• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dhanam after death

ண மந்திர ஜபம். ---உபவீதி----ப்ராணாயாமம் ----- ப்ராசீனாவீதி

------------ கோத்ரஸ்ய---------சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அஸ்ய அஹணி பிது: ப்ரேதஸ்ய முமூர்ஷோ ப்ராண உத்க்ரம ண காலே ப்ராணானாம் ஸக உத்க்ரமண ஸித்தியேர்த்தம் மோக்ஷ ஸாம்ராஜ்ய ஸித்தியர்த்தம் அக்ஷய புண்ய லோக அவாப்த்தியர்த்தம் பரம பத ப்ராப்தியர்த்தம் கர்ண மந்திர ஜபம் கரிஷ்யே.



தாயார் அல்லது தகப்பனார் தலையை புத்ரன் தனது வலது தொடையில் வைத்துக்கொண்டு ஒரு தர்பத்தை வலது காதில் நுனி படும்படி வலது கையால் பிடித்து கொண்டு குனிந்து காதர்கே கர்ண மந்திரம் ஜபிக்க வேண்டும்.



ஆயுஷ: ப்ராணம் சந்தனு; ப்ராணாத் அபானம் சந்தனு; அபானாத்து வ்யானம் சந்தனு; வ்யானாது சக்ஷஸ் சந்தனு; ஶ்ரோத்ராது மனஸ் சந்தனு; மனஸ் வாசம் சந்தனு;வாச ஆத்மானம் சந்தனு; ஆஹ்மன ப்ருத்வீ சந்தனு;ப்ருத்வ்யா அந்தரிக்ஷம் சந்தனு; அந்தரிக்ஷம் து திவம் சந்தனு; திவஸ்ஸவ சந்தனு;



வடகலையர்கள் , சியாமா சரணம் ஆனவர்கள் அஷ்டாக்ஷரி---- ஓம் நமோ நாராயணாயா 10 தடவை; சரணாகதி மந்திரம் 3 தடவை; ஸ்ரீ மன் நாராயணாயை சரணம் சரணம் ப்ரபத்தயே.ஸ்ரீபதே நாராயணாய நம: சரம ஸ்லோகம் ஒரு தடவை; சர்வ தர்மான் பரிதயஸ்ச மாமேகம் சரணம் வ்ரஜா



அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச ஜபம் ஆனதும் தர்பையை அங்கேயே போட்டு விட்டு ப்ரதக்ஷிணமாக கர்த்தாக்கள் வெளியே வர வேண்டியது.





ஒருவர் இறந்த உடன் நடத்த பட வேண்டிய காரியங்கள்:- கர்ண மந்திர ஜபம். தஹனம், சஞ்சயனம்; நக்ன சிராத்தம்; பாஷாண ஸ்தாபனம்; நித்ய விதி; ஏகோத்திர வ்ருத்தி சிராத்தம்; நவ சிராத்தம்; பங்காளி தர்ப்பணம்; ப்ரபூதபலி. பாஷாண உத்தாபனம்; சாந்தி ஆனந்த ஹோமம்; வ்ருஷப உத்ஸர்ஜனம்;



ஏகாதச ப்ராஹ்மண போஜனம்; ஆத்ய மாசிகம்; ஆவ்ருதாத்ய மாசிகம்; ஷோடசம்; சபிண்டீகரணம்; ஆத்ய சோதகும்பம்; இயல் சேவா காலம்; சுப ஸ்வீகாரம்.



நக்ன சிராத்தம்:-- இறந்தவர்களுக்கு ஏற்படும் ஐந்து விதமான பாதிப்புகளிடமிருந்து விமோசனம் ஏற்பட செய்ய படுகிறது.



பாஷாண ஸ்தாபனம்:--தடாக தீரம், க்ருஹத்வார ம் என இரு இடங்களில் குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வது.



நித்ய விதி:- ஆவாஹனம் செய்ய பட்ட ஆன்மாவிற்கு தினமும் வாஸ உதகம், தில உதகம், பிண்டங்கள்;அளிப்பது.



ஏகோத்திர வ்ருத்தி சிராத்தம்:- பத்தாம் நாள் வரை தினமும் செய்ய வேண்டிய சிராத்தம்.



நவ சிராத்தம்:- 1,3,5,7,9,11,ஆகிய ஒற்றைபடை நாட்களில் செய்ய வேண்டிய சிராத்தம்.



பங்காளி தர்ப்பணம்:- பத்தாம் நாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து பத்து நாளைக்கும் சேர்த்து தர்ப்பிக்க வேண்டும். இறந்தவரை விட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் செய்து கொண்டு தர்பிக்க வேண்டும். கர்த்தாக்கள் பிறகு தர்பிக்க வேண்டும்.



ப்ரபூத பலி:- பத்தாம் நாள் 500 கிராம் அரிசி சாதம், உப்பில்லா இட்லி, தோசை, வடை, தேங்குழல், வகைக்கு 11 எண்ணிக்கை, அதிரசம், எள்ளூருண்டை, வகைக்கு 11 எண்ணிக்கை, தேங்காய்-1; இளனீர்-1; அகத்திக்கீரை1 கட்டு; துண்டுகளாக்கி வேக வைத்த வாழைக்காய்-1; வேக வைத்த பயறு 50 கிராம்; வெற்றிலை 10; பாக்கு 10, வாழைப்பழம் 10, பழைய புடவை அல்லது வேட்டி-1; சமர்ப்பிக்க வேண்டும்.



இறந்தவர் சுமங்கலியாக இருந்தால் பலியில் சில விசேஷம் உண்டு. கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும் மனைவிக்கு புடவை போற்றுதல் உண்டு.



பாஷாண உத்தாபனம்:- ஆன்மாவை யதாஸ்தானம் செய்து கல்லை எடுப்பது,பலியை ஜலத்தில் சேர்ப்பது.கர்த்தாக்கள் க்ஷவரம். சாந்தி ஆனந்த ஹோ மம்; சாரு ஸம்பாவனை; அப்பம் பொரி ஓதி இடுதல்.

பத்து கரைத்த பெண்ணுக்கு வெள்ளி கிண்ணம் பரிசு.



பதினொன்றாம் நாள் :-- புண்யாஹாவசனம்; நவ சிராத்தம்; வ்ருஷப உத்ஸர்ஜனம்; ஆத்ய மாசிகம்; ஆவ்ருதாத்ய மாசிகம் இத்யாதி.



12ம் நாள்:- புண்யாஹாவசனம்; ஒளபாசனம்; ஶோடசம்; சபிண்டீகரணம்; தானங்கள்; சோதகும்பம்; சேவா காலம். ஐயங்கார்களுக்கு வேத ப்ரபந்த பாராயணங்கள்;



13ம் நாள்:- சேவை; சாத்துமுறை; உபன்யாசம். ஊனம், மாசிகம், சோதகும்பம் நாள் குறிக்க உதவி; ஐயங்கார்களுக்கு. உதக சாந்தி, நவகிரஹ ஹோம ம். ப்ராஹ்மண போஜனம் ஐயருக்கு.



14 ம் நாள்:- பெண்கள் கசப்பு எண்ணைய் என்று எண்ணைய் தேய்த்து குளிப்பார்கள். பத்திய சாப்பாடு. பிறகு அவரவர் ஊருக்கு கிளம்புவார்கள்.









நித்ய விதி :- முதல் நாள் முதல் பத்தாம் நாள் வரை.



மணல் 1 பாண்டு. பால் 1 கப் ; தயிர் 1 கப் ; இள நீர் -1.தினமும்.; கருப்பு எள் 100 கிராம்; தேன் 1 பாட்டில்; நெய் 100 கிராம்;செங்கல்-16; அல்லது 2 மண்தொட்டி; இஞ்சி தினமும் ஒரு துண்டு; வெல்ல சக்கரை 100 கிராம்.



முதல் நாள் அரிசி 4x 250 கிராம்; பயற்றம் பருப்பு (பாசிபருப்பு) 4 x 100கிராம்; வாழைக்காய் 4 எண்ணம்.

இரண்டாம் நாள்:-4----4-----4; மூன்றாம் நாள் 6------6------6; நாங்காம் நாள் 6-----6-----6; ஐந்தாம் நாள் 8---8----8



ஆறாம் நாள்:- 8-----8------8; ஏழாவது நாள் 10------10-----10; எட்டாவது நாள் 10-----10-----10; ஒன்பதாம் நாள் 12----12-----12; பத்தாம் நாள் 12-------12-------12; மொத்தம் 20கிலோ பச்சரிசி; 8கிலோ பாசி பருப்பு; 80 நம்பர் வாழைக்காய்; தக்ஷிணை 80 பேருக்கு தலைக்கு 100ரூபாய் வீதம் 8000 ரூபாய்.







பத்தாம் நாள்:- பச்சரிசி 2 கிலோ; தேங்காய்-4; வெற்றிலை 50; பாக்கு 50 கிராம்; வாழைபழம் 12; சந்தனம் 10 கிராம்; நெல் 50 கிராம்; தேன் 50 கிராம்; தயிர் 100 கிராம்; நெய் 250 கிராம்; கட்டி கற்பூரம் 50 கிராம்; பித்தளை சொம்பு-1; தீபெட்டி1; மாவிலை கொத்து 4; விசிறி 1; பஞ்ச பாத்திர உத்திரிணி-1;விறாட்டி 75; சிறாக்கட்டு 10 நம்பர்; மணல்- 1 பாகெட்.; தொடுத்த பூ 2 முழம்;



பத்து கொட்ட:- 500 கிராம் அரிசி சாதம்; உப்பில்லாமல் பக்ஷணங்கள்:- இட்லி-11 நம்பர்; தோசை 11; வடை 11; அதிரசம்-11; எள்ளுருண்டை 11; தேங்குழல் 11; துண்டுகளாக்கி வேக வைத்த ஒரு வாழைக்காய் கறி; பயறு 50 கிராம் வேக வைத்தது; தேங்காய் -1; இள நீர்-1; வெற்றிலை-10; பாக்கு-10; வாழபழம்-10; அகத்திகீரை 1 கட்டு.

அம்மாவின்/அப்பாவின் பழைய புடவை/வேஷ்டி-1;



பத்து கரைத்த பெண்ணுக்கு வெள்ளி கிண்ணம் பரிசு;



சாந்தி-----ஆனந்த ஹோமத்திற்கு :- அரிசி 500 கிராம்; தேங்காய்-2; வெற்றிலை, பாக்கு, பழம் -6;மாவிலை கொத்து, துளசி; நெல் 100 கிராம்;



12 கிலோ அரிசி; 24 வாழைக்காய்; 12 பேருக்கு தலைக்கு 500 ரூபாய் தக்ஷிணை; க்ஷவரம்- ஏற்பாடு.



வைதீகாள் 2பேர் தக்ஷிணை ப்ரம்ம தண்டம், சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம் செய்ய 4000 ரூபாய், வாத்தியார் தக்ஷிணை 5000ரூபாய்;





11 வது நாள்:- மஞ்சள் பொடி 25 கிராம்; சந்தனம், குங்குமம், வெற்றிலை 25; பாக்கு 25 கிராம்; தொடுத்த பூ 5 முழம்; உதிரி பூ 100 கிராம்; துளசி 10 ரூபாய்க்கு;கலச வஸ்த்ரம்-1; தேங்காய்-4; வாழைபழம் 12; கட்டி கற்பூரம் 20 கிராம்; நெய் 500 கிராம்; மாவிலை கொத்து-4; அரிசி-1 கிலோ; தேன் 50 கிராம்; எள்ளு 100 கிராம்



பித்தளை சொம்பு-1; நெல் 25 கிராம்; பசும்பால் 250க்ராம்;அரிசி மாவு 100 கிராம்; ஆத்து சாமாங்கள்:- பித்தளை கிண்ணம்-6; தட்டு/ட்ரே 4; விசிறி-1; தீப்பெட்டி-1.



ஒத்தனுக்கு வேண்டிய சமையல் சாமாங்கள், தான சாமாண்கள் .9 x5 வேஷ்டி-1; பஞ்சபாத்திர உத்திரிணி-1; பித்தளை சொம்பு-1; தங்க காசு-1; எள்ளுடன் டபரா-1.;8 முழ வேட்டி-1; துண்டு-1; நுனி வாழை இலை-3; அரிசி-1 கிலோ, பாசி பருப்பு 100 கிராம்; வாழைக்காய்-1; குடை1; தடி1; விசிறி1; செறுப்பு1; ஆசன பலகை1. ஒத்தனுக்கு தக்ஷிணை 750 ரூபாய்; வாத்யார் தக்ஷிணை 7500ரூபாய்.



ருத்திர ஜபம்—4 பேர் –6000ரூபாய் தக்ஷிணை; அரிசி 1 1 கிலோ; தேங்காய்-2; வெற்றிலை, பாக்கு, பழம்-6;அரிசி மாவு 100 கிராம்;பசும் பால் 250; நெய் 250;ருத்திர கலசம், கலச துண்டு, தானம்- பித்தலை சொம்பு ஜலத்துடன்; வஸ்த்ரம், தங்கம்; டபராவில் எள்ளு;



பதினோராம் நாள் காய்ந்த வேஷ்டி துண்டு 2 தேவை. ஈரம் இல்லை. ஒருத்தனுக்கு சமையலுக்கு ஒருவருக்கு தனியாக கொடுக்க வேண்டும். புண்யாஹ வசனம், ருத்ர ஹோம ம் ,ரிஷபோத்ஸர்ஜனம் கரிஷ்யே என்று ஸங்கல்பம். திதி வார யோக கரண, லக்ன தோஷ , ப்ராஜாபத்ய இத்யாதி தோஷ நிவ்ருத்தியர்த்தம் ஹிரண்ய தானம் கரிஷ்யே.



வடை, அதிரசம், எள்ளுருண்டை, தேங்குழல் இரண்டிரண்டு போட வேண்டும். சமையலுக்கு வாழைக்காய், பாகற்காய், புடலங்காய்,அவரைக்காய், சேப்பங்கிழங்கு,, பயத்தம் பருப்பு பாயசம், நுனி இலை 4.



கர்மா செய்த சொம்பில் ருத்ரஆவாஹனம்.சொம்பிற்கு நூல் சுற்றி மாவிலை, கூர்ச்சம், தேங்காய் வைத்து சந்தனம், குங்கும்ம் இட்டு வைக்க வேண்டும் ருத்ர ஹோமத்திற்கு 50 கிராம் நல்ல எண்ணேய், 50 கிராம் பச்சைபயறு போட்டு ஹோமம். தனியாக ஒருத்தனுக்கு 50 கிராம் நெய், 500 கிராம் சுர்ய காந்தி எண்ணய்,



மறு நாள் மாசிகத்திற்கு 3 பேருக்கு 500 கிராம் சூர்ய காந்தி எண்ணை, 100 கிராம் நெய் தனியாக வாங்கி கொடுக்கவும்.



தானம்:- பித்தளை டபராவில் எள்ளு, 9X5 வேஷ்டி; தங்கம் 400 மில்லி கிராம்,



ரிஷபோதுத்சர்ஜன ஹோமம். ஹோமத்திற்கு கற்பூரம், தீப்பெட்டி, விராட்டி, சுல்லி, 6 செங்கல், மணல்; நெய் 250 கிராம்.



கும்பத்தில் சாம்ப பரமேஸ்வரம் ஆவாஹயாமி. 1 உபசார பூஜை; அர்ச்சனைக்கு உதிரி புஷ்பம் தேவை. 2 வாழைபழம், தாம்பூலம் நைவேத்யம்.பசும்பால் 250 மில்லி. அத்தி இலை தேவை.பேப்பர்



தீட்டு சமையல் தனியாக செய்ய வேண்டும். மடி சமையல் தனியாக வேறு இடத்தில் செய்ய வேண்டும்.







ஆத்ய மாசிகம்:- அரிசி; நறுக்கிய வாழைகாய்; வேக வைத்த பயறு; 50 கிராம்; சவுக்கு விறகு உடைத்தது 10 கிலோ; விராட்டி 200; செங்கல்-30; உமி 2 பாக்கெட்;வீட்டிற்குள் செய்ய கூடாது.வீட்டின் வெளியே அல்லது மொட்டை மாடியில் ; ஷாமினா மேலே போட்டுக்கொண்டு செய்யலாம்.



காளை கன்று குட்டிக்கு துண்டு-1; மாலை 1; வாழைபழம்-4, ; சுமங்கலியாக இறந்தால் பசு மாடு கன்று இரண்டிற்கும் பூஜை மாட்டிற்கு புடவை; மாலை1; வாழைப்பழம்-6. மாடு, கன்று கொண்டு வருபவனுக்கு

500ரூபாய். மாடு, காளை கன்று கிடைக்காவிடில் மட்டைதேங்காயில் ஆவாஹனம் செய்து பூஜை செய்யலாம்.





12ம் நாள் சபிண்டீகரணம்:-

மஞ்சள் பொடி 25 கிராம்; சந்தனம்; வெற்றிலை25; பாக்கு 25 கிராம்; தொடுத்த பூ 5 முழம்; உதிரிபூ 10 ரூபாய்; தேங்காய்-4; வாழைபழம் 12; கட்டி கற்பூரம் 20 கிராம்; நெய் 500 கிராம்; மாவிலை கொத்து 4; அரிசி 1 கிலோ; தேன் 50 கிராம்; எள்ளு 100 கிராம்; பித்தலை சொம்பு1; கலச வஸ்த்ரம்1;துளசி5 ரூபாய்; நெல் 50 கிராம்;பித்தளை கிண்ணம்10; தட்டு/ட்ரே4; விசிறி1; தீபெட்டி1; நல்ல எண்ணய் 100 மில்லி; திரினூல் 2 ரூபாய்.



த்வாதச சிராவணாலுக்கு 12 பித்தளை டபரா அரிசி போட்டு கொடுக்க வேண்டும். யம தர்ம ராஜா தர்பாரின் ஜூரிகள் இவர்கள்.. தக்ஷிணை 12000ரூபாய்.



பாதேய சிராத்தம் :8முழம் வேஷ்டியில் தயிர் சாதம், ஊறுகாய் கட்டி தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும்.



ஷோடசம்:- 16 பேருக்கு 8 கிலோ அரிசி, 16 வாழைக்காய் வெற்றிலை பாக்கு தக்ஷிணை 4800 ரூபாய்;



12 மாசிகமும், 4 ஊண மாசிகமும் செய்த பிறகு தான் ப்ரேதத்தை பித்ருவாக மாற்ற முடியும். கர்த்தா ஒரு வருட காலம் உயிருடன் இருப்பார் என்ற உறுதியிம் இல்லாததால் இன்று 16 மாசிகமும் அரிசி, வாழைகாய், தக்ஷிணை கொடுத்து முடிக்கிறோம்.



இன்று இவர்களுக்கு பார்வண விதிபடியும் சிராத்த மாகவே செய்து சாப்பாடு போடலாம். நேரம் அதிக ம் ஆகும். மறு நாள் 13ம் நாள் ப்ரேத ஸ்வரூபத்தை பித்ருவாக மாற்றலாம். வசதி உள்ளவர்கள் செய்யலாம்.





3 பிராமணாளுக்கு சிராத்த சமையல் ; எண்ணய், சீயக்காய் கொடுக்க வேண்டும் 3 பித்தளை சொம்பு ஜலத்துடன் தானம்; 3000ரூபாய் தக்ஷிணை. 9 x 5 வேஷ்டி-3; குடை3, விசிறி3, தடி3; ஆசன பலகை-3, செருப்பு3.



ஒளபாசனம். மாத்யானிகத்திற்கு பிறகு மாசிகம் சிராத்தம் 3 பேர்; சந்தனம், அக்ஷதை,எள்ளு,தீபெட்டி கற்பூரம், உதிரி புஷ்பம், தொடுத்த புஷ்பம், 2 கிண்ணம், ; மரகரண்டி; அனுக்ஞை; பார்வண ஏகோதிஷ்ட சபிண்டீ கரண சிராத்தம் விசுவேதேவர் இப்போது கால காமர் என்ற பிரிவிலிருந்து வருவர்; பித்ருக்கள் ;ஏகோதிஷ்டம்= ப்ரேதம்



திதி வார லக்ன தோஷ நிவ்ருத்தியர்த்தம் ப்ராஜாபத்ய க்ருச்சர ஹிரண்ய தானம். விசுவேதேவருக்கு சதுரம்; பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹருக்கு முக்கோணம், ப்ரேதம் டு பித்ருவுக்கு வட்டம். என்று போட்டு காலலம்பலாம்.







சோத கும்பம்- சமாராதனை சமையல்; புண்யாஹா வசனம்; தக்ஷிணை2000ரூபாய்; 9 x 5 வேஷ்டி-1. பித்தளை சொம்பு-1, பஞ்ச பாத்திர உத்திரிணி-1, குடை-1; விசிறி-1; தடி-1; ஆசனபலகை -1; செறுப்பு-1; இள நீர் -1,



ஈயம் பூசிய டபராவில் பானகம், நீர்மோர் கொடுக்க வேண்டும். தாம்பூல தானம், பழங்கள், காய்கள் தானம்;



தானம்:- வைகரணீ பசு மாடு தானம், மட்டை தேங்காய்; காமதேனு, ருண தேனு, மோக்ஷ தேனு;பாப தேனு 4 மட்டை தேங்காய்; நெளகா தானம் கரும்பில் ஓடம் செய்து அதி காமாக்ஷி விளக்கில் எண்ணைய், திரி போட்டு ஏற்றி விளக்கு ஜோதி நம் பக்கம் பார்த்திருக்க தானம், ஒவ்வொன்றிர்க்கும் தக்ஷீணை ;



தச தானம்:- பூமி, பசு, தங்கம், வெள்ளி; நெய், உப்பு, வெல்லம், எள்ளு, 9 x 5 வேஷ்டி;தான்யம்.

பஞ்ச தானம்:- 9 x 5 வேஷ்டி, தீபம், மணி, புத்தகம், ஜலத்துடன் பித்தளை சொம்பு.

ருத்ராக்ஷம், சிவலிங்கம், சாலகிராமம்; கம்பளம், கோபி சந்தனம்; விபூதி சம்படம். ஜமக்காளம், போர்வை, தலை காணி;

வாத்யார் தக்ஷிணை 12000ரூபாய்;



சுப ஸ்வீகரணம். 13 ம் நாள்.

உதக சாந்தி அண்ட் நவகிரஹ ஹோமம்:-



எவெர்சில்வெர் பேசின்-1. நல்ல எண்ணெய் 200 கிராம். எல்லோரும்முகம் பார்த்து தானம் செய்ய வேண்டும் தக்ஷிணையுடன்.

உதக சாந்திக்கு ஒரு பித்தளை குடம். நவகிரஹத்தீற்கு ஒரு பித்தளை சொம்பு. 4 வாத்யார் தக்ஷிணை 12000 ரூபாய். வாத்யார் தக்ஷிணை 20000 ரூபாய். சரம ஸ்லோகம் படித்தல், பொரி உருண்டை, பெண் மாப்பிள்ளைக்கு டிரஸ். 10ம் நாள் சரம ஸ்லோகம் படிக்கும் வழக்கமும் உள்ளது.



கோதுமை 2கிலோ; அரிசி 3 கிலோ; உளுந்து 1 கிலோ; எள்ளு 100 கிராம்; நவதானிய செட்; நவகிரஹ வஸ்த்ரம் செட்; நவகிரஹ ஹோமகுச்சி 1 செட்; அரச சமித்து 500; தர்ப்பை 5 கட்டு; நாயுருவி சமித்து ஒரு கட்டு. கலச துண்டு-2; தொடுத்த புஷ்பம் 12 முழம்; நூல் கண்டு, மாவிலை கொத்து 10; பழங்கள், உதிரி புஷ்பம்.500 கிராம் தேங்காய்-6; வாழைபழம் 25; கட்டி கற்பூரம் 25 கிராம்;



மஞ்சள் பொடி 50 கிராம்; சந்தனம் 50 கிராம்; குங்குமம் 50 கிராம்; வெற்றிலை 50, பாக்கு 50 கிராம்; ஊதுபத்தி 1 பாக்கெட்; திரி நூல்; நெய் 500 கிராம்; பச்சை கற்பூரம் 1 டப்பா; ஏலக்காய் பொடி, குங்கும பூ; அருகம் பில் 2 கட்டு; எலிமிச்சம் பழம்12; செங்கல் 16; மணல் 1 பான்டு; சிறாக்கட்டு 5; விராட்டி 30; ஹவிஸ் 250 கிராம்; நுனி வாழை இலை 10; பித்தளை கிண்ணம்6; தட்டு/ட்ரே4;



ஆத்து சாமான் கள்:- குடம்-1; சொம்பு-1; பஞ்ச பாத்திர உத்திரிணி 1; சந்தன பேலா, குங்கும சிமிழ்; மணி; தூப கால், தீப கால், குத்து விளக்கு, எண்ணை ;திரி. தீப்பெட்டி;கற்பூர தட்டு ; ஊதுவத்தி ஸ்டேண்ட்; விசிறி; கத்தி; கத்திரிகோல்; மனை பலகை/தடுக்கு.;பழைய பேப்பர்;வீட்டு நபர்களின் பெயர்=சர்மா; கோத்ரம்; நக்ஷத்ரம், ராசி உறவு முறை இவைகளை எழுதி வாத்யாரிடம் கொடுத்து விடவும்.





தஹன தின க்ரியைகள்:--



பலர் அசுப காரியங்கள் பற்றி பேசுவது தெரிந்து கொள்வது கூட தவறாக நினைக்கிறார்கள். தினமும் அசுப காரியங்களில் ஈடு படும் வாத்யார்கள் பிண ஊர்தி ஓட்டுபவர்,இல்லத்தில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தானே இருக்கிறது. எவரும் இதிலிருந்து தப்பித்துவிட முடியாது.



தஹனம் இறந்தவர்களுக்கு செய்யும் முதல் நாள் க்ரியை.மரணத்தால் ஆன்மாவை விட்டு பிறிந்த சரீரத்திற்காக செய்யபடும் கர்மா.



ஜீவ ப்ராய சித்தம் சாமாங்கள் ஏற்பாடுகள். ஐயங்காருக்கு ஸ்ரீ சூர்ண பரிபாலனம். அக்னி நிர்ணயம்.





ப்ரேதாக்னி ஸந்தானம்; உதபனாக்னி; கபாலாக்னி;பைத்ருமேதித ப்ராயஸ்சித்தாதி ஹோமங்கள். ஸ்மசானத்தில் க்ரியைகள். தஹனம் செய்ய பட வேண்டிய ஸ்மசானம், அல்லது நகர்மானால் எலக்ற்றிக் க்ரிமடோரியம் போன்ற இடத்தில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு புக்கிங்க் செய்ய வேண்டியது.



ஆதார் கார்டு ஜெராக்ஸ் காபி. டாக்டர் சர்டிபிகேட், காபி எடுத்தி கொள்வது. க்ரிமடோரியத்தில் பணம் கட்டி ரசீது, தஹன சான்று பெற்று கொள்வது.கர்ண மந்திரம் சொல்ல வேண்டியது.பூஜை அறையிலிருந்து கங்கை ஜல சொம்புகள்,மற்றும் தேவையானவற்றை எடுத்து கொண்டு பூஜை அறையின் கதவை சாற்றி விட வேண்டியது. அன்று வீட்டில் சமையல் செய்ய கூடாது. ஆதலால் கேடரரிடம் தேவையான வைகளை ஆர்டர் கொடுத்தல். உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டியது.



சவம் குளிப்பாட்டிய ஜலம் வெளியே ஓட க்கூடிய இட த்தில் தெற்கு நுனியாக சில தர்ப்பங்கள் போட்டு அதன் மீது சவத்தை தெற்கில் தலை வைத்து படுக்க வைக்க வேண்டும்.துளசி பக்கத்தில் போட வேண்டும். தலை மாட்டில் தெற்கு நோக்கி விளக்கு எரிய வேண்டும். வாத்யாருக்கு உடன் தெரிவிக்க வேண்டியது.



வாத்யாருக்கு உங்கள் வேதம், சூத்ரம், இறந்தவர் உறவு தெரிவிக்கவும். தேவையான சாமாங்கள்:- பாடை=ஆஸந்தி; பச்சை மூங்கில்; 9 அடி நீளத்தில் இரண்டு; பச்சை கீற்று-2;குறுக்கு கொம்புகள் 12; கப்பாணி கயிறு 2 முடி; நெல் பொறி 100 கிராம்; நெய் 200 கிராம்; எள் 50 கிராம்; கற்பூரம் 4 கட்டி;;



தீப்பெட்டி-1;வெற்றிலை12; பாக்கு 6; பழம்-2; புஷ்பம் 2 முழம்; கரை இல்லாத வெள்ளை மல் துணி 2 மீட்டர்; சுமங்கலி ஆனால் சிவப்பு துணி; விராட்டி8; சுள்ளி 12; அத்தி இலை 1 கொத்து; மண் பானை மீடியம் சைஸ்-1;; சிறிய மண் மடக்கு 4; இரண்டு பழைய துண்டுகள்,/டவல்;



ஆத்மா வேறு சரீரம் வேறு என்ற சித்த சுத்தி ஏற்படுவதற்காகத்தான் கர்மானுஷ்டானம். கடைசியில் இந்த தேஹத்தையும் ஆஹூதியாக தேவதைகளுக்கு ஹோம ம் செய்துவிட வேண்டும் என்பதற்குத்தான் ப்ரேததிற்கு நெய்யை தடவி அதையும் ஒரு திரவியமாக வேத மந்திரங்களோடு செய்ய வேண்டும் என தர்ம சாஸ்திரம் விதித்து இருக்கிறது.



இறந்தவுடன் ஏற்படும் நிலை ப்ரேத சரீர நிலை. அந்த நிலையிலிருந்து பித்ரு நிலையை அடைய செய்யும் கர்மாக்கள் பைத்ரு மேதிக கர்மாக்கள் என்று சொல்ல படுகின்றன. பைத்ரு மேதிக கர்மாவை செய்யா விட்டால் இறந்தவர் ப்ரேத சரீரத்திலிருந்து விடுபடுவதில்லை.புண்ய சரீரம் கிடைப்பது இல்லை. ஸுகானுபவம் இல்லை.துக்கத்தில் மூழ்கியவர்களாக இருக்கிறார்கள்.



இறந்தவுடன் யம கிங்கரர்கள் இந்த ஸூக்ஷ்ம சரீரத்தோடு கூடிய ஜீவனை காற்று ரூபமாக உடனே யம தர்மராஜன் முன் கொண்டு நிறுத்து கிறார்கள். அவர் பார்த்து இவனை அவன் வீட்டிலேயே விட்டு விடு . 12 நாட்கள் கழித்த பிறகு நம் சபைக்கு அழைத்து வா என்று உத்திரவு போடுகிறார்.





இவை 48 நிமிடத்தில் நடை பெறுகிறது.



ஆகையால் நாமும் ப்ராயஸ்சித்தம் போன்ற கர்மாக்களை செய்து அந்த ஜீவனுக்கு உரிய அக்னியை தயார் செய்து இறந்தவரின் ஆசிரமத்திற்கும், வேதத்திற்கும் தகுந்த படி உயிர் போன பிறகு 3 மணி நேரம் காத்திருந்து பைத்ரு மேத கர்மா ஆரம்பிக்க வேண்டும்.



ஸ்தூல சரீரம் எரிக்க பட்ட வுடன் ஸூக்ஷ்ம சரீரம் பிண்டாகாரமாக ஆகி யம புரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாம் உபயோகபடுத்தும் தர்பை விஷ்ணுவினுடைய ரோமத்திலிருந்து உண்டானது.அந்த தர்பையின் மூலத்தில் ப்ரம்மா, மத்தியில் ஜனார்த்தனர், நுனியில் சங்கர் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது.



எள்ளும் விஷ்ணுவினுடைய வியர்வையிலிருந்து உண்டானது. தர்பை, எள்ளு, துளசி இவைகள் பிள்ளை இல்லாதவரையும் துர்கதி அடையாமல் காப்பாற்று கிறது. இறந்த தினத்திலிருந்து பத்து நாள் வரை தினமும் உதக பிண்ட தானத்தினால் முறையாக பூர்ண சரீரம் பெறுகிறது. பிறகு ப்ரபூத பலி கர்மாவினால் பசி தாகம்



தீர்ந்து பிறகு 11ம் நாள் வ்ருஷோத்ஸர்ஜத்தினாலும், ஆத்ய மாசிகம், பதினைந்து மாசிகம் முதலியவைகளால் பைசாச பாத நிவ்ருத்தி ஏற்படுகிறது. தானங்களால் யமபுரம் போகும் போது ஏற்படும் ஸகல துக்கமும் போகின்றது.ஸபிண்டீகரணத்தினால் ப்ரேதத்வ நிவ்ருத்தி ஏற்பட்டு பித்ருக்களோடு சேர்க்க படுகிறது.





உத்க்ராந்தி கோதானம், தச தானம், பஞ்ச தானம் இவைகள் இறந்த நாள் அன்றே ப்ராயஸ்சித்ததோடு தவறாமல் செய்வது அளவிட முடியாத பலனை கொடுக்க வல்லது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. தச தானத்தின் அளவும் சொல்ல பட்டிருக்கிறது.



கோ தானம்:- கன்றோடு கூடிய கறக்கும் பசு. பூமி தானம்:- 300 கிலோ நெல் விளைவிக்க கூடிய 20 செண்ட் ஒருவன் போஜனத்திற்கு போதுமான அளவு. எள்ளு:- 25.6 கிலோ; தங்கம்:-18.75 கிராம்; வெள்ளி :-25 கிராம்; நெய்:- 3.2 கிலோ; வேஷ்டி 9x5; தான்யம்:- 307.2 கிலோ; வெல்லம் :-3 கிலோ; உப்பு :-307.2 கிலோ.

Quick Reply​

 
list of Dhaanam materials
 

Attachments

  • 1672370241154.jpg 13th day saman list.jpg
    1672370241154.jpg 13th day saman list.jpg
    327.9 KB · Views: 20
  • 1672370241163.jpg 12th day list.jpg
    1672370241163.jpg 12th day list.jpg
    274.8 KB · Views: 19

Latest ads

Back
Top