தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.
சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.
காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் #படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து #வைக்கப்படும்.
நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.
நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
1. ஏழ்மை வராது
2. அன்பு கிடைக்கும்
3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
4. ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
6. கல்வி ஞானம் பெருகும்
7. உத்யோக உயர்வு
8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
9. மன அமைதி கிடைக்கும்.
10. தேக ஆரோக்கியம்
#நவராத்திரியில் கொலு வைக்கும் முறை.
#ஒன்பது படிகள் :
#முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற #தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
#இரண்டாவது படியில் இரண்டறிவு #கொண்ட நத்தை, சங்கு #போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
#மூன்றாவது படியில் மூன்றறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு #போன்ற பொம்மைகள் இடம் #பெற வேண்டும்.
#நான்காவது படியில் நான்கு அறிவு #கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் #பெற வேண்டும்.
#ஐந்தாவது படியில் ஐந்தறிவு #கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
#ஆறாவது படியில் ஆறு அறிவு #படைத்த_உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
#ஏழாவது படியில் மனிதனுக்கு #மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் #பெற வேண்டும.
#எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
ஒன்பதாவது படியில் ப்ருஹ்மா விஷ்னு சிவன் அவர்களது தேவிகளான லக்ஷ்மி, ஸரஸ்வதி பார்வதி வைக்கலாம். நடு நாயகமாக ராஜ ராஜேஸ்வரி வைக்கலாம்.
நைவேத்ய பொருட்கள்.
புரட்டாசி மாதத்திற்கு நைவேத்ய பொருள்:-சக்கரை.
ஞாயிறு==பாயஸான்னம்.
திங்கள்=பால்.
செவ்வாய்==வாழைப்பழம்
புதன்=-வெண்ணைய்.
வியாழன்==-சக்கரை
வெள்ளி==வெள்ளை சக்கரை
சனி==பசு நெய்.
திதி==ப்ரதமை-=நெய்; துதியை=சக்கரை; த்ருதியை=பால்; சதுர்தி=பக்ஷணம்; பஞ்சமி வாழைபழம்; சஷ்டி=தேன்; ஸப்தமி=வெல்லம்; அஷ்டமி=தேங்காய் நவமி==நெல்பொரி; தசமி= கறுப்பு எள். அமாவாசை==பாயசம்;
நட்சத்திரம்==ஹஸ்தம்=ஹல்வா; சித்திரை=வடை; சுவாதி==தாமரை ரசகம்; விசாகம்==பூர்ணயம்; அனுஷம்==சக்கரை வள்ளி கிழங்கு;.கேட்டை=வெல்லம்
மூலம்=அவல்; பூராடம்=திராக்ஷை;;உத்திராடம்==பேரிட்சம் பழம்;
யோகம்:-மாகேந்திரம்==கசேரு; வைத்ருதி=கருணைகிழங்கு தூள்;விஷ்கம்பம்=வெல்லம்; ப்ரீதி=தேன்; ஆயுஷ்மான்=நெய்; ஸெளபாக்கியம்=பால்; சோபனம்=தயிர்; அதிகன்டம்=மோர்;சுதர்மம்=அப்பம்;
த்ருதி=வெண்ணைய்; சூலம்=வெள்ளரிக்காய்;
கரணம்:--சதுஷ்பாதம்=தயிர்; கிம்ஸ்துக்னம்=தேன்; பவம்=கம்சாரம்; பாலவம்=பாலேடு; கெளலவம்=பேணி; தைதுளை=கொழுக்கட்டை; கரம்=பூரி
பத்ரம்=ஹல்வா; சகுனி=எள்=; நாகவம்—நெய். வணிஜை=லட்டு.;