anandha padmanaba viratham.

kgopalan

Active member
31-08-2020அனந்த பத்மநாப விரதம்:--
பகவான் நாராயணன் அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்ற பெயருடன் பாதாள லோகத்திலிருந்து பூமியை தன் ஆயிரம் தலைகளால் தாங்கி கால சக்கிரத்தை நடத்துகிறார். இவ்வாறு தன் தலைகளால் ஒரு கல்பத்தில் பூமியை தாங்க ஆரம்பித்த நாளே இது.


முதலில் யமுனைக்கு பூஜை செய்ய வேன்டும். பிறகு 14 தர்பைகளால் அனந்தன் உருவம் அமைத்து( தலை பின்னல் மாதிரி பின்னி) ஐந்து தலைகளுடன் கலசத்தில் வைத்து 14 முடியுள்ள பட்டு கயிற்றையும் 14 ஆவரண தேவதைகளையும் ஆவாஹனம் செய்து


அக்கயிற்றை இடது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. பிராமணருக்கு தக்ஷிணை தாம்பூலம் தந்து 14 ஆண்டுகள் கழித்து உத்யாபனம் செய்ய வேண்டும். அனந்தன் அருளால் அனந்தமான பாக்கியம் பெறலாம்.


விரத பூஜா விதானம் புத்தகத்தில் பூஜை முறை உள்ளபடி பூஜை செய்யலாம்.
விரத சூடாமணி புத்தகத்தில் அனந்தன் ஆவரண பூஜையும் உத்யாபனம் செய் முறையும் உள்ளது.
 
Back
Top