• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

96 tharpanam contd. details.

kgopalan

Active member
04/10/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து இருக்கக்கூடிய தான தர்ப்பணங்களை வரிசைப்படுத்தி விரிவாக மேலும் பார்த்துக்கொண்டு வருகிறோம்.*

*அதில் தற்போது பார்த்துக் கொண்டு வரக்கூடிய புண்ணியகாலம் மன்வாதி. இவை வருடத்திலே 14 புண்ணிய காலங்கள் வரும்.*

*இந்த மன்வாதி விஷயமாக புராணங்கள் நமக்கு நிறைய விஷயங்களை காண்பிக்கிறது. மச்ய புராணத்திலே முக்கியமாக இந்த மனுக்கள் பற்றிய தகவல்களை நமக்கு நிறைய தெரிவிக்கிறது.*

#இவர்களைப்_பற்றி_சொல்லும்_போது #இவர்கள்_14_பேர்கள்_பிரம்மாவின் #புத்திரர்களாக_ஆர்பவித்தவர்கள்.
*அவர்கள்தான் கால ரூபமாக இருந்து கொண்டு, இந்த உலகத்தில் வேதமும், நம்முடைய தர்மங்களும், இருப்பதற்கும், அதை ஆதாரமாகக் கொண்டு ஜனங்கள் வாழ்வதற்கும், முக்கியமாக இருப்பவர்கள் இந்த பதினான்கு மனுக்கள்.*

*நமக்கு மேலே ஆறு உலகங்கள் இருக்கின்றன நமக்கு கீழே ஏழு உலகங்கள் இருக்கின்றன நாம் இருக்கக்கூடிய இந்த உலகத்தையும் சேர்த்து சதுர்தச புவனம் என்று சொல்கிறோம்.*

*இந்தப் பதினான்கு புவனங்களையும் நேர்மையான முறையில் நடத்துபவர்கள் இந்த மனுக்கள் தான். புராணங்களில் இவர்களைப் பற்றிய தகவல்கள் நிறைய காண்பிக்கப்படுகின்றன.*

*இப்பொழுது நடக்கக்கூடிய மனுவினுடைய காலமானது வைவஸ்வத மனு என்று பெயர். சங்கல்பத்திலேயே சொல்லுவோம், சப்தமே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விகும்சதி தமே என்று சங்கல்பத்தில் சொல்கிறோம்.*

*இப்போது நடக்கக்கூடிய காலத்திற்கு அதிபதி யார் என்றால் இந்த வைவஸ்வத மனு தான். இவருடைய ஆட்சியில் தான் நாம் இப்பொழுது இருந்து கொண்டிருக்கிறோம். இப்படி பதினான்கு மனுக்கள் இருக்கின்றனர்.*

*இவர்கள்தான் இந்த உலகத்தை நடத்துவதற்கும், நடத்துவதற்கு அடிப்படையாக உள்ள பொருளாதாரத்தையும் குடும்ப சட்டதிட்டங்களையும், அனைத்தையும் இயற்றி, நம்மை வழி நடத்துபவர்கள் இந்த மனுக்கள்.*

*எந்த இராஜாவின் உடைய சரித்திரத்தையும் நாம் எடுத்துக் கொண்டால், ஒரு மனுவில் இருந்து தான் ஆரம்பம் ஆகும். புராணங்களில் இராஜாக்களின் உடைய வம்சங்கள் பார்த்தோமேயானால், ஒரு மனுவில் இருந்து ஆரம்பமாகும் அந்த இராஜாவினுடைய வம்சம்.*

*இவர்கள்தான் ஆதாரமாக உள்ளவர்கள். நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் அடிப்படையாக உள்ள கிரந்தம் மனு ஸ்மிருதி. அனைத்து மகரிஷிகளும் ஸ்மிருதிகள் செய்திருக்கிறார்கள். அதில் நாம் முக்கியமாக எடுத்துக்கொண்டது 18 ஸ்மிருதிகள். இவர்கள் குள்ளே அடிப்படையாகவும் மிகவும் முக்கியமாக இருப்பது இந்த மனுஸ்மிருதி தான்.*

*ஏன் அந்த அளவுக்கு உயர்வாக சொல்கிறோம் என்றால், இந்த நாட்களில் இருக்கக் கூடிய சிக்கல்கள் அனைத்திற்கும், நாம் அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடிய கஷ்டங்களுக்கும், பரிகாரம் மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டது.*

*மேலும் இந்த தேசத்தை நடத்துவதற்கு இராஜ தர்மம் மிகவும் முக்கியம். இந்த இராஜ தர்மங்களை மிகவும் விரிவாக காண்பித்து, சட்டங்களை நமக்கு காண்பிப்பது இந்த மனு ஸ்மிருதி தான். இந்த நாட்களில் நமக்கு சட்டங்கள் என்று இயற்றி வைத்துக் கொள்கிறோம். அதன்படி நாம் நடந்து கொள்கிறோம். இப்போது உள்ள இந்த சட்டங்களுக்கு ஒரு குறிப்புகள் பார்க்க வேண்டுமானால் மனு ஸ்மிருதியில் இருந்து நாம் பார்த்துக் கொள்ள முடியும்.*

*மேலும் மனு ஸ்மிருதிக்கு என்ன உயர்வு என்றால், எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் அதை கடைபிடிக்கக் கூடிய சூழ்நிலையை மனுஸ்மிருதி தான் காண்பிக்கிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது*

*ஆனால் அதை நன்றாக உள்வாங்கி கூர்ந்து கவனித்து படிக்க வேண்டும் மேலெழுந்தவாரியாக புரிந்து கொள்ளக் கூடாது. அதை சரியாக புரிந்து கொள்ளாததினாள் தான் இன்றைய காலத்திற்கு மனு சொல்வதெல்லாம் முடியாது பொருந்தாது என்று நாம் சொல்கிறோம்.*

*ஆனால் அப்படி இல்லை. அந்தந்த காலத்திற்கு தகுந்தாற்போல் காண்பிப்பது மனுஸ்மிருதி. ஆகையினால்தான் அதில் உயர்வு காண்பிக்கப்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு பார்த்தோமேயானால் ஒரு ஸ்ராத்தம் செய்வதற்கு, இதை எந்தெந்த முறையில் நாம் செய்யவேண்டும் என்று சொல்லும் பொழுது, 12 முறையாக மனுஸ்மிருதி காண்பிக்கின்றது.*

*எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் நம்முடைய பிதுர்களின் ஸ்ராத்தங்களை செய்தே ஆக வேண்டும் என்று சொல்லி, அதை நடைமுறைப்படுத்த வேண்டிய முறையையும் காண்பிக்கின்றது மனுஸ்மிருதி.*

*நாம் என்ன செய்கிறோம் என்றால் ஒரே ஒரு முறையை பார்த்து மனுஸ்மிருதி சொல்கின்ற படி நாம் செய்ய முடியாது வாழமுடியாது என்று சொல்கிறோம். ஆனால் அது அப்படி அல்ல.*
*எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் நம்முடைய வேதத்தை காப்பாற்றியாக வேண்டும். நம்முடைய தர்மங்களை நாம் செய்தாக வேண்டும். அந்த அளவுக்கு வலியுறுத்தி காண்பிக்கின்றது இந்த மனு ஸ்மிருதி ஆன கிரந்தம்.*

*இந்த மனுக்கள் தான் இந்த மனுஸ்மிருதி கிரந்தத்தை நமக்கு காண்பித்து, அதன்படி வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அந்த அளவுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம் இந்த மனுக்கள் இடத்தில். இந்த மன்வாதி புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடிய தர்ப்பணம் நம்முடைய பிதுருக்களை உத்தேசித்து இருந்தாலும்கூட, இந்த மனுக்களுக்கு நன்றி செலுத்துவதாக அமைகிறது இந்த புண்ணியகாலம்.*

*குறிப்பிட்ட ஒரு காலம் சொல்லப்பட்டு இருக்கிறது இந்த மன்வாதி புண்ய காலம் செய்வதற்கு, ஆஸ்வைத சுக்கில நவமியில் சுவாயம்பவ மனு என்று பார்க்கிறோம். அன்றைக்கு தான் அந்த மனிதனுடைய ஆட்சிகாலம் முடிகின்றது. அவருக்கு நன்றி செலுத்துவதாக தான் இந்த புண்ணிய காலத்தை நாம் செய்கிறோம்*

*மனுக்கள் எனக்காக செய் என்று அவர்கள் சொல்லவில்லை, நீ செய்ய வேண்டிய கடமையை செய்தால் அதுதான் நீ எங்களுக்கு நன்றி செலுத்துவதாக அமையும். ஆகையினாலே தான் ரிஷிகளுக்கு துல்லியமாக மனுக்களை நாம் சொல்கிறோம்.*

*மகரிஷிகள் உடைய எண்ணமும் இதுதான். மகரிஷிகள் என்னுடைய படத்தை நீ வைத்துக்கொள் என்னுடைய விக்கிரகத்தை வைத்துக் கொண்டு, எனக்கு பூஜை அபிஷேகங்கள் செய்து என்று, மகரிஷிகள் சொல்லவில்லை. இந்த இந்த காலங்களில் இந்த இந்த தேவதைகளை நீ பூஜை செய்வதினால், இந்த இந்த கர்மாக்களையும் செய்வதினால் இந்த நன்றிக்கடன் நீ முடிக்கிறாய் என்று தான் காண்பிக்கிறார்கள் மகரிஷிகள்.*

*ஒரு மகரிஷியின் கோத்திரம் பெயர் சொல்கிறோம் என்றால், அந்த ரிஷி படி நாம் வாழ்க்கையை நடத்த வேண்டும் செய்ய வேண்டும். அதுதான் நாம் செய்யக்கூடிய பூஜை அவர்களுக்கு. அதேபோல்தான் இந்த மன்வாதி புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடியது ஆன தர்ப்பணம், மனுக்களுக்கு நாம் நன்றி செலுத்துவதாக அமைகிறது.*

*மனுஸ்மிருதி என்கின்ற இந்த கிரந்தத்தினுடைய பெருமையை, சொல்லி முடியாது ஏனென்றால் இன்றைக்கு வரை பிரமானமாக அது இருக்கின்றது. இந்நாளில் உலகத்திலுள்ள சட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளது மனு ஸ்மிருதி தான் என்று பார்க்கிறோம்.*

*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த மன்வாதி புண்ணிய காலம். இந்நாளில் இந்த தர்ப்பணத்தை நாம் கட்டாயம் செய்வதினால், அந்த மனுக்களுக்கு நாம் நன்றி செலுத்துவது ஆகும். நாம் செய்யக்கூடிய மற்ற காரியங்களும் பூரணமான பலன்களை நமக்கு கொடுக்கும்.

ஆகையினாலே தான் மன்வாதி புண்ணிய காலம் நாம் செய்யவில்லை என்றால், பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். வரி செலுத்தாதது மாதிரிதான் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த வன்மதி புண்ணிய காலங்கள் மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
 

Latest ads

Back
Top