9 - நான்காம் ஸ்லோகம்
சதுஸ்லோகி - மஹாமுனி ஆளவந்தார் அருளிச் செய்தது - 9
- நான்காம் ஸ்லோகம்
"சாந்த அனந்த மஹா விபூதி
பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே":
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி
தத் ப்ரிய தரம் ரூபம் யத் அத்ய அத்புதம்
யானி அன்யானி யதா ஸுகம்
விஹரதோ ரூபாணி சர்வாணி தானி
ஆஹு ஸ்வை: அனுரூப ரூப விபவை:
காடோப கூடானி தே !!
'சாந்த அனந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே:'
இம்மியளவும் கடுமை அற்ற ஆனந்தமான, எங்கும் வ்யாபித்துள்ள அளவில் நிர்ணயிக்க முடியாத வண்ணம் விளங்கும் ஹரி.
ஹரியின் ஒப்பு நோக்கில் மற்ற ஆனந்தங்கள் கால அளவுக்கு உட்பட்டவை.
ப்ரஹ்மத்தை விட உயர்ந்ததோ அளவில் பெரியதோ ஏதும் இல்லை, அதனால் எம்பெருமானின் உண்மை ஸ்வரூபம் பரம்பொருள் என்னும் ப்ரஹ்மம்.
அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் வேண்டிய உருவத்தில் அளவில் எம்பெருமானின் சொரூபம் வெளிப்படும்.
'ஞானானந்த மயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மான:' - தன்னைத் தானே எண்ணி லயித்து அனுபவிக்கும் போதில் ஆனந்தத்தோடு இருக்கும் நிலை தான் ஞான ஆனந்த மயம்.
நமக்குள்ளே நம்மைப் பற்றி எண்ணப் புகுந்தோம் என்றால், முதலில் நம் தவறுகள், பலவீனங்கள், நம் பற்றிய அவமானங்கள் தான் முதலில் தோன்றும்.
ஆனால் எம்பெருமானின் விஷயத்தில், தனக்குத் தானே அவன் எண்ணி அனுபவிக்கையில், அவனுக்குக் குறைகளற்ற, ஆனந்தம் மட்டும் எண்ணத்தில் வியாபித்து இருப்பதால் அவன் சர்வஞன். பரம ஞானி.
மஹரிஷிகள் எம்பெருமானை விளக்கினார்களாம். 'யஸ்ய ஆத்மா சரீரம். யஸ்ய ப்ரித்வி சரீரம்' - எம்பெருமானுடைய ஆத்மாவின் உருவம் தான் என்னே?. இந்த இயற்கையும் அண்ட சராக்ஷரங்களின் உருவம் தான் எம்பெருமானின் ஆத்மாவின் ரூபம்.
'பரமம்' - 'ஒத்தார் மிக்காரை இலை ஆய மா மாயா' - அவனுக்கு இணையானவர்களோ, அவனைக் காட்டிலும் உயர்ந்தவர்களோ இல்லாத பெரும் மாயன் எம்பிரான்.
இப்படியாய், சிறிதளவும் கடுமை அற்றவனாய், தனக்குள் ஆனந்தனாய், அவனுடைய அங்கங்களோ மனதோ அவனே உற்பத்திப்பவனாய், அளவில்லாமல் எங்கும் வ்யாபியாய், இருப்பது தான் எம்பெருமானின் ஸ்வரூபம் என்று ஸ்லோகத்தின் மேற்சொன்ன முதல் வரிகள் வருணிக்கின்றன. (தொடரும்)
மூலம்: வியாக்கியான மஹா பூஷணம் பெரிய வாச்சான் பிள்ளை
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திரு கண்ணன் ரங்காச்சாரி.
சதுஸ்லோகி - மஹாமுனி ஆளவந்தார் அருளிச் செய்தது - 9
- நான்காம் ஸ்லோகம்
"சாந்த அனந்த மஹா விபூதி
பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே":
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி
தத் ப்ரிய தரம் ரூபம் யத் அத்ய அத்புதம்
யானி அன்யானி யதா ஸுகம்
விஹரதோ ரூபாணி சர்வாணி தானி
ஆஹு ஸ்வை: அனுரூப ரூப விபவை:
காடோப கூடானி தே !!
'சாந்த அனந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே:'
இம்மியளவும் கடுமை அற்ற ஆனந்தமான, எங்கும் வ்யாபித்துள்ள அளவில் நிர்ணயிக்க முடியாத வண்ணம் விளங்கும் ஹரி.
ஹரியின் ஒப்பு நோக்கில் மற்ற ஆனந்தங்கள் கால அளவுக்கு உட்பட்டவை.
ப்ரஹ்மத்தை விட உயர்ந்ததோ அளவில் பெரியதோ ஏதும் இல்லை, அதனால் எம்பெருமானின் உண்மை ஸ்வரூபம் பரம்பொருள் என்னும் ப்ரஹ்மம்.
அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் வேண்டிய உருவத்தில் அளவில் எம்பெருமானின் சொரூபம் வெளிப்படும்.
'ஞானானந்த மயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மான:' - தன்னைத் தானே எண்ணி லயித்து அனுபவிக்கும் போதில் ஆனந்தத்தோடு இருக்கும் நிலை தான் ஞான ஆனந்த மயம்.
நமக்குள்ளே நம்மைப் பற்றி எண்ணப் புகுந்தோம் என்றால், முதலில் நம் தவறுகள், பலவீனங்கள், நம் பற்றிய அவமானங்கள் தான் முதலில் தோன்றும்.
ஆனால் எம்பெருமானின் விஷயத்தில், தனக்குத் தானே அவன் எண்ணி அனுபவிக்கையில், அவனுக்குக் குறைகளற்ற, ஆனந்தம் மட்டும் எண்ணத்தில் வியாபித்து இருப்பதால் அவன் சர்வஞன். பரம ஞானி.
மஹரிஷிகள் எம்பெருமானை விளக்கினார்களாம். 'யஸ்ய ஆத்மா சரீரம். யஸ்ய ப்ரித்வி சரீரம்' - எம்பெருமானுடைய ஆத்மாவின் உருவம் தான் என்னே?. இந்த இயற்கையும் அண்ட சராக்ஷரங்களின் உருவம் தான் எம்பெருமானின் ஆத்மாவின் ரூபம்.
'பரமம்' - 'ஒத்தார் மிக்காரை இலை ஆய மா மாயா' - அவனுக்கு இணையானவர்களோ, அவனைக் காட்டிலும் உயர்ந்தவர்களோ இல்லாத பெரும் மாயன் எம்பிரான்.
இப்படியாய், சிறிதளவும் கடுமை அற்றவனாய், தனக்குள் ஆனந்தனாய், அவனுடைய அங்கங்களோ மனதோ அவனே உற்பத்திப்பவனாய், அளவில்லாமல் எங்கும் வ்யாபியாய், இருப்பது தான் எம்பெருமானின் ஸ்வரூபம் என்று ஸ்லோகத்தின் மேற்சொன்ன முதல் வரிகள் வருணிக்கின்றன. (தொடரும்)
மூலம்: வியாக்கியான மஹா பூஷணம் பெரிய வாச்சான் பிள்ளை
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திரு கண்ணன் ரங்காச்சாரி.