• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

hari thalika vrutham

kgopalan

Active member
ஹரி தாளிகா விருதம்.



09-09-2021 அன்று பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷம் த்ருதியை திதி காளை மாட்டின் மேல் சிவனும் பார்வதியும் உட்கார்ந்திருக்கும் படம் வைத்து கன்னி பெண்கள் மாலையில் தனது வீட்டில் 16 ட்ரேகளில் தேங்காய் பாக்கு வெற்றிலை, பழம், புஷ்பம் மஞ்சள், குங்குமம்


ரவிக்கை துண்டு ஸெளபாக்கிய திரவ்யங்கள் வைத்து கெளரி ஸஹித மஹேஸ்வராய நம: என்று சொல்லி 16 உபசார பூஜை செய்து ஸ்தோத்ரங்கள் சொல்லி வேண்டி கொண்டு 8 தம்பதிகளை

வரச்சொல்லி அவர்களுக்கு ட்ரேகள் கொடுத்து நமஸ்காரம் செய்து சாஸ்திர ஸம்மதமாந முறையில் தாங்கள்

கல்யாணம் விரும்பும் நபரை செய்து கொண்டு சீரும் சிறப்புமாக ஆநந்தமாக வாழும் படி ஆசீர்வாதம் பெற வேண்டும்.


ஸ்ம்ருதி கெளஸ்துபம் 208 படி மயாபி யேந காமேந பூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம் தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸன்னா பவ பார்வதி என்னும் ஸ்லோகம் சொல்லவும்.



பவிஷ்யோத்திர புரணத்தில் உள்ளது. பார்வதி பரம சிவனை மணக்க விரும்பினாள். ஆலி என்னும் அவளது தோழிகள் பார்வதியை அழைத்து சென்று இந்த வ்ருதத்தை அநுஷ்டிக்க வைத்தார்கள்.


நல்ல இடத்தில் கல்யாணம் நடை பெற வேண்டிய கன்னி பெண்கள் பெற்றோர் வாழ்த்துகளுடன் இந்த பூஜை செய்யலாம்..
 

Latest ads

Back
Top