பிள்ளையார் பிடித்துவைப்பதன் பலன்கள்

praveen

Life is a dream
Staff member
பிள்ளையார் பிடித்துவைப்பதன் பலன்கள்

#மஞ்சளில்_பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்.


#குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.


#புற்று_மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
விவசாயம் செழிக்கும்.


#வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்.


#உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்.


#வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம்
உயரச் செய்வார்.


#விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.


#சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.


#சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.


#வாழைப்_பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.


#வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.


#சர்க்கரையில்_பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.


#பசுஞ்சாண_விநாயகர்- நோய்களை நீக்குவார்.


#கல்_விநாயகர்- வெற்றியை தருவார்.


#புற்றுமண்_விநாயகர்- வியாபாரத்தை பெருக வைப்பார்.


#மண்_விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார.
 
Back
Top