• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

brahma yagyam. details.

kgopalan

Active member
ப்ருஹ்ம யஞ்யம் .

தைத்ரீய ஆரண்யகம் இரண்டாம் ப்ரச்னத்தில் இதன் விவரம் உள்ளது.

கிழக்கு, வடக்கு, வட கிழக்கு இவைகளில் ஒரு திக்கை நோக்கி ச் செய்யலாம்.

ஹோமத்திற்கு பிறகு அல்லது மாத்யானிக ஜபத்திற்கு பிறகோ
தேவ தர்பணத்திற்கு பிறகு, வைஸ்வதேவத்திற்கு பிறகேனும் செய்யலாம்.

வேதம் ஒரு ப்ரஸ்னமோ , சில அனுவாகங்களோ முதல் நாள் விட்டதற்கு மேல் தொடங்கி ஜபிக்க வேண்டும்.

இதற்கு அநத்யயன தினம் பார்க்க வேண்டாம் .தர்ப்பாசனம் அல்லது தடுக்கு கீழே போட்டுக்கொண்டு அதன் மேல் உட்கார்ந்து ஜபிக்கவும். கம்பளத்தில் உட்கார்ந்து சொல்லக்கூடாது.

காலை தவறிப்போய் விட்டால் மாத்யாநிகம், வைஸ்வதேவத்திற்க்கு பின்னும் தான் காலமாகும்.அத்யயனமே தபஸ். தபஸே அத்யயனம். .

அத்யயனம் பண்ணாதவன் புருஷ ஸூக்தத்தையாவது பகவத் த்யானத்துடன் சொல்ல வேன்டும். அல்லது காயத்திரியையாவது பத்து தடவை ஜபிக்க வேண்டும்.

வேத பாராயணம் ஆனதும் இதிகாஸ புராணம் படிக்க வேன்டியது. இந்த யக்ஞத்தில் ப்ருஹ்மம் என்ற வேதமே ஆஹூதி த்ரவ்யமாக ஹோமம் பண்ணபடுகிறது. . அத்யயனமே வஷட் காரமாகும். அதனால் தான் இதற்கு அநத்யயன தோஷமே கிடையாது.

ச்ருதியும் இந்த யக்ஞத்திற்கு மேகமே ஹவிஸ் வைக்கும் பாத்ரம், மின்னலே அக்னி; மழை ஹவிஸ்; இடியே வஷட் காரம்; மேக கர்ஜனை அனுவஷட் காரம்;

வாயுவே சரீரம். அமாவாஸ்யையே ஸ்வஷ்டாகாரம்;

இவைகளை இப்படி அறிந்து மழை பெய்யும் போதும்; இடி இடிக்கும் போதும்;. மேகம் கர்ஜிக்கும் போதும் காற்று வீசும் போதும், அமாவாசையின் போதும்

ஒரு ரிக்கையேனும் ஜபித்தாலும், அல்லது ஸத்யம் தப: என்ற மந்த்ரதையேனும் ஜபித்தாலும் ப்ருஹ்ம யக்ஞ அத்யயன பலனை பெறுகிறான் என்கிறது வாஜஸநேயி ப்ராஹ்மணம்.

தேவதார்ச்சனம், பாராயணம், காம்ய ஜபம், யாகத்திற்கு, வேதாங்கங்களை அப்யசிப்பதற்கு , ப்ருஹ்ம யக்ஞத்திற்கும் அனத்தியயன தோஷமில்லை.

ப்ரதி தினம் ஒரு ப்ரச்னம் சொல்லுபவன் அனத்தியயன தினத்திலும் சொல்லலாம்.. பிறப்பு இறப்பு தீட்டு உள்ள போது மட்டும் சொல்ல வேண்டாம்.

ப்ருஹ்ம யக்ஞத்திர்கு பிறகு ராமாயனம், பாகவதம், பகவத் கீதை தினம் ஒரு அத்யாயமாவது படிக்க வேண்டும்.. இரவிற்குள் செளகரியபட்ட போதாவது படிக்கவும்.

அந்தணர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினசரி சிறிதளவாவது சொல்வதற்குத்தான் ப்ருஹ்ம யக்ஞம் என்று பெயர்.

தினசரி காலையில் ஸந்தியாவந்தனம்,ஓளபாசனம் பூஜை முதலிவற்றை முடித்துவிட்டு குரு முகமாக கற்றுக்கொண்ட ஶ்ரீ ருத்ரம், சமகம், புருஷ சூக்தம்,

ஶ்ரீ ஸூக்தம், துர்கா ஸுக்தம், பாக்கிய ஸூக்தம் போன்ற வேத பாகங்களை சிறிதாவது சொல்ல வேண்டும்., அல்லது காயத்ரியாவது சொல்லலாம்

ஆசனத்தின் மீது அமர்ந்து கொன்டு கிழக்கு முகமாக வலது காலை இடது துடை மேல் போட்டுக்கொன்டு .வேதம் சொல்ல வேண்டும்.

வேதம் கற்றவர்கள் முதல் நாள் முடிவடைந்த பகுதியில் தொடங்கி , தொடர்ந்து அடுத்த நாள் சொல்ல வேண்டும்.. இதற்கு பிறகு தேவர்கள், ரிஷிகள், பித்ருக்களுக்கு ஜலத்தால் தர்பணம் செய்ய வேண்டும்.

இதுவே ப்ருஹ்மயக்ஞம் எனப்படும். தேவ, ரிஷி பித்ரு அருளை மிக சுலபமாக பெற்று தரும் இந்த ப்ருஹ்ம யக்ஞ தர்பணம் தினமும் செய்ய வேண்டும்.

க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய ஆரண்யகம் சொல்கிறது: உத்தமம் நாககும் ரோஹதி; உத்தம: ஸமாநானாம் பவதி; யாவந்தகும் ஹவா: அக்ஷய்யஞ்சாபபுநர் ம்ருத்யுஞ் ஜயதி; ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் கச்சதி என்று.

தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்பவர் இறந்த பின்னர் ஸ்வர்க்கம் செல்வர்;

இவ்வுலகில் ஜீவித்திருக்கும் வறை தமக்கு சமமானவர்களுக்குள் சிறந்தவராக இருப்பர்;; செல்வம் நிறைந்த பூமி முழுவதும் தானம் செய்த பலனுக்கு அதிகமாகவே பலன் கிடைக்கும்.;

துர் மரணம் வராது; ஸ்வர்க்கத்தை அடைவான்; ப்ருஹ்ம ஸாயுஜ்யம் என்னும் முக்தி அடைவான் என அர்த்தம்.

வேதம் சொல்வது, ப்ருஹ்ம யக்ஞத்தின் முதல் பகுதி... மாத்யானிகம் செய்த பிறகுத்தான் ப்ருஹ்ம யக்ஞ தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.

வேதம் சொல்வதை காலையிலும் செய்யலாம். மாத்யானிகம் செய்த பிறகு வேதம் சொல்லி விட்டு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யலாம்

.மாத்யானிகத்திற்கு முன்பு தேவ ரிஷி பித்ரு தர்பணம் செய்யக்கூடாது. ப்ருஹ்மசாரி உள்பட அந்தணர் எல்லோரும் தினமும் ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.

இதனால் மறைந்த முன்னோர்களுக்கு தேவையான ஆஹாரம் கிடைக்கிறது. சந்தோஷ மடைகிறார்கள்.(.யஜுர் வேதம்).

முறையாக நான்கு வேதங்களின் ஆரம்பத்தையும் சொல்லிவிட்டு அதன் முடிவில் தேவ ரிஷி பித்ரு தர்பணம் கரிஷ்யே என்று சொல்லி தர்பணம் செய்கிறோம்.; இவ்விரண்டும் சேர்ந்ததே ப்ருஹ்ம யக்ஞம்.

பித்ருக்கள் என்பவர் பல வகை குழுவாக இருக்கிறார்கள். இவர்களில் நித்ய (திவ்ய) பித்ருக்கள் என்பவர் சிலர்.

தினசரி ஸ்நானம் செய்த பிறகு குடுமி முடியை முன் பக்கமாக விட்டூக்கொன்ட ஜலம் பூமியில் விழுவதை குடிக்கிறார்கள். வஸ்த்ரம் பிழியும் தண்ணீரையும் குடிக்கிறார்கள்.

ப்ருஹயக்ஞம் பித்ரு தர்பண நீரையும் இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள்.

அமாவாசை முதலிய நாட்களில் அதிவ்ய பித்ருக்களுக்கு தர்பணம்

செய்கிறோம். தந்தை உள்ள இல்லாத எல்லோரும் பூணல் இடம் போட்டுக்கொண்டு ப்ருஹ்மயக்ஞ தர்பணம் செய்யலாம்..

இதனால் தர்பணம் செய்பவருக்கும் அவரின் பெற்றோருக்கும் ஆயுள் அதிக மாகும்.

ப்ருஹ்மோபதேசம் (பூணல் கல்யாணம்) முதல் கடைசி காலம் வரை தினமும் ப்ருஹ்மயக்ஞம் அந்தணர்கள் செய்ய வேண்டும்.

அமாவாசை தர்பணம் செய்த பிறகு ப்ருஹ்மயக்ஞம் செய்ய வேண்டும். ச்ராத்தம் முடிந்த பிறகு பின்ட பித்ரு தர்பணம் செய்த பிறகு பரேஹணி தர்பணம் செய்த பிறகு ப்ரஹ்மயக்ஞம் செய்ய வேண்டும்.

அனத்யயன தினம் என்பது அமாவாசை அதற்கு முந்திய திதி, பிந்திய திதி பெளர்ணமி, இதற்கு முந்திய, பிந்திய திதிகள்,க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி ஆகிய எட்டு நாட்களில் புதிதாக வேதம் கற்றுக்கொள்ளக்கூடாது.

ப்ருஹ்மயக்ஞத்தில் கூறப்படும் ஸோம பித்ருமான் முதலான பித்ருக்கள் நித்ய பித்ருக்கள் ஆவார்கள். ப்ருஹ்மசாரி உள்பட பெற்றோர்கள் இருப்பவர்களும் தர்பணம் செய்யலாம்.

ஆசார பூஷணம் பக்கம் 168ல் அபஸவ்யம் த்விஜாக்ர்யாணாம் பித்ர்யே ஸர்வத்ர கீர்த்திதம் ஆப்ரகோஷ்டந்து கர்தவ்யம் மாதாபித்ரோஸ்து ஜீவதோ:

என்ற சாஸ்த்ர வாக்யபடி , தாய் தந்தை யுள்ளவர்கள் ப்ருஹ்ம யக்ஞம் போன்ற கர்மாக்களில் , பித்ருக்களுக்கு தர்பணம் செய்யும்போது , பூணலை இடமாக போட்டுக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீ வத்ஸ ஸோம தேவ சர்மா புத்தகத்திலும் அமாவாசை தர்ப்பணம் புத்தகத்திலும் தந்தை உள்ளவர்களும் ப்ருஹ்ம யக்ய பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று எழுதி உள்ளார்.

ப்ருஹ்ம ஸ்ரீ நன்னிலம் ராஜ கோபால கணபாடிகள் ஸந்தேஹ நிவாரணி புத்தகத்திலும் தந்தை உள்ளவர் ப்ருஹ்ம யக்ய த்தில் பித்ரு தர்ப்பணம் செய்யலாம் என்று எழுதி இருக்கிறார்.

தந்தை உள்ளவர் முழுவதும் ப்ராசீனாவீதியில் செய்ய வேண்டும். தந்தை உள்ளவர் பாதி ப்ராசீனாவீதி போட்டுக்கொண்டு செய்ய வேண்டியது .

ஆவணி அவிட்டம் அன்று மஹா சங்கல்பம் செய்யும் போது சொல்லும் நவானாம் நவவிதானாம் என்று சொல்லும் பாபங்கள். பின்வருமாறு.


விஷ்ணு: மனுஷ்யனுக்கு காமம், கோபம், பேராசை என்ற மூன்று சத்ருக்கள். அதற்கு வசமானவன் மஹா பாதகம், அதிபாதகம், ஸம பாதகம், உப பாதகம், ஸங்கீரண கரணம், மலிணிகரணம், அபாத்ரீ கரணம், ஜாதிப்ரம்ச கரணம், ப்ரகீர்ணகம். என்ற ஒன்பது விதமான பாப கர்யங்களை செய்கிறான்.


மஹா பாதகங்கள். : மனு சொல்கிறார்: ப்ராஹ்மணர்களை கொன்றது; கள் குடித்தது, ப்ராஹ்மண தங்கத்தை திருடியது; குரு பத்னியை கெடுத்தது. இவர்களுடன் நண்பர்களாக இருப்பது...


அதி பாதகம்: யமன்: தாயின் சஹோதரி, தாயின் தோழி, அப்பாவின் சகோதரி, மாமாவின் பத்னி, மாமியார், பெண், சஹோதரி, இவர்களை கெடுத்தவன் அதி பாதகம் செய்தவன் ஆகிறான். நீசணை புணர்வது, கர்பத்தை நசிப்பது, கணவனை கொல்வது அதிபாதகம். ஆகும்.


சம பாதகம்;==பெரியோர்களை நிந்திப்பது, வேதத்தை நிந்திப்பது,நண்பர்களை ஹிம்சிப்பது., படித்த வேதத்தை மறப்பது. இவை ப்ரஹ்ம ஹத்திக்கு சமமான பாபங்கள்.




ஸம பாதகம்:== வெண்கல பாத்திரத்தில் இளநீரை விட்டு குடிப்பது, பசும்பாலில் உப்பு கலந்து சாப்பிடுவது வண்ணான் தோய்கின்ற ஜலத்தில் ஸ்னானம் செய்வது.;; தாமிர(செம்பு) பாத்திரத்தில் பால், தயிர் சாப்பிடுவது. கள் குடிப்பதற்கு சமமானது.


பிற்காலத்தில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று கொடுக்கப்பட்டதை அபகரிப்பது., பூமி, வைரம், ரத்தினம். இவைகளை அபகரிப்பதும் தங்கத்தை திருடின பாபத்திற்கு சமமாகும்.


மனு:= தன் பெண்களிடத்திலும் , சண்டாள ஸ்த்ரீயிடத்திலும் நண்பன், புத்ரன் இவர்களுடைய பத்னியிடத்திலும் எவன் கெட்ட கார்யங்களையும் செய்கிறானோ அவன் செய்யும் இந்த பாபம் குரு பத்னியை கெடுத்த பாபத்திற்கு ஸமமானது. புத்தி பூர்வகமாக செய்வது அதிபாதகமாக எடுத்து க்கொள்ளப்படும்.


உப பாதகங்கள்:--- மனு:-- பசு வதை, வேதம் தெறியாதவனுக்கு யாகம் செய்து வைப்பது. ஆசார்யன், தாய், தந்தை, வேதம், அக்னி ,மகன் இவர்களை த்யாகம் செய்வது.


அண்ணன் கல்யாணம் செய்து கொள்ளாமல் தம்பி கல்யாணம், செய்து கொண்டு இருப்பது, அண்ணாவிற்கு பரிவித்தி என்ற தோஷம், தம்பிக்கு பரிவேதனம் என்பது தோஷம்,


. இவ்விருவர்களுக்கு கன்யா தானம் செய்வது, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது. கன்னிகையை கெடுப்பது, வட்டியினால் ஜீவிப்பது. ப்ருஹ்மசாரியினுடைய விஷய ஸேவனம், ,


குளம், புஷ்ப தோட்டம், பத்னி, புத்ரன் இவர்களை விற்பது, உசிதமான காலத்தில் உபநயனம் முதலியவை செய்யாமல் இருப்பது, ,


சிற்றப்பா, மாமா இவர்களை அனுசரிக்காமல் இருப்பது., சம்பளம் பேசிக்கொண்டு வேதம் வேதாந்தம் சொல்லிக்கொடுப்பது,& //படிப்பது,


விற்ககூடாத எள், முதலியவற்றை விற்பது; கஜானாவிற்கு ராஜாதிகாரத்தை பெற்ற அதிகாரியாக இருப்பது; மிஷின்களை ஓட்டுவது; ஒளஷதிகளை கிள்ளுவது. ஸ்த்ரீகளை வைத்து ஜீவனம் செய்வது,


பிறறை கெடுக்க பூஜை செய்வது மந்திரங்களினால் வசீகரணம் செய்வது; விறகை உத்தேசித்து பச்சை மரத்தை வெட்டுவது; , தனக்காக சமைப்பது, சாஸ்திரத்தினால் நிந்திக்கபட்டவன் வீட்டில் அன்னம் சாப்பிடுவது.


. அதிகாரியாக இருந்து அக்னிஹோத்ரம் செய்யாமல் இருப்பது, தங்கத்தை தவிற உயர்ந்த பொருட்களை திருடுவது, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருப்பது; ; ம்லேச்ச சாஸ்திரத்தை வாசிப்பது;


, பாட்டு கூத்துக்களில் ஈடுபடுவது. தான்யம், பசுக்கள் இவைகளை திருடுவது. , குடி பழக்கம், பர ஸ்த்ரீ கமனம், மற்றவர்களை ஹிம்சிப்பது இவைகள் தனித்தனியாக உப பாதகங்கள் எனப்படும்.


ஸங்கரீகரணங்கள்:-- கழுதை, நாய், ஒட்டகம், மான், யானை, ஆடு, எருமை, மீன், பாம்பு இவைகளை வதம் செய்வது ஸங்கரீகரண பாதகமாகும்.


மலிணி கரணங்கள்;--க்ருமிகள் புழுக்கள்; பறவைகள்; இவைகளை ஹிம்சிப்பது; கள் கலந்த உணவை சாப்பிடுவது; பழம், விறகு, புஷ்பம் இவைகளை திருடுவது, தைர்யமில்லாமல் இருப்பது இவைகள் மலிணிகரண பாதகங்கள் ஆகும்.


அபாத்ரீகரணங்கள்:--,அனுஷ்டானம் இல்லாதவர்களிடமிருந்து பணம், காசு வாங்குவது; பண்டங்களை விற்பது, , இதரர்களை சேவிப்பது; பொய் பேசுவது இவைகள் எல்லாம் அபாத்ரீ கரண பாதகங்களாகும்.


ஜாதிப்ரம்ச கரணங்கள்: ப்ராம்மனர்களை காயப்படுத்தி துக்க பட செய்வது, நுகரக்கூடாத வெங்காயம்,பூண்டு, கள்ளு இவைகளை நுகர்வது, புருஷனிடத்தில் தப்பாக நடப்பது, இவைகள் ஜாதி ப்ரம்சகரண பாதகங்கள் ஆகும்.


தெரிந்து செய்த பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் கிடையாது. தெரியாமல் செய்த பாபங்களுக்கு மட்டும் ப்ராயஸ்சித்தம் உண்டு
 

Latest ads

Back
Top