• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Mahaalaya Paksham in other countries too

Status
Not open for further replies.
நமது இந்தியாவில் பாரம்பரிய மிக்க கலாசாரம் ஒன்று உண்டு என்றெல்லாம் ஒரு பக்கம் பேசிக்கொண்டு இருந்தாலும் பெரியோரை மதிப்பது, பெற்றோரை காப்பது, பெண்குழந்தைகள் பெண்ணீயத்தைப் போற்றி நடப்பது என்பதில் எல்லாம் நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டு வருகிறோம். சில பொதுவான விஷயங்கள் கூட இந்த மதத்துக்கு, இந்த ஜாதிக்கு என்றெல்லாம் பேசி உள்ள் கலாசாரத்தையும் வீணடித்துக் கொண்டு வருகிறோம். உதாரணமாக இந்த மஹாளய பக்ஷம். இது என்னமோ பிராமணர்க்கு மட்டும் என்கிற மாதிரி பேசி கடைப்பிடிக்காம்ல் ஒதுக்கி, மன்னிக்கவும், ஒதுங்கி வருகிறார்கள். முன்னோர்களை இருக்கும் பொழுதும் மதிப்பதில்லை, இறந்த பின்பும் மதிப்பதில்லை என்றால் இவர்கள் இந்த பிறவி எடுத்ததே எதுக்கு? என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இந்த மனிதப்பிறவி என்பதே எண்பத்து நாலு லட்சம் பிறவிச்சுழலில் மேலான பிறப்பு, இதைக் கொடுத்ததே நம்து பெற்றோர், அவர்களை இருக்கும் போது ரக்ஷிப்பதும் இறந்த பின்பு தேவையானவற்றை செய்வதும் இவர்கள் கடமை அல்லவா? கம்போடியா நாட்டில் மஹாலய பக்ஷம் அனுசரிக்கப்படுகிறதாம். அதுவும் நம் நாட்டைப் போலவே 15 நாளைக்கு. இணத்துள்ள படத்தைப் பார்த்தால் புரிய்ம். மற்றதுக்கெல்லாம் மற்ற நாட்டை உதாரணம எடுத்துக் கொள்ளும் நாம் ஏன் இந்த மாதிரி விஷயங்களை உதாசீனப்படுத்துகிறோம்?
 

Attachments

  • mahalayapaksham in Cambodia.webp
    mahalayapaksham in Cambodia.webp
    54.3 KB · Views: 83
Status
Not open for further replies.
Back
Top