• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Mahalayapaksha Hiranya srardham

மஹாளய பக்ஷத்தில் மஹாளயம் செய்வதற்கு ஆறு ப்ராஹ்மணர்கள் அழைக்க பட வேண்டும். இதில்

(1) ஒருவர் மஹா விஷ்ணு; கிழக்கு முகமாக அமர வேண்டும்



(2) ஒருவர் துரிருசி விஸ்வேதேவர். கிழக்கு முகமாக அமர வேண்டும்.



(3)ஒருவர் தந்தை வழி ஆண் மூத்தோர்கள் .வடக்கு முகமாக அமர வேண்டும்.



(4) ஒருவர் தந்தை வழி பெண் மூத்தோர்கள் வடக்கு முகமாக அமர வேண்டும்



.(5) ஒருவர் தாய் வழி ஆண் மற்றும் பெண் மூத்தோர்கள். வடக்கு முகமாக அமர வேண்டும்



(6)ஒருவர் காருணிக பித்ரு வர்க்கம். வடக்கு முகமாக அமர வேண்டும்.
 
தர்பணத்திற்காக தர்பை. கட்டை புல்; பவித்ரம், கூர்ச்சம், கறுப்பு எள்ளு; ,வெற்றிலை பாக்கு; கைப்புடி பச்சரிசி; துளசி, அறைத்த சந்தனம். தக்ஷிணை.



வீட்டிலேயே இந்த ஆறு பேருக்கும் சாப்பாடு ( சமாராதனை சமையல்) போட வேண்டும். இல்லையெனில் இந்த அறுவர்க்கும் தலைக்கு 250 கிராம் பச்சரிசி

பாசி பருப்பு 100 கிராம்; ஒரு வாழைக்காய் அல்லது வேறு ஒரு காய்; தக்ஷிணை;

மஹாளயம் செய்து வைக்கும் சாஸ்திரிகளுக்கும் தக்ஷிணை, அரிசி, காய் தயார் செய்து வைத்து கொள்ளவும்.



வெள்ளி , செம்பு அல்லது பித்தளையில் தாம்பாளம்,( மூன்று லிட்டர் தண்ணீர் பிடிக்க கூடியது: ) பஞ்ச பாத்ர உத்திரிணீ; தண்ணீருடன், கூஜா அல்லது சொம்பு ;மூன்று லிட்டர் தண்ணீருடன்,



சிறிய தாம்பாளம், ஆறு கின்னங்கள் துளசி, சந்தனம். தக்ஷிணை., எள், அக்ஷதை, வெற்றிலை பாக்கு வைத்துக்கொள்ள தேவை.



வீட்டில் சாப்பாடு போட்டால் ஆறு சாஸ்த்ரிகளுக்கும் எண்ணை தேய்த்து குளிக்க நலெண்ணய், சீயக்காய் பொடி, வெந்நீர். ,சாஸ்திரிகள் குடிக்க வெந்நீர் . வெற்றிலை பாக்கு. சுண்ணாம்பு . ஏலக்காய். ஜாதிக்காய்; ஜாதிபத்ரி, க்ராம்பு,



வால் மிளகு, பச்சை கற்பூரம், இந்த ஆறு பேருக்கும் தேவை. ஆறு பேருக்கும் உட்கார தடுக்கு அல்லது பலகை மணை தேவை. மஹாளயம் பண்ணி வைக்கும் சாஸ்த்ரிகளுக்கும் கர்த்தாவுக்கும் 2 தடுக்கு தேவை.



கர்த்தா காலையில் எழுந்து ஸ்நானம் செய்து சந்தி, காயத்ரி ஜபம் செய்து இந்த ஆறு பேருக்கும் 9x5 வேஷ்டிகள், நனைத்து உலர்த்தவும். கர்தாவுக்கும் பஞ்ச கச்ச வேஷ்டி நனைத்து உலர விடவும். மாத்யானிகம், காயத்ரி ஜபம் பத்து மணிக்கு செய்யவும்.



சாஸ்த்ரிகளும் இந்த ஆறு பேரும் வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு எண்ணை , சீயக்காய் கொடுத்துவிட்டு கர்த்தா மறுபடியும் ஸ்நானம் செய்து பஞ்ச கச்சம் கட்டி கொண்டு வரவும்.



இந்த அறுவரும் எண்ணய் ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன் கர்த்தா இரு முறை ஆசமனம் செய்ய வேண்டும், அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:



கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்தா, விஷ்ணு. மதுஸூதனா,த்ரிவிக்ரமா வாமனா ஶ்ரீதரா ஹ்ருஷிகேசா, பத்மனாபா. தாமோதரா.



சாஸ்த்ரிகளிடமிருந்து பவித்ரம் வாங்கி அணியவும்/ மூன்று கட்டை புல் வாங்கி அணியவும். பவித்ரம் அணிய மந்த்ரம். ருத்யாஸ்ம ஹவ்யைர்



நமசோபஸத்ய மித்ரம் தேவம் மித்ரதேயன்னோ அஸ்து அனூராதான் ஹவிஷா வர்தயந்த சதம் ஜீவேம சராதஸ் சவீராஹா. நீரால் கையை துடைத்து கொள்ளவும்.



தீர்த்தம் நிறைந்த பஞ்ச பாத்ர உத்திரிணியை வலது கையில் வைத்துக்கொண்டு ஆறு ப்ராமணர்களையும் மூன்று முறை வலம் வரவும்



தேவதாப்ய: ஸகாருணீக வர்கத்வய பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய: ஏவ ச

நம:ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:



ஸமஸ்த ஸம்பத் சமவாப்தி ஹேதவ: ஸமுத்திதா பத்குல தூமகேதவ: அபார ஸம்ஸார சமுத்ர ஸேதவ புனந்துமாம் ப்ராமண பாத பாகும்ஸுவ::



உபவீதி: மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே துரிருசி ஸம்ஞகேப்ய: விஸ்வேப்யோ தேவேப்யோ நம: மோதிர விரல் கட்டை விரலால் சிறிது அக்ஷதை எடுத்து துரிருசி விஸ்வேதேவர் தலை மீது போடவும்.



ப்ராசீணாவீதி: பித்ரு வர்கம்: மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே வசு ருத்ர ஆதித்யேப்ய: அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மஹேப்யோ நம:



மோதிர விரல், கட்டை விரல்களால் சிறிது கறுப்பு எள் எடுத்து பித்ரு வர்க ப்ரதிநிதியாய் இருப்பவரின் இடது தோள் மீது கை மறித்து போடவும். .



மாத்ரு வர்க்கம்( அம்மா இல்லை யெனில்) மம அஸ்மின் ஹிரண்ய ரூப சக்ருன் மஹாளய ச்ராத்தே வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீப்யோ நம: :



அம்மா இருந்தால் மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி. பிது: ப்ரபிதாமஹீப்யோ நம: மாத்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருப்பவரின் இடது தோள் மீது எள் எடுத்து கை மறித்து போடவும்.



மாதாமஹ வர்க்கம்: மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்ய: அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹேப்யோ நம: மாதா மஹ வர்க்க ப்ரதிநிதியாக இருப்பவரின் இடது தோள் மீது கை மறித்து எள் போடவும்.



காருணீக பித்ரு வர்க்கம்; மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே வஸு வஸு ஸ்வரூபேப்ய: வர்கத்வய அவசிஷ்டேப்ய: ஸர்வேப்ய: காருணீக பித்ருப்யோ நம:



காருணீக பித்ரு வர்க்க ப்ரதி நிதியாக வந்திருப்பவரின் இடது தோள் மீது எள் கை மறித்து போடவும்..



உபவீதி; மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே ச்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே நம: சிறிது அக்ஷதை எடுத்து மஹாவிஷ்ணு ப்ரதிநிதியாக வந்திருப்பவரின் தலை மீது விரல் நுனி வழியாக போடவும்.

தக்ஷிணை அனுக்ஞை:-

5 வெற்றிலைகளில் பாக்கு வைத்து தக்ஷிணை வைத்து அனைத்து ப்ராமணர்களுக்கும் அளித்து மந்திரம் சொல்லவும்.
அசேஷே ஹே பரிஷத் பவத்பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் செளவர்ணீம் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய .எல்லா ப்ராஹ்மணர்களயும் ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும்
.தேவதாப்ய பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவ ச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: யானி கானி ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானி ச தாநி தாநி வினஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

துரிருசி ஸங்ஞகேப்ய: விஸ்வேப்யோ தேவேப்யோ நம: என்று கூறி அக்ஷதை எடுத்து துரிருசி விஸ்வேதேவர் தலை மீது போடவும்..

ப்ராசீநாவீதி: பூணல் இடம்.: வஸு ருத்ர ஆதித்யேப்ய: அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மஹேப்யோ நம: என்று எள் எடுத்து கை மறித்து பித்ரு வர்க்க ப்ரதிநிதி இடது தோள் மீது போடவும்..

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாத் அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீப்யோ நம: அம்மா இல்லையெனில் எள் எடுத்து கை மறித்து போடவும்.

அம்மா இருந்தால் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பிதாமஹீ பிது: பிதாமஹி, பிது:ப்ரபிதாமஹீப்யோ நம:; எள் எடுத்து கை மறித்து இடது தோள் மீது போடவும்.


வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் ஸபத்னீக மாதாமஹ, மாது;பிதாமஹ மாது:ப்ரபிதா மஹேப்யோ நம: எள் எடுத்து கை இடது தோள் மீது மறித்து போடவும்.

காருணீக
வஸூ வஸூ ஸ்வரூபேப்யஹ: வர்கத்வ்ய அவசிஷ்டேப்யஹ: ஸர்வேப்யஹ: காருணீக பித்ருப்யோ நம: எள் எடுத்து கை இடது தோள் மீது மறித்து போடவும்.

அனைத்து ப்ராமனர்களையும் பார்த்து ஆசிகள் பெறவும். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லவும். ஸ்வாமின: அஸ்மின் திவஸே ( விச்வேதேவ விஷ்ணு ஸஹித ச காருணீக வர்கத்வ்ய பித்ரூன் உத்திஸ்ய ஸக்ருத் மஹாளய சிராத்தம் ஹிரண்ய ரூபேன கர்த்தும் யோக்யதா ஸித்தி : அஸ்த்விதி பவந்த: அனுக்ருஹ்ணந்து

இந்த மஹாளயத்தை ஹிரண்ய சிராத்தமாக செய்ய அனைத்து ப்ராஹ்மணர்களும் ஆசி புரிய வடக்கு முகமாக திரும்பி கீழ் கண்ட மந்த்ரம் சொல்லவும்.

சிராத்த காலே கயாம் த்யாத்வா த்யாத்வா தேவம் ஜனார்தனம் வஸ்வதீம்ஸ்ச பித்ரூன் த்யாத்வா தத: சிராத்தம் ப்ரவர்தயே

உபவீதி
கிழக்கு நோக்கி உட்காரவும். 3 தர்பைகளை காலுக்கு கீழ் போடவும். தர்பேஷ்வாஸீன: என்று சொல்லவும். கைகளை ஜலம் விட்டு அலம்பவும்.

அப உபஸ் பர்சிய என்று சொல்லவும். மோதிர விரல் பவித்ரத்துடன் மூன்று தர்ப்பை எடுத்து u மாதிரி வளைத்து வைத்துக்கொண்டு தர்பான் தாரய மானஹ என்று சொல்லவும்.

நெற்றியில் குட்டிக்கொண்டே சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே என்று சொல்லவும்.

ப்ராணாயாமம் : ஓம் பூ: ஒம்புவ: ஒகும் ஸுவ: ஒம் மஹ: ஒம் ஜன: ஒம் தப:
ஒம் ஸத்யம். தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோனஹ ப்ரசோதயாத் ஓம் ஆபோ ஜ்யோதிரஸ; அம்ருதம் ப்ருஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.

இடது கையின் மேல் வலது கையை வைத்து வலது தொடையின் மேல் வைக்கவும்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் அபவித்ர பவித்ரோ வா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்: ஸ்மரேத் புன்டரீகாக்*ஷம் ஸபாஹ்யா அப்யந்தர சுசிஹி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் , ஶ்ரீ ராம ஸ்மரனேனைவ வ்யபோஹதி; ந ஸம்சய: ஶ்ரீ ராமா, ராமா ராமா திதிர் விஷ்ணு: ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ

ச யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த கோவிந்தா அத்ய ஶ்ரீ பகவத: விஷ்ணோஹோ ஆக்ஞய்யா ப்ரவர்த்த மானஸ்ய அத்ய: ப்ராம்ன: த்வீதிய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரத: கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்ச்வே

தண்ட காரண்யே சாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே விஜய நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே க்ருஷ்ண பக்ஷே

-------------புண்ய திதெள -----------வாஸர யுக்த்தாயாம் ---------நக்ஷத்ர யுக்தாயாம்--------யோக---------கரண யுக்தாயாம் யேவங்குண சகல விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம்-------------புண்ய திதெள ப்ராசீனாவீதி (பூணல் இடம்)… -------------கோத்ராணாம் ----------------சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்--------------------

கோத்ராஹா ---------------நாம்னீனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம்
அம்மா இருந்தால் -----------கோத்ரானாம்-------------நாம்நீனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பிதாமஹி; ப்ரபிதாமஹீ, பிது;
ப்ரபிதாமஹினாம்

-----------------கோத்ரானாம்----------------சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ மாது:பிதாமஹ. மாது: ப்ரபிதாமஹானாம்

தத் கோத்ரானாம் தத் சர்மனாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வயாதீனாம் வசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாம் ச அக்ஷய்ய

\த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ புண்ய காலே ---------------புண்ய திதெள ஸக்ருன் மஹாளய சிராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே. ததங்கம் தில தர்பணம் ச கரிஷ்யே.

பவித்ரத்துடன் உள்ள தர்பையை வலது பக்கம் போடவும்.

பூணல் வலம். (உபவீதி) கைகளை அலம்பவும். அப உபஸ் ஸ்பர்ச்ய:

மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே துரி ருசி ஸம்கஞானாம் விஸ்வேஷாம் தேவானாம் இதமாசனம்.
துரிருசி விசுவேதேவர் ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருப்பவர் கால்களின் கீழ் இரண்டு கட்டை தர்பைகளை போடவும்.

ஹஸ்தே அப ப்ரதாயா. ஒரு உத்திரிணி ஜலம் எடுத்து ப்ராஹ்மணரின் வலது உள்ளங்கையில் விடவும்.

உங்கள் இரு கைகளிலும் இரண்டு, இரண்டு கட்டை தர்ப்பை எடுத்துக்
கொண்டு உங்கள் இடது கை தர்பையால் விசுவேதேவர் ப்ரதிநிதியாக உட்கார்ந்திருப்பவரின் வலது கை முட்டியை தொடவும்.

உங்கள் வலது கை தர்ப்பை கொண்டு விசுவேதேவரின் வலது முழங்கையை தொடவும். இதை சொல்லவும். துரிருசி ஸங்ஞகேப்ய: விச்வேப்ய: தேவேப்ய: பவதா க்ஷணகர்தவ்ய: ப்ராப்னோது பவான் .தர்ப்பையை கீழே போடவும்.

அக்ஷதை எடுத்து விசுவேதேவர் தலையில் போடவும். ஸகல ஆராதனை: ஸ்வர்சிதம்.

பித்ரு வர்கத்திற்கு ஆசனம் அளிக்க பூணல் இடம். ப்ராசீனாவீதி

இரண்டு தர்ப்பை கட்டைபில் எடுத்துக்கொண்டு மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே ----------------கோத்ரானாம்-------------ஸர்மனாம் ( (தந்தை, தாத்தா, தந்தையின் தாத்தா பெயரை சொல்லவும்). வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்

அஸ்மத் பித்ரு பிதாமஹ, ப்ரபிதாமஹானாம் இதமாசனம். பித்ரு வர்க்கத்தின் ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராமணரின் கால்களுக்கு கீழ் போடவும்.
ஹஸ்தே அப ப்ரதாயா ஒரு உத்திரிணி ஜலம் பித்ரு ப்ரதிநிதி உள்ளங்கையில் விடவும்.

உங்கள் இரு கைகளிலும் இரண்டு, இரண்டு கட்டை தர்ப்பை எடுத்துக்
கொண்டு உங்கள் இடது கை தர்பையால் பித்ரு வர்க்க ப்ரதிநிதியாக உட்கார்ந்திருப்பவரின் வலது கை முட்டியை தொடவும்.

உங்கள் வலது கை தர்ப்பை கொண்டு பித்ரு வர்க்க ப்ரதிநிதி வலது முழங்கையை தொடவும். இதை சொல்லவும்.------------கோத்ரேப்ய:--------------சர்மப்ய:

வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்ய: அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்ய: பவதா க்ஷண கர்தவ்ய: ப்ராப்னோது பவான் .தர்ப்பையை கீழே போடவும்.



கருப்பு எள் எடுத்து பித்ரு வர்க ப்ரதிநிதி இடது தோளில் கை மறித்து போடவும். ஸகல ஆராதனை: ஸ்வர்சிதம்.

மாத்ரு வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணர்க்கு முதலில் ஆசனம்.

இரண்டு தர்ப்பை கட்டைபுல் கையில் எடுத்துக்கொண்டு மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே

அம்மா இல்லை எனில்

----------கோத்ரானாம்---------நாம்நீனாம் ( அம்மா, அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி)பெயர் சொல்லவும் . வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் இதமாஸனம்.. பித்ரு ப்ரதிநிதி காலடியில் இரண்டு தர்ப்பை போடவும்.

ஹஸ்தே அப:ப்ரதாயா ஒரு உத்திரிணி தீர்த்தம் எடுத்து ப்ராஹ்மணர் உள்ளங்கையில் விடவும்.

அம்மா இருந்தால்

-------------கோத்ராணாம்--------நாம்நீனாம் ( அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி அப்பாவின், அப்பாவின் அப்பாவின் அம்மா பெயர் சொல்லவும்.

வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிது: பிதாமஹீ; பிது: ப்ரபிதா மஹீனாம் இதமாஸனம் இரண்டு தர்ப்பை கட்டைபுல் பித்ரு ப்ரதிநிதி காலடியில் போடவும்.

ஹஸ்தே அப ப்ரதாய ஒரு உத்திரிணி தீர்த்தம் உள்ளங்கையில் விடவும்.

இரு கைகளிலும் இரண்டு, இரண்டு தர்ப்பை எடுத்துக்கொள்ளவும். உங்கள் இடது கை தர்ப்பை மாத்ரு வர்க்க ப்ரதிநிதியின் வலது கை முட்டியை தொடவும். உங்கள் வலது கை தர்ப்பை கொண்டு மாத்ரு வர்க்க ப்ரதிநிதி

ப்ராஹ்மணரின் வலது முழங்கையை தொடவும்.--------------கோத்ராப்ய: -----------நாம்நீப்ய: மாத்ரு வர்க்க பெயரை மறுபடியும் சொல்லவும். வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹீ பிது:பிதாமஹி பிது: ப்ரபிதமஹிப்யஹ பவதா க்ஷண கர்தவ்ய: ப்ராப்னோத் பவான், ஸகலாராதனை: சுவர்சிதம். . மாத்ரு வர்க்க ப்ரதினிதியின் ப்ராஹ்மணரின் இடது தோளில் எள் கை மறித்து போடவும்.

அடுத்தது தாய் வழி அப்பாவும் அம்மாவும்.

மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே------------கோத்ரானாம் ( அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும். -------------சர்மணாம் ( அம்மாவின் அப்பா, அம்மா, , அம்மாவின் அப்பாவின் அப்பா, அம்மா, ;

அம்மாவின் அப்பாவின் தாத்தா, பாட்டி பெயர் சொல்லவும்.) வசு, ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ, மாது: பிதாமஹ; மாது: ப்ரபிதா மஹானாம் இதமாஸனம். இரண்டு தர்பைகளை மாதாமஹ வர்க்க ப்ரதிநிதி ப்ராஹ்மணர் காலின் கீழ் போடவும்.

ஹஸ்தே அபப்ரதாய ஒரு உத்தரிணி தீர்த்தம் எடுத்து ப்ராஹ்மணரின் உள்ளங்கையில் விடவும்.

உங்கள் இரு கைகளிலும் இரன்டிரண்டு தர்பையை எடுத்துக்கொள்ளவும். உங்கள் இடது கை தர்பையை மாதாமஹ வர்க்க ப்ரதிநிதி ப்ராஹ்மணரின் வலது கை முட்டியை தொடவும்.

உங்கள் வலது கை தர்பையை கொண்டு மாதாமஹ வர்க்க ப்ரதிநிதி ப்ராஹ்மணரின் வலது முழங்கையை தொடவும். -------------கோத்ரேப்ய: -----------சர்மப்ய: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்ய: அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ,

மாது;பிதாமஹ; மாது; ப்ரபிதா மஹேப்ய: பவதா க்ஷணகர்தவ்ய: ப்ராப்னோது பவான் தர்பையை கீழே விடவும். மாதாமஹ ப்ரதிநிதி ப்ராஹ்மணர் இடது தோளில் எள் கை மறித்து போடவும். ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்.எனச்சொல்லவும்.

காருணீக பித்ரு வர்கத்திற்கு ஆஸனம் அளிப்பது.

மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே தத்தத் கோத்ராணாம்,தத்தத் சர்மாணாம்,வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்கத்வ்ய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாம் இதமாஸனம் காருணீக பித்ரு ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் காலுக்கு அடியில் இரு தர்பைகள் போடவும். ஹஸ்தே அபப்ரதாய ஒரு உத்திரிணி தீர்த்தம் எடுத்து ப்ராஹ்மணர் உள்ளங்கையில் விடவும்.

தத்தத் கோத்ரேப்ய: தத்தத் சர்மேப்ய: வஸு வஸு ஸ்வரூபேப்ய: வர்கத்வயா வசிஷ்டேப்ய: ஸர்வேப்ய: காருணீக பித்ருப்ய: பவதா க்ஷண கர்த்தவ்ய: ;

உங்கள் இரு கைகளிலும் இரண்டிரண்டு தர்பைகள் எடுத்துக்கொண்டு இடது கை தர்பையை காருணீக பித்ரு ப்ரதிநிதி ப்ராஹ்மணர் வலது கை முட்டியை தொடவும்.

உங்கள் வலது கை தர்பையை கொண்டு காருணீக ப்ரதிநிதி ப்ராஹ்மணர் வலது கை முழங்கையை தொடவும். தர்பையை கீழே விடவும். ப்ராப்னோது பவான் ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்.. இடது தோளில் எள் கை மறித்து போ.டவும்.

மஹா விஷ்ணுக்கு ஆஸனம் அளிப்பது. உபவீதி------பூணல் வலம்.

மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ: இத மாஸனம். மஹா விஷ்ணுவின்

ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணர் காலடியில் இரு தர்பைகள் போடவும். ஹஸ்தே அப ப்ரதாய ஒரு உத்திரிணி தீர்த்தம் அவர் உள்ளங்கையில் விடவும்.

இரு கைகளிலும் இரு இரு தர்பைகள் எடுத்துக்கொண்டு உங்கள் இடது கைதர்பையால் மஹா விஷ்ணு ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் வலது கை முட்டியை தொடவும். உங்கள் வலது கை

தர்பையை கொண்டு அவரின் வலது முழங்கையை தொடவும். சிராத்த ஸம்ரக்ஷக மஹாவிஷ்ணவே பவதா க்ஷணகர்தவ்யஹ. தர்பையை கீழே

போடவும். ப்ராப்னோது பவான். ஸகல ஆராதனை : ஸ்வர்சிதம். அவர் தலையில் அக்ஷதை விரல் நுனியால் போடவும்.

துரிருசி விஸ்வே தேவருக்கு உபசாரம்.--------உபசார மந்திரங்கள். பூணல் வலம். உபவீதி



துரிருசி ஸங்ஞ காஹா விச்வேதேவா: இதம் வோ அர்ச்சனம். துரிருசி விச்வே தேவரின் ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணர் தலையில் விரல்களால் அக்ஷதை போடவும்.

துரிருசி ஸங்ஞ காஹா விச்வேதேவா: பரிவீத: ஆகாத் ஸ உஷ்ரேயான் பவதி
ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதிய: மனஸா தேவயந்த: விச்வே தேவா: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம். வஸ்த்ரம் கொடுக்கவும்.

சந்தனம் கொடுக்க மந்த்ரம்:-- கந்தத்வாராம் துரா தர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் ஈஸ்வரிகும் சர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரீயம்..
உபசாரார்த்தே புன: கந்தாஹா;

துளசி இலை கொடுக்க மந்த்ரம்-----ஆயனேதே பராயணே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாச்ச புண்டரீகாணீ ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே. மால்யார்த்தே இமானி துளசி தளானி.

அவர் மேல் அக்ஷதை போடவும்.------தூப தீபாதி சிஷ்டோப சாரார்த்தா: இமே அக்ஷதா:

பித்ரு வர்க்கம்---ப்ராசீனாவீதி—பூணல் இடம்.

பித்ரு வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் இடது தோள் மீது எள் தூவவும். வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பித்ரு பிதாமஹா ப்ரபிதமஹா: இதம் வோ அர்ச்சனம்.

வஸ்த்ரம் அளிக்க மந்த்ரம்: யுவா ஸுவாஸா: பரிவீத: ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.

சந்தனம் கொடுக்க மந்த்ரம்: கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் சர்வபூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ச்ரியம்.
உபசாரார் த்தே புனஹ் கந்தாஹா

துளசி இலை கொடுக்க: ஆயனேதே பராயணே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஸ்ச புண்டரீகாணீ ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே இமானி துளசி தளானி.

தூப தீபாதி சிஷ்டோப சாரார்த்தா: இமே திலா: ப்ராஹ்மணர் தோள் மீது கை மரித்து எள் போடவும்..

மாத்ரு வர்க்கம் . அம்மா உயிருடன் இல்லை எனில்

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதா மஹ்ய: இதம் வோ அர்ச்சனம். மாத்ரு வர்க்க ப்ரதி நிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் தோளின் மீது எள் போடவும்.

அம்மா உயிருடன் இருப்பின்

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பிதாமஹி, பிது:பிதாமஹி, பிது: ப்ரபிதாமஹ்ய: இதம் வோ அர்ச்சனம். என்று சொல்லி எள் போடவும்.

வஸ்த்ரம் கொடுக்க மந்த்ரம்:-- யுவா ஸுவாஸா: பரிவீத: ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்

சந்தனம் கொடுக்க மந்த்ரம்----கந்த்த் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷ்ணீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரியம்.
.உப சாரார்த்தே புனஹ் கந்தாஹா.

துளசி இலை கொடுக்க: ஆயனேதே பராயணே தூர்வா ரோஹந்து புஷ்பிணி : ஹ்ருதாஸ்ச புண்டரீகாணீ ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே

தூப தீபாதி சிஷ்டோப சாரார்த்தா: இமே திலா: ப்ராஹ்மணரின் தோள் மீது எள் போடவும்.

மாதாமஹ வர்க்கம்.

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ மாது: பிதாமஹ; மாது: ப்ரபிதா மஹா இதம் வோ அர்ச்சனம். மாதாமஹ பித்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருக்கும் ப்ராஹ்மணரின் தோள் மீது கறுப்பு எள் போடவும்.

வஸ்த்ரம் கொடுக்க மந்திரம்.: யுவா ஸுவாஸா: பரிவீத:ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.

சந்தனம் கொடுக்க மந்திரம். கந்தத் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ் வயே ஷ்ரியம்
உபசாரார்த்தே புனஹ் கந்தாஹா.

துளசி இலை கொடுக்க மந்திரம்.---ஆயனேதே பராயனே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஷ்ச புண்டரீகாணீ சமுத்ரஸ்ய க்ருஹா இமே

தூப தீபாதி சிஷ்டோப சாரார் தாஹா இமே திலா: இடது தோளில் எள் போடவும்.

காருணீக பித்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருக்கும் ப்ராஹ்மணரின் தோள் மீது கறுப்பு எள் போடவும். தத்தத் கோத்ரா: தத்தத் சர்மண: வஸு வஸு ஸ்வரூபா: பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டா: ஸர்வே காருணீக பிதர: இதம் வோ அர்ச்சனம்.

வஸ்த்ரம் கொடுக்க மந்திரம்.: யுவா ஸுவாஸா: பரிவீத:ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.

சந்தனம் கொடுக்க மந்திரம். கந்த்த் வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ் வயே ஷ்ரியம்
உப சாரார்த்தே புனஹ் கந்தாஹா

துளசி இலை கொடுக்க மந்திரம்.---ஆயனேதே பராயனே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஷ்ச புண்டரீகாணீ சமுத்ரஸ்ய க்ருஹா இமே

தூப தீபாதி சிஷ்டோப சாரார்த் தாஹா இமே திலா: இடது தோளில் எள் போடவும்

மஹா விஷ்ணு ------உபவீதி+= பூணல் வலம்.

சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ இதம் வோ அர்ச்சனம். ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணூ ப்ரதிநிஹியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் தலையில் அக்ஷதை போடவும்.

வஸ்த்ரம் கொடுக்க மந்திரம்.: யுவா ஸுவாஸா: பரிவீத:ஆகாத் ஸ உச்ரேயான் பயதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.

சந்தனம் கொடுக்க மந்திரம். கந்த்த் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமி ஹோபஹ் வயே ஷ்ரியம்
உப சாரார்த்தே புனஹ் கந்தாஹா

துளசி இலை கொடுக்க மந்திரம்.---ஆயனேதே பராயனே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஷ்ச புண்டரீகாணீ சமுத்ரஸ்ய க்ருஹா இமே இமானி துளசி தளானி

தூப தீபாதி சிஷ்டோப சாரார்த் தாஹா இமே அக்ஷதா: தலை மீது அக்ஷதை போடவும் விரல் நுனி வழியாக.

துரிருசி விஸ்வேதேவருக்கு தாம்பூலம், தக்ஷிணை.

கர்த்தாவின் மனைவி கர்த்தாவின் வலது பக்கம் நின்று கொண்டு தாம்பூலத்தில் ஒரு உத்திரிணி தண்ணீர் விடவும். வெற்றிலை பாக்கு வைத்து அவரவர் சக்திக்கு ஏற்றார் போல் தக்ஷிணை , துளசி இலை

ஒரு பித்தளை தாம்பாளத்தில் வைத்து கீழ் கண்ட மந்திரம் கூறி துரு ருசி விஸ்வே தேவர் ப்ரதி நிதியாக வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கும் ப்ராஹ்மணரிடம் கொடுக்கவும்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே துரிருசி ஸங்ஞகானாம் விச்வேஷாம் தேவானாம்

அக்ஷய்ய த்ருப்த்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் துரிருசி ஸங்ஞகேப்ய: விச்வேப்யோ தேவேப்ய: ஸம்ப்ர ததே ந மம.

ப்ராசீனாவீதி; பூணல் இடம். பித்ரு வர்க்கம் தாம்பூலம் தக்ஷிணை கொடுக்க.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ் சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------சர்மணாம் ( கர்த்தாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்.)

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹானாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூ பேப்ய: அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்ய: ஸம்ப்ரததே ந மம.

பித்ரு வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்து இருக்கும் ப்ராஹ்மணரிடம் கொடுக்கவும் .வெற்றிலை பாக்கு மீது ஒரு உத்திரிணி தீர்த்தம் கர்த்தாவோ அல்லது கர்த்தாவின் மனைவியோ விட்டு

ப்ராஹ்மணரிடம் கொடுக்கும் போது இந்த ஒரு உத்திரிணி தண்ணீரை வெற்றிலையின் காம்பு வழியாக தரையில் விட்டு ப்ராஹ்மணரிடம் கொடுக்கவும்.

மாத்ரு வர்க்கம் தாம்பூலம் , தக்ஷிணை கொடுக்க. அம்மா இல்லை எனில்

அம்மா வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்து இருக்கும் ப்ராஹ்மணரிடம் வெற்றிலை, பாக்கு மீது ஒரு உத்திரிணி ஜலம் விட்டு கீழ் காணும் மந்திரம் சொல்லி கொடுக்கும் போது

ஜலத்தை வெற்றிலை காம்பு பக்கமாக பூமியில் விட்டு பச்சரிசி, பாசி பருப்பு, காய், தக்ஷிணயுடன் பித்தளை தாம்பாளத்தில் வைத்து கொடுக்கவும்… ஏழு ப்ராஹ்மணருக்கும் இம்மாதிரியே தர வேண்டும்.

.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------நாம்னீணாம்

( கர்த்தாவின் அம்மா, அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி பெயர் சொல்லவும்.)

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹீ ப்ரபிதா மஹீனாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதி நிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீப்ய: ஸம்ப்ர ததே ந மம
.
அம்மா இருந்தால்

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப

ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------நாம்நீனாம் ( கர்த்தாவின் அப்பாவின் அம்மா,அப்பாவின் பாட்டி, அப்பாவின் கொள்ளு பாட்டி பெயர் சொல்லவும்.)

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி; பிது: ப்ரபிதா மஹீனாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா மஹீப்ய: ஸம்ப்ர ததே ந மம. என்று சொல்லி கொடுக்கவும்.

மாதா மஹ வர்க்கம் தாம்பூலம் தக்ஷிணை.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்

-(கர்த்தாவின் அம்மாவின் அப்பாவின் கோத்திரம் சொல்லவும்)--------------சர்மணாம் ( கர்த்தாவின் தாய் வழி தாத்தா, பாட்டி, தாத்தாவின் அப்பா, அம்மா, தாத்தாவின் தாத்தா பாட்டி பெயர் சொல்லவும்.)

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபாணாம் அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ.
மாது: பிதாமஹ மாது: ப்ரபிதா மஹானாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபேப்ய: அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹேப்ய: ஸம்ப்ரததே ந மம.

காருணீக பித்ருகளுக்கு:

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே தத்தத்--கோத்ராணாம்- தத்தத் சர்மணாம் வஸு வஸு

ஸ்வ ரூபாணாம் பித்ருவ்ய மாதுலா தீனாம் வர்கத்வ்ய அவ சிஷ்டானாம் ஸர்வே ஷாம் காருணீக பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதி நிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு வஸு ஸ்வரூபேப்ய: ஸர்வேப்ய: காருணிக பித்ருப்ய: ஸம்ப்ரததே ந மம.

மஹா விஷ்ணு விற்கு: உபவீதி பூணல் வலம்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே ஸ்ராத்த ஸம் ரக்ஷக ஶ்ரீ மஹ விஷ்ணோ: த்ருப்தியர்த்தம்

யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

ஸ தக்ஷி ணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே துப்யமஹம் ஸம்ப்ர ததே ந மம.

ஆசீர்வாத அக்ஷதை இடது தோளில் அங்கவஸ்த்ரம் இருக்க வேண்டும். ஆசீர்வாத அக்ஷதை அங்கவஸ்திரத்தில் விழுமாறு பிடித்துக்கொள்ளவும்.

நமஸ் ஸதஸே நமஸ் ஸதஸஸ் பதயே நமஸ் ஸகீனாம் ப்ரோ காணாம்
சக்ஷுஷே நமோ திவே நம: ப்ருத்வ்யை ஹரி: ஓம்.

அனேன மயா ஹிரண்ய ரூபேண க்ருதேன (ஸக்ருன்) மஹாளய சிராத்தேன அஸ்மத் ஸ காருணீக வர்கத்வ்ய பிதர: துரிருசி சம்ருக விஷ்வே தேவ

ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணூ ஸஹிதா: ஸர்வே நித்ய த்ருப் தாஹா பூயாஸுஹு இதி பவந்த: மஹாந்த: அனுக்ரஹ ணந்து.

அனைத்து ப்ராஹ்மணர் களுக்கும் நமஸ்காரம் செய்யவும்.

மஹாளய சிராத்தாங்க தர்பணம் செய்ய வேண்டும்.
 
If mother is alive how many sastrigals are required 6 or 5 for representing Visvedeva,Mahavishnu,Pithru vargam,Mathru vargam and karuneka pithrukkal for Mahalaya hiranya srardham? Can anyone clarify?
6 பிராஹ்மணர்கள் எப்போதும் மாறாது. அம்மா இருந்தால் பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதாமஹி என்று சொல்ல வேண்டும். அம்மா இல்லாதவர்கள் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி என்று சொல்ல வேண்டும்.
 
Back
Top
Thank you for visiting TamilBrahmins.com

You seem to have an Ad Blocker on.

We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.

Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page

You can also donate financially if you can. Please Click Here on how you can do that.

I've Disabled AdBlock    No Thanks