ஒரு உற்பத்தி செய்யும் கம்பெனி உள்ளது. அதில் பர்சேஸ் டிபார்ட்மென்ட், அக்கெளன்ட்ஸ் டிபார்ட்மென்ட், சேல்ஸ் , ப்ரொடக்ஷன், மையின்டனன்ஸ், ப்ரொடக்ஷன் கன்ட்ரோல்; ரா மெடீரியல் ஸ்டோர்ஸ், டூல் ரூம், இன்ஸ்பெக்ஷன், ரிஸர்ச் அண்ட் டெவொலொப்மென்ட், இன்டஸ்டிரியல் ரூரல் டிபார்ட்மென்ட், ஃபினிஷ்டு ப்ரொட்க்ட் ஸ்டோர்ஸ், பேக்கிங்க் அன்ட் ஃபார்வேர்டிங்க் டிபார்ட்மென்ட், செகூரிடி டிபார்ட்மென்ட், எக்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் என பல பிரிவுகள் உண்டு. இந்த எல்லா பிரிவுகளும் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். அப்போது தான் கம்பெனி நன்றாக நடக்கும்.
இதே மாதிரி தான் இந்த உலகமும். பிராமணர்கள், வைசியர், க்ஷத்ரியர், நாலாம் வர்ணத்தவர் என 4 பிரிவுகள் உள்ளது. அவரவர் வேலைகளை அவரவர் பார்த்தால் போதும்.
தீவிரவாதம், அக்னி, மழை வெள்ளம், ரயில்.பஸ், ப்ளேன் விபத்துகள் குறையும்.பிராமணர்கள் செய்யும் யாகம் யக்கியங்கள் , மற்ற வர்ணத்தினருக்கும், மரம், செடி, கொடி, ப்ராணிகள், ஊர்வன, பறப்பன, நீரில் நிலத்தில் வாழும் மற்ற ஜந்துக்களுக்கும் சேர்த்தே செய்யபடுகிற மாதிரி வேத மந்திரங்கள் அமைத்து இருக்கிறார்கள்.
க்ஷத்ரியர், வைசியர்களுக்கும் உப நயனம் உண்டு, தினமும் காயத்ரி ஜபமும் உண்டு. தற்போது ப்ராஹ்மணர்களும் ஸந்தி, காயத்ரி ஜபம் செய்வதில்லை. கலி யுகத்தின் முதல் பாகம் தற்போது ஆரம்பித்துஇருக்கிறது.
எந்த கம்பெனியிலும் ஒரு பிரிவில் வேலை செய்பவர் மற்றொரு பிரிவில் சென்று வேலை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். எப்படி டாக்டருக்கு படித்தவர், வக்கீல் வேலையோ, ஆடிட்டர் வேலையோ; எஞ்சினீரிங்க் வேலையோ பார்க்க முடியாதோ அதேபோல் தான்.