Garuda mantras to remove doshas and give health

praveen

Life is a dream
Staff member
தோஷங்களை நீக்கி ஆரோக்கியம் தரும் கருட மந்திரங்கள்

நாராயணனின் வாகனமாக இருப்பவர் கருட பகவான். இவரை பெரிய திருவடி என அழைப்பது வழக்கம். கருட பஞ்சமி எனும் அற்புத நாளில் அவருக்குரிய மந்திரங்களை உச்சரித்து அவரின் அருளைப் பெற்றிடுவோம்.

பெரிய திருவடி என அழைக்கப்படுபவர் கருட பகவான்.

ஆபத்து, மரண பயம், பகை விலகி நன்மை அளிப்பவர் கருடன்.

நம்முடைய கர்ம வினை காரணமாக தான் நாம் இந்த பூவுலகில் பிறப்பெடுக்கின்றோம். ஒருவர் உயர்வதும், தாழ்வதும் அவருடைய கர்ம வினையால் அமையக்கூடிய ஜனன கால ஜாதக கிரக அமைப்பால் தான்.
நம்முடைய ஜனன ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய தோஷங்களை நீக்க வல்லமை பொருந்தியது கருட பகவானுக்குரிய மந்திரங்கள்
.
கீழே குறிப்பிட்டுள்ள கருடனுக்குரிய காயத்ரி மந்திரங்களை 48 நாட்கள் முறையாக உச்சரித்து அதற்கான பலன்களைப் பெற்று மன பயம் நீங்கும்.

விஷ ஜந்துக்களால் இருக்கும் ஜாதக தோஷங்கள் நீங்கும். நம்மை அறியாமலேயே, இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்குள் ஒரு சக்தி பிறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை

கருடாழ்வார் மந்திரங்கள்

கருட காயத்ரி மந்திரம் : Garuda Gayatri Mantra


ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸூவர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

நாக சதுர்த்தி, கருட பஞ்சமி விரதத்தால் கால சர்ப்ப தோஷம் தீரும், கணவரின் ஆயுள் அதிகரிக்கும்

பொருள்:
பரம புருஷனை அறிந்து கொள்வோம். சொர்ணத்தைப் போல ஒளிவீசக்கூடிய அவரை நினைத்து நாம் தியானம் செய்வோம். கருட பகவானான அவர் நம்மை காத்தருளுவார் என்பது தான் இதன் பொருள்.

*இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வர விஷ ஜந்துக்களால் ஏற்படும் ஆபத்துக்கள் நீங்கும். தத்துவ அறிவு உண்டாகும். நாராயணனின் அருள் கிடைக்கும். ஆபத்து, மரண பயம், பகை விலகி நன்மை உண்டாகும்.

கருட மந்திரங்கள்

ஓம் ஸ்ரீ காருண்யாய
கருடாய வேத ரூபாய
வினதா புத்ராய
விஷ்ணு பக்தி பிரியாய
அமிர்த கலச ஹஸ்தாய
பஹு பராக்ரமாய
பக்ஷி ராஜாய சர்வ வக்கிர
சர்வ தோஷ, விஷ சர்ப்ப
விநாசனாய ஸ்வாஹா

கருட தியான மந்திரம் : Garuda Dhyana Mantra

அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்
ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.
க்ஷிப ஓம் ஸ்வாஹா


1723183304779.webp
 
Back
Top