வைணவப் புராணங்கள்

Status
Not open for further replies.
வைணவப் புராணங்கள்

வைணவப் புராணங்கள்




1) பதினெட்டுப் புராணங்களுள், கருட புராணம், நாரத புராணம்,
விஷ்ணு புராணம், பாகவத புராணம் ஆகியன விஷ்ணு, விஷ்ணுவின்
தோற்றம், பல்வகைப்பட்ட அவதார நிலைகள், போன்றன பற்றி பரக்கத்
தெரிவிக்கின்றன. இதில் பராசர முனிவரால் இயற்றப்பட்ட விஷ்ணு புராணம்
அனைவராலும் போற்றி வணங்கப்பட்டதாகும்.



2) வால்மீகியின் இராமாயணமும், வியாசரின் பாரதமும்.


3) செவ்வைச் சூடுவார் என்னும் புலவரால் வடமொழியிலிருந்து 5000,
செய்யுட்கள் கொண்டதாக ஆக்கப்பட்ட பாகவத புராணம்.


4) அதி வீர ராம பாண்டியன் என்னும் மன்னனால் விருத்தப்
பாக்களால் இயற்றப்பட்ட நளசரிதம்.


5) வடமலையப்பர் என்பாரால் தமிழாக்கஞ் செய்யப்பட்ட மச்ச
புராணம், கருட புராணம், வராஹபுராணம்.


6) பகவத் கீதை.


7) மகாகவி காளிதாசரின் 2480 செய்யுட்கள் கொண்ட ரகுவம்சம்,
(இதனை அரிகேசரி என்பார் தமிழ்ப்படுத்தியுள்ளார்)


8) இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மற்றும் இவராக்கிய பிற நூல்கள்.


9) வேதாந்த தேசிகரின் குரு பரம்பரை ப்ராபவமும் மற்றும் அவரருளிய
பிற நூல்களும்.


10) மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலை.



11) பிள்ளைப் பெருமாளையங்காரின் அஷ்ட பிரபந்தம்.


12) அருளாளப் பெருமாளின் ஞான சாரம், பிரமேய சாரம், சப்த காதை,
மாறனகப் பொருள், திருப்பதிக் கோவை.


13) நாலாயிரத்திவ்ய பிரபந்தம்.


14) துளசி ராமாயணம், கம்பராமாயணம், வில்லி பாரதம்.


15) பாரத வெண்பா எனப்படும் சங்ககாலத்து நூலான
பெருந்தேவனாரின் பாரதம்.


16) ஆழ்வார்களின் பாசுரங்கட்கு அருளப்பட்ட வியாக்யானங்கள்.


17) முமூச்சப்படி, தத்வத்ரயம், ஸ்ரீவசனபூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம்
என்னும் நூல்கள்.


18) ஆங்காங்கே கிடைக்கும் ஸ்தல புராணங்கள்.



இப்பேர்ப்பட்ட நூல்களால் அறியப்படும் வைணவம்தான் ஆத்மாவிற்கு
மோட்சத்தை அடைய பாதைகாட்டும் வழிகாட்டிகளாகும்.




Source : Indra Srinivasan




Please correct it if i had left any
 
நன்று,நன்று, நன்று....அதற்க்கு மேல் "மௌனம் கலகம் நாஸ்தி"
 
Status
Not open for further replies.
Back
Top