• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Gurupeyarchi Palangal 2024 - 2025

குரு பெயர்ச்சி பலன்கள் - வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 01.05.2024 முதல் 11.05.2025 வரை.

1711961209141.png


மேஷம் ராசி
எதிலும் துரிதமாகவும்.. வேகமாகவும் செயல்படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..!!

இதுவரை ஜென்ம ஸ்தானமான ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ஆம் (01.05.2024) நாள் முதல் ராசிக்கு தன ஸ்தானமான 2ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

குடும்ப ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான சத்ரு ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான தொழில் ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதினால் வழக்கு பிரச்சனைகள் சாதகமாக அமையும். விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் மேம்படும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகி தெளிவு பிறக்கும். கடன் சார்ந்த செயல்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.

குரு ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதினால் தூரத்து உறவினர்களின் வருகை உண்டாகும். அயல்நாட்டு பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். இழுபறியாக இருந்துவந்த சில வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல்கள் கைகூடிவரும்.

குரு ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதினால் நிர்வாக திறன் மேம்படும். சேவை தொடர்பான செயல்களில் ஆர்வம் உண்டாகும். புதிய நிறுவனம் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பார்த்த சில உதவிகளால் மேன்மை ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவ பொறுப்புகள் சாதகமாக அமையும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.

குரு நின்ற பலன்:

குரு குடும்ப ஸ்தானத்தில் நிற்பதால் குடும்பத்தில் அமைதி உண்டாகும். தடைபட்ட சுப காரியங்கள் கைகூடிவரும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களிடையே புரிதல் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். முகத்தில் புத்துணர்ச்சி உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகி மனதளவில் தெளிவும், தனவரவு தொடர்பான எண்ணங்களும் அதிகரிக்கும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

தனவரவு மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கலை துறைகளில் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈர்ப்பு அதிகரிக்கும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

பொருளாதார சிக்கல்கள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். கடன் பிரச்சனைகளை குறைப்பீர்கள்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் திருப்தியில்லாத சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

தனம் சார்ந்த விஷயங்களில் கவனத்தோடு செயல்படுவது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். உறவினர்களுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகன பழுதுகளை சரிசெய்து கொள்வது தேவையற்ற விரயங்களை தவிர்க்கும். தாயின் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

பெண்களுக்கு தடைபட்ட சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். திருமணமான தம்பதிகளுக்கு மகி
ழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தாயாருடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இடர்பாடுகள் விலகும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனைகள் விலகும். புதுவிதமான துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். தடைபட்ட கல்விப் பணிகளை மேற்கொள்வதற்கான சூழல்கள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வுகள் சாதகமாகும். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்த பணிகளில் இருந்துவந்த அலட்சிய போக்கு மறையும். சக ஊழியர்களிடத்தில் உங்கள் மீதான மதிப்புகள் மாறுபடும். பணி நிமிர்த்தமான சில பயணங்கள் கைகூடும்.

வியாபாரிகள்:

வியாபாரத்தில் புதிய வியூகங்களை அமைத்து செயல்படுவீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். கமிஷன் சார்ந்த வியாபாரத்தில் லாபம் ஏற்படும். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.

கலைஞர்கள்:

கலைத்துறையில் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். புதுவிதமான அனுபவங்களால் மாற்றம் ஏற்படும். விமர்சனப் பேச்சுக்கள் படிப்படியாக குறையும். தடைபட்ட தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். இசை துறைகளில் தனிப்பட்ட நாட்டம் பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தலைமை அதிகாரிகளுடன் நெருக்கமாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய பொறுப்புகளின் மூலம் மதிப்புகள் உயரும். விமர்சனப் பேச்சுக்களின் தன்மையறிந்து செயல்படுவது நல்லது.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளும், வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகளும் கிடைக்கும்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் செலவுகளின் தன்மையிலும், சிந்தனை போக்கிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வழிபாடு:

செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர ஒத்துழைப்பும், மேன்மையும் ஏற்படும்.

மேஷ ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் பொதுவாக 40/100 மதிப்பெண்களை மட்டும் பெறுவதால் மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் கப்சிப் என இருந்து கவனத்தோடு செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.
 
Last edited:
ரிஷபம் ராசி

கலகலப்பான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் வசப்படுத்தும் திறமை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..!!

இதுவரை போக ஸ்தானமான பனிரெண்டாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் ராசி ஸ்தானமான ஜென்ம வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

ஜென்ம ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான புத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் குழந்தைகளிடமிருந்து வந்த வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். நினைத்த இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

குரு ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் தடைபட்ட சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். நெருக்கமானவர்களின் மூலம் சில மாற்றங்கள் உருவாகும். மறைமுகமான வருமானங்கள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

குரு ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் படிப்படியாக குறையும். தெய்வீக பணிகளில் உள்ளவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும். கடன் பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். பயணங்களின் மூலம் சில அனுபவங்கள் ஏற்படும். சமூகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

குரு நின்ற பலன்:

ஜென்ம வீட்டில் குரு நிற்பதால் கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடன் இருப்பவர்களால் சில நெருக்கடியான சூழல் உண்டாகும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வாகன பழுதுகளை சரிசெய்து கொள்வது வீண் விரயங்களை தவிர்க்கும். கிடைக்கும் வாய்ப்பு சிறியதாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளவும். வியாபார முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

கொடுக்கல், வாங்கல் செயல்களை குறைத்துக் கொள்வது நல்லது. முன்ஜாமீன் செயல்களை தவிர்த்துக் கொள்ளவும். முயற்சிகளில் உண்டாகும் தடைகளின் மூலம் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். மனதளவில் எதிர்காலம் சார்ந்த சில புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள். உங்கள் பேச்சுக்கான மதிப்பு காலதாமதமாக கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். சேமிப்பு தொடர்பான புதிய திட்டங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

நபர்களின் தன்மைகளை அறிந்து ஆலோசனைகளையும், கருத்துகளையும் கூறவும். ஆடம்பர சிந்தனைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில போட்டிகள் இருந்தாலும் மாறுபட்ட அனுபவங்களின் மூலம் வெற்றிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் கவனத்தோடு செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

நிலுவையில் இருந்துவந்த வரவுகள் தேவைக்கேற்ப கிடைக்கும். குடும்ப தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் வழியில் சுபகாரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. சிக்கனத்தோடு செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். உடன் இருப்பவர்களின் மற்றொரு முகத்தை அறிவீர்கள். எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. பிள்ளைகளின் திருமணம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் அதிக உரிமை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகள் பற்றிய கவலைகள் குறையும்.

மாணவர்கள்:

பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். ஆசிரியர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். தொலைத்தொடர்பு துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் நிதானம் வேண்டும். ஆராய்ச்சி மற்றும் சமூகம் தொடர்பான கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் பொறுப்புக்கான தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாலின மக்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மறைமுகமான இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். கால்நடை வளர்ப்புகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும். மருத்துவ துறையில் சாதகமான வாய்ப்புகள் அமையும்.

வியாபாரிகள்:

நீண்ட நாட்களாக தேக்கத்தில் இருந்துவந்த பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய தொழில் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. மற்றவர்கள் கூறும் கருத்துகளில் உண்மை நிலைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கவும். பங்குதாரர்களின் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஜவுளி மற்றும் மருத்துவ பொருட்களின் வியாபாரம் மூலம் லாபம் மேம்படும். விவசாயப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.

கலைஞர்கள்:

கலைத்துறையில் சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வும், ஆர்வமின்மையும் குறையும். அயல்நாட்டு தொடர்பு நிறுவனங்களால் ஆதாயம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகளுக்கு சிக்கல்கள் குறையும். சில மாற்றமான தருணங்களும், வாய்ப்புகளும் ஏற்படும். இழுபறியான சில வழக்குகள் சாதகமாக முடியும். அரசு அதிகாரிகளிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். தொண்டர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் மனதில் புதுவிதமான இலக்குகளும், சுபகாரிய பணிகளில் ஒத்துழைப்பும், வெளியூர் சார்ந்த பயணமும் கைகூடி வரும்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து, அடக்கத்தோடு செயல்படுவது மேன்மையை உருவாக்கும்.

வழிபாடு:

வியாழக்கிழமைதோறும் சித்தர்களின் வழிபாடும், ஜீவ சமாதிக்கு சென்று வருவதும் மனதளவில் இருந்துவந்த குழப்பங்களை குறைத்து தெளிவினை ஏற்படுத்தும்.

ரிஷப ராசி அன்பர்களே.. பொதுவாக 80/100 மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் இந்த குரு பெயர்ச்சியில் உங்களுக்கு ஆதாயம் என்பது குறைவுதான். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் தான் ஆர்வம் உண்டாகும். அதனால் நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்களை மேற்கொள்ளவும்.

மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.
 
மிதுனம் ராசி

கலகலப்பு நிறைந்த மிதுன ராசி அன்பர்களே..!!

இதுவரை லாப ஸ்தானமான பதினொன்றாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் போக ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

போக ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான சத்ரு ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக நான்காம் ஸ்தானத்தை பார்ப்பதினால் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். சொகுசு வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணம் சார்ந்த எண்ணங்கள் சாதகமாக அமையும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகளும், மகிழ்ச்சியான தருணங்களும் ஏற்படும்.

குரு ஏழாம் பார்வையாக ஆறாம் ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிராக இருந்தவர்கள் பற்றி புரிதல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கால்நடை பணிகளில் ஒரு விதமான ஈர்ப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

குரு ஒன்பதாம் பார்வையாக எட்டாம் ஸ்தானத்தை பார்ப்பதினால் சிந்தனைகளில் சற்று கவனம் வேண்டும். மனத்திற்கு பிடிக்காத சில விஷயங்களை செய்வதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணியில் உயர்வு ஏற்படும். மருத்துவ பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். காப்பீட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

குரு நின்ற பலன்:

குரு விரய ஸ்தானத்தில் நிற்பதால் எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சுபகாரிய விஷயங்களில் பொறுமை வேண்டும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான வளர்ச்சிகள் அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். மனதில் நினைத்த பணிகளை முடிப்பதில் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு காரியங்களில் எதிர்பார்த்த சில பணிகள் தாமதத்திற்கு பின்பு நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

நினைத்த சில பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் முதலீடு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் திருப்தியற்ற சூழல் உண்டாகும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பண விஷயத்தில் மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. ஜாமீன் தொடர்பான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது மன அமைதியை கொடுக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துகள் கூறுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் சிறு சிறு மந்தநிலையும், தேக்கமும் ஏற்படும். வெளியூர் பயணங்களால் கையிருப்புகள் குறையும். கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வமின்மை உண்டாகும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்ல மதிப்பை உருவாக்கும். நெருக்கமானவர்களிடத்தில் புரிதல் அதிகரிக்கும். நினைத்த செயல்களை செய்வதில், செயல்களின் தன்மை அறிந்து முடிவெடுப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். மனதிற்கு விருப்பமான செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த முடக்க நிலையில் சில மாற்றங்கள் உண்டாகும். இறை சார்ந்த பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:


நெருக்கமானவர்களின் தேவைகளுக்காக கடன் வாங்குவதை குறைக்கவும். அல
ட்சியமின்றி செயல்படுவது காரிய அனுகூலத்தை ஏற்படுத்தும். நீண்ட நாள் இழுபறியாக இருந்துவந்த சில வரவுகள் கிடைக்கும். தடைபட்ட காரியம் விரைவில் நடைபெறும். சில அனுபவத்தின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். குறித்த நேரத்திற்குள் பணிகளை முடிப்பது பல சிக்கல்களை தவிர்க்கும். எதிர்பாலின மக்களுடன் பழக்கவழக்கத்தை குறைத்து கொள்ளவும்.

மாணவர்கள்:

மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்தோடு இருப்பது நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். நண்பர்களின் தன்மை அறிந்து நட்புகளை தேர்ந்தெடுக்கவும். விளையாட்டு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அரசு சார்ந்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வெளிநாடு சென்று படிப்பது தொடர்பான எண்ணங்கள் சிலருக்கு கைகூடிவரும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகத்தில் திறமைக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். அலுவலகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வெளிநாடு சென்று பணி புரிவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். சக பணியாளர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும்.

வியாபாரிகள்:

வியாபாரத்தில் கிடைக்கும் சிறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உயர்வை உருவாக்கும். கூட்டாளிகள் இடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலைகள் மாறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையோடு செயல்படவும்.

கலைஞர்கள்:

கலைத்துறையில் இருப்பவர்கள் எதிர்காலம் சார்ந்து தெளிவான சில முடிவுகளை எடுப்பீர்கள். புதுமையான படைப்புகளுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். அரசு வழியில் மதிப்புகள் உயரும். சாமர்த்தியமாக செயல்பட்டு பழைய பிரச்சனைகளை தீர்ப்பீர்கள்.

அரசியல்வாதிகள்:

எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைப்பதில் சிரமங்களும், சிறு சிறு விரயங்களும் ஏற்படும். மறைமுகமான வருமான வாய்ப்புகளில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் பயணங்களால் அனுகூலங்களும், எதிர்பார்த்த சில உதவிகளும், பல நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகளும் ஏற்படும்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துகள் கூறுவதையும், அதிக உரிமை கொள்வதையும் குறைத்துக் கொள்வது நல்லது.

வழிபாடு:

செவ்வாய்க்கிழமைகளில், வராகியம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கிவர காரிய அனுகூலமும், வெற்றியும் கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே.. வருகின்ற குரு பெயர்ச்சியில் 40/100 மதிப்பெண் மட்டும் பெற்று இருப்பதால் திட்டமிட்டு செயல்பட்டால் நெருக்கடிகள் குறையும். அதேசமயம் மன நிம்மதியும் ஏற்படும்.

மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.
 
கடகம் ராசி

கனிவும், கற்பனை வளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!!

இதுவரை தொழில் ஸ்தானமான பத்தாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

லாப ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான சகோதர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான புத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான களத்திர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் இளைய உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு தூரப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் மேம்படும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

குரு ஏழாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். பேச்சில் தெளிவு பிறக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். தனிப்பட்ட சில அனுபவத்தின் மூலம் செயல்களில் மாற்றம் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.

குரு ஒன்பதாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் அயல்நாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். தர்ம பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். அரசாங்க விஷயங்களில் இருந்துவந்த தாமதம் நீங்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குரு நின்ற பலன்:

குரு லாப ஸ்தானத்தில் நிற்பதால் தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கும், மதிப்பும் உயரும். குழந்தைகளின் எண்ணங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்பத்தில் வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. வெளிவட்டார தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொண்டு வரவுகளை மேம்படுத்துவீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்வதற்கான சூழல் உண்டாகும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

பணி நிமிர்த்தமான வெளியூர் தொடர்புகளால் மதிப்பும், ஆதாயமும் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உறவுகளிடத்தில் புரிதலும், அனுசரிப்பும் வேண்டும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்கான சூழல் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். உயர்நிலைக் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். அசையா சொத்துக்களை வாங்குவதற்கான எண்ணங்கள் மேம்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஈர்ப்பு ஏற்படும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

சிந்தனையின் போக்கில் சற்று கவனத்துடன் இருக்கவும். ஆடம்பரமான விஷயங்களை தவிர்ப்பது நெருக்கடிகளை குறைக்கும். சுபகாரிய செயல்களில் பொறுமையை கையாளவும். வியாபாரத்தில் போட்டிகள் மேம்படும். வெளியூர் பயணங்களில் ஆதாயத்தை அறிந்து மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மற்றவர்களின் பேச்சுக்களில் உள்ள உண்மை நிலைகளை அறிந்து புதிய செயல்களில் ஈடுபடுவதை மேற்கொள்ளவும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

பெண்களுக்கு குழந்தைகள் பற்றிய கவலைகள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான முயற்சிகள் கைகூடிவரும். சிறு மற்றும் குறுந்தொழிலில் இருப்ப
வர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலை விலகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சிந்தனையின் போக்கில் தெளிவு பிறக்கும். உயர்நிலைக் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். ஆசிரியர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். விளையாட்டு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகளும், உயர்வான சூழல்களும் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான இடமாற்றம் அமையும். மனதிற்கு பிடித்த விதத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக இருந்துவந்த சில வரவுகள் கிடைக்கும். சகப்பணியாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.

வியாபாரிகள்:

வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் குறையும். அரசு வழியில் சில உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளும், அபிவிருத்திக்கான வாய்ப்புகளும் உண்டாகும். வாக்குறுதிகள் அளிக்கும்பொழுது சற்று சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் தகுந்த ஆவணங்களைக் கொண்டு செயல்படுவது லாபத்தை பெருக்கும். நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் சேர்க்கை ஏற்படும். கூட்டாளிகளுடனான பணிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும்.

கலைஞர்கள்:

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்காலம் சார்ந்த ஒருவிதமான குழப்பம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்கு பின்பு சாதகமான வாய்ப்புகளும், மதிப்புகளும் ஏற்படும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்களால் உடலில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நன்மதிப்பை உண்டாக்கும்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகளுக்கு ஒரு பொன்னான காலமாக அமையும். பொதுமக்களின் ஒத்துழைப்பும், தொண்டர்களின் ஆதரவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் வெற்றி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். கட்சி சார்ந்து வெளியூர் பயணம் செல்லக்கூடிய சூழல் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை நுட்பமாக செயல்பட்டு, உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் மாற்றங்களை உருவாக்குவீர்கள்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் எதிர்காலம் சார்ந்த சில முதலீடுகளை ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது.

வழிபாடு:

செவ்வாய்க்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மாரியம்மனை வழிபாடு செய்துவர நினைத்த காரியங்கள் கைகூடிவரும்.

கடக ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 70/100 மதிப்பெண்களை பெற்று இருப்பதால் தீயாக வேலை செய்து மறைமுகமான தடைகளை வெற்றி கொள்ளுங்கள்.

மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.
 
சிம்மம் ராசி

விடாமுயற்சியால் சாதனைகள் பல செய்யும் சிம்ம ராசி அன்பர்களே..!!

இதுவரை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

தொழில் ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான சுக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான சத்ரு ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். மனதளவில் அமைதி உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பொன், பொருள் சேர்க்கைக்கான சூழல் உண்டாகும். உணவு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

குரு ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடலளவில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். விவசாயப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தனிப்பட்ட பழக்கவழக்கங்களில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும்.

குரு ஒன்பதாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதால் எந்தவொரு செயல்பாடுகளையும் அதன் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். முக்கிய முடிவுகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

குரு நின்ற பலன்:

குரு தொழில் ஸ்தானத்தில் நிற்பதால் அலுவலகத்தில் சில புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிலும் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பொது காரியங்களில் தனிப்பட்ட ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். நினைத்த சில பணிகளை முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

சிந்தனைகளில் தெளிவின்மையும், குழப்பமும் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத சில தடைகளால் மாற்றங்கள் உண்டாகும். எந்தவொரு விஷயத்திலும் ஆர்வமின்மை ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

உயர் அதிகாரிகளிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்ளவும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகளால் மனதில் அமைதி உண்டாகும். நினைத்த இலக்குகளை அடைவதில் முயற்சி அதிகரிக்கும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

தாய்வழி உறவுகளால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். வியாபார போட்டிகளை விடாப்பிடியான முயற்சிகளால் வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில மாற்றமான சூழல் உண்டாகும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களுக்கு தெளிவான முடிவு பிறக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். வெளியூர் சார்ந்த பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். ரகசியமான முதலீடுகளை அதிகப்படுத்துவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

கனிவான பேச்சுக்களின் மூலம் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் பேச்சுக்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைவருடன் மனம் விட்டு பேசுவது புரிதலை மேம்படுத்தும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு க
ல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மேல்நிலைக் கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்வது நட்பு வட்டங்களை பெரிதுபடுத்தும். உல்லாச பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். பெரியோர்களின் வழிகாட்டுதல் புதிய வளர்ச்சியை உருவாக்கிக் கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த பொறுப்புகளும், முன்னேற்றமான வாய்ப்புகளும் கிடைக்கும். ஆசிரியர் பணிகளில் மதிப்புகள் உயரும். நிதி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தகுதிக்கு உண்டான வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சில அலைச்சல்கள் உண்டாகும். மனதில் இருந்துவந்த சில கவலைகள் குறையும்.

வியாபாரிகள்:

வியாபாரத்தில் எதிர்பாராத மாற்றமான சூழல் உண்டாகும். கூட்டணிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும்பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. புதிய தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்துவதில் கவனம் வேண்டும். நம்பிக்கையாக இருப்பவர்களின் மறுமுகம் புலப்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.

கலைஞர்கள்:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் மற்றும் வெளியூர் சார்ந்த வாய்ப்புகள் சாதகமாக அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெரியோர்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். மறைமுகமான சில விஷயங்களைப் பற்றி புரிதல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்:

அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் பதவி விஷயங்களில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். சிறு சிறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கட்சி நிமிர்த்தமான சில செலவுகளால் கையிருப்புகள் குறையும். பயணங்களால் உடலில் ஒரு விதமான சோர்வும், அலைச்சலும் உண்டாகும்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் குடும்பத்தில் ஒற்றுமையும், ஆதரவும், நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளும், பெரியோர்களின் ஆலோசனைகளால் நல்லதொரு பொன்னான காலத்தையும் உருவாக்கிக் கொள்வீர்கள்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் உயர் அதிகாரிகளிடத்திலும், அரசு சார்ந்த விஷயங்களிலும் சற்று விவேகத்துடன் செயல்படுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

வழிபாடு:

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

சிம்ம ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 50/100 என்ற அளவில் மதிப்பெண்களை பெறுவதால் எதையும் சரிசமமாக எடுத்துக்கொண்டு முயற்சிகளை அதிகப்படுத்துவதால் நெருக்கடிகளை வெற்றி கொள்ள முடியும்.

மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.
 
கன்னி ராசி

கனிவும்.. கனவுகளும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!!

இதுவரை அஷ்டம ஸ்தானமான எட்டாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

பாக்கிய ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான ராசி ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான சகோதர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான புத்திர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக ராசி ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் நினைத்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். முகத்தில் புதுவிதமான புத்துணர்ச்சி ஏற்படும்.

குரு ஏழாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் சகோதரர் வழியில் இருந்துவந்த சங்கடங்கள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்களும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும்.

குரு ஒன்பதாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். குலதெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

குரு நின்ற பலன்:

குரு பாக்கிய ஸ்தானத்தில் நிற்பதால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். பெரியோர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வது நன்மதிப்பை உண்டாக்கும். பிரபலமானவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வமும், தேடலும் ஏற்படும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் சற்று சிந்தித்துச் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மதிப்பை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் சுபகாரியங்கள் கைகூடிவரும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளிவட்டார தொடர்புகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

ஆதரவாக இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எந்தவொரு செயலையும் பலமுறை சிந்தித்து மேற்கொள்வது நல்லது. வியாபாரத்தில் மந்தமான சூழல் உண்டாகும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் நன்மை உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

மாணவர்கள்:

மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மேற்படிப்புகளுக்கு தேவையான வழிகாட்டிகள் அமைவார்கள். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு திறமையும், பாராட்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மையும், புரிதலின்மையும் விலகும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சிறு சிறு வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்கவும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். பணிமாற்றத்தால் குழப்பங்களிலிருந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

வியாபாரிகள்:

வேலையாட்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் மேம்படும். வெளியூர் தொடர்புகளின் மூலம் வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். சிறு சிறு வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கவும். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு சார்ந்த உதவிகளில் அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

கலைஞர்கள்:

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அவ்வப்போது உங்கள் மீது விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். இசை தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் ஆதாயமடைவீர்கள்.

அரசியல்வாதிகள்:

சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மேடை பேச்சுக்களில் நிதானத்தை கையாளவும். பதவிக்கான புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கட்சி சார்ந்த பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பு மேம்படும்.

நன்மைகள்:

குரு பெயர்ச்சியானது மனதில் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும், புதிய இலக்குகளை அடைவதற்கான சூழ்நிலைகளையும் உருவாக்கக் கூடிய நல்ல பொற்காலமாக அமையும்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் தந்தைவழி உறவுகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.

வழிபாடு:

திருச்சிக்கு அருகில் உள்ள பூலோக நாதருக்கு அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர வீடு மனை அமைவதில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.

கன்னி ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 90/100 மதிப்பெண்களை பெறுவதால் நினைத்த காரியங்கள் அனைத்தையும் செய்து முடிப்பதற்கான சூழல்கள் உண்டாகும். மேலும் தொட்டதெல்லாம் ஜெயம் ஆகும்.

மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.
 
துலாம் ராசி

அனைவரையும் சமமாக கருதும் துலாம் ராசி அன்பர்களே..!!

இதுவரை களத்திர ஸ்தானமான ஏழாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

அஷ்டம ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான குடும்ப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான சுக ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தூரதேச பயணம் தொடர்பான முயற்சிகள் சிலருக்கு கைகூடும்.

குரு ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான தனவரவுகளை பெறுவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் மகிழ்ச்சியான தருணத்தை உண்டாக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.

குரு ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பழைய சிந்தனைகளால் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.

குரு நின்ற பலன்:

குரு அஷ்டம ஸ்தானத்தில் நிற்பதால் எதிர்பாராத சில திடீர் வரவுகள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இனம்புரியாத சிந்தனைகளால் மனதளவில் குழப்பம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நல்லது. சகோதரர்களின் வழியில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கவும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில இடமாற்றங்களால் தடுமாற்றம் ஏற்படும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

குடும்ப உறுப்பினர்களிடத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும். எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்புகள் குறையும். கூட்டாளிகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் தாமதமாக கிடைக்கும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

நெருக்கடியான சூழல் படிப்படியாக குறையும். தடைபட்ட பணிகளை மேற்கொள்வதற்கு சாதகமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மனதளவில் புதுவிதமான பக்குவமும், தெளிவும் ஏற்படும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

பெண்களுக்கு தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் சாதகமாகும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். மறதி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். தாய்வழியில் சரியான வழிகாட்டுதல் மூலம் மாற்றம் உண்டாகும். கலை சார்ந்த கல்வியில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகத்தில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். சில பணிகளில் மற்றவர்களை நம்பி இருக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை உண்டாக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு குறைவாகவே கிடைக்கும். மற்றவர்களின்
செயல்பாடுகளால் மனதில் ஒருவிதமான குழப்பமும், தடுமாற்றமும் ஏற்படும்.

வியாபாரிகள்:

வியாபாரப் பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கூட்டாளிகளின் வழியில் ஆதரவுகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சிலருக்கு சாதகமாகும்.

கலைஞர்கள்:

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளை சாமர்த்தியமாக வெற்றிக் கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு அதற்கு தகுந்த விதத்தில் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும்.

நன்மைகள்:

குரு பெயர்ச்சியால் பேச்சுக்களின் மூலம் உறவினர்களின் ஒத்துழைப்பையும், புதிய அனுபவ அறிவால் முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குவீர்கள்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் உடன் பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்வதும், விவேகமான அணுகுமுறைகளை மேற்கொள்வதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

வழிபாடு:

வெள்ளிக்கிழமைதோறும் அய்யனாரை வழிபாடு செய்துவர நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் விலகும்.

துலாம் ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 50/100 மதிப்பெண்களை பெறுவதால் எந்தவொரு செயலையும் மேற்கொள்ளும்பொழுது சரிவிகித தன்மைகளை புரிந்து விழிப்புணர்வோடு நடந்து கொள்ளவும்.

மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.
 
விருச்சிகம் ராசி

எதிலும் துடிப்புடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே..!!

இதுவரை சத்ரு ஸ்தானமான ஆறாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

களத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான ராசி ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான சகோதர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் சார்ந்த துறைகளில் பொறுப்புகளும், அதிகாரங்களும் மேம்படும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். இணையம் தொடர்பான துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

குரு ஏழாம் பார்வையாக ராசி ஸ்தானத்தை பார்ப்பதால் மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் உயரும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

குரு ஒன்பதாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான வாய்ப்புகள் ஏற்படும். இளைய உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனதளவில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும்.

குரு நின்ற பலன்:

குரு களத்திர ஸ்தானத்தில் நிற்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். தோற்றப்பொலிவு மேம்படும். பேச்சுக்களில் கனிவு உண்டாகும். குழந்தைகளை பற்றிய புரிதல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.

குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். தொழில் சார்ந்த கூட்டாளிகளின் ஒத்துழைப்பு தாமதமாக கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

சுபகாரியங்களின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய தொடர்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வெளிநாட்டு தொடர்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கடன் சார்ந்த சில உதவிகளின் மூலம் மேன்மை ஏற்படும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

சுபகாரிய செயல்களில் அலைச்சலும், தாமதமும் ஏற்படும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் பக்குவங்கள் பிறக்கும். வியாபார ரீதியான பயணங்களால் சில விரயங்களுக்குப் பின்பு ஆதாயம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:


மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைக்குண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகளும், உயர்வும் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்கள்:

மாணவர்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். கட்டுரை மற்றும் இலக்கியம் சார்ந்த பிரிவுகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். உயர்நிலைக் கல்வியில் புரிதலும், தெளிவும் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகத்தில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட ஊதிய உயர்வுகள் சிலருக்கு சாதகமாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் அலுவலகத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். வெளியூர் சென்று வேலை செய்வதற்கான எண்ணங்கள் கைகூடிவரும்.

வியாபாரிகள்:

வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். வாகன பயணங்களின் மூலம் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மறைமுகப் போட்டிகளால் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பொருட்களின் தேக்கம் உண்டானாலும் லாபங்களில் குறைவு ஏற்படாது. வேலையாட்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை கொடுக்கும்.

கலைஞர்கள்:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். திறமைக்குண்டான மதிப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் புதிய படைப்புகளை வெளிப்படுத்தி ஆதரவுகளை பெருக்கிக் கொள்வீர்கள். நுட்பமான சில கலை சார்ந்த விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள்:

பேச்சுக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கட்சி நிமிர்த்தமான பயணங்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். சில எதிர்ப்புகளால் நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகளும், சிந்தனைகளில் தெளிவும், ஒத்துழைப்பான சூழல்களும் உண்டாகும்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் தம்பதிகளுக்கிடையே மனம் விட்டு பேசுவது புரிதலையும், அன்யோன்னியத்தையும் ஏற்படுத்தும். தேவையற்ற விரயங்களை தவிர்க்கும்.

வழிபாடு:

திங்கட்கிழமைதோறும் வில்வ இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர தடைபட்ட சுபகாரியங்கள் யாவும் கைகூடிவரும்.

விருச்சிக ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 70/100 மதிப்பெண்களை பெறுவதால் புதுமையான சில விஷயங்களில் ஆர்வமும், தேடலும் உண்டாகும்.

மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.
 
தனுசு ராசி

இறை நம்பிக்கையும்.. கம்பீரமான தோற்றமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!!

இதுவரை புத்திர ஸ்தானமான ஐந்தாம் ராசியில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

சத்ரு ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான போக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான குடும்ப ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். அரசு வழியில் சில உதவிகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடிவரும். கௌரவ பொறுப்புகளின் மூலம் வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும்.

குரு ஏழாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் உடலில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் படிப்படியாக குறையும். எந்தவொரு செயலையும் ரகசியமாக செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். பழக்கவழக்கங்களில் சற்று கவனம் வேண்டும். வெளிநாடு செல்வது தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

குரு ஒன்பதாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

குரு நின்ற பலன்:

குரு புத்திர ஸ்தானத்தில் நிற்பதால் தந்தை வழி உறவுகளிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மதிப்பை உண்டாக்கும். எதிலும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது மனஅமைதியை ஏற்படுத்தும். இழுபறியான சில விஷயங்களை செய்து முடிப்பதற்கான சூழல் ஏற்படும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது.

குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் சிறு சிறு தேக்க நிலைகள் உண்டாகும். உறவுகளிடத்தில் பொறுமையுடன் செயல்படுவது நன்மதிப்பை உண்டாக்கும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

குழந்தைகளிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் கைகூடி வருவதற்கான சூழல் ஏற்படும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

தனவரவில் இருந்துவந்த சில நெருக்கடிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான ஆதரவு கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சில நெருக்கடிகள் குறையும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் வேண்டும். தொழில் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்தோடு இருக்கவும். பிறமொழி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள்:

அலுவலகத்தில் எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிலும் திறமையோடு செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வேலை சார்ந்த தேடலில் எதிர்ப
ார்ப்புகள் நிறைவேறும். பயணங்களின் மூலம் அனுகூலமும், லாபமும் ஏற்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும்.

வியாபாரிகள்:

வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தநிலைகள் நீங்கி முன்னேற்றமான சூழல் ஏற்படும். அரசு தொடர்பான சில உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு சில மாற்றங்களை செய்வீர்கள்.

கலைஞர்கள்

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மனதளவில் இருந்துவந்த தயக்கங்கள் படிப்படியாக குறையும். பேச்சுத் திறமைகளின் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகள் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மறைமுக திறமைகளின் மூலம் எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் தொழில் சார்ந்த அபிவிருத்தியும், அதற்கான தன வரவுகளும், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் மேன்மையும் உண்டாகும்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் சஞ்சலமான சிந்தனைகளால் நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

வழிபாடு:

நவகிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியமும், கல்வியில் முன்னேற்றமும் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 50/100 என்ற மதிப்பெண்களை பெற்றிருப்பதால் எந்தவொரு செலவையும் செய்வதற்கு முன்பு சிந்தித்து செயல்படுவது தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்கும்.

மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.
 
மகரம் ராசி

எதிலும் நிதானத்துடனும்.. பொறுமையுடனும் செயல்பட்டு வெற்றி காணக்கூடிய மகர ராசி அன்பர்களே..!!

இதுவரை சுக ஸ்தானமான நான்காம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

புத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான லாப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான ராசி ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் வழக்கு சார்ந்த விஷயங்களில் தெளிவான முடிவு கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் சிறு தூரப் பயணங்கள் செல்வதற்கான தருணங்கள் உண்டாகும்.

குரு ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த பணிகளை திட்டமிட்டு செய்து வெற்றி அடைவீர்கள். செயல்பாடுகளில் அனுபவமும், புத்திக்கூர்மையும் வெளிப்படும்.

குரு ஒன்பதாம் பார்வையாக ராசி ஸ்தானத்தை பார்ப்பதால் குண நலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறைந்து தெளிவு பிறக்கும். சிறு சிறு விஷயங்களிலும் மன நிறைவு ஏற்படும்.

குரு நின்ற பலன்:

குரு புத்திர ஸ்தானத்தில் நிற்பதால் மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பதற்கான தருணங்கள் உண்டாகும். காப்பீட்டுத் துறைகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். எந்தவொரு செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகளும், சம்பவங்களும் நடைபெறும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சூழல் படிப்படியாக குறையும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

திறமைக்குண்டான மதிப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பொன், பொருட்சேர்க்கை தொடர்பான எண்ணங்களும், அதற்கான சூழல்களும் உண்டாகும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடம்பரமான விரயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். முயற்சிக்கான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். முதுநிலை கல்வியில் எதிர்பார்த்த தருணங்கள் அமையும்.

உத்தியோகஸ்தர்கள்:

பணி நிமிர்ந்தமான சில விஷயங்களில் ரகசியம் காப்பது நல்லது. திறமைக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். மற்றவர்கள் செய்யும் செயல்களால் உங்கள் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த சில விஷயங்களுக்கு பொறுமையை கையாளுவது நல்ல முடிவினை அளிக்கும்.

வியாபாரிகள்:

வியாபாரததில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு அதிகாரிகளிடம் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். திறமைக்குண்டான மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சியும், புதிய விஷயங்கள் சார்ந்த தேடல்களும் அதிகரிக்கும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் அளிக்கும்போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் பணிபுரியும் இடத்திலும், குடும்பத்திலும் மதிப்பும், மரியாதையும் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் புதுமையான சில விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது தேவையற்ற விரயத்தை தவிர்க்கும்.

வழிபாடு:

செவ்வாய்க்கிழமைதோறும் விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர சிந்தனைகளில் தெளிவும், சுபிட்சமும் ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 90/100 மதிப்பெண்களை பெற்றிருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிப்புடனும், சிந்தனைங்களில் தெளிவுடனும் செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.

மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.
 
கும்பம் ராசி

எந்த சூழ்நிலையிலும் நிதானமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே..!!

இதுவரை சகோதர ஸ்தானமான மூன்றாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

சுக ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான தொழில் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான போக ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் எந்தவொரு செயலையும் மேற்கொள்ளும்பொழுது சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மறைமுகமான வருமானங்களால் கையிருப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் மீதான கோபங்களை குறைத்துக் கொள்வது உங்கள் மீது நன்மதிப்பை ஏற்படுத்தும்.

குரு ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரங்களில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும். எந்தவொரு செயலையும் நேர்மறை சிந்தனையுடன் அணுகி வெற்றியடைவீர்கள்.

குரு ஒன்பதாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். புதுவிதமான பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள். மற்றவர்கள் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை அறிவதில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகளை குறைப்பீர்கள்.

குரு நின்ற பலன்:

குரு சுக ஸ்தானத்தில் நிற்பதால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். வர்த்தகம் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். நறுமண பொருட்களின் விஷயத்தில் சற்று கவனம் வேண்டும். உறவுகளின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். தொழில் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் ஏற்படும்.

குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த சில வரவுகளில் தாமதங்கள் ஏற்படும். உணவு விஷயங்களில் சற்று கவனத்தோடு இருக்கவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே புரிதல்கள் ஏற்படும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனை மீதான கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு அமையும். உத்தியோக மாற்றம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

உடன் பிறந்தவர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை கையாளுவதில் கவனம் வேண்டும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். கால்நடை வளர்ப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், ஆதாயமும் ஏற்படும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பதற்கான சூழல் ஏற்படும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. நெருக்கமானவர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவமும், அனுகூலமும் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சூழ்நிலைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். காப்பீட்டு விஷயங்களில் ஆதாயம் ஏற்படும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு பாடங்களில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பெற்றோர்களிடத்தில் மனம் விட்டு பேசுவது மனதிற்கு அமைதியை கொடுக்கும். எதிர்பாராத சில பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள்:
உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல் அமையும். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உடல்நிலையில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவுகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில இடமாற்றங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.

வியாபாரிகள்:

வியாபாரப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பதற்கான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் மறைமுக ஆதரவுகளால் சில புரிதல்கள் ஏற்படும். அபிவிருத்தி தொடர்பான இலக்குகள் பிறக்கும்.

கலைஞர்கள்:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிறமொழி சார்ந்த விஷயங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். உணவுத்துறைகளில் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். வருமான வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் ஆதரவுகளை மேம்படுத்துவீர்கள். தொண்டர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணிகளை, உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களிலும், பயணங்கள் தொடர்பான விஷயங்களிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.

வழிபாடு:

வியாழக்கிழமைதோறும் மகான்களை வழிபாடு செய்துவர குடும்பத்தில் ஒற்றுமையும், சேமிப்பும் அதிகரிக்கும்.

கும்ப ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 40/100 மதிப்பெண்களை பெற்றிருப்பதால் எதிர்பாராத சில திருப்பங்களின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகும்.

மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.
 
மீனம் ராசி

எதிலும் விவேகத்துடன் செயல்படும் மீன ராசி அன்பர்களே..!!

இதுவரை குடும்ப ஸ்தானமான இரண்டாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் சகோதர ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

சகோதர ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான லாப ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். அயல்நாட்டு வேலை வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.

குரு ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழல் அமையும். தனவரவுகளின் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். மருத்துவம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

குரு ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். எதிர்பார்த்த சில விஷயங்கள் கைகூடிவரும். நிபுணர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் லாபத்தை மேம்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். கௌரவப் பொறுப்புகளால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

குரு நின்ற பலன்:

குரு சகோதர ஸ்தானத்தில் நிற்பதால் பூர்வீக சொத்துக்களை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். எதிர்பாராத சில உதவிகளால் கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள்.

குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

மனதளவில் நினைத்த சில பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி கவனத்தோடு செயல்படவும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

மற்றவர்களை எதிர்பார்க்காமல் செயல்களை நீங்களே செய்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவதால் நெருக்கடிகள் குறையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

மனதளவில் திருப்தியற்ற சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளிவட்டார தொடர்புகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

உறவுகளின் வழியில் புரிதல் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் மேம்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையும், நெருக்கமும் அதிகரிக்கும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் பிறக்கும். தந்தை வழியில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பது தொடர்பான எண்ணங்கள் கைகூடிவரும்.

உத்தியோகஸ்தர்கள்:

பணிபுரியும் இடத்தில் சில சிக்கலான சூழ்நிலைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுகொடுத்துச் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதில் விரயமும், தாமதமும்
ஏற்படும். வேலை மாற்றம் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

வியாபாரிகள்:

வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தால் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மறைமுக தடைகளால் கிடைக்க வேண்டிய சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

கலைஞர்கள்:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். திறமைக்குண்டான பாராட்டுகளும், மதிப்புகளும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகளுக்கு கட்சி தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். உயர்மட்ட அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்பத்தினரிடையே ஒத்துழைப்பு கிடைக்கும்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பாலும், சேமிப்புகளின் மூலமாகவும் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்தோடு இருப்பது பயனற்ற விரயங்களை தவிர்க்கும்.

வழிபாடு:

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகளும், மனக்குழப்பமும் நீங்கி தெளிவுகள் பிறக்கும்.

மீன ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியானது 70/100 மதிப்பெண்களை பெற்றிருப்பதால் நீண்ட நாட்களாக புரியாத சில விஷயங்களில் தெளிவு ஏற்படும்.

மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.
 

Latest ads

Back
Top