• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பெளர்ணமி பூஜை, வழிபாடு செய்யும் முறை

பெளர்ணமி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்யவது என்பதையும், சத்திய நாராயணன் பூஜை எப்படி செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம்.

பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பெளர்ணமி நாளில் வீட்டிலும்,கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.


சத்யநாராயண பூஜை :

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று சந்திரன் பகவான் உதயம் ஆகும் நேரத்தில் இந்த பூஜை செய்வது சிறந்தது. சத்ய நாராயண பூஜை என்பது காக்கும் கடவுளான நாராயணனுக்கு செய்யப்படும் பூஜை ஆகும்.

பெருமாள் எடுத்த பல அவதாரங்களில், சத்ய நாராயண அவதாரமும் ஒன்று. திருமணம், வீடு, மனை வாங்கும் போது, திருவிழா என எல்லாவித நல்ல காரியத்திற்கு முன் இந்த சத்யநாராயண பூஜை நடத்தப்படுகின்றது.

அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த பூஜை நடத்தப்படுகின்றது.

கால பைரவரை எந்த கிழமைகளில், எந்த ராசியினர் வழிபடுதல் சிறப்பு

பூஜை செய்யும் முறை:

பூஜை செய்யும் முன் வீட்டிலும், வாசலிலும் கோலமிட்டு, மா இலை தோரணம் கட்டி அலங்கரிக்கவும்.

பூஜை செய்யும் முன் கணவன், மனைவி இருவரும் குளித்துவிட்டு, சந்திரன் உதயம் ஆகும் நேரத்தில் பூஜை செய்ய ஆரம்பிக்கவும்.

வீட்டிம் பூஜை அறையில் உள்ள கடவுள் சிலை, படங்களுக்கு பூக்களை வைத்து, விளக்கேற்றி பூஜையை தொடங்கலாம்.
முதலில் விநாயகர் பூஜை, நவகிரக பூஜை செய்து பின்னர் சத்ய நாராயணர் பூஜை செய்ய வேண்டும்.

சகல வளம் தரும் குபேர விளக்கு ஏற்றி வழிபடும் முறைகள்

கடவுளிடம் தனக்கு என்ன குறை உள்ளது, தனக்கு இந்த அருள் வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் தூபம்,கற்பூர தீபம் காட்டி பூஜை செய்யவும்.

சத்யநாராயணன் பூஜை செய்வதன் மூலம் புத்திர பாக்கியம், பட்டம், பதவி, புகழ், செல்வம், அதிகாரம், அந்தஸ்து போன்ற அனைத்து வித நன்மைகளும் பயக்கும். பல அருள் நமக்கு கிடைக்கும்.

நிவேதனம்:

நாராயணனுக்கு பிடித்தது பால் பாயாசமும், பாசிப் பயறு கஞ்சியும் ஆகும். இதனால் சத்யநாராயணன் பூஜையின் போது இந்த நிவேதனம் படைத்து வழிபடலாம்.

இப்படி ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் பூஜை செய்தால் நாம் நினைத்தது நடக்கும். கடவுளின் அனுகிரகம் கிட்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு மற்றும் கோயிலின் சிறப்புகள்

சந்திர பூஜை:

அதே போல் பெளர்ணமி அன்று சந்திர பகவானுக்கு பூஜை செய்வது நல்லது. வீட்டின் வெளியே சந்திரன் தெரியும் இடத்தில் நாம் நம்மிடம் வெள்ளி அகல் விளக்கு இருந்தால் அதை ஏற்றலாம்.

அதோடு சந்திரனுக்கு பிடித்த, வெள்ளை நிறத்தில் உள்ள மல்லிகை பூ, வெள்ளை தாமரை ஆகியவற்றை பூஜைக்கு பயன்படுத்தலாம். ஒரு சிறு தாம்புல தட்டில் வாழைப்பழம், பால், கற்கண்டால் செய்த பொங்கல், பால் பாயாசம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்யலாம்.
 

Latest ads

Back
Top