V
V.Balasubramani
Guest
பிரபல எழுத்தாளர் விக்கிரமன் உடலுடன் 4 நாட
பிரபல எழுத்தாளர் விக்கிரமன் உடலுடன் 4 நாட்கள் தவித்த குடும்பத்தினர் !
அமுதசுரபி இதழின் முன்னாள் ஆசிரியரும் வரலாற்று நாவல் படைப்பாளருமான விக்கிரமன் கடந்த 1-ம் தேதி சென்னையில் இறந்தார். கொட்டும் மழையால் அவரது உடல் 4 நாட்களுக்கு பிறகுதான் எரியூட்டப்பட்டுள்ளது.
‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘ராஜராஜன் சபதம்’ உள்ளிட்ட 33 வரலாற்று நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் விக்கிரமன், சென்னை மாம்பலத்தில் வசித்து வந்தார். கடந்த 1-ம் தேதி அவர் இறந்தார். மழை வெள்ளத்தில் சென்னையே ஸ்தம்பிக்க, விக்கிரமன் உடலை பாதுகாக்க ப்ரீசர் பாக்ஸ் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தனது தந்தையின் உடலை 4 நாட்களாக எரியூட்ட முடியாமல் தவித்ததை, வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் விக்கிரமின் மகன் கண்ணன்,
"தந்தை மீது அன்பு கொண்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். என்னால் முடிந்த வரை அவர்களுக்கு தகவலை தெரியப்படுத்தினேன். எனது உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரர், 3 சகோதரிகள் உண்டு. அவர்கள் வரும் வரை எனது தந்தையின் உடலை பாதுகாக்க நான் கடுமையாக போராட வேண்டியது இருந்தது. தந்தையின் உடலை பாதுகாக்க பிரீசர் பாக்சுக்காக நாங்கள் அலையாத இடம் இல்லை.
Read more at: http://www.vikatan.com/news/tamilnadu/56002-novelist-vikiraman-passed-away.art
பிரபல எழுத்தாளர் விக்கிரமன் உடலுடன் 4 நாட்கள் தவித்த குடும்பத்தினர் !
அமுதசுரபி இதழின் முன்னாள் ஆசிரியரும் வரலாற்று நாவல் படைப்பாளருமான விக்கிரமன் கடந்த 1-ம் தேதி சென்னையில் இறந்தார். கொட்டும் மழையால் அவரது உடல் 4 நாட்களுக்கு பிறகுதான் எரியூட்டப்பட்டுள்ளது.
‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘ராஜராஜன் சபதம்’ உள்ளிட்ட 33 வரலாற்று நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் விக்கிரமன், சென்னை மாம்பலத்தில் வசித்து வந்தார். கடந்த 1-ம் தேதி அவர் இறந்தார். மழை வெள்ளத்தில் சென்னையே ஸ்தம்பிக்க, விக்கிரமன் உடலை பாதுகாக்க ப்ரீசர் பாக்ஸ் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தனது தந்தையின் உடலை 4 நாட்களாக எரியூட்ட முடியாமல் தவித்ததை, வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் விக்கிரமின் மகன் கண்ணன்,
"தந்தை மீது அன்பு கொண்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். என்னால் முடிந்த வரை அவர்களுக்கு தகவலை தெரியப்படுத்தினேன். எனது உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரர், 3 சகோதரிகள் உண்டு. அவர்கள் வரும் வரை எனது தந்தையின் உடலை பாதுகாக்க நான் கடுமையாக போராட வேண்டியது இருந்தது. தந்தையின் உடலை பாதுகாக்க பிரீசர் பாக்சுக்காக நாங்கள் அலையாத இடம் இல்லை.
Read more at: http://www.vikatan.com/news/tamilnadu/56002-novelist-vikiraman-passed-away.art