How month&thithi changed for Navarathri?

This happened apparently once in 19 years so far (earlier it happened in 1982 and 2001 too) when two amavasya comes in purattasi that is this year 1st and 30th purattasi and hence golu starts after the second amavasya and hence falls in aipasi.
 
சூரியனுக்கு ஒரு தடவை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. சந்திரனுக்கு ஒரு தடவை சுற்றி வர 353 நாட்கள் ஆகிறது. சந்திரன் நக்ஷத்திரங்களில் சுற்றி வருகிறது. உங்கள் ஜாதக ராசிகட்டத்தில் 12 ராசிகள் இருக்கும். சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்வதயே ஒரு மாதம் 30 நாட்கள் எங்கிறோம். மாத பிறப்பு எங்கிறோம்.

சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை ஸெளரமான மாதம் எனப்பெயர். அமாவாசைக்கு மறு நாள் ப்ரதமை முதல் அடுத்த அமாவாசை முடிய உள்ள நாட்களுக்கு சாந்திரமான மாதம் எனப்பெயர்.

ஸெளரமான மாதம் சித்திரை , வைகாசி ----- பங்குனி முடிய. இதையே மேஷம், ரிஷபம் என 12 ராசி கட்ட பெயர் களாகவும் சொல்லலாம். சாந்திரமான மாதம் பெயர் சைத்ரம், வைசாகம், ஜ்யேஷ்டம், ஆஷாடம், சிராவணம், பாத்ரபதம், ஆசுவினம், கார்த்திகம், மார்க்க சிரம், பெளஷம், மாகம், பால்குணம் என பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இதை எல்லா பஞ்சாங்கங்களிலும் ஒவ்வொரு மாதமும் போடுகிறார்கள். அநேகமாக பண்டிகைகள், விரதங்கள் சாந்திரமான மாத அடிபடையில் தான் நிற்ணயம் செய்து போட வேண்டியுள்ளது.

ஒரு வருடத்தில் 12 நாட்கள் வீதம் சந்திரன் இரண்டரை வருடத்தில் 30 நாட்கள் முன்பாகவே சந்திரன் சுழர்ச்சியில் முன்னதாக நிற்கிறது. இதையே அதிக மாதம் எனப்பெயரிட்டு , இந்த அதிக மாதத்திற்கு 60 நாட்கள் போட்டு 30 நாட்கள் அதிக மாத நாட்கள் மற்றோரு 30 நாட்கள் நிஜ மாதம் என போடுகிறார்கள். இந்த வருடம் பஞ்சாங்கத்தில் சாந்திர மான பெயரான அதிக ஆஸ்வின சுத்தம், அதிக ஆஸ்வின பகுளம், நிஜ ஆஸ்வின சுத்தம், நிஜ ஆஸ்வின பகுளம் என போட்டிருப்பார்கள்.

பகுளம் என்பது தேய் பிறை, சுத்தம் என்பது வளர்பிறை.
 
26/09/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் முறையை மேலும் தொடர்கிறார்.*
*இதில் முதலில் தர்ஸ ஸ்ராத்தமான அம்மாவாசை தான் பித்ரு காரியங்கள் ஆரம்பிக்கின்றது. எல்லா சாஸ்திர கிரந்தங்களிலும் முதலில் இதை தான் ஆரம்பிக்கின்றன.*

*ஏனென்றால் அமாவாசை அன்று நாம் செய்யக்கூடிய இந்த தர்ப்பணம் தான் அடிப்படையானது. பிரகிருதி. வருடத்தில் 12 வரும். அதிக மாசம் வந்தால் பதின்மூன்றாவது ஆக ஒன்று கூட வரும்.*

அதையும் சேர்த்து செய்ய வேண்டிய தான் தர்ப்பணம் செய்பவர்களுக்கு இதில் எந்த சந்தேகமும் வராது. சிராத்தம் என்று வரும் பொழுது, வருடாந்திர ஸ்ராத்தம் அமாவாசை அன்று வரும் பொழுது, ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்தால், எதில் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று பார்க்கும் போது, ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்தால் #சௌரமானம்_அனுஷ்டிப்பவர்கள், #அதாவது_ஸ்மார்த்தர்கள்,

#இரண்டாவதாக_வரக்கூடிய_திதியில் #அவர்கள்_சிராத்தத்தை #செய்யவேண்டும்.
இதில் ஒரே கட்டுப்பாடு தான் மாறுதல் கிடையாது. #பஞ்சாங்கத்திலேயே_ஒரே #மாதத்தில்_இரண்டு_திதிகள்_வந்தால், #முதலில்_வரக்கூடியதான_திதிக்கு #சூன்ய_திதி_என்று_போட்டிருப்பார்கள். அதாவது சூன்ய திதி என்று போட்டிருந்தால் அதே திதி திரும்பவும் வருகிறது என்று தெரிந்துகொள்ளலாம் அந்த மாதத்தில்.
அதுபோல்தான் அமாவாசைக்கும் உள்ள கட்டுப்பாடு

. #சாந்திரமான_படி #அனுஷ்டிப்பவர்கள்_அவர்களுக்கு_இந்த #சூன்ய_திதி_என்பதே_கிடையாது, #ஏனென்றால்_சந்திரனை_அனுசரித்து #பார்க்கும்_பொழுது_மாதத்திற்கு_ஒரு #திதி_என்று_வரிசையாக_வந்து #கொண்டே
#இருக்கும். ஒரு மாதத்தில் இரண்டு திதிகள் என்று சாந்திரமான படி வரவே வராது.
அதிக மாசம் என்று எப்போது வருகிறதோ அப்போதுதான் அதிகப்படியாக ஒரு திதி வரும். அப்படி ஒரு மாதத்தில் இரண்டு திதிகள் வந்தால், சாந்திரமான படி அனுஷ்டிப்பவர்கள் இரண்டு முறை சிராத்தம் செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு இப்போது நடந்து கொண்டிருக்கின்ற இந்த புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன.
அதனால் இந்த மாதத்தை மலமாதம் அல்லது அதிக மாசம் என்று சொல்கிறோம். இந்த அம்மாவாசை சிராத்த திதி ஆக இருந்தால், சாந்திர மானத்தைக் அனுஷ்டிப்பவர்கள், இரண்டு தடவை சிராத்தத்தைச் செய்ய வேண்டும். முதலில் வரக்கூடியதுதான அமாவாசையிலும் செய்ய வேண்டும் இரண்டாவதாக வரக்கூடிய அமாவாசையிலும் செய்ய வேண்டும்.
இது விஷயமாக தர்மசாஸ்திரம் சொல்கின்ற பொழுது, ஆகையினாலே ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்தால், #இரண்டு_திதிகளிலும் #சிராத்தத்தை_செய்யவேண்டும் #சாந்திரமான_படி_அனுஷ்டிப்பவர்கள், #அதிக_மாசம்_வந்தால்.
#சௌரமான_படி_முதலில்_சூன்ய_திதி #என்று_எடுத்துக்கொள்ள_வேண்டும். #இரண்டாவதாக_வரக்கூடிய_திதியில் #சிராத்தம்_செய்ய_வேண்டும். ஆனால் இந்த அமாவாசை அன்று இரண்டுமே செய்ய வேண்டியது தான். அதாவது தர்ப்பணத்தை இரண்டு அமாவாசையிலும் செய்துவிடவேண்டும் இப்படித்தான் தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது.
அதில் மாறுதலே வராது. அபரான்ன காலத்தில் அமாவாசை திதி இருக்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது முதல் நாளும் அமாவாசை திதி என்று போட்டிருக்கிறது மறுநாளும் போட்டிருக்கிறது என்கின்ற பட்சத்தில், முதல் நாளே தர்ப்பணம் செய்வது என்பது கூடாது.

அப்படி செய்தால் ஆயுள் போய்விடும் என்று தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது. #அதற்கு_பூதவித்தா_என்று_பெயர். தர்ம சாஸ்திரத்தில் முதல் நாளும் மறுநாள் அமாவாசை இருக்கின்றது, அபரான்னத்தில் முதல் நாள் அமாவாசை இல்லை, மறுநாள் அபரான்னத்தில் இருக்கிறது என்றால், இதையெல்லாம் பார்த்து தான் நமக்கு நிர்ணயம் செய்து கொடுத்து இருப்பார்கள் பஞ்சாங்கத்தில். அதைப் பார்த்து செய்ய வேண்டும்.

#அபரான்ன_காலத்தில்_அமாவாஸ்ய #இல்லாதபட்சத்தில்_செய்யும்_பொழுது #அவர்களுக்கு_ஆயுசு_போய்விடும்
#நோய்_வந்து_இறக்க_நேரிடும்_என்று #தர்ம_சாஸ்திரம்_காண்பிக்கிறது.
*வியாதிகள் வந்து இறக்க நேரிடும் என்பதினால் தர்ஸ சிராத்தம் அந்தக் காலத்தில் செய்ய வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக பார்த்து செய்ய வேண்டும்.*
*இந்த அம்மாவாசை யாரை உத்தேசித்து செய்ய வேண்டும். வர்க்த்துவைய பிதுர்க்களையும் உத்தேசித்து செய்ய வேண்டும். இந்த ஷண்ணவதி 96 இல் ஒரு சிலது மாறுபடுகிறது. அது என்ன என்பதை பின்னால் பார்ப்போம்.*

*அதேபோல் இந்த அமாவாசை அன்று புண்ணிய காலங்கள் அதிகப்படியாக சேரும். இதில் ஒரு புண்ணிய காலம் இரண்டு புண்ணிய காலம் மூன்று புண்ணிய காலம் நான்கு புண்ணிய காலங்கள் கூட சேரும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*

அப்படி வருகின்ற போது எவ்வளவு தர்ப்பணம் செய்யவேண்டும் எதை முதலில் செய்ய வேண்டும்? என்பதை விரிவாக நாம் பார்ப்போம். இந்த அமாவாசை தர்ப்பணத்திற்கு நித்தியம் என்று பெயர்.

#ஷண்ணவதியில்_நித்தியம்_மற்றும் #நைமித்திகம்_என்று பிரித்திருக்கிறார்கள் தர்ம சாஸ்திரத்தில். இந்த 96 மே நித்தியம் தான் அதில் மாறுதல் இல்லை. கட்டாயம் செய்து ஆகவேண்டும் என்றிருந்தால் அது நித்தியம் என்று பெயர்.

இதற்கு நியத நித்தியம் அநீத நித்தியம் என்று தர்ம சாஸ்திரத்தில் உட்பிரிவுகள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் நாம் ஓரளவுக்குத்தான் மனதிலேயே வைத்துக் கொள்ள முடியும். வாத்தியாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் பஞ்சாங்கத்தில் என்ன புண்ணியகாலம் என்று காண்பித்து இருப்பார்கள். வருட ஆரம்பத்தில் பஞ்சாங்கத்தைப் பார்த்து இந்த ஷண்ணவதி தர்ப்பணங்கள் என்று வருகிறது என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

விட்டுப் போகாமல் செய்து கொண்டு வரவேண்டும்
*அம்மாவாசை அன்று நாம் செய்யக்கூடிய அந்த தர்ஸ சிராத்தத்தில், வர்க்கத்துவய பிதுருக்களையும் உத்தேசித்து நாம் செய்கிறோம். அதாவது முதலில் பிதுர் வர்க்கம்.*
*பிதுர்பிதாமஹ பிரபிதாமஹர்கள் தாயார் இருந்தால் அவர்களுக்கு முன்னால் உள்ள மூன்று தலைமுறை. மாதா மஹ வர்க்கம் தாயாரின் உடைய தகப்பனார் முதற்கொண்டு மூன்று தலைமுறை. தாயாருடைய தாயார் முதற்கொண்டு மூன்று தலைமுறை. இதற்குத்தான் வர்க்கத்துவய பிதுருக்கள் என்று பெயர்.*

*அமாவாசை அன்று நாம் செய்யக்கூடிய நியமங்கள் இதுதான். இதுதான் ஆரம்பம் இந்த 96 ஷண்ணவதி தர்ப்பணங்களுக்கும். இது 12 அல்லது 13 வரும்.

இரண்டாவது யுகாதி என்று சொல்லக்கூடிய தான புண்ணியகாலம். இதை இரண்டாவதாக தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது. காலம் முன்பின் மாறிவரும் காலங்கள் ஒன்றுக்கும் வேறுபடும். வரிசை என்று வரும் பொழுது இப்படி அதை நாம் பஞ்சாங்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும். வருடத்தில் நான்கு யுகாதிகள் வரும் அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்*
 
Back
Top