புதுக்கவிதைத் தொகுப்பு
புதுக்கவிதை: சில செய்திகள்
(தமிழ் இணையக் கல்விக்கழக வலைதளத்தில்
பாட ஆசிரியர் திரு.கி.சிவகுமாரின் கட்டுரைகளிலிருந்து தொகுத்தது:
Ref:Tamil Virtual University)
இந்த நூலில் புதுக்கவிதை பற்றிய சில புதிய செய்திகளுடன், சான்றாக சில புதுக்கவிதைகளையும் காணாலாம். அன்பர்கள் இதுபோன்ற செய்திகளையும், சுவையான புதுக்கவிதைகளையும் இங்குப் பதியலாம்.
பாரதியார் எழுதிய வசன கவிதையே தமிழில் இன்று நாம் காணும் புதுக் கவிதைகளுக்கு முன்னோடியாக அமைந்தது. புத்க்கவிதையின் இலக்கணம் பற்றிய சில விளக்கங்கள்:
யாப்பிலக்கணக் கட்டுகளின்றி கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் வகையில் உருவானதே புதுக்கவிதை. மரபுக் கவிதைகளில் யாப்புக்கட்டுகள் சில சமயம் வெறும் அடைமொழிக்காக, எவ்விதப் பொருளுமின்றித் தொடுக்கப் படுவதை எதிர்த்தே புதுக்கவிதையாளர்கள் தம் படைப்புகளைக் கட்டுகளின்றி அமைத்தனர் எனலாம். இந்தப் போக்கு, ’காரிகை கற்காமலேயே கவிதை எழுதலாம்’ என்ற மெத்தனத்தையும் பல புதுக்கவிதையாளர்களிடம் தோற்றுவித்தது.
புதுக்கவிதை உரைவீச்சாகக் கருதப்பட்டாலும் அது மரபுக் கவிதை, கவிதை வசனக் கலப்பு, வசனம் என எந்த வாகனத்திலும் பயணிக்க வல்லதாக அமைந்தது. புதுக்கவிதையைச் சிலர் இயல்புநிலைக் கவிதை, உத்திமுறைக் கவிதை என்று இரண்டாகப் பிரிக்கின்றனர்.
இயல்புநிலைக் கவிதைகள்
அகராதி தேடும் வேலையின்றிப் படித்த அளவில் புரிவன இவை. சில சான்றுகள்:
காதலும் நட்பும்: அறிவுமதி
கண்களை வாங்கிக்கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை வாங்கிக்கொண்டு
உன்னைப்போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்.
முதிர்ச்சியின் பக்குவம்: இரா.தமிழச்சி
காய்கள்கூட
கசப்புத் தன்மையை
முதிர்ச்சிக்குப் பின்
இனிப்பாக்கிக் கொள்கின்றன
மனிதர்களில் சிலர்
மிளகாய்போல் காரத்தன்மை மாறாமல்
காலம் முழுவதும்
வார்த்தை வீச்சில் வல்லவர்களாய்.
பணிக்குச் செல்லும் பெண்கள்: பொன்மணி வைரமுத்து
வீட்டுத் தளைகள்
மாட்டியிருந்த கைகளில்
இப்போது
சம்பளச் சங்கிலிகள்.
மத நல்லிணக்கம்: அப்துல் ரகுமான்
எப்படிக் கூடுவது
என்பதிலே பேதங்கள்
எப்படி வாழ்வது
என்பதிலே குத்துவெட்டு
பயணத்தில் சம்மதம்
பாதையிலே தகராறு
இன்னா செய்யாமை
விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்
உத்திமுறைக் கவிதைகள்
புதுக்கவிதையின் உத்திமுறைகள் மரபுக் கவிதையின் அணியிலக்கணம் போல. படிமம், தொன்மம், அங்கதம் என்பன சில உத்திமுறைகள்.
அறிவும் உணர்ச்சியும் கொண்ட ஒரு மனபாவனையை சட்டெனத் தெரியப்படுத்துவது படிமம் என்பார் வெ.இராம சத்தியமூர்த்தி. இது [மேத்தா[வின் கருத்துப் படிமம்:
ஆகாயப் பேரேட்டில் பூமி
புதுக்கணக்குப் போட்டது
இது அவரது காட்சிப்படிமம்:
பூமி உருண்டையைப்
பூசணித் துண்டுகளக்குவதே
மண்புழு மனிதர்களின்
மனப்போக்கு
புராணக் கதைகளைப் புதுநோக்கிலோ, முரண்பட்ட விமிசனத்துடனோ கையாள்வது தொன்மம். இது மேத்தாவின் முரண்பாடு:
நானும்
சகுந்தலைதான்
கிடைத்த மோதிரத்தைத்
தொலைத்தவள் அல்லள்
மோதிரமே
கிடைக்காதவள்
அங்கதம் என்பது முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையையும் தீச்செயல்களையும் கேலி பேசுவது. இது மேத்தா:
கல்வி இங்கே
இதயத்தில் சுமக்கும்
இனிமையாய் இல்லாமல்
முதுகில் சுமக்கும்
மூட்டையாகிவிட்டது
--ஒரு வானம் இரு சிறகு
இருண்மைநிலைக் கவிதைகள்
புதுக்கவிதை என்பதே படித்த உடனே புரிய வேண்டுவதாயினும், எளிதிலோ முற்றுமோ புரியாத கவிதகளை இருண்மைநிலைக் கவிதைகள் என்கின்றனர். பேசுபவர், பேசப்படுபொருள் ஆகியன சார்ந்த மயக்கங்கள் கவிதையில் இருண்மையை ஏற்படுத்துவதுண்டு:
எதிரே
தலைமயிர் விரித்து
நிலவொளி தரித்து
கொலுவீற்றிருந்தாள்
உன் நிழல்
--பிரமிள்
எறும்புகள் வரிசையாக
பள்ளிக்குச் செல்கிறார்கள்
வரும்பொழுது கழுதையாக வருகிறது
--என்.டி.ராஜ்குமார்
இத்தகைய கவிதைகளின் நோக்கம், வாசகர்களிடம் பொருளத் திணிக்காது, அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவது என்பர்.
குறுங்கவிதை
இயந்திர கதியில் இயங்கும் உலகில் நறுக்கென்று கருத்தினைத் தெரிவிக்கும் புதுக்கவிதையின் வடிவத்தையும் சுருக்கி ’நச்’சென்று கருத்துரைக்கும் குறுங்கவிதைகள் தோன்றலாயின. இவற்றை துளிப்பா (ஹைகூ), நகைத் துளிப்பா (சென்ரியு), இயைபுத் துளிப்ப (லிமெரிக்) என்று பாகுபடுத்துகின்றனர்.
துளிப்பா (ஹைகூ: 5-7-5)
படிமம் கொண்டவை:
சாரல் அடிக்கிறது
ஜன்னலைச் சாத்தும்போது மரக்கிளையில்
நனைந்தபடி குருவி
--பரிமள முத்து
குறியீடு கொண்டவை
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்
--அமுதபாரதி
உழுதுவந்த களைப்பில்
படுக்கும் மாடுகள்
காயம் தேடும் காக்கை
--அறிவுமதி
தொன்மம் கொண்டவை:
கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள்
--ராஜ.முருகுபாண்டியன்
முரண் கொண்டவை
தாழ்வு இல்லை
உயர்வே குறிக்கோள்
விலைவாசி
--ல.டில்லிபாபு
அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்
--கழனியூரன்
அங்கதம் கொண்டவை:
நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள்
--தங்கம் மூர்த்தி
விடுகதை கொண்டவை:
அழித்து அழித்துப் போட்டாலும்
நேராய் வராத கோடு
மின்னல்
--மேகலைவாணன்
பழமொழி கொண்டவை:
ஐந்தில் வளைப்பதற்கோ
பிஞ்சு முதுகில்
புத்தக மூட்டைகள்
--பாட்டாளி
வினாவிடை:
தாகம் தணிக்குமோ
கடல்நீர்
வெட்டிப்பேச்சு
--செந்தமிழினியன்
உவமை:
நெருப்புதான் பெண்
அம்மாவிற்கு அடிவயிற்றில்
மாமியாருக்கு அடுப்படியில்
--அறிவுமதி
உருவகம்:
இடியின் திட்டு
மின்னலின் பிரம்படி
அழுதது வானக்குழந்தை
--பல்லவன்
நகைத் துளிப்பா (சென்ரியு:5-7-5)
அது வராவிட்டால் இது
இது வராவிட்டால் அது
எதுவும் வராவிட்டால் அரசியல்
--ஈரோடு தமிழன்பன்
கதை வேண்டாம்
கதவைத் திறந்துவிடு
குழந்தை அடம்
--ஈரோடு தமிழன்பன்
இயைபுத் துளிப்பா (லிமெரிக்)
பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடு கோழி
மீன் நண்டு வகையே அதிகம்
--ஈரோடு தமிழன்பன்
புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய்
--ஈரோடு தமிழன்பன்
கவிதை எல்லாம் விற்றான்
கைக்கு வந்த காசைக் கொண்டு
தேமா புளிமா கற்றான்
--ஈரோடு தமிழன்பன்
*** *** ***
புதுக்கவிதை: சில செய்திகள்
(தமிழ் இணையக் கல்விக்கழக வலைதளத்தில்
பாட ஆசிரியர் திரு.கி.சிவகுமாரின் கட்டுரைகளிலிருந்து தொகுத்தது:
Ref:Tamil Virtual University)
இந்த நூலில் புதுக்கவிதை பற்றிய சில புதிய செய்திகளுடன், சான்றாக சில புதுக்கவிதைகளையும் காணாலாம். அன்பர்கள் இதுபோன்ற செய்திகளையும், சுவையான புதுக்கவிதைகளையும் இங்குப் பதியலாம்.
பாரதியார் எழுதிய வசன கவிதையே தமிழில் இன்று நாம் காணும் புதுக் கவிதைகளுக்கு முன்னோடியாக அமைந்தது. புத்க்கவிதையின் இலக்கணம் பற்றிய சில விளக்கங்கள்:
யாப்பிலக்கணக் கட்டுகளின்றி கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் வகையில் உருவானதே புதுக்கவிதை. மரபுக் கவிதைகளில் யாப்புக்கட்டுகள் சில சமயம் வெறும் அடைமொழிக்காக, எவ்விதப் பொருளுமின்றித் தொடுக்கப் படுவதை எதிர்த்தே புதுக்கவிதையாளர்கள் தம் படைப்புகளைக் கட்டுகளின்றி அமைத்தனர் எனலாம். இந்தப் போக்கு, ’காரிகை கற்காமலேயே கவிதை எழுதலாம்’ என்ற மெத்தனத்தையும் பல புதுக்கவிதையாளர்களிடம் தோற்றுவித்தது.
புதுக்கவிதை உரைவீச்சாகக் கருதப்பட்டாலும் அது மரபுக் கவிதை, கவிதை வசனக் கலப்பு, வசனம் என எந்த வாகனத்திலும் பயணிக்க வல்லதாக அமைந்தது. புதுக்கவிதையைச் சிலர் இயல்புநிலைக் கவிதை, உத்திமுறைக் கவிதை என்று இரண்டாகப் பிரிக்கின்றனர்.
இயல்புநிலைக் கவிதைகள்
அகராதி தேடும் வேலையின்றிப் படித்த அளவில் புரிவன இவை. சில சான்றுகள்:
காதலும் நட்பும்: அறிவுமதி
கண்களை வாங்கிக்கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை வாங்கிக்கொண்டு
உன்னைப்போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்.
முதிர்ச்சியின் பக்குவம்: இரா.தமிழச்சி
காய்கள்கூட
கசப்புத் தன்மையை
முதிர்ச்சிக்குப் பின்
இனிப்பாக்கிக் கொள்கின்றன
மனிதர்களில் சிலர்
மிளகாய்போல் காரத்தன்மை மாறாமல்
காலம் முழுவதும்
வார்த்தை வீச்சில் வல்லவர்களாய்.
பணிக்குச் செல்லும் பெண்கள்: பொன்மணி வைரமுத்து
வீட்டுத் தளைகள்
மாட்டியிருந்த கைகளில்
இப்போது
சம்பளச் சங்கிலிகள்.
மத நல்லிணக்கம்: அப்துல் ரகுமான்
எப்படிக் கூடுவது
என்பதிலே பேதங்கள்
எப்படி வாழ்வது
என்பதிலே குத்துவெட்டு
பயணத்தில் சம்மதம்
பாதையிலே தகராறு
இன்னா செய்யாமை
விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்
உத்திமுறைக் கவிதைகள்
புதுக்கவிதையின் உத்திமுறைகள் மரபுக் கவிதையின் அணியிலக்கணம் போல. படிமம், தொன்மம், அங்கதம் என்பன சில உத்திமுறைகள்.
அறிவும் உணர்ச்சியும் கொண்ட ஒரு மனபாவனையை சட்டெனத் தெரியப்படுத்துவது படிமம் என்பார் வெ.இராம சத்தியமூர்த்தி. இது [மேத்தா[வின் கருத்துப் படிமம்:
ஆகாயப் பேரேட்டில் பூமி
புதுக்கணக்குப் போட்டது
இது அவரது காட்சிப்படிமம்:
பூமி உருண்டையைப்
பூசணித் துண்டுகளக்குவதே
மண்புழு மனிதர்களின்
மனப்போக்கு
புராணக் கதைகளைப் புதுநோக்கிலோ, முரண்பட்ட விமிசனத்துடனோ கையாள்வது தொன்மம். இது மேத்தாவின் முரண்பாடு:
நானும்
சகுந்தலைதான்
கிடைத்த மோதிரத்தைத்
தொலைத்தவள் அல்லள்
மோதிரமே
கிடைக்காதவள்
அங்கதம் என்பது முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையையும் தீச்செயல்களையும் கேலி பேசுவது. இது மேத்தா:
கல்வி இங்கே
இதயத்தில் சுமக்கும்
இனிமையாய் இல்லாமல்
முதுகில் சுமக்கும்
மூட்டையாகிவிட்டது
--ஒரு வானம் இரு சிறகு
இருண்மைநிலைக் கவிதைகள்
புதுக்கவிதை என்பதே படித்த உடனே புரிய வேண்டுவதாயினும், எளிதிலோ முற்றுமோ புரியாத கவிதகளை இருண்மைநிலைக் கவிதைகள் என்கின்றனர். பேசுபவர், பேசப்படுபொருள் ஆகியன சார்ந்த மயக்கங்கள் கவிதையில் இருண்மையை ஏற்படுத்துவதுண்டு:
எதிரே
தலைமயிர் விரித்து
நிலவொளி தரித்து
கொலுவீற்றிருந்தாள்
உன் நிழல்
--பிரமிள்
எறும்புகள் வரிசையாக
பள்ளிக்குச் செல்கிறார்கள்
வரும்பொழுது கழுதையாக வருகிறது
--என்.டி.ராஜ்குமார்
இத்தகைய கவிதைகளின் நோக்கம், வாசகர்களிடம் பொருளத் திணிக்காது, அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவது என்பர்.
குறுங்கவிதை
இயந்திர கதியில் இயங்கும் உலகில் நறுக்கென்று கருத்தினைத் தெரிவிக்கும் புதுக்கவிதையின் வடிவத்தையும் சுருக்கி ’நச்’சென்று கருத்துரைக்கும் குறுங்கவிதைகள் தோன்றலாயின. இவற்றை துளிப்பா (ஹைகூ), நகைத் துளிப்பா (சென்ரியு), இயைபுத் துளிப்ப (லிமெரிக்) என்று பாகுபடுத்துகின்றனர்.
துளிப்பா (ஹைகூ: 5-7-5)
படிமம் கொண்டவை:
சாரல் அடிக்கிறது
ஜன்னலைச் சாத்தும்போது மரக்கிளையில்
நனைந்தபடி குருவி
--பரிமள முத்து
குறியீடு கொண்டவை
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்
--அமுதபாரதி
உழுதுவந்த களைப்பில்
படுக்கும் மாடுகள்
காயம் தேடும் காக்கை
--அறிவுமதி
தொன்மம் கொண்டவை:
கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள்
--ராஜ.முருகுபாண்டியன்
முரண் கொண்டவை
தாழ்வு இல்லை
உயர்வே குறிக்கோள்
விலைவாசி
--ல.டில்லிபாபு
அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்
--கழனியூரன்
அங்கதம் கொண்டவை:
நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள்
--தங்கம் மூர்த்தி
விடுகதை கொண்டவை:
அழித்து அழித்துப் போட்டாலும்
நேராய் வராத கோடு
மின்னல்
--மேகலைவாணன்
பழமொழி கொண்டவை:
ஐந்தில் வளைப்பதற்கோ
பிஞ்சு முதுகில்
புத்தக மூட்டைகள்
--பாட்டாளி
வினாவிடை:
தாகம் தணிக்குமோ
கடல்நீர்
வெட்டிப்பேச்சு
--செந்தமிழினியன்
உவமை:
நெருப்புதான் பெண்
அம்மாவிற்கு அடிவயிற்றில்
மாமியாருக்கு அடுப்படியில்
--அறிவுமதி
உருவகம்:
இடியின் திட்டு
மின்னலின் பிரம்படி
அழுதது வானக்குழந்தை
--பல்லவன்
நகைத் துளிப்பா (சென்ரியு:5-7-5)
அது வராவிட்டால் இது
இது வராவிட்டால் அது
எதுவும் வராவிட்டால் அரசியல்
--ஈரோடு தமிழன்பன்
கதை வேண்டாம்
கதவைத் திறந்துவிடு
குழந்தை அடம்
--ஈரோடு தமிழன்பன்
இயைபுத் துளிப்பா (லிமெரிக்)
பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடு கோழி
மீன் நண்டு வகையே அதிகம்
--ஈரோடு தமிழன்பன்
புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய்
--ஈரோடு தமிழன்பன்
கவிதை எல்லாம் விற்றான்
கைக்கு வந்த காசைக் கொண்டு
தேமா புளிமா கற்றான்
--ஈரோடு தமிழன்பன்
*** *** ***