• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Aadi Perukku Special - What to do and How to Pray

ஆடி 18 அன்று சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் எதை நினைத்து வழிபட்டாலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

மக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் நீராடி இறைவனை வணங்குவது வழக்கம்.

திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலி மஞ்சள் சரடு மாற்றிக்கொள்ளும் வழக்கம் நிலவுகிறது.

ஆடி மாதம் தொடங்கினாலே கிராமங்கள் திருவிழாக்களால் களைக்கட்டத் தொடங்கி விடும்.

தெய்வீகம் பொருந்திய ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடி 18 (ஆடிப்பெருக்கு), கிராமங்களில் கோயில் திருவிழா என விசேஷங்கள் நிறைந்ததாக மக்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கக்கூடிய அருமையான மாதம்.

ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு மிகவும் விசேஷமானது மட்டுமல்லாமல் மக்கள் வாழ்வில் ஒளியையும், வளம், நம்பிக்கையை பெருக்குவார் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மனை நினைத்து வழிபட்டால் கணவன் - மனைவி அன்பு, நெருக்கம் அதிகரிக்கும். இதனால் குடும்பம் தழைத்துச் செழிக்கும் என்பது நம்பிக்கை.

ஆடி பெருக்கு குறித்து சிலப்பதிகாரத்தில் குறிப்பு இருக்கிறது. அதே போல் பல சங்க இலக்கியங்களில் ஆடி 18 குறித்து குறிப்புகள் உள்ளன.

ஆடி 18 அன்று சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் எதை நினைத்து வழிபட்டாலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆடி பட்டம் தேடி விதை என முன்னோர்கள் சொல்வது வழக்கம். சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் சுட்டெரித்த வெயில் குறைந்து இந்த மாதத்தில் பருவ மழை பெய்வதும், ஆறு, குளங்கள் தண்ணீரால் நிரம்பி பயிர்கள் செழிக்கக் கூடிய மாதம் என்பதால் இந்த மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

புது வெள்ளம் பெருகுவதால், ஆடி பெருக்கு என முன்னோர்கள் இந்த தினத்தை மிகவும் கோலாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஆடி ஸ்பெஷல் -

செல்வத்தைப் பெற ஆடி முதல் நாளில் செய்ய வேண்டிய முக்கிய விஷயம்

ஆடி மாதம் ஏன் அவ்வளவு முக்கியம்? -

Importance of Pathinettam Perukku

கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என 3 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பூசம் நட்சத்திரம் சனி பகவானுக்குரியது. சூரியன் சனியின் பிடியில் இருக்கும் பூசம் நட்சத்திரத்திலிருந்து விடுபட்டு, புதன் அதிபதியாக இருக்கும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு மாறும் நாள் தான் ஆடி பெருக்கு (ஆடி 18). இதனால் சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது.

ஏனெனில் சூரியனும், புதனும் நட்பு கிரகங்கள். சூரியனின் இந்த சக்தி நிறைந்த கதிர்களால், ஆடி மாதத்தில் விதைக்கப்படும் விதைகளுக்கு ஒரு வித புத்துணர்ச்சியும், வலிமையும் அளித்து பச்சை பசேல் என சிறப்பாக வளர உதவிக்கரமாக இருக்கிறது.

பண்டிகையான ஆடி :

பல விசேஷங்கள் நிறைந்த ஆடி மாதத்தில், கைக்குத்தல் அரிசியில் வெல்லமிட்டு பொங்கல் செய்து அம்மனுக்கு விசேஷ படையல் போடுவதும், புத்தாடை அணிந்து. எல்லை தெய்வங்களை வழிபடுவது முக்கிய வழிபாடாக கிராம மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

சிறப்பு குளியல்

ஆடி 18ம் தேதி மக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் நீராடி இறைவனை வணங்குவது வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் காவிரி ஆற்றை தெய்வமாக வணக்கி அதை வரவேற்று அதில் நீராடி வழிபடுவர்.

இதனால் பயிர்களுக்குத் தேவையான நீர் வளம் கிடைக்கும் என நம்புகின்றனர். புதுவெள்ளமாக ஓடும் காவிரி ஆற்றில் நீராடி அம்மனை வணங்குவதால் காவிரியன்னை தன்னை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவன் அமையும் என்றும், திருமணமான பெண்ணுக்கு கணவனின் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுப்பாள் என்பது நம்பிக்கை.

கறுப்பு கயிறு காலில் கட்டிக்கொள்வது ஏன் தெரியுமா..?

இந்த அற்புத தினத்தில் காவிரி படித்துறையில், மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி, ஏதேனும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்து திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலி மஞ்சள் சரடு மாற்றிக்கொள்ளும் வழக்கம் நிலவுகிறது.

அதே போல் ஆண்கள் வலது கையில் கட்டிக் கொள்வதும், கன்னிப்பெண்கள் மஞ்சள் கயிறை காப்பு போல கட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது.
 

Latest ads

Back
Top