‘பரணிலிருந்து’
இந்த thread க்கு ‘பரணிலிருந்து’ என்ற தலைப்பு ஏன் தந்தேன்? பரண் என்ற சொல் ஆங்கிலத்தில் Loft என்று சொல்கிறோம் அல்லவா அதுவேதான். எங்கள் வீட்டில் நிறைய பழைய புத்தகங்கள் (சுமார் நூறு வருடப் பழசு கூட) பரணில் உண்டு. அவைகளை தூசி தட்டிப் பார்க்கும் போது கிடைக்கின்ற சுவாரஸ்யங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவே இந்த thread.
எல்லா நல்ல காரியங்களையும் பிள்ளையாரை முன்னிறுத்தித்தானே செய் கிறோம்? இந்த thread இலும் நாம் பிள்ளையாரில் ஆரம்பிப்போமா?
ஒரு துண்டு நோட்டீஸ் கிடைத்தது. அதில் “நாமகிரி க்ஷேத்திரத்தில் வினாயக சதுர்த்தி விழா சமயம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. விநாயக சதுர்த்தி 6–9-1978.” என்றிருந்தது. இதில் “ஸ்ரீ மகா கணபதி மானஸிக பூஜா” என்ற தலைப்பிட்டு, “ஆக்கியோன்: ஆலங்குடி A.K. வெங்கட நாராயணய்யர், சங்கர் ராம் ஏஜன்ஸி, சேலம்-5, மஹோத்ஸவ சபா ஆர்கனைஸர், ஹனுமத் ஜயந்தி, நாமக்கல்” என்ற குறிப்புடன் இந்தப்பாடல் இருக்கிறது. முதல் இரண்டு வரிகள் மிகப்பிரபலமான ஒரு பிள்ளையார் பாட்டை நினைவு படுத்தினாலும், இது அதுவல்ல. இதில் பிள்ளையார் தொடர்பான பல கதைகளும் பின்னிக் கிடக்கின்றன. இந்த பாட்டை எழுதிய பாடலாசிரியர் என் தந்தை காந்தி ஆஸ்ரமம் கிருஷ்ணன் அவர்களின் நீண்ட நாள் நண்பர். சேலம் ஜங்ஷன் வி.ஆர்.ஆர். ஸ்டாலில் வெகு காலம் மேனேஜராக இருந்தவர். நாமக்கல் அனுமனுக்கு ஆண்டு தோறும் ஜெயந்தி மஹோத்சவத்தைப் பலகாலம் ஒருங்கிணைத்தவர். இது போலப் பல பக்திப்பாடல்களை எழுதி நிறைய துண்டுப் பிரசுரங்களை அந்த நாட்களில் வெளியிட்டிருக்கிறார். இனி பாட்டைப் பார்ப்போமா?
“ஸ்ரீ மகா கணபதி மானஸிக பூஜா”
“பிள்ளையார் பிள்ளையார் பாரிலெங்கும் பிள்ளையார் பாரிலெங்கும் கோவில் கொண்டு பாபம் போக்கும் பிள்ளையார்”
1. மஞ்சளிலும் மண்ணினிலும் மந்திரமோத ஓடிவந்து
மனக்கவலை போக்கடிக்கும் மகிமை கொண்ட பிள்ளையார்
2. அவலரிசி கொழுக்கட்டை அள்ளி அள்ளி தின்ற பின்பு
ஆர்த்திகளை போக்கடித்து ஆசி செய்யும் பிள்ளையார் (பிள்ளையார்)
3. பரமசிவத்தைச் சுற்றிவந்து பழமதனை பெற்றபின்பு
பாரிலெங்கும் கோவில் கொண்டு பெருமை கொண்ட பிள்ளையார் (பி)
4. மலைதனிலே முருகனுடன் மயிலேறி விளையாடி
மாதேவன் மன்மதனை மகிழ வைத்த பிள்ளையார் (பிள்ளையார்)
5. கைலையிலே கந்தனுடன் கைகோர்த்து விளையாடி
காமாக்ஷி மனமதனை குளிர வைத்த பிள்ளையார் (பிள்ளையார்)
6. காதுகிள்ளி கஷ்டம் தந்த கந்தன் மீது கோபம் கொண்டு
கண்கள் பன்னிரெண்டினையும் கணக்கெடுத்த பிள்ளையார் (பிள்ளை)
7. தும்பிக்கையை அளவெடுத்த தம்பி மீது கோபம் கொண்டு
தகப்பனிடம் ஓடி வந்து தாவா செய்த பிள்ளையார் (பிள்ளையார்)
8. அண்ணன் தன்னை கும்பிடாமல் ஆரணங்கை பிடிக்க சென்ற
ஆறுமுகன் வேலனுக்கு அல்லல் தந்த பிள்ளையார் (பிள்ளையார்)
9. திரிபுரத்தைப் எரிக்க வேண்டி தனித்துச் சென்ற பரமசிவத்தின்
தேரினது அச்சொடித்து திகைக்க வைத்த பிள்ளையார் (பிள்ளையார்)
10. அம்மையைப்போல் பெண்ணை வேண்டி அலைந்தலைந்து அல்லல்பட்டு
அரசமரத்தின் அடிதனிலே அமர்ந்திருக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)
11. அருகினது புல்லைக் கொண்டு அனுதினமும் பூஜை செய்தால்
அருளினையும் பொருளினையும் அள்ளி வீசும் பிள்ளையார் (பிள்ளை)
12. மந்தார புஷ்பம் கொண்டு மனமுருகி பூஜை செய்தால்
மூஷிகத்தின் மீதிலேறி முன்னேவரும் பிள்ளையார் (பிள்ளையார்)
13. வெள்ளெருக்கின் பூமாலை வினயமுடன் சார்த்தி விட்டால்
வையகத்தின் புகழுடனே வாழவைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)
14. நெய்யப்பம் எலையடையும் நூத்திஎட்டைப் படைத்துவிட்டால்
நினைத்ததொரு காரியத்தை நட்த்தி வைக்கும் பிள்ளையார் (பிள்ளை)
15. தேங்காய்கள் நூத்தி எட்டை தூள்தூளாய் உடைத்துவிட்டால்
தீராத வினைகளெல்லாம் தீர்த்துவைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)
16. முக்குருணி அரிசியாலே மோதகத்தைப் படைத்துவிட்டால்
முருகனுடன் ஓடிவந்து முக்திதரும் பிள்ளையார் (பிள்ளையார்)
17. தித்திக்கும் வெல்லப்பாகில் திரவியங்கள் பலதும் சேர்த்து
தேங்காயுடன் ஹோமம் செய்தால் திருப்தி கொள்ளும் பிள்ளையார் (பி)
18. வீடுதோறும் பிள்ளையார் வீதிதோறும் பிள்ளையார்
வினைகளெல்லாம் போக்கடிக்க வழிவகுக்கும் பிள்ளையார் (பிள்ளை)
19. வியாஸர் சொன்ன பாரதத்தை வேகமுடன் எழுதிவைத்து
வையகத்தில் பெருமை கொண்டு வாழவைக்கும் பிள்ளையார் (பிள்)
20. ஓம்காரமந்திரத்தின் உட்பொருளை உணர்ந்தவருக்கு
ஆனந்த பவனம் தன்னில் இருக்கை தரும் பிள்ளையார் (பிள்ளையார்)
21. தொந்திதனை தூக்கிக்கொண்டு தும்பிக்கையை ஆட்டிக்கொண்டு
தோப்புக்கரணம் போட்டவர்க்கு தொல்லை போக்கும் பிள்ளையார் (பிள்)
இனி மிகப் பிரபலமான பிள்ளையார் பாட்டை ஒப்பிடுவதற்காக்க் கீழே தந்துள்ளேன்:
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்(2)
ஆறுமுக வேலனுக்கு, அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும், நீக்கி வைக்கும் பிள்ளையார்(2)
மஞ்சளிலே செய்யினும், மண்ணினாலே செய்யினும்
அஞ்செழுத்து மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்(2)
ஓம் நமச்சிவாய என்ற அஞ்செழுத்து மந்திரத்தை
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார், பெருமை வாய்ந்தபிள்ளையார்(2)
அவல் கடலை சுண்டலும் அரிசிக் கொளுக்கட்டையும்
கவலையின்றி உண்ணுவார் கண்ணை மூடித் தூங்குவார்(2)
கலியுகத்தின் விந்தைகளைக், காணவேண்டி அனுதினமும்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்.(2)
இந்த thread க்கு ‘பரணிலிருந்து’ என்ற தலைப்பு ஏன் தந்தேன்? பரண் என்ற சொல் ஆங்கிலத்தில் Loft என்று சொல்கிறோம் அல்லவா அதுவேதான். எங்கள் வீட்டில் நிறைய பழைய புத்தகங்கள் (சுமார் நூறு வருடப் பழசு கூட) பரணில் உண்டு. அவைகளை தூசி தட்டிப் பார்க்கும் போது கிடைக்கின்ற சுவாரஸ்யங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவே இந்த thread.
எல்லா நல்ல காரியங்களையும் பிள்ளையாரை முன்னிறுத்தித்தானே செய் கிறோம்? இந்த thread இலும் நாம் பிள்ளையாரில் ஆரம்பிப்போமா?
ஒரு துண்டு நோட்டீஸ் கிடைத்தது. அதில் “நாமகிரி க்ஷேத்திரத்தில் வினாயக சதுர்த்தி விழா சமயம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. விநாயக சதுர்த்தி 6–9-1978.” என்றிருந்தது. இதில் “ஸ்ரீ மகா கணபதி மானஸிக பூஜா” என்ற தலைப்பிட்டு, “ஆக்கியோன்: ஆலங்குடி A.K. வெங்கட நாராயணய்யர், சங்கர் ராம் ஏஜன்ஸி, சேலம்-5, மஹோத்ஸவ சபா ஆர்கனைஸர், ஹனுமத் ஜயந்தி, நாமக்கல்” என்ற குறிப்புடன் இந்தப்பாடல் இருக்கிறது. முதல் இரண்டு வரிகள் மிகப்பிரபலமான ஒரு பிள்ளையார் பாட்டை நினைவு படுத்தினாலும், இது அதுவல்ல. இதில் பிள்ளையார் தொடர்பான பல கதைகளும் பின்னிக் கிடக்கின்றன. இந்த பாட்டை எழுதிய பாடலாசிரியர் என் தந்தை காந்தி ஆஸ்ரமம் கிருஷ்ணன் அவர்களின் நீண்ட நாள் நண்பர். சேலம் ஜங்ஷன் வி.ஆர்.ஆர். ஸ்டாலில் வெகு காலம் மேனேஜராக இருந்தவர். நாமக்கல் அனுமனுக்கு ஆண்டு தோறும் ஜெயந்தி மஹோத்சவத்தைப் பலகாலம் ஒருங்கிணைத்தவர். இது போலப் பல பக்திப்பாடல்களை எழுதி நிறைய துண்டுப் பிரசுரங்களை அந்த நாட்களில் வெளியிட்டிருக்கிறார். இனி பாட்டைப் பார்ப்போமா?
“ஸ்ரீ மகா கணபதி மானஸிக பூஜா”
“பிள்ளையார் பிள்ளையார் பாரிலெங்கும் பிள்ளையார் பாரிலெங்கும் கோவில் கொண்டு பாபம் போக்கும் பிள்ளையார்”
1. மஞ்சளிலும் மண்ணினிலும் மந்திரமோத ஓடிவந்து
மனக்கவலை போக்கடிக்கும் மகிமை கொண்ட பிள்ளையார்
2. அவலரிசி கொழுக்கட்டை அள்ளி அள்ளி தின்ற பின்பு
ஆர்த்திகளை போக்கடித்து ஆசி செய்யும் பிள்ளையார் (பிள்ளையார்)
3. பரமசிவத்தைச் சுற்றிவந்து பழமதனை பெற்றபின்பு
பாரிலெங்கும் கோவில் கொண்டு பெருமை கொண்ட பிள்ளையார் (பி)
4. மலைதனிலே முருகனுடன் மயிலேறி விளையாடி
மாதேவன் மன்மதனை மகிழ வைத்த பிள்ளையார் (பிள்ளையார்)
5. கைலையிலே கந்தனுடன் கைகோர்த்து விளையாடி
காமாக்ஷி மனமதனை குளிர வைத்த பிள்ளையார் (பிள்ளையார்)
6. காதுகிள்ளி கஷ்டம் தந்த கந்தன் மீது கோபம் கொண்டு
கண்கள் பன்னிரெண்டினையும் கணக்கெடுத்த பிள்ளையார் (பிள்ளை)
7. தும்பிக்கையை அளவெடுத்த தம்பி மீது கோபம் கொண்டு
தகப்பனிடம் ஓடி வந்து தாவா செய்த பிள்ளையார் (பிள்ளையார்)
8. அண்ணன் தன்னை கும்பிடாமல் ஆரணங்கை பிடிக்க சென்ற
ஆறுமுகன் வேலனுக்கு அல்லல் தந்த பிள்ளையார் (பிள்ளையார்)
9. திரிபுரத்தைப் எரிக்க வேண்டி தனித்துச் சென்ற பரமசிவத்தின்
தேரினது அச்சொடித்து திகைக்க வைத்த பிள்ளையார் (பிள்ளையார்)
10. அம்மையைப்போல் பெண்ணை வேண்டி அலைந்தலைந்து அல்லல்பட்டு
அரசமரத்தின் அடிதனிலே அமர்ந்திருக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)
11. அருகினது புல்லைக் கொண்டு அனுதினமும் பூஜை செய்தால்
அருளினையும் பொருளினையும் அள்ளி வீசும் பிள்ளையார் (பிள்ளை)
12. மந்தார புஷ்பம் கொண்டு மனமுருகி பூஜை செய்தால்
மூஷிகத்தின் மீதிலேறி முன்னேவரும் பிள்ளையார் (பிள்ளையார்)
13. வெள்ளெருக்கின் பூமாலை வினயமுடன் சார்த்தி விட்டால்
வையகத்தின் புகழுடனே வாழவைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)
14. நெய்யப்பம் எலையடையும் நூத்திஎட்டைப் படைத்துவிட்டால்
நினைத்ததொரு காரியத்தை நட்த்தி வைக்கும் பிள்ளையார் (பிள்ளை)
15. தேங்காய்கள் நூத்தி எட்டை தூள்தூளாய் உடைத்துவிட்டால்
தீராத வினைகளெல்லாம் தீர்த்துவைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)
16. முக்குருணி அரிசியாலே மோதகத்தைப் படைத்துவிட்டால்
முருகனுடன் ஓடிவந்து முக்திதரும் பிள்ளையார் (பிள்ளையார்)
17. தித்திக்கும் வெல்லப்பாகில் திரவியங்கள் பலதும் சேர்த்து
தேங்காயுடன் ஹோமம் செய்தால் திருப்தி கொள்ளும் பிள்ளையார் (பி)
18. வீடுதோறும் பிள்ளையார் வீதிதோறும் பிள்ளையார்
வினைகளெல்லாம் போக்கடிக்க வழிவகுக்கும் பிள்ளையார் (பிள்ளை)
19. வியாஸர் சொன்ன பாரதத்தை வேகமுடன் எழுதிவைத்து
வையகத்தில் பெருமை கொண்டு வாழவைக்கும் பிள்ளையார் (பிள்)
20. ஓம்காரமந்திரத்தின் உட்பொருளை உணர்ந்தவருக்கு
ஆனந்த பவனம் தன்னில் இருக்கை தரும் பிள்ளையார் (பிள்ளையார்)
21. தொந்திதனை தூக்கிக்கொண்டு தும்பிக்கையை ஆட்டிக்கொண்டு
தோப்புக்கரணம் போட்டவர்க்கு தொல்லை போக்கும் பிள்ளையார் (பிள்)
இனி மிகப் பிரபலமான பிள்ளையார் பாட்டை ஒப்பிடுவதற்காக்க் கீழே தந்துள்ளேன்:
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார், வினைகள் தீர்க்கும் பிள்ளையார்(2)
ஆறுமுக வேலனுக்கு, அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும், நீக்கி வைக்கும் பிள்ளையார்(2)
மஞ்சளிலே செய்யினும், மண்ணினாலே செய்யினும்
அஞ்செழுத்து மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்(2)
ஓம் நமச்சிவாய என்ற அஞ்செழுத்து மந்திரத்தை
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார், பெருமை வாய்ந்தபிள்ளையார்(2)
அவல் கடலை சுண்டலும் அரிசிக் கொளுக்கட்டையும்
கவலையின்றி உண்ணுவார் கண்ணை மூடித் தூங்குவார்(2)
கலியுகத்தின் விந்தைகளைக், காணவேண்டி அனுதினமும்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்.(2)