடன்களின் ஒரு பகுதியை நிறைவு செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகளும், இலக்குகளும் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தனிப்பட்ட விஷயங்களை பகிராமல் இருக்கவும். புதிய துறை சார்ந்த தேடல் மேம்படும்.

வியாபாரிகள்

வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கடையை விரிவுப்படுத்துவது சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியாட்களிடம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உணவு, மற்றும் அழகு சாதனப் பொருட்களால் லாபம் அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் கெமிக்கல் சார்ந்த பணிகளில் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகள்

அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பிரச்சார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். உடனிருப்பவர்களிடத்தில் அளவுடன் இருக்கவும். எதிலும் பேராசையின்றி செயல்படவும். திடீர் பயணங்களால் உடலில் சோர்வு உண்டாகும். ஆன்மிக கருத்துகளில் கவனத்துடன் இருக்கவும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைஞர்கள்

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த தயக்க உணர்வுகளும், கவலைகளும் குறையும். எதிராக செயல்பட்டவர்களை சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். விமர்சன கருத்துகள் படிப்படியாக மறையும். படைப்புக்கான மதிப்பு காலத்திற்கு தகுந்த விதத்தில் கிடைக்கும்.

பெண்கள்

பெண்கள், உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சாதகமான சூழல் அமையும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த தடைகள் குறையும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தூர தேச பயண சிந்தனைகள் அதிகரிக்கும்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு கல்வியில் ஒருவிதமான குழப்பம் தோன்றி மறையும். அன்றைய பாடங்களை அன்றே முடிப்பது நன்மையை ஏற்படுத்தும். உயர் கல்வியில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். தொழில்நுட்பத் துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் சாதகமாக அமையும். விருப்பமான துறைகளில் படிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மனதளவில் புதுவிதமான உத்வேகமும், பழமை சார்ந்த தேடல்களும் உண்டாகும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் வியாபாரப் பணிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். அரசு தொடர்பான துறைகளில் கவனத்துடன் இருக்கவும்.

வழிபாடு

திருச்செந்தூரில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்து வர செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

புதன்கிழமை தோறும் அருகில் இருக்கும் வராகப் பெருமானை வழிபாடு செய்து வர தொழில் சார்ந்த இன்னல்கள் குறையும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.
 
மகரம் ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
மகர ராசி..!

சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தன்னம்பிக்கை தளராத மகர ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மகர ராசிக்கு சகோதர ஸ்தானம் என்னும் மூன்றாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசிக்கு பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு மூன்றாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் மனதில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வேலையாட்களின் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். மனை விருத்திக்கான முயற்சிகள் கைகூடும். தைரியமான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் நடுநிலையுடன் செயல்பட்டு ஆதரவுகளை உருவாக்கிக் கொள்வீர்கள். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் மேம்படும். தந்தை வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். மனதில் புதிய தேடல் பிறக்கும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அன்றாட பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். உறவுகளின் வழியில் இருந்துவந்த மருத்துவ செலவுகள் குறையும். புதிய மற்றும் துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப வரவு உண்டாகும். முடிந்த அளவு கடன்களை தவிர்க்கவும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மற்றவர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆலோசனை கூறும் பொழுது அவர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். வர்த்தகம் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.

உத்தியோகஸ்தர்கள்

வித்தியாசமான முயற்சிகளின் மூலம் உத்தியோக பணிகளை துரிதமாக முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய தொழில்நுட்ப தொடர்புகளால் திறமைகள் வெளிப்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளவும். பணி மாற்ற சிந்தனைகள் மேம்படும்.

வியாபாரிகள்

வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். மறைமுகமான போட்டிகள் குறையும். புதிய உற்பத்திக்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். நிலுவையில் இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். கடை விரிவு பணிகளில் தடுமாற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பங்குதாரர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவதால் ஆதாயம் மேம்படும். தேவைக்கேற்ப பொருட்களை வாங்கிக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகளுக்கு எதிலும் திருப்தியற்ற சூழ்நிலை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். மனதளவில் இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கலைஞர்கள்

கலைத்துறையில் இருப்பவர்கள் பழக்கவழக்கங்களில் கவனத்துடன் இருக்கவும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். மூத்த கலைஞர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வீண் சந்தேகங்களால் குழப்பம் ஏற்படும்.

பெண்கள்

பெண்களுக்கு சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் இழுபறியான வரவுகள் கிடைக்கும். தினசரி பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். எடுத்துச் செல்லும் பொருட்களில் கவனம் வேண்டும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். எதிராக இருந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிலும் அவசரமின்றி செயல்படவும். தத்துவம் மற்றும் கணித துறைகளில் ஆர்வம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் நேர்மையுடன் செயல்படவும். பயனற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய துறை சார்ந்த அறிமுகம் உண்டாகும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் எதிர்பார்த்த சில ஆதரவுகள் தாமதமாக கிடைக்கும். தொலை தூரப் பயணங்களில் சிந்தித்துச் செயல்படவும்.

வழிபாடு

திருவானைக்கோவிலில் வீற்றிருக்கும் ஜம்புகேஸ்வரரை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர மனதில் இருந்த தேடல்களுக்கு வழி கிடைக்கும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

கும்பம் ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
கும்ப ராசி..!


நிதானமாக செயல்பட்டு காரியத்தை சாதிக்கும் திறமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கும்ப ராசிக்கு குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசிக்கு அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு இரண்டாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் பேச்சுத் திறமையால் சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் மேம்படும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். முகத்தில் பொலிவு மேம்படும். எதிலும் அடக்கத்துடன் இருந்தால் மேன்மை உண்டாகும். சிந்தனைகளில் நிலைத்தன்மையின்றி செயல்படுவீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும்.

ராசிக்கு எட்டாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் திடீர் வாய்ப்புகளின் மூலம் மாற்றம் பிறக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். புதிய இடத்திற்கு செல்வதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மற்றவர்களின் செயலால் மனதில் மாற்றம் ஏற்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அலைச்சல்கள் மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். வியாபாரம் சார்ந்த கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். பிள்ளைகளின் ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும்.

பொருளாதாரம்

பணவரவுகள் மத்திமமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். ஏற்ற, இறக்கம் இருந்தாலும் சில உதவிகள் சாதகமாகும். எதிர்பாராத சில செலவுகளால் மன நிம்மதி குறையும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பாகப்பிரிவினைகளில் இருந்த தாமதம் குறையும்.

உத்தியோகஸ்தர்கள்

பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடியான சூழல் உண்டாகும். எதிர்பாராத இடமாற்றங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் கருத்துகளை பகிரும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் கவனத்துடன் இருக்கவும்.

வியாபாரிகள்

வியாபாரப் பணிகளில் மத்திமமான முன்னேற்றமும், வாய்ப்புகளும் கிடைக்கும். பெரிய அளவிலான முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். கூட்டாளிகளிடம் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை சரியாக நிறைவேற்றினால் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்படும். கட்சி நிமிர்த்தமான செலவும், விரயமும் உண்டாகும். மேல்மட்ட அதிகாரிகளுடன் விதண்டாவாதங்களை தவிர்க்கவும். மறைமுக வருவாய்கள் கிடைக்கும்.

கலைஞர்கள்

கலைத்துறைகளில் போட்டிகள் அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவும். மெத்தன போக்கின்றி செயல்படுவது நல்லது. பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கிடைக்க வேண்டிய வரவுகள் கூட தாமதங்களுக்கு பின் கிடைக்கும்.

பெண்கள்

புத்திரர் வழியில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இறை தரிசனம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆடம்பரமான செலவுகளை குறைப்பதால் கடன்கள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் தாமதநிலை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதால் உடல் சோர்வடையும்.

மாணவர்கள்

கல்வி பணிகளில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற பொழுதுபோக்குகளால் மனதின் பாதைகளில் மாற்றம் உண்டாகும். விதண்டாவாதங்களை குறைத்துக் கொள்ளவும். பெற்றோர், ஆசிரியர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மையான பலன்கள் ஏற்படும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனம் வேண்டும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் ஏற்படும். செல்வத்தை பெருக்குவது சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும்.

வழிபாடு

சனிக்கிழமையில் சனிபகவான், விநாயகரை வழிபட கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

மீனம் ராசி


வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
மீன ராசி..!

சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் மாட்டாமல் மீண்டெழும் மீன ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மீன ராசிக்கு ராசி ஸ்தானம் என்னும் முதல் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசிக்கு களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசி ஸ்தானத்தில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் உடை அலங்காரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் தனித்து செயல்படுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வித்தியாசமான கனவுகள் தோன்றி மறையும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழப்பதற்கான சூழ்நிலைகள் அமையலாம். செல்வாக்கை மேம்படுத்துவதற்கான சில விரயங்கள் உண்டாகும். வெளியூர் பயண சிந்தனைகள் மேம்படும். எதிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும்.

ராசிக்கு ஏழாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் நண்பர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அதிகார மமதையில் செயல்படுவதை தவிர்க்கவும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கிடைக்கும். தவறிய சில பொருட்களை பற்றிய குறிப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களில் உண்மையானவர்களை தெரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய இலக்குகளும், அனுபவமும் உண்டாகும். போட்டி விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். உங்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம்

அடிவயிறு சார்ந்த இன்னல்கள் தோன்றி மறையும். பழக்கம் இல்லாத புதிய உணவுகளை குறைத்துக் கொள்ளவும். தேவைக்கு ஏற்ப நீர் அருந்துவது மனதளவிலும், உடல் அளவிலும் இருக்கும் பிரச்சனைகளை குறைக்கும்.

பொருளாதாரம்

வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். வருமான உயர்வு குறித்த சிந்தனைகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய மனை மற்றும் வீடு சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள்

சக ஊழியர்களிடத்தில் பொறுமையை கையாளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பணி மாற்ற முயற்சிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். பணியின் நிலவரங்களை அறிந்து வாக்குறுதிகளை அளிக்கவும். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு உண்டாகும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள்.

வியாபாரிகள்

வியாபாரத்தில் புதிய தொடர்புகள் மற்றும் அறிமுகங்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வர்த்தக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். கமிஷன் சார்ந்த துறைகளில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். ஜவுளி வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

அரசியல்வாதிகள்

சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மாறுபட்ட அனுபவம் உண்டாகும். அரசியல்வாதிகள் புரிதல் இல்லாமல் கருத்துகள் கூறுவதை தவிர்க்கவும். எதையும் செய்ய முடியும் என்ற இறுமாப்பு மேம்படும். உடனிருப்பவர்களிடம் தனிப்பட்ட எண்ணங்களை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். செய்யும் முயற்சிகளில் விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். கட்சி மேலிடம் மூலம் சில நெருக்கடியான சூழல் தோன்றி மறையும்.

கலைஞர்கள்

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வித்தியாசமான முயற்சிகள் மற்றும் அணுகுமுறைகளின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வீண் விமர்சன கருத்துகள் தோன்றி மறையும். எதிலும் நேர்மையுடன் விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவது நல்லது. புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடலும், ஈடுபாடும் ஏற்படும்.

பெண்கள்

சில விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். உறவுகளின் மத்தியில் பொறுமையுடன் செயல்படவும். வேலைகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். அறிவாற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பது தொடர்பான கனவுகள் சிலருக்கு கைகூடிவரும். உயர்கல்வியில் அனுகூலமான சூழல் உண்டாகும். நினைவாற்றலில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். விளையாட்டு சார்ந்த செயல்களில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடனும், துணிவுடனும் செயல்படுவீர்கள்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் புதுமையான சூழல் அமையும்.

வழிபாடு

புதன்கிழமை தோறும் பார்த்தசாரதி திருவேங்கட கிருஷ்ணரை வழிபட குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

வியாழக்கிழமை தோறும் ஆலங்குடி ஸ்ரீ குருபகவானை வழிபட சிந்தனைகளில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.
 
தனுசு ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
தனுசு ராசி..!


பொறுமையும், நிதானமும் கொண்டு சிந்தித்துச் செயல்படக்கூடிய தனுசு ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் தனுசு ராசிக்கு சுக ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு நான்காம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் பிறக்கும். தந்தை பற்றிய கவலைகள் தோன்றி மறையும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். சுயநலமான சிந்தனைகள் மேம்படும். தனக்கான ஆதாயத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் மேம்படும். செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

ராசிக்கு பத்தாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். காப்பீடு துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். தூரத்து உறவினர்களை பற்றிய தகவல்கள் கிடைக்கும். செல்ல பிராணிகளிடத்தில் கவனம் வேண்டும். நிலையான சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பழக்கவழக்கங்களில் கவனம் வேண்டும். கொழுப்பு சார்ந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

பொருளாதாரம்

சிந்தனையின் போக்கில் ஆடம்பரம் வெளிப்படும். புதிய வீடுகள் வாங்குவது மற்றும் வீட்டினை சீர் செய்வது சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கையிருப்புகளுக்கு தகுந்த விதத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தனவரவுகள் மத்திமமாக இருக்கும். தொழில் சார்ந்த வரவுகளில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். கடன்களின் ஒரு பகுதியை நிறைவு செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகளும், இலக்குகளும் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தனிப்பட்ட விஷயங்களை பகிராமல் இருக்கவும். புதிய துறை சார்ந்த தேடல் மேம்படும்.

வியாபாரிகள்

வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கடையை விரிவுப்படுத்துவது சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியாட்களிடம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உணவு, மற்றும் அழகு சாதனப் பொருட்களால் லாபம் அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் கெமிக்கல் சார்ந்த பணிகளில் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகள்

அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பிரச்சார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். உடனிருப்பவர்களிடத்தில் அளவுடன் இருக்கவும். எதிலும் பேராசையின்றி செயல்படவும். திடீர் பயணங்களால் உடலில் சோர்வு உண்டாகும். ஆன்மிக கருத்துகளில் கவனத்துடன் இருக்கவும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைஞர்கள்

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த தயக்க உணர்வுகளும், கவலைகளும் குறையும். எதிராக செயல்பட்டவர்களை சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். விமர்சன கருத்துகள் படிப்படியாக மறையும். படைப்புக்கான மதிப்பு காலத்திற்கு தகுந்த விதத்தில் கிடைக்கும்.

பெண்கள்

பெண்கள், உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சாதகமான சூழல் அமையும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த தடைகள் குறையும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தூர தேச பயண சிந்தனைகள் அதிகரிக்கும்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு கல்வியில் ஒருவிதமான குழப்பம் தோன்றி மறையும். அன்றைய பாடங்களை அன்றே முடிப்பது நன்மையை ஏற்படுத்தும். உயர் கல்வியில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். தொழில்நுட்பத் துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் சாதகமாக அமையும். விருப்பமான துறைகளில் படிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மனதளவில் புதுவிதமான உத்வேகமும், பழமை சார்ந்த தேடல்களும் உண்டாகும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் வியாபாரப் பணிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். அரசு தொடர்பான துறைகளில் கவனத்துடன் இருக்கவும்.

வழிபாடு

திருச்செந்தூரில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்து வர செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

புதன்கிழமை தோறும் அருகில் இருக்கும் வராகப் பெருமானை வழிபாடு செய்து வர தொழில் சார்ந்த இன்னல்கள் குறையும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

மகரம் ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
மகர ராசி..!

சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தன்னம்பிக்கை தளராத மகர ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மகர ராசிக்கு சகோதர ஸ்தானம் என்னும் மூன்றாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசிக்கு பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு மூன்றாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் மனதில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வேலையாட்களின் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். மனை விருத்திக்கான முயற்சிகள் கைகூடும். தைரியமான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் நடுநிலையுடன் செயல்பட்டு ஆதரவுகளை உருவாக்கிக் கொள்வீர்கள். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் மேம்படும். தந்தை வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். மனதில் புதிய தேடல் பிறக்கும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அன்றாட பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். உறவுகளின் வழியில் இருந்துவந்த மருத்துவ செலவுகள் குறையும். புதிய மற்றும் துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப வரவு உண்டாகும். முடிந்த அளவு கடன்களை தவிர்க்கவும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மற்றவர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆலோசனை கூறும் பொழுது அவர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். வர்த்தகம் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.

உத்தியோகஸ்தர்கள்

வித்தியாசமான முயற்சிகளின் மூலம் உத்தியோக பணிகளை துரிதமாக முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய தொழில்நுட்ப தொடர்புகளால் திறமைகள் வெளிப்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளவும். பணி மாற்ற சிந்தனைகள் மேம்படும்.

வியாபாரிகள்

வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். மறைமுகமான போட்டிகள் குறையும். புதிய உற்பத்திக்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். நிலுவையில் இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். கடை விரிவு பணிகளில் தடுமாற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பங்குதாரர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவதால் ஆதாயம் மேம்படும். தேவைக்கேற்ப பொருட்களை வாங்கிக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகளுக்கு எதிலும் திருப்தியற்ற சூழ்நிலை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். மனதளவில் இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கலைஞர்கள்

கலைத்துறையில் இருப்பவர்கள் பழக்கவழக்கங்களில் கவனத்துடன் இருக்கவும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். மூத்த கலைஞர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வீண் சந்தேகங்களால் குழப்பம் ஏற்படும்.

பெண்கள்

பெண்களுக்கு சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் இழுபறியான வரவுகள் கிடைக்கும். தினசரி பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். எடுத்துச் செல்லும் பொருட்களில் கவனம் வேண்டும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். எதிராக இருந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிலும் அவசரமின்றி செயல்படவும். தத்துவம் மற்றும் கணித துறைகளில் ஆர்வம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் நேர்மையுடன் செயல்படவும். பயனற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய துறை சார்ந்த அறிமுகம் உண்டாகும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் எதிர்பார்த்த சில ஆதரவுகள் தாமதமாக கிடைக்கும். தொலை தூரப் பயணங்களில் சிந்தித்துச் செயல்படவும்.

வழிபாடு

திருவானைக்கோவிலில் வீற்றிருக்கும் ஜம்புகேஸ்வரரை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர மனதில் இருந்த தேடல்களுக்கு வழி கிடைக்கும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

கும்பம் ராசி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
கும்ப ராசி..!


நிதானமாக செயல்பட்டு காரியத்தை சாதிக்கும் திறமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கும்ப ராசிக்கு குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசிக்கு அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசிக்கு இரண்டாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் பேச்சுத் திறமையால் சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் மேம்படும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். முகத்தில் பொலிவு மேம்படும். எதிலும் அடக்கத்துடன் இருந்தால் மேன்மை உண்டாகும். சிந்தனைகளில் நிலைத்தன்மையின்றி செயல்படுவீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும்.

ராசிக்கு எட்டாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் திடீர் வாய்ப்புகளின் மூலம் மாற்றம் பிறக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். புதிய இடத்திற்கு செல்வதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மற்றவர்களின் செயலால் மனதில் மாற்றம் ஏற்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அலைச்சல்கள் மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். வியாபாரம் சார்ந்த கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். பிள்ளைகளின் ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும்.

பொருளாதாரம்

பணவரவுகள் மத்திமமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். ஏற்ற, இறக்கம் இருந்தாலும் சில உதவிகள் சாதகமாகும். எதிர்பாராத சில செலவுகளால் மன நிம்மதி குறையும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பாகப்பிரிவினைகளில் இருந்த தாமதம் குறையும்.

உத்தியோகஸ்தர்கள்

பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடியான சூழல் உண்டாகும். எதிர்பாராத இடமாற்றங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் கருத்துகளை பகிரும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் கவனத்துடன் இருக்கவும்.

வியாபாரிகள்

வியாபாரப் பணிகளில் மத்திமமான முன்னேற்றமும், வாய்ப்புகளும் கிடைக்கும். பெரிய அளவிலான முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். கூட்டாளிகளிடம் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை சரியாக நிறைவேற்றினால் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்படும். கட்சி நிமிர்த்தமான செலவும், விரயமும் உண்டாகும். மேல்மட்ட அதிகாரிகளுடன் விதண்டாவாதங்களை தவிர்க்கவும். மறைமுக வருவாய்கள் கிடைக்கும்.

கலைஞர்கள்

கலைத்துறைகளில் போட்டிகள் அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவும். மெத்தன போக்கின்றி செயல்படுவது நல்லது. பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கிடைக்க வேண்டிய வரவுகள் கூட தாமதங்களுக்கு பின் கிடைக்கும்.

பெண்கள்

புத்திரர் வழியில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இறை தரிசனம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆடம்பரமான செலவுகளை குறைப்பதால் கடன்கள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் தாமதநிலை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதால் உடல் சோர்வடையும்.

மாணவர்கள்

கல்வி பணிகளில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற பொழுதுபோக்குகளால் மனதின் பாதைகளில் மாற்றம் உண்டாகும். விதண்டாவாதங்களை குறைத்துக் கொள்ளவும். பெற்றோர், ஆசிரியர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மையான பலன்கள் ஏற்படும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனம் வேண்டும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் ஏற்படும். செல்வத்தை பெருக்குவது சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும்.

வழிபாடு

சனிக்கிழமையில் சனிபகவான், விநாயகரை வழிபட கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

மீனம் ராசி


வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.
மீன ராசி..!

சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் மாட்டாமல் மீண்டெழும் மீன ராசி அன்பர்களே..!
இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மீன ராசிக்கு ராசி ஸ்தானம் என்னும் முதல் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசிக்கு களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

ராசி ஸ்தானத்தில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் உடை அலங்காரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் தனித்து செயல்படுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வித்தியாசமான கனவுகள் தோன்றி மறையும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழப்பதற்கான சூழ்நிலைகள் அமையலாம். செல்வாக்கை மேம்படுத்துவதற்கான சில விரயங்கள் உண்டாகும். வெளியூர் பயண சிந்தனைகள் மேம்படும். எதிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும்.

ராசிக்கு ஏழாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் நண்பர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அதிகார மமதையில் செயல்படுவதை தவிர்க்கவும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கிடைக்கும். தவறிய சில பொருட்களை பற்றிய குறிப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களில் உண்மையானவர்களை தெரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய இலக்குகளும், அனுபவமும் உண்டாகும். போட்டி விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். உங்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம்

அடிவயிறு சார்ந்த இன்னல்கள் தோன்றி மறையும். பழக்கம் இல்லாத புதிய உணவுகளை குறைத்துக் கொள்ளவும். தேவைக்கு ஏற்ப நீர் அருந்துவது மனதளவிலும், உடல் அளவிலும் இருக்கும் பிரச்சனைகளை குறைக்கும்.

பொருளாதாரம்

வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். வருமான உயர்வு குறித்த சிந்தனைகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய மனை மற்றும் வீடு சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள்

சக ஊழியர்களிடத்தில் பொறுமையை கையாளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பணி மாற்ற முயற்சிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். பணியின் நிலவரங்களை அறிந்து வாக்குறுதிகளை அளிக்கவும். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு உண்டாகும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள்.

வியாபாரிகள்

வியாபாரத்தில் புதிய தொடர்புகள் மற்றும் அறிமுகங்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வர்த்தக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். கமிஷன் சார்ந்த துறைகளில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். ஜவுளி வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

அரசியல்வாதிகள்

சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மாறுபட்ட அனுபவம் உண்டாகும். அரசியல்வாதிகள் புரிதல் இல்லாமல் கருத்துகள் கூறுவதை தவிர்க்கவும். எதையும் செய்ய முடியும் என்ற இறுமாப்பு மேம்படும். உடனிருப்பவர்களிடம் தனிப்பட்ட எண்ணங்களை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். செய்யும் முயற்சிகளில் விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். கட்சி மேலிடம் மூலம் சில நெருக்கடியான சூழல் தோன்றி மறையும்.

கலைஞர்கள்

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வித்தியாசமான முயற்சிகள் மற்றும் அணுகுமுறைகளின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வீண் விமர்சன கருத்துகள் தோன்றி மறையும். எதிலும் நேர்மையுடன் விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவது நல்லது. புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடலும், ஈடுபாடும் ஏற்படும்.

பெண்கள்

சில விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். உறவுகளின் மத்தியில் பொறுமையுடன் செயல்படவும். வேலைகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். அறிவாற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பது தொடர்பான கனவுகள் சிலருக்கு கைகூடிவரும். உயர்கல்வியில் அனுகூலமான சூழல் உண்டாகும். நினைவாற்றலில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். விளையாட்டு சார்ந்த செயல்களில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடனும், துணிவுடனும் செயல்படுவீர்கள்.

தீமைகள்

நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் புதுமையான சூழல் அமையும்.

வழிபாடு

புதன்கிழமை தோறும் பார்த்தசாரதி திருவேங்கட கிருஷ்ணரை வழிபட குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

வியாழக்கிழமை தோறும் ஆலங்குடி ஸ்ரீ குருபகவானை வழிபட சிந்தனைகளில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.
 
Haribol !!!
Haribol !!!
Haribol !!!
Thank you for this post.
Humbly request to suggest / help with an Astrologer (or) Prashnam practitioner to analyze horoscopes - Please 🙏
 

Latest ads

Back
Top