ஐயங்கார் வடகலை ஸம்ப்ரதாயத்தில் உள்ள ஒரு ஆண் குழந்தை பல ஆண்டுகளுக்கு முன் அவனுடைய இரண்டு வயதில் பரமபதித்து விட்டான். அந்த குழந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஶ்ரார்த்தம் முதலியன அந்த குழந்தையின் தந்தை செய்யவில்லை. சிறு ப்ராயத்தில் போனதால் அது போன்ற கர்மாக்கள் உண்டா?. உண்டு என்றால் அவற்றை இப்பொழுதிலிருந்து, அந்தக் குழந்தையின் தந்தை அல்லது குழந்தையின் தம்பியோ அந்த கர்மாக்களை செய்யலாமா? தயவுசெய்து சாஸ்த்ரம் தெரிந்தவர்கள் பதில் சொல்ல வேண்டுகிறேன்