பூதத்தாழ்வார்

1572927148677.png


பிறந்த ஊர் - மகாபலிபுரம்

பிறந்த நாள் - 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம் - ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)

கிழமை - புதன்

எழுதிய நூல் - இரண்டாம் திருவந்தாதி

பாடல்கள் - 100

சிறப்பு - குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.


பூதத்தாழ்வாரின் வாழி திருநாமம்!

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே

ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே

நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே

நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே

இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே

எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே

பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே

பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே !
 
Back
Top