Puratasi 11

praveen

Life is a dream
Staff member
தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும்,


நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால்,


வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா.,


நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே.


பதவுரை


மூங்கில்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும் (ஆகையினாலே)
பூஞ்சோலைகள் நிறைந்திருக்கப் பெற்றதும் (ஆகையினாலே)
பரிமளம் விஞ்சியிருக்கிற
திருமலையில் எழுந்தருளியுள்ள பெருமானே!
தாய் தந்தை மனையாள் பந்துக்கள் பிள்ளைகள் என்கிற ஆபாஸமான சரீர ஸம்பந்திகளையே எப்போதும் வாய்வெருவிக்கொண்டு
அநர்த்தப்பட்டுப் போனவனும்
நாய் போலே மிக்க நீசனுமான அடியேன்
(அந்த ஆபாஸ பந்துக்களை விட்டு, ப்ராப்த பந்துவான) உன்னை ஸேவிக்க வேணுமென்கிற ஆசையினால்
உன்னிடம் வந்து சரணம் புகுந்தேன்;
சரணாகதனான என்னை
கிருபை செய்து
அடிமை கொண்டருளவேணும்.
 
Back
Top