ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் அவதரித்த நக்ஷத்திரங்களும் , மாதங்களும் சிறப்பான மாதங்களும் , நக்ஷத்திரங்களும் ஆகும்.
பல மாதங்களும், நக்ஷத்திரங்களும் ஆழ்வார் , ஆச்சாரியர்கள் அவதரித்த காரணத்தினால் பத்தர்கள் அந்த நாள்களை சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.
நாளை ஸ்ரீ.திருமழிசை ஆழ்வாரின் திரு அவதார தினம். சிறப்பான நாள்களிலும், மாதங்களிலும் இது ஒரு முக்கியமான நாளாகும். ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் திருச்சந்தவிருத்தத்தில் 120 பாசுரங்களும், நான்முகன் திருவந்தாதியில் 96 பாசுரங்களும் அருளிச் செய்துள்ளார்.
“ தையில் மகம் இன்று தாரணீயிர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் துய்ய மதி
பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் “
என்று நம் ஆச்சாரியன் ஸ்வாமி ஸ்ரீ.மணவாள மாமுனிகள், ஸ்ரீ.திருமழிசை ஆழ்வாரின் சிறப்பு பற்றி , உபதேசரத்னமாலையில் பன்னிரண்டாம் பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.
பன்னிரு ஆழ்வார்களில் நான்காம் ஆழ்வாராக அவதரித்த ஸ்ரீ.திருமழிசை ஆழ்வாரின் அவதார ஸ்தலம் திருமழிசையில் உள்ளது. இங்கு ஸ்ரீ.ஜெகன்னாதப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இத் திருக்கோயிலில் ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் திரு அவதார திருநக்ஷத்திர உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பத்து நாள்கள் நடக்கும் இவ் உற்சவத்தில் பங்கு கொள்ள பல பத்தர்கள் வெளி ஊர்களில் எல்லாம் கூட வந்திருந்து கலந்து கொள்கிறார்கள்.
பத்தாம் நாள் உற்சவம் முடிந்து , பதினோறாம் நாள் விடியற்காலை சாற்றுமுறையாகிறது.
பூவுலகிலே நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார். ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் அந்தக் காலத்திலேயே இந்து மதத்தை சார்ந்த வேறு சம்பிரதாயங்களில் இருந்திருக்கிறார். ஒரு சமயம் திருவல்லிக்கேணியிலே முதலாழ்வார்களில் மூன்றாம் ஆழ்வாரான ஸ்ரீ.பேயாழ்வாரால் கவரப்பட்டு, அவர் மூலம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈர்க்கப்பட்டு, அதையே தம் முக்கிய சம்பிரதாயமாகக் கொண்டார். இதனைப் பற்றி அவர் அருளிச் செய்த முதல் பிரபந்தமான நான்முகன் திருவந்தாதியின் முதல் பாசுரத்திலேயே குறிப்பிட்டுள்ளார். அப் பாசுரம் :-
“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து “
ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் வாழி திருநாமம் :-
"அன்புடன் அந்தாதி தொண்ணூற்று ஆறு உரைத்தான் வாழியே
அழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்திங்கு உதித்தான் வாழியே
எழிற்சந்தவிருத்தம் நூற்றி இருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப்பெருக்கில் பொன்னி எதிர் மிதர்ந்த செல்வோன் வாழியே
நன்புழி நாலாயித்து எழுநூற்றிருந்தான் வாழியே
நங்கள் பத்திசாரர் இரு நற்பதங்கள் வாழியே "
இந்த ஆண்டு ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் அவதார ஸ்தலமான திருமழிசையில் ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் புறப்பாடு மட்டும் கிடையாது. காரணம் திருக்கோயில் இன்னும் பாலாலயத்தில் உள்ளது. சம்ப்ரோக்ஷணம் ஆகவில்லை என்பதால் புறப்பாடு மட்டும் இல்லை. ஆனால் திருக்கோயிலுக்குள் அருளிச் செயல் கோஷ்டியாகும்.
நாளை மறுநாள் விடியற்காலை சாற்றுமுறையாகும்.
இங்கு பதிவிட்டுள்ள ஸ்ரீ.திருமழிசை ஆழ்வாரின் புகைப்படங்களில் சில 2016 ஆம் ஆண்டும், சில புகைப்படங்கள் 2018 ஆம் ஆண்டும் திருமழிசையில் ஸ்ரீ.திருமழிசை ஆழ்வாரின் திருக்கோயில் உள் புறப்பாட்டின் போது அடியேன் எடுத்த புகைப்படங்களாகும்.
பல மாதங்களும், நக்ஷத்திரங்களும் ஆழ்வார் , ஆச்சாரியர்கள் அவதரித்த காரணத்தினால் பத்தர்கள் அந்த நாள்களை சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.
நாளை ஸ்ரீ.திருமழிசை ஆழ்வாரின் திரு அவதார தினம். சிறப்பான நாள்களிலும், மாதங்களிலும் இது ஒரு முக்கியமான நாளாகும். ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் திருச்சந்தவிருத்தத்தில் 120 பாசுரங்களும், நான்முகன் திருவந்தாதியில் 96 பாசுரங்களும் அருளிச் செய்துள்ளார்.
“ தையில் மகம் இன்று தாரணீயிர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் துய்ய மதி
பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் “
என்று நம் ஆச்சாரியன் ஸ்வாமி ஸ்ரீ.மணவாள மாமுனிகள், ஸ்ரீ.திருமழிசை ஆழ்வாரின் சிறப்பு பற்றி , உபதேசரத்னமாலையில் பன்னிரண்டாம் பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.
பன்னிரு ஆழ்வார்களில் நான்காம் ஆழ்வாராக அவதரித்த ஸ்ரீ.திருமழிசை ஆழ்வாரின் அவதார ஸ்தலம் திருமழிசையில் உள்ளது. இங்கு ஸ்ரீ.ஜெகன்னாதப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இத் திருக்கோயிலில் ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் திரு அவதார திருநக்ஷத்திர உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பத்து நாள்கள் நடக்கும் இவ் உற்சவத்தில் பங்கு கொள்ள பல பத்தர்கள் வெளி ஊர்களில் எல்லாம் கூட வந்திருந்து கலந்து கொள்கிறார்கள்.
பத்தாம் நாள் உற்சவம் முடிந்து , பதினோறாம் நாள் விடியற்காலை சாற்றுமுறையாகிறது.
பூவுலகிலே நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார். ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் அந்தக் காலத்திலேயே இந்து மதத்தை சார்ந்த வேறு சம்பிரதாயங்களில் இருந்திருக்கிறார். ஒரு சமயம் திருவல்லிக்கேணியிலே முதலாழ்வார்களில் மூன்றாம் ஆழ்வாரான ஸ்ரீ.பேயாழ்வாரால் கவரப்பட்டு, அவர் மூலம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈர்க்கப்பட்டு, அதையே தம் முக்கிய சம்பிரதாயமாகக் கொண்டார். இதனைப் பற்றி அவர் அருளிச் செய்த முதல் பிரபந்தமான நான்முகன் திருவந்தாதியின் முதல் பாசுரத்திலேயே குறிப்பிட்டுள்ளார். அப் பாசுரம் :-
“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து “
ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் வாழி திருநாமம் :-
"அன்புடன் அந்தாதி தொண்ணூற்று ஆறு உரைத்தான் வாழியே
அழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்திங்கு உதித்தான் வாழியே
எழிற்சந்தவிருத்தம் நூற்றி இருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப்பெருக்கில் பொன்னி எதிர் மிதர்ந்த செல்வோன் வாழியே
நன்புழி நாலாயித்து எழுநூற்றிருந்தான் வாழியே
நங்கள் பத்திசாரர் இரு நற்பதங்கள் வாழியே "
இந்த ஆண்டு ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் அவதார ஸ்தலமான திருமழிசையில் ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் புறப்பாடு மட்டும் கிடையாது. காரணம் திருக்கோயில் இன்னும் பாலாலயத்தில் உள்ளது. சம்ப்ரோக்ஷணம் ஆகவில்லை என்பதால் புறப்பாடு மட்டும் இல்லை. ஆனால் திருக்கோயிலுக்குள் அருளிச் செயல் கோஷ்டியாகும்.
நாளை மறுநாள் விடியற்காலை சாற்றுமுறையாகும்.
இங்கு பதிவிட்டுள்ள ஸ்ரீ.திருமழிசை ஆழ்வாரின் புகைப்படங்களில் சில 2016 ஆம் ஆண்டும், சில புகைப்படங்கள் 2018 ஆம் ஆண்டும் திருமழிசையில் ஸ்ரீ.திருமழிசை ஆழ்வாரின் திருக்கோயில் உள் புறப்பாட்டின் போது அடியேன் எடுத்த புகைப்படங்களாகும்.