• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Kamika Ekadesi Vratham

மகா விஷ்ணுவைப் போற்றும் காமிகா ஏகாதசி விரதம்!

நிச்சயம் துளசி கொண்டு பூஜிக்க வேண்டிய காமிகா ஏகாதசி விரதம்!

காமிகா ஏகாதசி விரதம் அளிக்கும் புண்ணியத் தை பிரம்ம தேவர் பட்டியலிடுகி றார். அதில் சூரிய கிரகணத்தன்று குருக்ஷேத்திர பூமியில் ஒருவர் புண்ணிய தீர்த்தமாடினால் கிடைக்கும் பலன்கள் அல்லது அந்த வேளையில் பூமி தானம் செய்தால் ஏற்படும் புண்ணிய பலன்கள் உண்டாகும் என்கிறார்.

விரதங்களில் உயர்ந்தது ஏகாதசி விரதம். இதன் மகிமையை புராணங்கள் சிறப்பித்துச் சொல்கின்றன.ஒவ்வொரு ஏகாதசியும் ஒரு சிறப்பான பலனை நமக்கு தரவல்லது.

ஒவ்வொரு மருந்தும் ஒரு குறிப்பிட்ட நோயைத் தீர்ப்பதுபோல ஒவ்வொரு விரதமும் ஒரு சிறப்பான பலனைத் தரும்.

அப்படி, தாங்கள் அறியாமல் செய்த பாவங்களால் துயருறுபவர்கள் தங்கள் பாவங்கள் தீர்ந்து நற்பலன்களை அடைய உதவும் ஏகாதசி காமிகா ஏகாதசி. இந்த அற்புதமான விரத நாள் (2.9.2021) வருகிறது.

ஏகாதசி என்றாலே அது பெருமாளைப் போற்றும் நாள். அதிலும் காமிகா ஏகாதசி, பெருமாளின் நாமங்களை ஜபம் செய்து போற்ற வேண்டிய தினம்.

இந்தத் தினத்தின் மகிமைகள் குறித்து ஏகாதசி மகாத்மியம் சொல்கிறது. யார் காமிகா ஏகாதசியின் மகத்துவங்களைக் கேட்கிறார்களோ அவர்கள் யாகங்களில் உயர்ந்த யாகமான அஸ்வமேத யாகத்தைச் செய்த பலனைப் பெறுவார்கள் என்று சொல்கிறது.

இத்தனை சிறப்பித்துச் சொல்லப்படும் காமிகா ஏகாதசியின் சிறப்புகளை பிரம்மன் தன் புதல்வரான நாரதருக்குச் சொல்வதாக அமைகிறது.

காமிகா ஏகாதசி விரதம் அளிக்கும் புண்ணியத்தை பிரம்ம தேவர் பட்டியலிடுகி றார். அதில் சூரிய கிரகணத்தன்று குருக்ஷேத்திர பூமியில் ஒருவர் புண்ணிய தீர்த்தமாடினால் கிடைக்கும் பலன்கள் அல்லது அந்த வேளையில் பூமி தானம் செய்தால் ஏற்படும் புண்ணிய பலன்கள் உண்டாகும் என்கிறார்.

குருக்ஷேத்திரம் என்பது மகாபாரத யுத்தம் நிகழ்ந்த இடம். ஆனாலும் தர்மத்தை பகவான் கிருஷ்ணன் நிலைநாட்டிய புண்ணிய பூமி. அந்தப் புண்ணிய பூமியில் சூரிய கிரகண வேளையில் செய்யும் கிரியைகள் பல மடங்கு புண்ணியம் அருள்பவை என்கின்றன புராணங்கள். மேலும் பூமி தானம் என்பது மிகவும் உயர்ந்த தானமாகப் போற்றப்படுகிறது.

நம் வாழ்வும் ஒரு யுத்தக்களம் போன்றதே. அந்த யுத்தக்களத்தில் நாம் கடைப்பிடிக்கும் விரதங்கள் நமக்கு புண்ணிய பலன்களைத் தருவதோடு பகவானின் அனுகிரகத்தையும் பெற்றுத்தரும்.

காமிகா ஏகாதசியின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் பிரம்ம தேவர் துளசியின் பெருமையையும் கூறியுள்ளார். இந்த காமிகா ஏகாதசியில் துளசி கொண்டு பகவானைத் துதிக்கக் கிடைக்கும் பலன்களையும் விவரிக்கிறார்.

காமிகா ஏகாதசி அன்று ஸ்ரீஹரியை துளசி கொண்டு அர்ச்சித்து வழிபடுபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவர். மதிக்க முடியாத தங்கத்தையும் வைர வைடூரியங்களையும் கொண்டு அர்ச்சிப்பதை விட ஒரே ஒரு துளசி இலை சமர்ப்பித்து வழிபடுவது மேன்மையுடையது.

துளசிச் செடியில் துளசி மாதா வாசம் செய்வதாக ஐதிகம். எனவே, காமிகா ஏகாதசி அன்று துளசிச் செடியை தரிசனம் செய்வதே புண்ணியம் தரும்.

துளசிச் செடிக்கு நீரூற்றி அருகே ஓர் விளக்கேற்றிக் கோலமிட்டு நமஸ்காரம் செய்து வழிபட்டால் நோய் நொடிகள் நம்மை அணுகாது. மேலும், இந்த நாளில் புதிதாகத் துளசிச் செடிநடுவது மிகவும் மங்களமானது. அவ்வாறு செய்பவர்களுக்கு யம வாதை இருக்காது.

தினமும் துளசி மாதாவின் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுபவர்களின் புண்ணியக் கணக்கை சித்திர குப்தனாலும் அளவிட முடியாது என்று துளசியின் பெருமையையும் அதைக் கொண்டு செய்யும் வழிபாட்டின் மகிமைகளையும் பிரம்ம தேவர் விவரிக்கிறார்.

வேறெந்த ஏகாதசியின் மகிமைகளைக் குறிப்பிடும்போதும் இந்த அளவுக்கு துளசியின் பெருமைகளை பிரம்ம தேவர் எடுத்துரைக்கவில்லை. எனவே, தவறாமல் காமிகா ஏகாதசி அன்று துளசி கொண்டு பூஜிக்க வேண்டும்

ஏகாதசி விரதமுறை

ஏகாதசி விரதம் என்பதில் உபவாசம் ஒரு நாள் என்றாலும் விரதமுறை மூன்று நாள்கள் சேர்ந்தது. தசமி திதி அன்றே விரதம் தொடங்கிவிடுகிறது. தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்க்க வேண்டும்.

ஏகாதசி திதி அன்று செய்ய வேண்டிய பூஜைகளுக்காக வும் தீர்த்தத்தில் சேர்ப்பதற் காகவும் வேண்டிய துளசி இலையை தசமி அன்றே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று துளசி இலை யைப் பறிப்பது பாவம் என்கின்றது சாஸ்திரம்.

மறுநாள் ஏகாதசி அன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர் கள் முழு அரிசி சோற்றைத் தவிர்த்து ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம். பழம் அல்லது பால் ஆகியவற்றை பகவானுக்குப் படைத்து உண்ணலாம்.

ஏகாதசி நாள் முழுவதும் இறைவழிபாட்டி லும் நாம ஜபத்திலுமே செலவிட வேண்டும். துவாதசி அன்று காலை பாரனை முடித்து விரதத்தை முடிக்கலாம்.

1630566748547.png
 

Latest ads

Back
Top