• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

யானைக் காப்பி:கோப்பை £30 (ரூ.2500)

Status
Not open for further replies.
யானைக் காப்பி:கோப்பை £30 (ரூ.2500)

elephant+coffee.jpg


லண்டன் பத்திரிக்கைகள் ஒரு சுவையான செய்தி வெளி யிட்டிருக்கின்றன. யானையின் ஆசன வாயிலிருந்து வரும் காப்பிக் கொட்டையை வறுத்து தயாரிகும் காப்பி இது. படிக்க கொஞ்சம் அறுவெறுப்பாக இருந்தாலும் குடிக்கச் சுவையாக இருக்குமாம். ஒரு கோப்பை 30 பவுண்டுகள் (இந்திய ரூபாய் ரூ2500).

யானைக்கு காப்பிக்கொட்டை பழங்களைச் சாப்பிடக் கொடுப்பார்கள். அது அவைகளை முழுதும் ஜீரணிக்காமல் பின்பக்கம் வழியாக வெளியே தள்ளிவிடும். அந்த யானை லத்தியிலிருந்து ஒவ்வொரு காப்பிக்கொட்டை பழத்தையும் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு கொட்டைகளை வெளியே எடுப்பார்கள். யானை வயிற்றிலுள்ள அமிலங்கள் அந்தக் காப்பிக் கொட்டைகளுக்கு ஒரு மாயாஜால சுவையைக் கொடுக்கிறது.

கனடா நாட்டைச் சேர்ந்த பிளேக் டின்கின் என்பவர் 3 லட்சம் பவுன்ட் செலவில் இந்த ஏற்பாடைச் செய்துள்ளார். அவர் 20 யானைகளுக்கு இப்படி கொடுத்து 70 கிலோ காப்பிக்கொட்டை உற்பத்தி செய்துவிட்டார். முழுதும் விற்றுப்போய்விட்டன.

ஒரே கேள்விதான். யானைக்கு முழுதும் ஒவ்வாத ஒரு பொருளைச் சாப்பிடக் கொடுத்து பின்னர் அதையே வெளியே தள்ளச் செய்வது நியாயமா? மேலை நாட்டினருக்குப் பணம் கிடைத்தால் போதும், தார்மீக சிந்தனை பறந்தோடிப் போய்விடும்.

இந்துக்கள் எல்லா மிருகங்களையும் விட பசுவையும் யானையையும் மிகவும் மதித்தனர். எல்லா கோவில்களிலும் மடங்களிலும் காலையில் கோ (பசு) பூஜையும் கஜ (யானை) பூஜையும் நடைபெறுகிறது. இதற்கு பல அறிவியல் காரணங்கள் இருக்கின்றன. இதை இந்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தனர். மாட்டுச் சாணத்துக்கு பாக்டீரியா கிருமிகளைக் கொல்லும் சக்தி இருப்பதை அறிந்து வீட்டையும் சமையல் அறையையும் மெழுக சாணத்தைப் பயன்படுத்தினர். அதன் மூத்திரத்துக்கு உள்ள மகத்தான மருத்துவப் பயன்களை அறிந்து அதை மருந்திலும் சமயச் சடங்கிலும் பயன்படுத்துகின்றனர். உலகில் இரண்டு மிருகங்களின் சாணத்தை மட்டுமே இப்படிப் பயன்படுத்தமுடியும். ஒன்று பசு, மற்றொன்று யானை.

இந்துக்கள் சமயச் சடங்கில் பயன்படுத்தும் பஞ்சகவ்யம் பற்றிப் படித்துவிட்டு யானையைப் பார்ப்போம்.

cow-urine-drink2.jpg


பஞ்ச கவ்யம் என்றால் என்ன?

இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள், முக்கியச் சடங்குகளின் போது பஞ்ச கவ்யம் சாப்பிட வேண்டும். பஞ்ச கவ்யம் என்றால் பசு மாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள் என்று பொருள். இதோ விவேக சிந்தாமணி என்ன சொல்கிறது என்று படியுங்கள்: “இது கோமூத்திரம், கோமயம் (சாணி), பால், தயிர், நெய் இவை பஞ்ச கவ்வியம் என்று கூறப்படும். கோமூத்திரத்துக்கு வருணனும், கோமயத்துக்கு அக்னியும், பாலுக்குச் சந்திரனும் தயிருக்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகள் என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன.
பின்னும் செந்நிறத்த பசுவிடம் கோமூத்திரத்தையும், வெள்ளைப் பசுவிடம் கோமயத்தையும், பொன்னிறப் பசுவினிடம் பாலையும், நீல நிறப்பசுவிடம் தயிரையும், கரு நிறப் பசுவினிடம் நெய்யையும் கொள்ளின் நலமெனப்படும்.

கோமூத்திரம், கோமயம் இவை இரண்டும் ஆறு மாத்திரை எடையும், நெய்யும் பாலும் மூன்று மாத்திரை எடையும், தயிர் பத்து மாத்திரை எடையும் இருத்தல் வேண்டும் இதை மந்திர பூர்வமாகக் கலந்து பிராமண சந்நிதியில் உண்டவன் சகல் பாபத்திலிருந்தும் விடுபட்டு சுத்தமடைகிறான்”.


யானை லத்தியின் மகிமை

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது தமிழ் பழமொழி. யானையின் தந்தத்தை மத சம்பந்தமான சிலை , பூஜைப் பொருட்களுக்குப் பயன்படுத்துவதை அறிவோம். கேரளத்தில் யானை வால் முடியை நோய்த் தடுக்கும் தாயத்தாகப் பயன்படுத்துவர். யானை லத்தி போட்டால் அதை மிதிக்க பெரியோர்களும் சிறியோரும் ஓடோடி வருவர். காலில் உள்ள பித்தவெடிப்பு, சேற்றுப் புண் இவைகளை குணப்படுத்தும் ஆற்றல் அதற்குண்டு. யானையின் மூத்திரத்தையும் தலையில் தெளித்துக் கொள்வார்கள். யானையின் துதிக்கை வழியாக வரும் தண்ணிரை தலையில் விழச் செய்வார்கள். இதை கஜ லெட்சுமி சிலைகளிலும் காணலாம். 2200 ஆண்டுகளுக்கு முந்திய கஜலெட்சுமி சிலைகள் இலங்கை, டென்மார்க் வரை சென்று அங்கு நாணயங்களிலும் பாத்திரங்களிலும் பொறிக்கப்பட்டன. இது பற்றி எனது முந்தைய கட்டுரைகளில் விரிவாகக் காணலாம்.
யானை லத்தி நல்ல உரமும் கூட.

யானை பற்றிய பழமொழிகளும் நாம் அதை எவ்வளவு மதித்தோம் என்பதைக் கட்டுகிறது. இதை எல்லாம் படித்த பின்னர் மேற்கூறிய யானை லத்தி காப்பியைக் குடிக்க நாம் எல்லோருக்கும் தயக்கமே இருக்காது. விலையை மட்டும் குறைத்தால் போதும்.
படிக்கவேண்டிய எனது மற்ற கட்டுரைகள்:

urine-beer.jpg


1.யானை பற்றிய நூறு பழமொழிகள் 2.Gajalakshmi in Kalidasa and Sangam Literature 3.Gajendra Moksha in Africa
Contact: [email protected] or [email protected]
 
Status
Not open for further replies.
Back
Top