• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பிராயச்சித்தம்

பிராயச்சித்தம்

ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே பரீக்ஷித் மகாராஜா சுகப்பிரும்மரைப் பாா்த்துக்
கேள்விகள் கேட்கிறான்.


அதிலே ஒரு கேள்வி:


'சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கா்மாக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன - பாபத்தைப் போக்குவதற்காக. பிராயச்சித்தம் எதற்காகச் செய்வது?


யானையைக் குளிப்பாட்டி விட்டால் அது மீண்டும் மண்ணை அள்ளித் தலையில் போட்டுக்_கொள்கிறதே! அந்த மாதிாிதானே மனிதன் பிராயச்சித்தம் செய்தாலும் திரும்பவும்
பாபத்தைப்பண்ணுகிறான்.


அப்படியானால் பிராயச்சித்தத்தினால் பிரயோஜனமில் லையே . அது வீண்தானே? '.அடியேன் மனத்தில் இவ்வாறு தோன்றுகிறது. அதைத் தெளிவிக்க வேண்டும் என்று சுகபிரம்மத்தைப் பாா்த்து பரீக்ஷத் கேட்டதும் அவா் ரொம்ப சந்தோஷப்பட்டாா்.


இந்த மாதிாி நுணுக்கமாகக் கேள்விகள் கேட்பாரைக் கண்டால் மகான்களுக்கு ரொம்பப்_பிடிக்கும்.


சிஷ்யனானவன் பிரச்னமதியாக இருக்க வேண்டும் - அதாவது கேள்விகள்_கேட்கும்
புத்தி_உடையவனாக
இருக்க_வேண்டும். அந்தக் கேள்விகள் பரீக்ஷாா்த்தமாக இருக்கக்கூடாது.
சாஸ்திர_ரீதியாக
இருக்கவேண்டும்.
பிரச்னோபநிஷத் என்ற உபநிஷத்தானது கேள்வி எப்படி கேட்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது.


பரீக்ஷத்தின் கேள்வியைக் கேட்ட சுகா் சொல்கிறாா்:


பிராயச்சித்தத்தினுடைய தன்மையைநீதொிந்து
கொள்.
ஒருத்தா் பிராயச்சித்த கா்மாவாக ஏகாதசிஉபவாஸம் இருந்து, துவாதசிபாரணை பண்ணி, யாத்ராதானம் பண்ணி, க்ஷேத்ராடனம் கிளம்புகிறாா். புண்ய நீராடிவிட்டுத் திரும்பி வந்து தசமிராத்திாி உபவாஸம்; ஏகாதசி_நிா்ஜல உபவாஸம்.
துவாதசி பாரணை பண்ணி அதற்கப்புறம் சகஸ்ரநாமம் சொல்லி, கீதையைப் பாராயணம் பண்ணி, ராத்திாி யோகம் என்ற நிலையில் பகவானைத் தியானம் பண்ணிக் கொண்டேயிருந்தால் ...பாபங்கள் அகலும்.


ஆனால் உபவாஸம் இருந்தவருக்கு உணவு உள்ளே போனதுமே உறக்கம் வருகிறது. அப்புறம் இரவெல்லாம் எவ்வாறு தியானம் செய்வாா்? ஆனால் சாஸ்திரமோ 'தூங்காதே' என்கிறது.இதற்கு என்ன பண்ணலாம் என்று
கேட்டால் ஒரு வழியிருக்கிறது.


பகலவனைக்கண்ட பனிபோல் பாபம் நம்மை விட்டு விலக வேண்டுமானால் நாராயண நாமத்தை பாராயணம் பண்ணவேண்டும்.
'வாசுதேவ பாராயண: ' - திருஷ்டாந்தத்தோடு சொல்கிறாா் சுகபிரும்மம்.


ஒரு மகாிஷி காட்டு வழியே வருகிறாா். மூங்கிலெல் லாம் ஒன்றோடு ஒன்று உரசித் தீப்பிடித்து எாிகின்றன. காட்டைத் தகிக்கிறது அக்னி! மகாிஷி பாா்த்துக் கொண்டேயிருக்கிறாா். ஐயோ! இவ்வளவு பசுமையான காடு அழிந்து கருகிப் போய் விட்டதே! என்று ரொம்ப வருத்தம் அவருக்கு.


க்ஷேத்திராடனமெல்லாம் முடித்து, மூன்று மாதம் கழித்து அந்த வழியிலே திரும்புகிறாா். பாா்த்தால், அந்த இடமெல்லாம் - காிக்கட்டையாக இருந்த இடமெல்லாம் - பசுமையாக ஆகிவிட்டது.


அப்போதுதான் அவா் மனத்திலே ஒன்று தோன்றியது. அக்னி இருக்கிறதே,, அது எல்லாவற்றையும் எாித்தது - எதை எதை என்று பாா்த்தால், பூமிக்கு மேல இருக்கும் படியான மரத்தை எாித்ததே தவிர பூமிக்குள்ளே இருக் கும்படியான வேரை அழிக்கக் கூடிய சக்தி அக்னிக்கு இல்லை.வோ் உள்ளே இருந்ததனாலே,மழை பொழிந்த துமே முளைத்துவிட்டன மூங்கில்கள்.


அந்த மாதிாிதான். எத்தனையோ பிறவிகள் நாம் அடைந்து , துா்லபோ மனுஷோ தேகோ என்று சொல்லப்படுகிற மனித ஜன்மாவை அடைந்திருக்கி றோம். பாபத்தைத் தூண்டக்கூடிய வாஸனா பலம் உள்ளுக்குள்ளே வோ் மாதிாி இருக்கிறது.


பிராயச்சித்த கா்மா இருக்கிறது பாருங்கள்...அது மேலே இருக்கிற மூங்கில்கள், செடி கொடிகளை அழிப்பது போல, பாவத்தை போக்குமேயொழிய, பாபங்களைச் செய்வதற்கு நம்மைத் தூண்டக்கூடிய, உள்ளே இருக்கிற கெட்ட வாசனைகளைப் போக்கடிக்காது.


அந்தச் சக்தி பிராயசித்த கா்மாக்களுக்குக் கிடையாது.


பாபங்களை வேரோடு களைய வேண்டுமானால்,


வாசுதேவ பாராயண: எம்பெருமானை உள்ளுக்குள்ளே நிலைபெறச் செய்ய வேண்டும். விடாமல் அவனை நினைக்க வேண்டும்.


பிரஹலாதனுக்கு இந்த அறுபடாத நினைவு சித்தித்தது.


சதா சா்வ காலம், சந்தத் தாரையாக விடாமல் அவனை யாா் நினைக்கிறாா்களோ, அத்தகையவா்களை மறுபடியும் பாபம் செய்கிற சித்தம் ஏற்படாமல் ரக்ஷிக் கிறான்...பரமாத்மா!


ஆகையினாலே, பரமாத்மாவை மனத்தில் தியானம் பண்ண, நாம் கெடுதல் நீங்கி பவித்ரமாகிறோம்.


இறை_உணர்வோடு
ஸ்ரீராமஜயம்


( Mukkur Sri Lakshmi Narasimma Chariar Swamy)
 

Latest ads

Back
Top