• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!

Status
Not open for further replies.
கதை சொல்ல வந்த மன்னாரு
காணமல் எங்கே போனாரு? :bolt:

சாம்பு சாஸ்திரிகளை இப்படி
அம்போ என்று கைவிடலாமா? :Cry:

நாயரை சற்றும் நியாயம் இல்லாமல்
நடுத்தெரு நாராயணன் ஆக்கலாமா? :roll:

கந்தர் அனுபூதியைத் தொடங்கி,
அந்தரத்தில் தொங்கவிடலாமா? :bored:

"குருவாய் வருவாய்" என்பதுவரை
வரவேண்டும் என்பதே எம் ஆவல்!

தொடர் மீண்டும் தொடருமா?
தொடருக்கு சீல் வைப்பதற்குள்??
 
சீல் வைக்கும் சீமாட்டிக்குச்
சின்னதொரு விண்ணப்பம்!
மீளாதொரு வேலையிலே
நாளாக ஆழ்ந்ததனால்
வேளையில் வரவில்லை
வந்துவிட்டேன் இன்றுமுதல்!
:))
 
மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 8
கந்தரநுபூதி: 8

பல வேலைகள் இருப்பதால் இனி வாரம் ஒரு முறைதான் பார்க்கமுடியுமெனச்
சொல்லிவிட்டான் மன்னார்!

குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லி, என்ன வேலை இருந்தாலும், அந்த நேரத்தில்தான்

சாஸ்திரிகள் வீட்டில் கண்டிப்பாக இருப்பேன் என வாக்களித்திருந்தான் மன்னார்!

'அநுபூதி கிடைப்பதென்றால் சும்மாவா?' எனச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்!

சரியாகச் சொன்ன நேரத்திற்கு முன்னமேயே அங்கு சென்றுவிட்டேன்!

ஒரு சில நிமிடங்களில் அங்குவந்த நாயர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்!

அப்போதுதான் புரிந்தது... நான் அவனை அழைத்து வராமல் நேராக வந்துவிட்டதை!

ஒரு குற்ற உணர்வுடன் அவனைப் பார்த்தேன்!

'ஒன்னும் கொழப்பமில்லா! நிண்ட ரூட்டு வேற. எண்ட ரூட்டு வேற!

எனிக்கு மனசிலாயி ' எனக் கபடமில்லாமல் சிரித்தான் நாயர்.
அவன் கையில் மசால் வடை பார்சல் இருந்தது!

இதைக் கேட்டுச் சிரித்தபடியே வந்தான் மயிலை மன்னார்!

'இன்னா நாயர்? அனுபூதி நீ இல்லாமலியே கேட்டுறலாம்னு வண்ட்டானா

நம்ம சங்கரு? ' எனக் கிண்டலடித்தான்!

சாஸ்திரிகள் பெரிதாகச் சிரித்தார்!

'சரி, சரி! மேட்டருக்கு வருவோம்! அடுத்த பாட்டைப் படிக்கறதுக்கு

முன்னாடி ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ! இந்தக் "கந்தர் அனுபூதி"யை
மட்டும் நம்ம அருணகிரியாரு கொத்து கொத்தாச் சொல்லியிருக்காரு!
முந்தியே சொன்னேனில்ல... அந்த 3.4.5 மூணு பாட்டும் ஒரு செட்டுன்னு
நெனைப்புல வைச்சுக்கன்னு....... அதேமாரி, போன பாட்டுலேர்ந்து....
அதான், 6,7,8,9 பாட்டு நாலும் ஒரு செட்டு! இந்த நாலு பாட்டும் மனசைப் பத்திச் சொல்றது.
போன பாட்டுல கல்லான எம்மனசு மேல ஒன்னோட காலை

வையிப்பான்னு கெஞ்சினாரு.

இப்ப இந்தப் பாட்டுல..... எங்கே அந்தப் பாட்டைப் படி!' என்றான்

மயிலை மன்னார்!

கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதா ணினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே .

கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே .

ஏ! கெட்டுப் போன என்னோட மனசே!ன்னு தன்னோட மனசைப் பார்த்துப்
பேசறாரு அருணகிரியாரு!
முன்னாடியே சொன்னேனே, அதுமாரி, இதெல்லாம் ஒனக்காவோ, இல்லை,

எனக்காவோ அவுரு பாடலை!
இதும்மாரி பெரியவங்க சொன்னதெல்லாம் அவங்களைப் பத்தி மட்டுந்தான்!

அவங்க பட்ட அனுபவத்தத்தான் பாட்டாப் பாடியிருக்காங்க!

ஏ, கெட்டு ஒளி[ழி]ஞ்சுபோன என்னோட மனசே! ஒனக்கு ஒரு வளி[ழி] சொல்றேன்

கேட்டுக்கோன்னு ஆரம்பிக்கறாரு!

அதான்,
'கெடுவாய் மனனே கதிகேள்'

'கரவாதிடுவாய்'னா, கொஞ்சங்கூட சிந்தனையே பண்ணாம, ஒங்கிட்ட க்கீற

பொருளையெல்லாம் கொடுத்திருன்றாரு!

ஒங்கிட்ட அப்பிடி இன்னா க்கீது?
பண்மா? பொருளா?
அதில்லை இங்க சொல்றது

அடுத்த வரியுல சொல்றரு... அத்தக் கவனி

'வடிவேல் இறைதாள் நினைவாய்'ன்னு ஒண்ணு சொல்றாரு!

அதான் இதுல முக்கியமாக் கவனிக்கணும் நீ!

இன்னாமோ நாம சம்பாதிச்சதக் குடுக்கறோம்னு அகந்தை பிடிச்சு அலையாம,

இத்தயெல்லாம் குடுத்தது அந்தக் கந்தவேலந்தான்னு புரிஞ்சுக்கினு, அவன் குடுத்தத
அவனோட அடியாருங்களுக்குக் குடுக்கறேன்ற நெனைப்போடக் குடுக்கணும்!

துளிக்கூட அகங்காரமே இல்லாம, இதெல்லாம் என்னோடதுன்ற நெனைப்பு

கொஞ்சங்கூட வராமக் குடுக்கணும்ம் நீ!
அப்பத்தான் நீ குடுக்கறதுலியே ஒரு அர்த்தம் இருக்கும்னு தெளிவாச்

சொல்றாரு அருணகிரியாரு!

அப்பிடிக் குடுத்தாத்தான் ஒன்னோட வேதனையெல்லாம் சுட்டெரிஞ்சு

சாம்பலாகிப் போவும்னு ஷ்ட்ராங்காச் சொலிடறாரு அடுத்த வரியுல!

'நெடுவேதனை தூள் படவே சுடுவாய்'

இத்தினி நாளா நீ அனுபவிச்சுக்கினு க்கீற வேதனையெல்லாம் தீந்து

போவணும்னா, நீ குடுக்கறதெல்லாம் ஒன்னோடது இல்லை; அல்லாமே
அவன் குடுத்ததுதான்ற நெனைப்போடக் குடுத்தாத்தான் வேதனை தீரும்னு
புட்டுப் புட்டு வைக்கிறாரு!

இதுக்கு அப்பாலதான், ஒரு டகால்டி வேலை பண்றாரு இந்தாளு!

இன்னும் இன்னத்தக் குடுன்னு சொல்லலை ! நல்லாக் கெவனி!

'வினை யாவையுமே விடுவாய் விடுவாய்'னு ரெண்டு தபா சொல்றாரு!

எதுக்கு அப்பிடிச் சொல்றாருன்னு கொஞ்சம் யோசிக்கணும்!

வெனைன்னா இன்னா?

நல்ல வெனை, கெட்ட வெனைன்னு ரெண்டு க்கீது!

கெட்டத விட்டிருன்னுதான் அல்லாரும் சொல்லக் கேட்டிருக்கோம்!

இவுரு இன்னாடான்னா, அது நல்ல வெனை, கெட்ட வெனைன்னு பாக்காதே!

வெனைன்னு எப்ப தெரிஞ்சு போச்சோ, அப்பவே, அது நல்லதா, கெட்டதான்னு
ஆராய்ச்சி பண்ணிக்கினு டயத்த வேஸ்ட் பண்ணாம, வெனைன்னு தெரிஞ்சதுமே,
அத்த விட்டிருன்னு அடிச்சுச் சொல்றாரு. இதத்தான் குடுக்கச் சொல்றாரு!

கொஞ்சம் கொயப்பமாத்தான் இருக்கும் இந்த சமாச்சாரம்!

கெட்டத வுட்டுரலாம். அது புரியுது.

ஆனா, எதுக்காவ நல்லதியும் வுட்டுருன்னு சொல்றாரு?

ஒரு நல்லது பண்ணினா அதுனால ஒனக்கு கொஞ்சம் புண்ணியம்

கெடைக்கலாம்.அத்த அனுபவிச்சே ஆவணும் நீ!

நீ அனுபூதியத் தேடிப் போறப்ப, இது எதுக்கு ஒனக்கு?

புரியுதா?

இத்தத்தான் 'சொல்லற, சும்மாயிரு'ன்னு கந்தன் சொல்லி வைச்சாரு

அருணகிரியாருக்கு!

அது இப்ப நெனைப்புல வருது அவுருக்கு!

ஆஹா! எனக்கு நல்லதும் வேணாம்; கெட்டதும் வேணாம்! ஒண்ணுமில்லாம

இருந்தாலே போறுண்டா சாமின்னு தடாலடியா மனசு கையுல சொல்லிடறாரு!

இப்ப ஒரு நாயை, அது ஒன்னோட நாயா இருந்தாக்கூட,

ரூமுக்குள்ள பூட்டிவைச்சு அடிச்சியான்னா, ஒரு நேரத்துல அது
ஒன்னியே திருப்பிக் கடிக்க வரும்! அதும்மாரித்தான், நாம செய்யற
நல்லதும் கெட்டதும் நம்மியே திருப்பித் தாக்கும்! புரியுதா நான் சொல்றது?
கெட்டதுல மட்டுமில்லாம, நல்லதாலியுங்கூட மனசு கெட்டுப் போவறதுக்கு
சான்ஸ் க்கீது! கெர்வம் வந்திரும்!

அதுனால, நல்லதோ, கெட்டதோ, எத்தயுமே ஒங்கிட்ட வைச்சுக்காம,

அல்லாமே அவன் தான் குடுத்தான்ற நெனைப்போட அல்லாத்தியுமே
விட்டொளிச்சிருன்னு இந்தப் பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு.

சரி, அடுத்த வாரம் இதே நேரம் பாப்போம்' எனச் சொல்லி எழுந்தான்

மயிலை மன்னார்!

என்ன சொல்வதெனப் புரியாமல், ஏக்கத்துடன் மயிலை மன்னாரிடம்

சொல்லிக்கொண்டு கிளம்பினேன் நான்!
*************

[தொடரும்].
 
சீல் வைக்கும் சீமாட்டிக்குச்
சின்னதொரு விண்ணப்பம்!
மீளாதொரு வேலையிலே
நாளாக ஆழ்ந்ததனால்
வேளையில் வரவில்லை
வந்துவிட்டேன் இன்றுமுதல்!
:))

சீல் வைப்பது 'சீமாட்டி'யின் வேலை அல்ல நண்பரே(?)
சீல் வைப்பது P.C. AND Mr. PRAVEEN அறிந்து கொள்ளுங்கள்!

அதுவும் குறிப்பிட்ட காலம் வரையில் மேலும்
புதிதாக போஸ்ட் எதுவும் வராவிட்டால் மட்டுமே!


மீண்டும் அழைத்தது சரியா? :decision: தவறா? :noidea:
 
சீல் வைக்கும் சீமாட்டிக்குச்
சின்னதொரு விண்ணப்பம்!
மீளாதொரு வேலையிலே
நாளாக ஆழ்ந்ததனால்
வேளையில் வரவில்லை
வந்துவிட்டேன் இன்றுமுதல்!
:))

சீல் வைப்பது 'சீமாட்டி'யின் வேலை அல்ல நண்பரே(?)
சீல் வைப்பது P.C. AND Mr. PRAVEEN அறிந்து கொள்ளுங்கள்!

அதுவும் குறிப்பிட்ட காலம் வரையில் மேலும்
புதிதாக போஸ்ட் எதுவும் வராவிட்டால் மட்டுமே!


மீண்டும் அழைத்தது சரியா? :decision: தவறா? :noidea:
 
//தொடர் மீண்டும் தொடருமா?
தொடருக்கு சீல் வைப்பதற்குள்??
//

இதற்கான பதிலே அது! மற்றபடி வேறொன்றும் இல்லை.
அழைத்ததும் தவறில்லை. முடிவிலும் தவறில்லை
என்வரையில்......!!!
மீண்டும் அழைத்து நினைவூட்டியமைக்கு நன்றி. வணக்கம்.:))
 
அனுமனைப் பிடிக்கும் மிகவும் ;
அனுமனின் வால் போன்ற

அதிக நீளத் தொடர்களை அல்ல!
அவற்றை படிக்க எனக்குப்

பொழுதும் இல்லை மேலும்
பொறுமையும் இல்லை!

திரும்பவும் அழைத்தது
விரும்பிச் சிலாகித்துப்

படிப்பவர்களுக்காகவே!
தொடரட்டும் தொடர்!

 
பொழுதின்றிப் போனாலும்
பொறுமைகுறை வானாலும்
பிறர்நலம் நாடியெமை
அழைத்திட்டப் பேருள்ளம்
நனிசிறக்கச் செய்திடவே
முருகனருள் முன்னிற்கும்.
வணக்கம்.
 
மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 9
"கந்தரநுபூதி" -- 9

சரியான நேரத்துக்கு சாஸ்திரிகள் வீட்டை அடைந்தேன்.
இந்தமுறை மறக்காமல், நாயரையும் பார்த்துவிட்டு, அவனையும் கூடவே அழைத்துவந்தேன்!

எனக்கு முன்னாலேயே மன்னார் வந்திருந்தான். சாஸ்திரிகளுடன் எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தவன்,

எங்களைப் பார்த்ததும், அப்படியே அதை நிறுத்திவிட்டு, 'வாங்க, வாங்க! நேரத்தோட வண்ட்டாப்புல க்கீது!'
என வரவேற்றான்!

'பின்ன நாங்க எந்து செய்யி? சேட்டன் இப்போழ் வாரம் ஒரு முறையாய்ட்டுத் தானே சம்சாரிக்கின்னு!'

எனச் சிணுங்கினான் நாயர்!

'தோ பார்றா? நாயருக்குக் கோவம் வர்றத!' எனச் சிரித்த மன்னார், சட்டென்று சீரியஸாகி,

'சரி, அப்போ அடுத்த பாட்டைப் பாக்கலாமா? அதுக்கும் முன்னாடி நான் சொன்னது நெனைப்பிருக்கட்டும்.
மனசைப் பாத்து சொல்ற மூணாவுது பாட்டு இது!

மொதப் பாட்டுல, கல்லான எம்மனசு மேல ஒன்னோட காலை வையிப்பான்னு கெஞ்சினாரு.

ரெண்டாவது பாட்டுல, வெனையாவே செஞ்சு செஞ்சு கெட்டுப்போன மனசுக்கு ஒரு வளி காமிச்சாரு.
இன்னான்னு? ஒன்னுதுன்னு ஒண்ணுத்தியும் ஒங்கிட்ட வைச்சுக்காமக் கொடுத்திட்டு, கந்தனோட காலு ரெண்டையும்
கெட்டியாப் புடிச்சுக்கினியான்னா, நீ படுற வெனையெல்லாம் சுட்டெரிஞ்சு சாம்பலாயிப் போயிரும்னாரு.
இப்ப, இதுல இன்னா சொல்றார்னு பாப்பம்! அதுக்கும் முந்தி, பாட்டைப் படி' என்றான்.
நானும் படித்துக் காட்டினேன்.

அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள்பே சியவா
குமரன் கிரிரா சகுமா ரிமகன்
சமரம் பொருதா னவநா சகனே

அமரும் பதி கேள் அகமாம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசிய ஆ
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே

'ஒரு பெரிய சங்கதியை முருகன் இவுருக்கு சொன்னாருன்னு போன பாட்டுல சொன்னேன்ல.
அத்தச் சொன்னது ஆருன்னு இந்தப் பாட்டுல சொல்லிக் கூத்தாடுறாரு அருணகிரிநாதரு.

'பேச்சையெல்லாம் வுட்டுட்டு 'கம்'முன்னு கெட'ன்னு சொன்னாராம்.
அந்த சத்திய வாக்கைக் கேட்டதுமே, ஒரு மூணுவிதமான மயக்கம் இவுருக்கு தீந்துபூட்டுதாம்!
இன்னான்னானு வரிசையா பட்டியலு போடுறாரு.

'அமரும் பதி'ன்னா இருக்கற ஊரு.
'கேள்'னா கேக்கறது இல்லை! சொந்தக்காரங்கன்னு அர்த்தம்! சொந்தமின்னா, அல்லாருந்தான்!

பொண்டாட்டி, புள்ளை, மாமன், மச்சான்னு அல்லாரையுமேத்தான் சொல்றாரு.
இந்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு கோஷம் போடுவாங்களே ஆளாளுக்கு மேடையுல அது

ரெண்டுந்தான் மேல சொன்ன ரெண்டும்!

அடுத்தாப்புல, 'டகால்டி'யா ஒரு வார்த்தை போடுறாரு!... 'அகம்'னு.
அகம்னா வூடுன்னும் அர்த்தம் வைச்சுக்கலாம், நானுன்ற இந்த அகங்காரத்தியும் சொல்லலாம்.

மேல சொன்ன மூணையும் ... என்னோட ஊரு, என்னோட சாதிசனம், என்னோட வூடுன்றதுல்லாமே

மனசுக்குள்ள ஒரு கெர்வத்தைக் குடுத்து என்னிய ஆட்டுது! ஒரு மயக்கத்தைக் குடுக்குது.
அத்தத்தான் 'பிமரம்'னு சொல்றாரு.
மொறையாப் பாத்தா, பிரமம்னுதான் சொல்லியிருக்கணும்!
ஆனா, அதெல்லாம் ஒரு மயக்கத்தைக் குடுக்கறதால, அந்த வார்த்தையே கொஞ்சம் திரும்பிப்பூடுது!
பிரமம், பிமரம் ஆயிருது!
இதுமாரி 'டமாசு'ல்லாம் அடிக்கடி பண்ணுவாரு நம்ம அருணகிரிசாமி!

முருகன் சொன்ன 'மெய்ப்பொருளால'... சத்திய வாக்கால... இந்த மயக்கமில்லாம் தீந்திருச்சாம் இவுருக்கு!
இந்த அதிசியத்த இன்னான்னு நான் சொல்லுவேன்னு குதிக்கறாரு!
அதான் 'கெட மெய்ப்பொருள் பேசிய ஆ!'

இத்தச் சொன்னது ஆருன்னு இப்ப அடுத்த பட்டியலு போடுறாரு!

இதுலியும் ஒரு மூணு வருது!

சொன்னது குமரன், அது ஆருன்னா கிரிராச குமாரியோட மகன், அவன் இன்னா பண்ணினான்னா,

சமரம் பொரு தானவ நாசகன்னு வரிசியா அடுக்கிக்கினே போறாரு!

மொதல்ல சொன்ன மூணுக்கும், இப்ப சொல்ற மூணுக்கும் எதுனாசும் சம்பந்தம் க்கீதான்னு பாத்தா,

... ஆமா! க்கீதுன்னு புரியவரும்!

'குமரன்'னாலே மலையிருக்கற ஊருலல்லாம் ஒக்காந்துக்கினு கீறவன்னு அல்லாருக்கும் தெரியும்!

அப்போ, குமரன்னதுமே ஏதோ ஒரு ஊரு ஒன்னோட நெனைப்புக்குத் தானா வந்திரும்!

மலைராசன் பொண்ணு பெத்த புள்ளைன்னு அடுத்த வார்த்தை! 'கிரிராசகுமாரி மகன்'னு!

இதுல ஒரு சொந்த பந்தத்தையும், அவரோட சொந்த வூடு எதுன்னும் லேசா தொட்டுக் காமிக்கறாரு!

'தனு'ன்னு ஒரு ராட்சசி பெத்த புள்ளைங்களான ராட்சசங்கள்லாம் சண்டைக்கு வந்தாங்களாம்.இவுரை எதுத்து!

'தனு' பெத்ததால தானவர்னு அவங்களுக்குப் பேரு! அவங்களையெல்லாம் ஒண்ணுமில்லாம நாசம் பண்ணினவர்னு
மூணாவதா சொல்றாரு. ...'சமரம் பொரு தானவ நாசகன்'னு!
சாமியோடையே சண்டை போட வர்றான்னா, அவன் எவ்ளோ பெரிய மடையனா இருக்கணும்?

புத்தி கெட்டுப் போனாத்தானே, ஒரு மயக்கம் வந்தாத்தானே, இதும்மாரில்லாம் செய்யத் தோணும்!

இப்ப ரெண்டியும் சேத்துப் பாத்தியானா, ஊரு, சொந்தம், வூடுன்ற மூணு வித மயக்கமும் மனசைப் போட்டுக்

கொய[ழ]ப்பறப்ப, தன்னோட அடியாருங்களைக் காப்பாத்தறதுக்காவ, முருகன் சண்டை போட வந்திருவான்னு
பூடகமா சொல்லிக் காட்றாரு நம்மாளு!

போன பாட்டுலியே சொன்னாமாரி, முருகன் சண்டை போட்டார்னா, ஆரும் அளிஞ்சுபோவ மாட்டாங்க!

அதுக்குப் பதிலா, அந்தக் கொணங்களை மட்டும் தொரத்திட்டு, ஒனக்கு ஒரு உண்மையைக் காட்டுவாருன்னு
இந்தப் பாட்டுல புரிஞ்சுக்கணும்!

இப்ப ஒரு சட்டை அளுக்காயிருச்சுன்னா, தூக்கியா கெடாசிடறோம்? அதுல க்கீற அளுக்கை மட்டும் சோப்பு போட்டுத்

தொவைச்சு சுத்தம் பண்ணித் திரும்ப மாட்டிக்கறோம்ல?

அதும்மாரித்தான் இங்கியும்!
மயக்கந்தான் கெட்டுப் போவும்! நீ கெட மாட்டே! ஏன்னா, அப்பத்தானே ஒனக்கு அநுபூதின்னா இன்னான்னு புரியும்!

இன்னா? சொல்றது வெளங்குதா?' என்றான்.

'ஏதோ கொஞ்சம் புரியுது மன்னார்! அப்பிடீன்னா, அடுத்த பாட்டுதான் இந்த வரிசையில் கடைசி பாட்டுல்லை?
அது என்னன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கே!' என்றேன்.

சாஸ்திரிகளைப் பார்த்து என்னைக் காட்டி உதட்டைப் பிதுக்கினான் மயிலை மன்னார்!

'ம்ம்... என்னத்தைச் சொல்றது?' என்பதுபோல் என்னை ஒரு இரக்கத்துடன் பார்த்தார் சாஸ்திரிகள்.

நாயர் ஒன்றும் பேசாமல், மௌனமாக எழுந்து நடையைக் கட்டினான்!

'அடுத்த வாரம் பாப்பம்! நாங்க வரோம் சாமி!' என சாம்பு சாஸ்திரிகளிடம் சொல்லிக்கொண்டுவிட்டு,

என் தோளின் மீது கையைப் போட்டவாறே நடக்கத் தொடங்கினான் மன்னார்.

மாலைநேர மயிலை மாடவீதி வழக்கம்போலக் களை கட்டியிருந்தது!
**********
[தொடரும்]
 
I used to know this prayer by heart for ever as a little kid. So nice to see the prayer once agin. 1
 
மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 10

கந்தரநுபூதி - 10
9.
'இன்னைக்குப் பாக்கப்போற பாட்டு, நான் முந்தியே சொன்ன நாலு பாட்டுல கடைசிப் பாட்டு. இந்த மனசு இருக்கே... அது ரொம்ப ரொம்பப் பொல்லாதுது. அது பண்ற அளும்பாலத்தான் ஒரு வளியுல நெலைச்சு நின்னு, மனசொப்பிப் போவ முடியாம தடுக்குது. அதைத்தான் இந்த நாலு பாட்டுலியும் ஒண்ணொண்ணா சொல்லிக்கினே வராரு அருணகிரியாரு.

நீ எம்மனசு மேல ஒங்காலை வைச்சியானா அல்லா வெனையும் தீந்துரும்னு மொதப் பாட்டுல கொஞ்சலாக் கெஞ்சினாரு.
அடுத்த பாட்டுல, இன்னும் ஒரு படி மேல போயி, முருகனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதுனால அவன் வந்து காலை வைக்கறதுக்காவ 'வெயிட்' பண்ணாம, நீயே போயி அவனோட ரெண்டு காலையும் கெட்டியாப் புடிச்சுக்கோன்னாரு.
மூணாவது பாட்டுல, இந்த வம்புப் பேச்சையெல்லாம் வுட்டுட்டு, பேசாமக் கம்முன்னு கெடன்னு கந்தன் சொன்னதால, என்னோட ஊரு, என்னோட வூடு, என்னோட சொந்தக்காரங்கன்ற அல்லாமே அத்துப் பூட்டதாச் சொல்லி, அத்தச் சொன்னது ஆருன்னும் சொன்னாரு.
இப்ப இதுல, இன்னோரு விசயத்தப் பத்திச் சொல்றாரு. ம்ம்ம்... பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.
நான் படித்துக் காட்டியதும், அதைப் பதம் பிரித்துச் சொன்னான் மன்னார்.


மட்டூர் குழன்மங் கையர்மை யல்வலைப்
பட்டூ சல்படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
நிட்டூ ரநிரா குலநிர்ப் பயனே.


நான் படித்துக் காட்டியதும், அதைப் பதம் பிரித்துச் சொன்னான் மன்னார்.

மட்டூர் குழல் மங்கையர் மையல்வலைப்
பட்டூசல் படும் பரிசு என்று ஒழிவேன்
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.


ஊரு, வூடு, சொந்தபந்தம்னு அல்லாத்தியும் வுட்டுட்டாக்கூட, இன்னும் ஒரே ஒரு ஆசை மட்டும் தீரலை அருணையாருக்கு! இந்த விசயத்துல அருணகிரியாரு ஒரு காலத்துல 'ஆசைகிரியாரா' இருந்தாரு. அதான் பொண்ணாசை!
'மட்டூர் குழல் மங்கையர் மையல்வலைப் பட்டூசல் படும் பரிசு என்று ஒழிவேன்'னு கதர்றாரு.

மட்டு ஊருதாம் குழல் மேல!
மட்டுன்னா இன்னா? தேன், வாசனைன்னு ரெண்டு விதமாவும் சொல்லலாம். ஆனா, தல நெறைய பூவை வைச்சுக்கினு, இருட்டற நேரத்துல ரோட்டாரமா நின்னுக்கினு, சொகம் குடுக்கறதுக்காவக் காத்துக்கினு நிப்பாங்களே, அவங்களைத்தான் சொல்றாரு இந்த வரியுல.
அவங்க வைச்சுக்கினு க்கீற பூவுலேர்ந்து தேனா வடியுதாம் . அதுனால, அவங்க தலைமயிர்லேர்ந்து அப்பிடி ஒரு வாசனை கெளம்பிக் கெறங்கடிக்குதாம். அந்த வாசனை இவரை இளு[ழு]க்க, இவுரும் அவங்க பின்னாடியே போயிடுறாராம். அவங்க விரிக்கற ஆசை வலையுல இவுரு மாட்டிக்கினு அல்லாடுறாராம். எப்பிடி? ஒரு படகு கணக்கா! இப்பிடியும், அப்பிடியுமா துடுப்பு இல்லாம தண்ணியுல தத்தளிக்கற ஒரு படகு மாரி, இவுரு மனசும் ஆடுதாம். பரிசுன்னா, படகுன்னு அர்த்தம். இந்த சங்கடத்த நான் என்னிக்கு ஒளி[ழி]க்கறதுன்னு அளுவுறாரு. அல்லாம் இந்தப் பாளும் மனசு பண்ற கூத்து! பொண்ணுங்களப் பத்தித் தப்பாச் சொல்லலை இந்தப் பாட்டுல அவுரு! ஒன்னியத்தான்... ஒம் மனசத்தான் குத்தம் சொல்றாரு. நல்லாப் புரிஞ்சுக்க!


அப்பத்தான், இவுருக்கு 'சட்'டுன்னு நெனைப்புக்கு வருது!
சூரனோட சண்டை போடப் போறப்ப, வளியுல ஒரு மாய மலை நின்னுக்கினு அல்லாரியும் உள்ளே இளுத்துக்கினு போச்சுன்னு சொன்னேன்ல! அப்ப முருகன் இன்னா பண்ணினாரு. தன்னோட வேலை எடுத்து வுட்டாரு. அது கரீட்டா எங்க எந்தெந்த இடத்துல ஓட்டைங்க இருக்குன்னு பார்த்து, அந்த மலையையே தூள் தூளாக்கிருச்சு.

'அட! இன்னா 'ஐஸாலக்கடி' வேலை பண்ணினேப்பா ! பொல்லாத பய நீ! ஒரு செகண்டுல கவலையையெல்லாம் போக்கடிச்சு, அல்லாரோட பயத்தியும் தீத்துக்கட்டின வீரன் நீ! ஒன்னால என்னோட இந்த சின்னூண்டு கவலையையா போக்கடிக்க முடியாது?'ன்னு 'நைஸு' பண்றாரு!

'சாமி! அந்தக் கடைசி வரியுல வர்ற சமஸ்கிருதத்துக்கு கொஞ்சம் வெளக்கம் குடுங்க!' என சாம்பு சாஸ்திரிகளைப் பார்த்துச் சொன்னான் மயிலை மன்னார்.


"தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்ப்பயனே."


'சைலம்னா மலை, கிரவுஞ்ச மலை. நிட்டூரன்னா பொல்லாத பயன்னு அர்த்தம். செல்லமாக் கொஞ்சறார் அருணகிரியார்! ஆகுலம்னா கவலை; நிராகுலன்னா கவலையே இல்லாதவன்னு அர்த்தம். நிர்ப்பயன்னா பயமே இல்லாம யுத்தம் பண்றவன்னு சொல்லுவா!'

வளைவும், நெளிவுமா இருக்கற அந்த மலைக்குள்ள நுழைஞ்சு, அதைச் சல்லடை சல்லடையாப் பொடிப்பொடியாக்கின வேலைக் கையிலேர்ந்து துளிக்கூட பயமில்லாம எறிஞ்சு நிர்மூலம் பண்ணினவனே, அப்பனே முருகா!ன்னு ஸ்தோத்ரம் பண்றார் என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'இந்த நாலு பாட்டுலியும் சொன்னதக் கெட்டியாப் புடிச்சுக்கினியான்னா, இந்த மனசுன்ற ஒண்ணப் பத்திக் கவலியே படத் தாவல்ல! சரி, அடுத்த வாரம் பாப்பம். நான் வரேன் சாமி! ' எனச் சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றான் மயிலை மன்னார்!
'எண்ட தெய்வமே! முருகா!' என கோபுரத்தைப் பார்த்து வணங்கினான் நாயர்.
*************
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************
Read more...
 
Dear sri VSK,

Excellent. I have studied many commentraries, but this mylai mannar's is
thought-provoking. Mano-naasa is beautifully explained by mannar.
 
Dear Sri VSK
I took time to read this. But I did it very patiently...it is wonderful... Really Tamil in literature style is very beautiful to read and it goes deep in to the heart. My Tamil reading is not very fluent, but it is a pleasure to read gradually. Thank you. Anandi
 
Dear sri VSK,

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்தமோக்ஷ யோ;
பந்தாய விஷயாஸக்தம் முக்தம் நி்ர்விஷயம் ஸ்ம்ருதம்
( அம்ருதபிந்து உபநிஷத் )

Mind is the cause for samsara and moksha. Desire is the cause for bondage
and absence of it is the cause for liberation.

Saint Thayumanavar says :

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாங் கரடி வெம்புலி
வாயையுங் கட்டலாம் ஒரு சிங்க முதுகின்மேற்
கொள்ளலாங் கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம் வேறொருவர் காணாமல்
உலகத்துலாவலாம் வின்னவரை ஏவல் கொள்லாம்
ஸந்தததும் இளமையோடு இருக்கலாம் மற்றொரு
சரீரத்தினும் புகதலாஞ் சலமேல் நடக்கலாம்
கனல்மேல் இருக்கலாம் தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா இருக்கின்ற திற்மரிது
சத்தாகி என்சித்தமிசை குடிகொண்ட
அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே.

He says we can do many things, control many things but we find it difficult
to control the mind.

In Sivananda Lahari also, Sri Adi Sankara points out the great difficulty in
controlling the mind in slokas 20,22,42,74 and 97.

Bhagawan Ramana puts it succinctly : When you know that mano-nasa leads
to moksha, what is the use of reading scriptures ? He means start the enquiry
now and here - Who am I ?. When you go deeper and deeper , you will find
that there is no such thing as mind.
 
மயிலை மன்னாரு

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

தங்கள் வரவை அன்புடன் எதிர்ப்பார்க்கிறோம்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top