யமுனா - குறுநாவல் - அனாமிகா
யமுனா
*******
அத்தியாயம் -1
**************
தமிழ்நாட்டின் பிரபல மகளிர் பத்திரிகை 'நந்தவனத்'தின் அலுவலகம்.
அலுவலர்கள் பலரும் தத்தம் கடமைகளை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருந்தனர்.
ஆசிரியர் அறையில் ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"நந்தவனம்" - அதன் முக்கிய தூண்களாக விளங்கும் நிருபர்கள் அரவிந்த், ரமேஷ், அபர்ணா, நித்யா, ஜெயஸ்ரீ - இவர்கள் ஐந்து பேரும் அழைக்கப்பட்டு இருந்தனர்.
"அபர்ணா! இப்ப எதுக்காக இந்த திடீர் மீட்டிங்?" நித்யா கேட்க,
"இன்னும் ரெண்டு மாசத்துல ஆண்டுமலர் வரணும்; அதுக்காக ஸ்பெஷலா ஏதாவது இருக்கும்னு நான் நினைக்கிறேன்"
அபர்ணா சொல்லவும், ஆசிரியர் தம் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
அனைவரும் எழுந்திருக்க, ஆசிரியர் அவர்களை அமரச் சொல்லி கைகாட்டி தானும் அமர்ந்தார்.
"இந்த மீட்டிங் எதுக்காக அப்படிங்கறதை முதல்ல சொல்லிடறேன். வருஷா வருஷம் பிப்ரவரி மாசம் நம்ம இதழோட ஆண்டுமலர் வெளியிடறோம். இந்த வருஷத்துலேர்ந்து நம்ம ஆண்டுமலர்ல ஒரு சிறப்புப் பரிசும், விருதும் கொடுக்கிறதா தீர்மானம் பண்ணியிருக்கோம்."
நித்யா அபர்ணாவை "நீ சரியாக சொல்லி விட்டாய்" என்று விழிகளால் பாராட்டினாள்.
"இந்த சிறப்பு விருதை "நந்தவனம் - சாதனைப் பெண்மணி" விருதாக வழங்கி கௌரவிக்கப் போறோம். உங்களோட கருத்து என்ன?"
"நல்ல யோசனை சார்."
ஐவரும் மனப்பூர்வமாக ஆமோதித்தனர்.
"ரொம்ப சந்தோஷம். இதுல உங்களோட 'ரோல்' என்னன்னா - நீங்க அஞ்சு பேரும் ஒவ்வொரு சிறந்த பெண்மணியைப் பத்தி, நீங்க இந்த விருதுக்கு யார் தகுதியானவங்கன்னு நினைக்கிறீங்களோ - அவங்களைப் பத்தின ஒரு கட்டுரையை எடிட்டர் கிட்ட கொடுக்கணும். அதிலேர்ந்து ஒருத்தரை நம்ம ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்து, விருது வழங்குவோம்.
இன்னுமொரு முக்கியமான விஷயம்: சாதனைகள் அப்படின்னு "கன்னா பின்னானு" சாதனைக்காக சாதனை பண்றவங்க கிட்ட மட்டும்
போயிடாதீங்க. சமுதாயத்துக்கு பயன்படற மாதிரியான சாதனையாக அது இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதெல்லாம் உங்களுக்கே தெரியும், இருந்தாலும் சொல்ல வேண்டியது என்னோட கடமை, அதுக்காக சொன்னேன்."
அவர் சொன்னது போல அவர்களுக்கே "நந்தவனம்" இதழின் பாரம்பரியமும், பெருமையும் பற்றித் தெரியும். சில சமயங்களில் "ஹாட் நியூஸ்" எனப்படும் பல விஷயங்களைப் பற்றி அவர்கள் எழுத வேண்டியிருக்கும். அவற்றில் பல ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ அமைந்து விடுவதுண்டு. அவை போன்ற செய்திகளை ஆசிரியர் கண்டிப்பாக இடம் பெற அனுமதிப்பதில்லை.
ஓரிரு முறை தலைமை நிருபர் ரவிராஜ் கூட இது விஷயமாக ஆசிரியரிடம் பேசிப் பார்த்தார்.
"சார், முக்கியச் செய்திகள்னு பார்த்தா இவையும் தானே வருது. அதைப் போடவேணாம்னு சொன்னா, எப்படி சார்?"
"அந்த மாதிரியான செய்திகள் மத்த பத்திரிகைகளுக்கு வேணா முக்கியமா இருக்கலாம். "நந்தவனம்" பத்திரிகைக்கு அவை முக்கியம் அல்ல. சுடச்சுட செய்திகள் கொடுக்கணும், பரபரப்பா ஏதாவது நியூஸ் இருக்கணும்கிறது அன்றாடம் வர்ற பத்திரிகைகளுக்கு சரியா இருக்கலாம். நம்முடையது அப்படி இல்லையே.
தன்னுடைய நாவல்கள்ல நா.பா சொல்லுவார்: "எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு ரொம்ப அவசியம். அப்ப தான் சமூகம் ஆரோக்கியமா இருக்கும்னு" சுட்டிக் காட்டுவார். அப்படி ஒரு இலட்சியக் கனலோட தான் நான் இந்தப் பத்திரிகையை ஆரம்பிச்சேன்."
அதன் பின்னர் ரவிராஜ் ஆசிரியரின் உள்ளத்தைத் தெரிந்து கொண்டவராய், இன்னும் கவனமாக இதழில் பணியாற்றி வந்தார்.
அங்கே பணிபுரிய வரும் அனைவருக்கும் அவர்கள் பணியில் சேரும்போதே இந்த நிகழ்ச்சியை விரிவாகக் கூறுவது தலைமை நிருபரின் பழக்கம். அதன் மூலம் அவர்களுடைய பொறுப்பும், அவர்கள் அளிக்கப் போகும் படைப்புகளின் தரமும், தகுதியும் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தி விட்டிருந்தார்.
இவையெல்லாம் அபர்ணாவின் மனதில் ஓரிரு நிமிடங்களில் வந்து சென்றன. ஆசிரியர் தொடர்ந்தார்:
"இன்னும் ஒரு வாரத்துல நீங்க யாரைப் பத்தி கட்டுரை எழுதப் போறீங்கன்னு ரவி கிட்ட சொல்லிடுங்க. வேற ஏதாவது சந்தேகம் இருந்தா, கேளுங்க"
"ஓ.கே, சார், தாங்க்யூ சார்" என்றபடி அவர்கள் ஆசிரியரிடம் விடை பெற்று வெளியே வந்தனர்.
*********************
"அபர்ணா! நீ யாரைப் பத்தி எழுதப் போறே?"
ஜெயஸ்ரீ கேட்டதும், அபர்ணா மென்மையாய் சிரித்தாள்.
"இப்பதான் ஆசிரியர் இதைப் பத்தி சொல்லி முடிச்சிருக்கார். அதுக்குள்ளே யாரைப் பத்தி எழுதப்போறேன்னு கேட்டா, எப்படி?"
(தொடரும்..)
யமுனா
*******
அத்தியாயம் -1
**************
தமிழ்நாட்டின் பிரபல மகளிர் பத்திரிகை 'நந்தவனத்'தின் அலுவலகம்.
அலுவலர்கள் பலரும் தத்தம் கடமைகளை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருந்தனர்.
ஆசிரியர் அறையில் ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"நந்தவனம்" - அதன் முக்கிய தூண்களாக விளங்கும் நிருபர்கள் அரவிந்த், ரமேஷ், அபர்ணா, நித்யா, ஜெயஸ்ரீ - இவர்கள் ஐந்து பேரும் அழைக்கப்பட்டு இருந்தனர்.
"அபர்ணா! இப்ப எதுக்காக இந்த திடீர் மீட்டிங்?" நித்யா கேட்க,
"இன்னும் ரெண்டு மாசத்துல ஆண்டுமலர் வரணும்; அதுக்காக ஸ்பெஷலா ஏதாவது இருக்கும்னு நான் நினைக்கிறேன்"
அபர்ணா சொல்லவும், ஆசிரியர் தம் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
அனைவரும் எழுந்திருக்க, ஆசிரியர் அவர்களை அமரச் சொல்லி கைகாட்டி தானும் அமர்ந்தார்.
"இந்த மீட்டிங் எதுக்காக அப்படிங்கறதை முதல்ல சொல்லிடறேன். வருஷா வருஷம் பிப்ரவரி மாசம் நம்ம இதழோட ஆண்டுமலர் வெளியிடறோம். இந்த வருஷத்துலேர்ந்து நம்ம ஆண்டுமலர்ல ஒரு சிறப்புப் பரிசும், விருதும் கொடுக்கிறதா தீர்மானம் பண்ணியிருக்கோம்."
நித்யா அபர்ணாவை "நீ சரியாக சொல்லி விட்டாய்" என்று விழிகளால் பாராட்டினாள்.
"இந்த சிறப்பு விருதை "நந்தவனம் - சாதனைப் பெண்மணி" விருதாக வழங்கி கௌரவிக்கப் போறோம். உங்களோட கருத்து என்ன?"
"நல்ல யோசனை சார்."
ஐவரும் மனப்பூர்வமாக ஆமோதித்தனர்.
"ரொம்ப சந்தோஷம். இதுல உங்களோட 'ரோல்' என்னன்னா - நீங்க அஞ்சு பேரும் ஒவ்வொரு சிறந்த பெண்மணியைப் பத்தி, நீங்க இந்த விருதுக்கு யார் தகுதியானவங்கன்னு நினைக்கிறீங்களோ - அவங்களைப் பத்தின ஒரு கட்டுரையை எடிட்டர் கிட்ட கொடுக்கணும். அதிலேர்ந்து ஒருத்தரை நம்ம ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்து, விருது வழங்குவோம்.
இன்னுமொரு முக்கியமான விஷயம்: சாதனைகள் அப்படின்னு "கன்னா பின்னானு" சாதனைக்காக சாதனை பண்றவங்க கிட்ட மட்டும்
போயிடாதீங்க. சமுதாயத்துக்கு பயன்படற மாதிரியான சாதனையாக அது இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதெல்லாம் உங்களுக்கே தெரியும், இருந்தாலும் சொல்ல வேண்டியது என்னோட கடமை, அதுக்காக சொன்னேன்."
அவர் சொன்னது போல அவர்களுக்கே "நந்தவனம்" இதழின் பாரம்பரியமும், பெருமையும் பற்றித் தெரியும். சில சமயங்களில் "ஹாட் நியூஸ்" எனப்படும் பல விஷயங்களைப் பற்றி அவர்கள் எழுத வேண்டியிருக்கும். அவற்றில் பல ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ அமைந்து விடுவதுண்டு. அவை போன்ற செய்திகளை ஆசிரியர் கண்டிப்பாக இடம் பெற அனுமதிப்பதில்லை.
ஓரிரு முறை தலைமை நிருபர் ரவிராஜ் கூட இது விஷயமாக ஆசிரியரிடம் பேசிப் பார்த்தார்.
"சார், முக்கியச் செய்திகள்னு பார்த்தா இவையும் தானே வருது. அதைப் போடவேணாம்னு சொன்னா, எப்படி சார்?"
"அந்த மாதிரியான செய்திகள் மத்த பத்திரிகைகளுக்கு வேணா முக்கியமா இருக்கலாம். "நந்தவனம்" பத்திரிகைக்கு அவை முக்கியம் அல்ல. சுடச்சுட செய்திகள் கொடுக்கணும், பரபரப்பா ஏதாவது நியூஸ் இருக்கணும்கிறது அன்றாடம் வர்ற பத்திரிகைகளுக்கு சரியா இருக்கலாம். நம்முடையது அப்படி இல்லையே.
தன்னுடைய நாவல்கள்ல நா.பா சொல்லுவார்: "எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு ரொம்ப அவசியம். அப்ப தான் சமூகம் ஆரோக்கியமா இருக்கும்னு" சுட்டிக் காட்டுவார். அப்படி ஒரு இலட்சியக் கனலோட தான் நான் இந்தப் பத்திரிகையை ஆரம்பிச்சேன்."
அதன் பின்னர் ரவிராஜ் ஆசிரியரின் உள்ளத்தைத் தெரிந்து கொண்டவராய், இன்னும் கவனமாக இதழில் பணியாற்றி வந்தார்.
அங்கே பணிபுரிய வரும் அனைவருக்கும் அவர்கள் பணியில் சேரும்போதே இந்த நிகழ்ச்சியை விரிவாகக் கூறுவது தலைமை நிருபரின் பழக்கம். அதன் மூலம் அவர்களுடைய பொறுப்பும், அவர்கள் அளிக்கப் போகும் படைப்புகளின் தரமும், தகுதியும் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தி விட்டிருந்தார்.
இவையெல்லாம் அபர்ணாவின் மனதில் ஓரிரு நிமிடங்களில் வந்து சென்றன. ஆசிரியர் தொடர்ந்தார்:
"இன்னும் ஒரு வாரத்துல நீங்க யாரைப் பத்தி கட்டுரை எழுதப் போறீங்கன்னு ரவி கிட்ட சொல்லிடுங்க. வேற ஏதாவது சந்தேகம் இருந்தா, கேளுங்க"
"ஓ.கே, சார், தாங்க்யூ சார்" என்றபடி அவர்கள் ஆசிரியரிடம் விடை பெற்று வெளியே வந்தனர்.
*********************
"அபர்ணா! நீ யாரைப் பத்தி எழுதப் போறே?"
ஜெயஸ்ரீ கேட்டதும், அபர்ணா மென்மையாய் சிரித்தாள்.
"இப்பதான் ஆசிரியர் இதைப் பத்தி சொல்லி முடிச்சிருக்கார். அதுக்குள்ளே யாரைப் பத்தி எழுதப்போறேன்னு கேட்டா, எப்படி?"
(தொடரும்..)