விண்வெளி ராக்கெட்டும் விசேஷ பிரார்த்தன&#
ஆதி சங்கரர் “கனக தாரா ஸ்தோத்திரம்” செய்தால் ஏழை வீட்டில் தங்க மழை பெய்கிறது. முத்துசாமி தீட்சிதர் அமிர்தவர்ஷனி ராகத்தில் அம்பாளைப் பிரார்த்தித்தால் வறண்ட பூமியில் மழை பெய்கிறது. ஞான சம்பந்தர் பதிகம் பாடினால் இறந்துபோன பெண் அஸ்திக் கலச சாம்பல் எலும்பிலிருந்து எழுந்து வருகிறாள். நாமும் அதே ஸ்தோத்திரம் , பதிகம் பாடினால் ஏன் நமது பிரார்த்தனைகள் நிறைவேறுவதில்லை?
இதோ, கீழே இதற்கான விடை உள்ளது.
கிரகண நாட்களில் பிரார்த்தனை செய்தால் ஏன் பலன் பன் மடங்கு அதிகரிக்கிறது? சிவ ராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பிள்ளையார் சதுர்த்தி, துர்காஷ்டமி, ஜன்மாஷ்டமி, ராமநவமி ஆகிய நாட்களில் பூஜை செய்தால் ஏன் பல மடங்கு பலன் கிடைக்கும் என்று நமது மத நூல்களும் ஆச்சார்யர்களும் கூறுகிறார்கள்?
இதோ கீழே இதற்கான விடை உள்ளது.
இந்திய விண்கலம் சந்திரனுக்குச் சென்றதை எல்லோரும் அறிவர். அமெரிக்க ரஷிய விண்கலங்கள் செவ்வாய், சனி கிரகங்களுக்கு அவ்வப்போது ஏவப் படுகின்றன. பல விண்கலங்களும் பாதியில் கோளாறு ஆகி விழுகின்றன. ஏன் சில போயின, சில வெடித்து விழுந்தன? தவறான நேரம் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இருக்கலாம்.
ஒவ்வொரு விண்கலம் ஏவப்படும் முன்பாக பல ஆண்டுகள் திட்டமிடுவார்கள். என்ன என்ன ஏற்பாடுகள் தேவை தெரியுமா?
ஒரு ஏவுதளம் வேண்டும். இது கடலுக்கருகில் அல்லது மனித நடமாட்டம் இல்லாத பாலவனத்தின் பக்கத்தில் இருக்க வேண்டும். அதுவும் நில நடுக் கோட்டுக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும். இதற்குப் பின் எந்த கிரகத்துக்கு அனுப்புகிறோமோ அதன் பாதை, வேகத்தைக் கவனித்து, அது பூமிக்கு அருகில் வரும் போது ஏவ வேண்டும். விண்வெளியில் அதிக எரிபொருள் செலவில்லாமல் பயணம் தொடர ஒவ்வொரு கிரகத்தின் ஈர்ப்பு உந்து விசையைப் (Gravitational slingshot) பயன்படுத்த உரிய தருணத்தில் அனுப்ப வேண்டும். இது தவறினால் சில நேரம் ஆண்டுக் கணக்கில் கூட காத்திருக்க வேண்டும்.
இனி ராக்கெட்டையும் விண்கலத்தையும் பார்ப்போம். ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையத் தாடவேண்டுமானால் ஒரு வினாடிக்கு குறைந்தது 11.2 கிலோமீட்டர் அல்லது எட்டு மைல் வேகத்தில் அந்த ராக்கெட் போக வேண்டும். அப்போதுதான் பூமியின் ஈர்ப்பு விசையை (Escape velocity ) மீறமுடியும். துல்லியமான கம்ப்யூட்டர் கணக்குகளில் ஒரு இம்மி பிசகானாலும் ராக்கெட்டோ விண்கலமோ அதன் இலக்கிலிருந்து பல கோடி மைல்கள் தள்ளிப் போய்விடும் .அல்லது புறப்பட்டவுடனே விழுந்துவிடும். பெரிய விண்கலம் ஆக இருந்தால் கூடுதல் எரிபொருளும் பெரிய ராக்கெட்டும் தேவைப்படும். கால நிலை முதலியவற்றைக் கணக்கில் கொண்டு (Launch window ) ஒரு கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.
செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பப்பட்ட பெரும்பாலான விண்கலங்கள் தோல்வியில் முடிந்தன. பல தோல்விகளுக்கு என்ன காரணம் என்று இன்னும் ஆராய்ந்து வருகிறார்கள்.
இப்போது இதையே விசேஷ பிரார்த்தனையுடன் ஒப்பிடுங்கள். எப்படி ஈர்ப்பு விசையைத் தாண்ட வினாடிக்கு எட்டு மைல் வேகம் தேவையோ அப்படி நம்முடைய அகங்காரம், மமகாரம், தீய எண்ணங்கள், கோபம் தாபம் ஆகிவற்றைத் (Gravity) தாண்ட தீவிர பிரார்த்தனை வேண்டும்.
எப்படி சில நாட்களில் ஏவினால் கிரகங்களின் உந்துவிசை பயன்படுகிறதோ(Gravitational slingshot) அப்படி விசேஷ நாட்களில் பிரார்த்தனை செய்தால் பிரார்த்தனைக்கு உந்து விசை கிடைக்கும். அப்போது நூறு முறை நாம ஜபம் செய்தாலும் அது பல்லாயிரம் மடங்காகும்.
எப்படி குறிப்பிட்ட நாட்களில் (Launch window ) ஏவினால்தான் ராக்கெட்டுகள் எளிதாக இலக்கை அடையுமோ அப்படி பண்டிகை அல்லது கிரகண காலங்களீல் செய்தால் எளிதில் நினைத்ததை அடையலாம்.
எப்படி குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து இலக்கை நோக்கி ஏவுகிறோமோ அப்படி குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் பிரார்த்தனை செய்தால் பிரார்த்தனையின் முழுப் பலனும் கிடைக்கும்.
எப்படி பெரிய ராக்கெட்டுக்கு நிறைய எரிபொருள் தேவைப் படுகிறதோ அப்படி நம்முடைய பெரிய வேண்டுகோளுக்கு நிறைய பிரார்த்தனை தேவைப்படும். ஆனால் சில நாட்களில் கிரகங்கள் (செவ்வாய், சனி) அருகில் இருந்தால் அதன் ஈர்ப்புவிசை (Gravitational slingshot) பயன்படுவது போல நமக்கு குறைந்த பிரார்த்தனைக்கு நிறைந்த பலன் கிடைக்கும்.
ஆதி சங்கரர், சம்பந்தர் போன்றோருக்கு இந்த கணக்குகள் எல்லாம் ஞானக் கண்களால் தெரியும். ஆதலால் அவர்கள் நினைத்ததை முடிக்கிறார்கள். அவர்கள் கூறியது போல நாமும் பண்டிகை நாட்களில் ஒரே எண்ணத்தோடு ராக்கெட் போல குறி இலக்கு நிர்ணயித்தோமானால் எளிதில் பலன்கள் கிட்டும். நம்முடைய பிரார்த்தனைக்கும் ஒரு “லாஞ்ச் விண்டோ” தேவை.
ஆதி சங்கரர் “கனக தாரா ஸ்தோத்திரம்” செய்தால் ஏழை வீட்டில் தங்க மழை பெய்கிறது. முத்துசாமி தீட்சிதர் அமிர்தவர்ஷனி ராகத்தில் அம்பாளைப் பிரார்த்தித்தால் வறண்ட பூமியில் மழை பெய்கிறது. ஞான சம்பந்தர் பதிகம் பாடினால் இறந்துபோன பெண் அஸ்திக் கலச சாம்பல் எலும்பிலிருந்து எழுந்து வருகிறாள். நாமும் அதே ஸ்தோத்திரம் , பதிகம் பாடினால் ஏன் நமது பிரார்த்தனைகள் நிறைவேறுவதில்லை?
இதோ, கீழே இதற்கான விடை உள்ளது.
கிரகண நாட்களில் பிரார்த்தனை செய்தால் ஏன் பலன் பன் மடங்கு அதிகரிக்கிறது? சிவ ராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பிள்ளையார் சதுர்த்தி, துர்காஷ்டமி, ஜன்மாஷ்டமி, ராமநவமி ஆகிய நாட்களில் பூஜை செய்தால் ஏன் பல மடங்கு பலன் கிடைக்கும் என்று நமது மத நூல்களும் ஆச்சார்யர்களும் கூறுகிறார்கள்?
இதோ கீழே இதற்கான விடை உள்ளது.
இந்திய விண்கலம் சந்திரனுக்குச் சென்றதை எல்லோரும் அறிவர். அமெரிக்க ரஷிய விண்கலங்கள் செவ்வாய், சனி கிரகங்களுக்கு அவ்வப்போது ஏவப் படுகின்றன. பல விண்கலங்களும் பாதியில் கோளாறு ஆகி விழுகின்றன. ஏன் சில போயின, சில வெடித்து விழுந்தன? தவறான நேரம் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இருக்கலாம்.
ஒவ்வொரு விண்கலம் ஏவப்படும் முன்பாக பல ஆண்டுகள் திட்டமிடுவார்கள். என்ன என்ன ஏற்பாடுகள் தேவை தெரியுமா?
ஒரு ஏவுதளம் வேண்டும். இது கடலுக்கருகில் அல்லது மனித நடமாட்டம் இல்லாத பாலவனத்தின் பக்கத்தில் இருக்க வேண்டும். அதுவும் நில நடுக் கோட்டுக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும். இதற்குப் பின் எந்த கிரகத்துக்கு அனுப்புகிறோமோ அதன் பாதை, வேகத்தைக் கவனித்து, அது பூமிக்கு அருகில் வரும் போது ஏவ வேண்டும். விண்வெளியில் அதிக எரிபொருள் செலவில்லாமல் பயணம் தொடர ஒவ்வொரு கிரகத்தின் ஈர்ப்பு உந்து விசையைப் (Gravitational slingshot) பயன்படுத்த உரிய தருணத்தில் அனுப்ப வேண்டும். இது தவறினால் சில நேரம் ஆண்டுக் கணக்கில் கூட காத்திருக்க வேண்டும்.
இனி ராக்கெட்டையும் விண்கலத்தையும் பார்ப்போம். ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையத் தாடவேண்டுமானால் ஒரு வினாடிக்கு குறைந்தது 11.2 கிலோமீட்டர் அல்லது எட்டு மைல் வேகத்தில் அந்த ராக்கெட் போக வேண்டும். அப்போதுதான் பூமியின் ஈர்ப்பு விசையை (Escape velocity ) மீறமுடியும். துல்லியமான கம்ப்யூட்டர் கணக்குகளில் ஒரு இம்மி பிசகானாலும் ராக்கெட்டோ விண்கலமோ அதன் இலக்கிலிருந்து பல கோடி மைல்கள் தள்ளிப் போய்விடும் .அல்லது புறப்பட்டவுடனே விழுந்துவிடும். பெரிய விண்கலம் ஆக இருந்தால் கூடுதல் எரிபொருளும் பெரிய ராக்கெட்டும் தேவைப்படும். கால நிலை முதலியவற்றைக் கணக்கில் கொண்டு (Launch window ) ஒரு கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.
செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பப்பட்ட பெரும்பாலான விண்கலங்கள் தோல்வியில் முடிந்தன. பல தோல்விகளுக்கு என்ன காரணம் என்று இன்னும் ஆராய்ந்து வருகிறார்கள்.
இப்போது இதையே விசேஷ பிரார்த்தனையுடன் ஒப்பிடுங்கள். எப்படி ஈர்ப்பு விசையைத் தாண்ட வினாடிக்கு எட்டு மைல் வேகம் தேவையோ அப்படி நம்முடைய அகங்காரம், மமகாரம், தீய எண்ணங்கள், கோபம் தாபம் ஆகிவற்றைத் (Gravity) தாண்ட தீவிர பிரார்த்தனை வேண்டும்.
எப்படி சில நாட்களில் ஏவினால் கிரகங்களின் உந்துவிசை பயன்படுகிறதோ(Gravitational slingshot) அப்படி விசேஷ நாட்களில் பிரார்த்தனை செய்தால் பிரார்த்தனைக்கு உந்து விசை கிடைக்கும். அப்போது நூறு முறை நாம ஜபம் செய்தாலும் அது பல்லாயிரம் மடங்காகும்.
எப்படி குறிப்பிட்ட நாட்களில் (Launch window ) ஏவினால்தான் ராக்கெட்டுகள் எளிதாக இலக்கை அடையுமோ அப்படி பண்டிகை அல்லது கிரகண காலங்களீல் செய்தால் எளிதில் நினைத்ததை அடையலாம்.
எப்படி குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து இலக்கை நோக்கி ஏவுகிறோமோ அப்படி குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் பிரார்த்தனை செய்தால் பிரார்த்தனையின் முழுப் பலனும் கிடைக்கும்.
எப்படி பெரிய ராக்கெட்டுக்கு நிறைய எரிபொருள் தேவைப் படுகிறதோ அப்படி நம்முடைய பெரிய வேண்டுகோளுக்கு நிறைய பிரார்த்தனை தேவைப்படும். ஆனால் சில நாட்களில் கிரகங்கள் (செவ்வாய், சனி) அருகில் இருந்தால் அதன் ஈர்ப்புவிசை (Gravitational slingshot) பயன்படுவது போல நமக்கு குறைந்த பிரார்த்தனைக்கு நிறைந்த பலன் கிடைக்கும்.
ஆதி சங்கரர், சம்பந்தர் போன்றோருக்கு இந்த கணக்குகள் எல்லாம் ஞானக் கண்களால் தெரியும். ஆதலால் அவர்கள் நினைத்ததை முடிக்கிறார்கள். அவர்கள் கூறியது போல நாமும் பண்டிகை நாட்களில் ஒரே எண்ணத்தோடு ராக்கெட் போல குறி இலக்கு நிர்ணயித்தோமானால் எளிதில் பலன்கள் கிட்டும். நம்முடைய பிரார்த்தனைக்கும் ஒரு “லாஞ்ச் விண்டோ” தேவை.