Shri Swamiramadas,
I give below the procedure we (Yajurvedi, Apastamba sutra) follow for the 10th. day Tarpana in our family. Hope this will be of help to you.
ஒற்றைப் புல்லால் ஒரு கூர்ச்சம். கூர்ச்சம் பண்ணத் தெரியாவிட்டால் ஒரு தர்ப்பையை வெட்டி நுணியில்லாமல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு தர்ப்பையால் பவித்ரம். இதையும் தானே பண்ணத்தெரியாவிட்டால் வாத்தியாரிடம் ப்ரத்யேகமாகக் கேட்டுவாங்கவும்.
பத்தாம் நாள் அன்று காலை வெறும் வயிற்றில் குளித்து ஈரத்துணியுடன் செய்வது சிலாக்கியம். ஈரத்துணி உடுத்துவது சிரமமானால், உலர்ந்த வேஷ்டி அங்கவஸ்த்ரம் தரித்து, இரண்டிலும் ஒரு நுனியை நனைத்துக்கொள்ளவும்.
காலுக்கடியில் ஒற்றைப் புல், பவித்ரம் தரித்து (பவித்ரத்துடனும் ஒற்றைப்புல்லை பிடித்துக்கொன்டு) தெற்க்குப் பக்கமாக ஒரு கருங்கல் அல்லது கூழாங்கல் (which will not dissolve/disintegrate in water; even a piece of granite or marble will do) வைத்துக்கொள்ளவும்.
சங்கல்ப்பம்:
சுக்ளாம்பரதரம்...+சாந்தயே.
ஓம் பூ: ...+ பூர்புவஸ்ஸுவரோம்.
ஓம் ததேவலக்னம் ...அங்க்ரியுகம் ஸ்மராமி.
அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா...விஷ்ணுமயம் ஜகத்.
ஸ்ரீ கோவிந்த, கோவிந்த கோவிந்த, ஆத்யஸ்ரீ பகவத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ...புண்யதிதௌ
(பூணலை இடம் போட்டுக்கொண்டு...)
...கோத்ரஸ்ய ...சர்மண: ஜ்ஞாதீ பூதஸ்ய ப்ரேதச்ய அதீத ப்ரதமதினம் ஆரப்ய அத்ய தசம்யாம் தினபர்யந்தம் தஹனஜனித க்ஷுத் த்ரிஷ்ண தாஹ தாப உபசமனார்த்தம் ப்ரேத ஆப்யாயனார்த்தம் ப்ரேத த்ருப்த்யர்த்தம் திலோதகதானம் கரிஷ்யே
என்று சொல்லி பவித்ரத்துடன் இருந்த புல்லை கிழக்கு அல்லது வடக்குப் பக்கமாக அவிழ்த்துப்போடவும். ஜலத்தை கையால் தொட்டு பின், கல்லை முன்பக்கமாக வைத்து, தெற்க்குத்திக்கைப் பார்த்து உட்கார்ந்துகொண்டு, கல்லின்மேல் கூர்ச்சம் அல்லது கத்தைப்புல்லை வைத்து
அஸ்மின் கூர்ச்சே ...கோத்ரான் ...சர்மண: ஜ்ஞாதீபூதம் ப்ரேதம் த்யாயாமி —ஆவாஹயாமி
என்று மரணமடைந்தவரை நினைத்துக்கொண்டு கருப்பு எள்ளை (தில், black sesame seeds) கூர்ச்சத்தின் மேல் போடவும். பின்
ஸகலாராதனை ஸ்வர்ச்சிதம் என்று சொல்லி மீண்டும் எள்ளை அர்ச்சனை பண்ணுவது போல் கூர்ச்சத்தின் மேல் போடவும்.
பெரிய சொம்பு அல்லது வெங்கலம், செம்பு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும். அவசியமான எள்ளும் கருதவேண்டும். வலது கையில் எள்ளை எடுத்து இடது கையால் அதில் ஜலத்தை விடவும் அமாவாசை தர்ப்பணம் போல்.
மந்திரம் கீழ்க்கண்டபடி :—
...கோத்ரான் ..சர்மண: ஜ்ஞாதீபூதச்ய ப்ரேதச்ய்ச் தஹனஜனித க்ஷுத் த்ரிஷ்ண தாஹ தாப உபசமனார்த்தம், ப்ரேத ஆப்யாயனார்த்தம், ப்ரேத த்ருப்த்யர்த்தம் அதீத ப்ரதமேஹனி ஏதத் திலொதகம் ததாமி — என்று மூன்று முறை சொல்லி மூன்று தர்ப்பணம்.
...கோத்ரான் ..சர்மண: ஜ்ஞாதீபூதச்ய ப்ரேதச்ய்ச் தஹனஜனித க்ஷுத் த்ரிஷ்ண தாஹ தாப உபசமனார்த்தம், ப்ரேத ஆப்யாயனார்த்தம், ப்ரேத த்ருப்த்யர்த்தம் அதீத த்விதீயேஹனி ஏதத் திலொதகம் ததாமி — என்று நான்கு முறை சொல்லி நான்கு தர்ப்பணம்.
இப்படியே "...த்ருப்த்யர்த்தம்" வரை சொல்லி மேல்
அத்தீத த்ருதீயேஹனி — 5 முறை சொல்லி, 5 தர்ப்பணம்
அதீத சதுர்த்யாஹனி — 6முறை சொல்லி, 6 தர்ப்பணம்
அதீத பஞ்சம்யேஹனி —7முறை சொல்லி, 7 தர்ப்பணம்
அதீத ஷஷ்ட்யேஹனி — 8 முறை சொல்லி, 8 தர்ப்பணம்
அதீத ஸப்தமேஹனி — 9 முறை சொல்லி, 9 தர்ப்பணம்
அதீத அஷ்டமேஹனி — 10 முறை சொல்லி,10 தர்ப்பணம்
அதீத நவமேऽஹனி — 11முறை சொல்லி,11தர்ப்பணம்
அத்ய தசமேऽஹனி — 12 முறை சொல்லி, 12 தர்ப்பணம்
Total - 75 tarpanas
அஸ்மாத் கூர்ச்சாத் ...கோத்ரான் ...சர்மண: ஆவாஹிதம் ப்ரேதம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று சொல்லி கத்தைப்புல்லை கொஞ்சம் நகர்த்தி, பின் கூர்ச்சத்தை அவிழ்த்து —
"த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத" என்று ஜபித்து ஒரு முறை எள்ளும் ஜலமும் அதன்மேல் விடவும். சிலர் அவிழ்த்த கூர்ச்சத்தைக் கையில் எள்ளுடன் சேர்த்துப் பிடித்துக்கொண்டு இந்த தர்ப்பணத்தைச் செய்கிறார்கள்.
பவித்ரத்தை அவிழ்த்து கிழக்கு அல்லது வடக்குத் திசையில் பொடவும். பூணலை வலம் (உபவீதம்) ஆகப் போட்டுக்கொண்டு கையால் ஜலத்தை தொட்டு, பின் ஆசமனம் பண்ணவும்.
Important : Since this is a "pretakarma" one should compulsorily take bath after this Tarpana, change to fresh 'MaDi' clothes, perform morning Sandhyaavandana, if not done earlier, and then only take food.
***