• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல் !

உங்கள் வீட்டுக்கு மகாலட்சுமி, வரலட்சுமியென வருவாள்; வரம் அனைத்தும் தருவாள். இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றி அருள்வாள்!

ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வருகிற வளர்பிறை நாளில், பெளர்ணமிக்கு முன்னதாக வருகிற வெள்ளிக்கிழமையில், கொண்டாடப்படுகிறது வரலட்சுமி விரதம். வீட்டில் சுபிட்சம் நிலவவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கவும் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

எந்தவொரு பூஜையைச் செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயக வழிபாடு என்பது மிக மிக அவசியம். எனவே முதலில் கணபதியைத் தொழுது, ‘இந்த வரலட்சுமி பூஜையைத் தொடங்குகிறேன்’ என்று ஒப்புதல் வாங்கிவிட்டு, பூஜையில் இறங்கவேண்டும்.

பின்னர், தாம்பாளம் ஒன்றில் பச்சரிசியை பரப்பி வைத்துக்கொள்ளுங்கள். அதன் மீது கலசத்தை வைத்துக்கொள்ளவும். பழம், வெற்றிலை, பாக்கு முதலானவற்றை வைக்கவேண்டும். இந்த பூஜைக்கு, லட்டு, தயிர், பசும்பால், தேன், நெய், கற்கண்டு, கொழுக்கட்டை முதலானவற்றை நைவேத்தியமாகப் படைப்பது ரொம்பவே விசேஷம்.

அதேபோல், மாதுளை, ஆரஞ்சு, விளாம்பழம், மாம்பழம், திராட்சை முதலான பழங்களையும் நைவேத்தியத்துக்குப் பயன்படுத்த வேண்டும்.
பூஜைக்குத் தேவையானவற்றை தயாராக வைத்துக்கொண்ட பிறகு, வீட்டு நிலைவாசலில் நின்றுகொள்ளுங்கள். வெளியே நோக்கி, கற்பூர தீபாராதனை காட்டுங்கள்.

அதாவது, ‘மகாலட்சுமித் தாயே. எங்கள் வீட்டுக்குள் வாருங்கள் அன்னையே’ என்று அழைக்கவேண்டும்.
இதன் பிறகு, மகாலட்சுமி வீட்டுக்கு வந்துவிட்டாள். பூஜையறைக்குச் செல்லுங்கள்.

மகாலட்சுமித் தாயாரை மனதார நினைத்துக் கொண்டு, ஆவாஹனம் செய்யவேண்டும். அவளுக்கு, குளிரக்குளிர பூஜைகள் செய்யுங்கள். ஸ்தோத்திரம் சொல்லுங்கள். லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள்.

இதையடுத்து, நோன்புக்கயிறை கும்பத்தின் மீது சாற்றுங்கள். லட்சுமி அஷ்டோத்திரம் சொல்வது, தனம், தானியத்தைப் பெருக்கும். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும். 108 போற்றி சொல்லி, மகாலட்சுமித் தாயாரை ஆராதனை செய்யுங்கள். ‘தாயே, எங்கள் வீட்டில் எல்லா செல்வங்களையும் தந்து, எங்களை இன்னல்களில் இருந்து காத்தருள்வாய்’ என்று வணங்கி வேண்டுங்கள்.

பின்னர் பூஜையை நிறைவு செய்யும் தருணம். உங்கள் வீட்டில் உள்ள மூத்த சுமங்கலிகள் வீட்டில் இருந்தால், அவர்களுக்கு பிரசாதங்களை வழங்குங்கள். பிரசாதம் கொடுத்துவிட்டு, அவர்களை நமஸ்கரித்து ஆசி பெறுங்கள். பிறகு, நோன்புச்சரடை கையில் கட்டிக் கொள்ளுங்கள்.

வரலட்சுமி பூஜையின் போது, மகாலட்சுமியின் பேரருளைப் பெறுவதற்கு ஏராளமான மந்திரங்களும் ஸ்தோத்திரங்களும் ஸ்லோகங்களும் இருக்கின்றன. முக்கியமாக, லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சகஸ்ரநாமம் சொல்லுங்கள்.

ஆத்மார்த்தமாகவும் முழு ஈடுபாட்டுடனும் இந்த வரலக்ஷ்மி பூஜையைச் செய்யுங்கள். நம் வீட்டுக்கு ஓடோடி வருவாள் லக்ஷ்மிதேவி.
உங்கள் வீட்டுக்கு மகாலட்சுமி, வரலட்சுமியென வருவாள்; வரம் அனைத்தும் தருவாள். இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றி அருள்வாள்!

ஓம் மகாலக்ஷ்ம்யை நமஹ !
 
ஸ்ரீ லக்ஷ்மி பிராட்டியாரை தூய பக்தியுடன் வழிபட்டால் , மனம் குளிர்ந்து, நாம் விரும்பும் சகல ஐஸ்வர்யங்களையும் நமக்குத் தந்து அருள்பவள். அந்த அளவுக்குக் கருணை மிகக் கொண்டவள்.

வரலக்ஷ்மி விரதம், தாயாருக்கு மிகவும் விசேஷமான விரதம் ஆகும்.
ஆடி மாதத்தில் இரண்டாம் வெள்ளி அல்லது பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியில் கொண்டாடப்படுகிறது.

முற்காலத்தில் மகத நாட்டின் குண்டிணா என்ற கிராமத்தில் வசித்த சாருமதி என்ற பெண்ணின் கனவில் மஹாலக்ஷ்மி தோன்றி , வரலக்ஷ்மி விரதத்தை அனுஷ்டிக்கும்படியும், அதன் பலனாக வேண்டிய அனைத்தையும் அருள்வதாகவும் கூறினாள். சாருமதியும் அந்தக் கனவைப் பற்றித் தன் கணவரிடமும், புகுந்த வீட்டினரிடமும் தெரிவித்தாள். அவர்களின் ஒத்துழைப்போடு விரதத்தையும் அனுஷ்டித்தாள். அதனால் தாங்கள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் பெற்றனர் என்று வரலக்ஷ்மி விரத மகாத்மியம் கூறுகிறது.

" நின் நினைவே நீங்கா இடம் பெறவே
நித்தம் உனை நினைத்து வினை அறவே
நீங்கா புகழ் பெறவே நீ என்றும்
நின் பதியுடனே நெஞ்சில் நிறைந்திடுவாய்
வரலட்சுமி தாயே "

என்று மனமுருகி அவளை வணங்கினால் அவள் அருளால் நமது துன்பங்கள் தீர்ந்து வாழ்வில் சகல சௌபாக்கியங்களோடு வாழ்வோம் என்பது திண்ணம்.

வரலக்ஷ்மி தேவி நமஸ்காரம் !

1. ஸ்ரீ பீடத்தில் வரலக்ஷ்மியாய் அமர்ந்திருப்பவளான ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம்
2. வரங்களை அள்ளிக் கொடுப்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
3. அழகிய கொலுமண்டபத்தில் பெருமையுடன் வீற்றிருப்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
4. கலச ரூபமாக இருப்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
5. சுமங்கலிகளால் விரதம் இருந்து பூஜிக்கபடுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
6. ஜயமின்றி தொழுபவர்களுக்கே ஜஸ்வர்யத்தை தந்து காப்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
7. நாராயணனின் பிரிய நாயகியான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
8. நிறைவின் உருவானவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
9. தங்கத் தாமரையில் பொன்நிறத்தோடு பொலிவோடு திகழ்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
10. ஸ்ரீம்கார மந்திரத்தில் உறைபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
11. பலவித ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
12. மாங்கல்ய பலம் தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
13. பாற்கடலில் உதித்து பாரெல்லாம் புகழ்திடவே வரம் தந்திடும் குலமகளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
14. நெல்லிக்கனியை பிரியமான நிவேதனப் பொருளாக ஏற்றுக் கொள்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
15. தன் கடாக்ஷம் உலகமெங்கும் வியாபித்திருக்க செய்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
16. தன்னை வணங்கும் அன்பர்களை தன் கடைக் கண்ணினாலே பார்த்து கைதூக்கி விடுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
17. நேசமிகு அன்பர் முன் நேரில் தோன்றுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
18. வில்வ அர்ச்சனையில் விருப்பமுள்ளவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
19. மங்குதல் இல்லாத ஜோதி மயமான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
20. சிறந்த பலன்களைத் தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
21. நறுமண பன்னீரில் உறைபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
22. சந்தன குங்கும திலகத்தில் மகிழ்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
23. பிரதக்ஷண நமஸ்காரத்தில் சந்தோஷப்படுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
24. தன்னை வணங்குபவர்களுக்கு அருளோடு பொருளையும் வழங்குவதற்கு காத்திருப்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
25. அகிலமெல்லாம் நிறைந்தவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
26. குலதனம் வேண்டுபவரின் குலமகளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
27. வணங்கினால் நல்வாழ்வு தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
28. செல்வத்தை தந்து செல்வாக்கும் தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
29. சிரத்தையோடு பூஜித்தால் சித்தம் குறை போக்க ஓடி வருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
30. பண்போடு வணங்குவோர்க்கு பணத்தையும் தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
31. பாடல்களில் மனம் மகிழ்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
32. நம்பினவர் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
33. அரவணைத்து ஆண்டருள் புரிபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
34. கண்ணின் மணியாய் ஒளிர்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
35. பூமணக்க பூஜை செய்வதை விரும்புபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
36. அபயம் என்று சரணடைந்தால் அடைக்கலம் தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
37. வாசலிலே மாக்கோலம் போட்டால் வீட்டினிலே லக்ஷ்மி கடாக்ஷத்தை தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
38. ஆதரவு வேண்டி நின்றால ஆனந்தத்தைத் தருபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
39. மாவிலை தோரண அலங்காரத்தால் வசீகரிக்கப்படுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
40. மாதரின் குங்குமத்தில் ஒளிர்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
41. குபேர சம்பத்தின் உருவமானவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
42. வியாபார லாபத்தை விருத்தி செய்பவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
43. அழகிய வஸ்திரங்களால் அலங்கரிக்கபடுபவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
44. கலச கும்பத்திலே புண்ணிய தீர்த்த வடிவமாக அமர்ந்தவளான ஸ்ரீ வரலக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம்
45. கம்பீரத்துடன் வரலக்ஷ்மியாய் கலசத்தில் அமர்ந்திருப்பவளான ஸ்ரீ தேவி எங்கும் என்றும் எப்போதும் ஜெயத்துடன் விளங்க வேண்டும்
 

Latest ads

Back
Top