வ.வே.சு.ஐயர்... தமிழின் முதல் சிறுகதை சொல்லி! கதை சொல்லிகளின் கதை பாகம் -1
பார்க்கப்போனால் நான் மரம்தான். ஆனால், என் மனதில் உள்ளதையெல்லாம் சொல்வதானால், இன்றைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுசுக்குள் கண்களால் எவ்வளவு பார்த்திருக்கிறேன். காதுகளால் எவ்வளவு கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்களால் பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதில் எள்ளளவும் பொய்யில்லை' எனத் தொடங்கும் வ.வே.சு. ஐயரின் `குளத்தங்கரை அரசமரம்' கதைதான், தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றைத் தொடங்கிவைத்த முதல் சிறுகதை.……………………………….
………………………………..
குருகுலக் குழந்தைகளை, பள்ளிக்கு வெளியே சுற்றுலாவாக அழைத்துச் செல்வதை கல்வியின் ஒரு பாகமாக வைத்திருந்தார்கள். அப்படியான ஒரு பாபநாசம் யாத்திரையின்போது, பாபநாசம் பாணதீர்த்த அருவியிலிருந்து தண்ணீருக்குள் தவறி விழுந்த வ.வே.சு. ஐயரின் மகள் சுபத்ராவைக் காப்பாற்ற நீருக்குள் குதித்த ஐயர், சுழலில் சிக்கி காலமானார். 1925 ஜூன் 4-ம் நாள் அவர் மறைந்தார்.
தமிழின் முதல் சிறுகதை சொல்லியின் கதை, இவ்விதம் அகாலத்தில் துக்ககரமாக முடிந்தது.
மேலும் படிக்க
https://www.vikatan.com/literature/arts/108797-biography-of-varahaneri-venkatesa-subramaniam-aiyar
நன்றி: விகடன்